அரசாங்கம் மக்களின் உரிமைகளை முடக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் மத்திய வங்கியின் வெளியிட்ட ஆண்டறிக்கையில் 6.4வீத பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், பொருளாதார வளர்ச்சியின் நலன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்களுக்கான எரிபொருள் மாணியம், விவசாயிகளுக்கான ஓய்வூதியம், உர மானியக் கொடுப்பனவு,சமுர்த்தி திட்ட பயனர்களுக்கான கட்டாய சேமிப்பு போன்றவற்றை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire