
இன்றைய இளஞர்களே நண்பர்களே தோழர்களே சமூக நலன் விரும்பிகளே காந்தீயத்தின் முன்னோடி டேவிட் அய்யா அவர்களை நினைவு கூறும் முகமாக பாரிஸில் (பிரான்ஸ்) டிசம்பர் 6 ஆம் திகதி நினைவஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.தமிழ்த் தேசியம் தொடர்பில் ஒரு நீண்ட சிந்தனையுடன் தனது இறுதிகாலம்வரை செயற்பட்ட அன்னார் அவர்கள் காந்தீய சிந்தனைக்குள் ஆற்றிய அளப்பரிய செயற்பாடுகள் பற்றிய நினைவுகளை இன்றைய இளையவர்களும் தெரிந்து கொள்வது ஒரு வரலாற்றுக் கடமையாகும். மேலும்.கருவி ஏந்திப் போராடும் சிந்தனையை, நான்தான் நீதான் என்று பலரும் நூல்கள் வழியாக பெருமை பேசிக்கொள்கின்றனர். ஆயுதப் போராட்டத்துக்கு 1968 சம்பியாஊடாக இஸ்ரேல் சென்று நம் இளைஞர்கள் பயிட்சி எடுக்கும் முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பின் பேச்சு முறிந்தவுடன் ஈழ தேசம் அனைத்திளும் காந்திய வழியை கடைப்பிடித்தார் உயர்திரு. டேவிட் ஐயாதான் என்பது பின்நாளில் வளர்ச்சிப்பெற்ற கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அன்னாரை 06/12/2015 நினைவுகூறும் இன்நாளின் நம் விடுதலை விரும்பிகள் சமுக ஆர்வாழர்கள் இளைஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ... 9.rue துறவி புருனோ 75018 -paris .metro: லா சப்பலில் 15.00 மணி தொடக்கம் 20.00 மணிவரை
Aucun commentaire:
Enregistrer un commentaire