கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்டது மாதிரி மைத்திரியால் வலிகாமம் வடக்கில் வளலாய் மக்களுக்கு வழங்கிய காணி உறுதிகளில் மகிந்தவின் கையெழுத்தும் படமும்தான் இருந்தன. அதன் அர்த்தம் மகிந்த மக்களின் காணிகளை விடுவிப்பதில் ஈடுபட்டிருந்தார். அம்மணி விஜயகலா ஏதோ தன் முயற்சியால்தான் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்ற தொனியில் பேசுகிறார்.
விஜயகலா அம்மையார் மகிந்தவின் புண்ணியத்தில் வடக்கில் உயிருடன் உலவுகிறார் டக்ளஸ்சையே தூற்றிக்கொண்டிருக்கும் விஜயகலா அரசியலுக்கு வந்ததும் மகிந்தவின் புண்ணியத்தில்தான்.
டக்ளஸ் தேவனந்தா பேயாவ சோடாப் போத்தலுக்குள் மண்ணெண்ணை கடத்தி விற்று பணம் சம்பாதிக்கவில்லை. மகேஸ்வரனுக்கு என்ன அரசியல் வரலாறு இருக்கிறது? மகேஸ்வரன் தான் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தமிழ்ச்செல்வனிடம் அனுமதி கேட்டபோது மகேஸ்வரன் கூட்டமைபில் சேரமுடியாது, எந்தக் காலத்திலும் தமிழ்ப்பகுதிகளில் அரசியல் நடத்த முடியாது என்பது தலைவரின் உத்தரவு என்று தமிழ்ச்செல்வன் கூறினார். மகேஸ்வரன் குடாநாட்டுக்குச் செல்லாது கொழும்பில் நின்றுதான் தேர்தலில் போட்டியிட்டார். மகேஸ்வரனைப் புலிகள் கொன்றபின் விஜயகலாவுக்கு அதிஸ்டம் அடித்தது. இல்லையென்றால் விஜயகலாவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்று விஜயகலா குற்றம் சாட்டுகிறார்.. பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கேட்கும் அளவிற்கு பிரபாகரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு? விஜயகலா பிரபாகரனின் மனைவியா? அல்லது சகோதரியா? அல்லது குடும்ப உறவினரா? தனது கணவரைக் கொன்றவரின் மரணச் சான்றிதழைப் பற்றி விஜயகலா ஏன் அலட்டிக் கொள்கிறார்.
தனது கணவர்மேல் பாசம் போலக் காட்டிகொள்ளும் விஜயகலா தனது கணவரின் தந்தையார் இறந்தபோது மரண வீட்டிற்குச் செல்லவில்லை. தனது பிள்ளைகளைக் கூட அனுப்பி வைக்கவில்லை. ஆனால் பிள்ளைகள் கனத்தை மயானத்தில்தான் தங்கள் பேரனின் உடலைச் சென்று பார்த்தார்கள்.
லண்டனில் வசிக்கும் மகேஸ்வரனின் சகோதரி திருமாளுக்கு மகேஸ்வரனால் சீதனமாகக் கொடுக்கப்பட்ட வீட்டை மகேஸ்வரன் இறப்பிற்குப் பின்னர் விஜயகலா வழக்காடி அந்த வீட்டைத் தன்வசப்படுத்தியுள்ளார். மகேஸ்வரனின் குடும்பத்தினர் எவருடனும் விஜயகலாவுக்கு உறவுகள் இல்லை.
மகேஸ்வரனின் தந்தையாரின் மரண நிகழ்விற்கு டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார். மகிந்தாவின் ஆட்சியைக் கொடுங்கோல் ஆட்சி என்று கூறும் விஜயகலா மகிந்தவின் கூட்டங்களில் எப்படியாவது உள்நுழைந்து மகிந்தவிற்கு அருகில் சென்றுவிடுவார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சூரியப் பொங்கல் நிகழ்விற்கு மகிந்தா வந்திருந்தார். விஜயகலாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் மகிந்த அமர்ந்திருந்த மேடைக்கு விஜயகலா செல்ல முற்பட்டபோது காவல் அதிகாரிகள் அனுதிக்கவில்லை. ஆனால் அங்கே நின்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அவரை அனுமதிக்கும்படி காவல் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டபோது காவல் அதிகாரிகள் விஜயகலாவை மகிந்தவிற்கு அருகில் செல்ல அனுமதித்தனர்.
அங்கே மேடையில் மகிந்தவிற்கு அருகில் அமர்ந்திருந்த விஜயகலாவை மகிந்த உன் கணவரைக் கொன்றது புலிகள் என்று உனக்குத் தெரியும், எதற்காக பொய் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது விஜயகலா மௌனமாக இருந்தார்.
கடந்த காலத்தில் கொடுங்கோல் ஆட்சியே நடைபெற்றது. எனது கணவன் கொலைக்கு சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை, எனது கணவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டது என்பது பொய்யான வதந்தி மக்களுக்காகப் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்ததுக்காக விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை. விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால் கடந்த கால அரசு ஏன் வழக்கை நேர காலத்தோடு முடித்தது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை.
2008 ம் ஆண்டு மகேஸ்வரன் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேசர் ஆலயத்துக்கு வழிபடச் சென்ற வேளையில் மகேஸ்வரன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. சந்தேகநபரை வெளியிலே கைது செய்யவில்லை.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் அங்கு இருந்த பாதுகாவலர்களால் சுடப்பட்டு சம்பவம் நடந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.ஆலயத்தில் பிரதான பூஜை முடிந்ததும் ஆலய நுழைவாயிலில் நின்று வழிபடுவது மகேஸ்வரனின் வழக்கம்.
மகேஸ்வரன் கொலையாளி மகேஸ்வரன் ஆலயத்தில் வழிபாட்டில் இருந்த வேளையில் மீது பல வேட்டுக்களைத் தீர்த்துள்ளார் என ஐ.ஜி.பி “விக்டர் பெரேரா” ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கொலைச் சந்தேக நபரின் சிறிய தாயார் கொலைச் சந்தேகநபர் 1990 ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பிறகு அவர் எங்கே என்று தங்களுக்குத் தெரியாதென்று விசாரணையில் தெரிவித்ததாக ஐ.ஜி.பி மேலும்தெரிவித்தார்.
2006ம் ஆண்டு மாதவன் மாஸ்டர் பிஸ்டல் கொலையாளி வசந்தனை வத்தளைக்கு அனுப்பி தற்காலிக இடத்தில் தங்க வைத்தார். அங்கு வசந்தனுக்கு தற்காலிகமாக வேலைகளும் கிடைத்தன. புலிகளின் நிகழ்ச்சி நிரல்படி வசந்தனுக்கு கொட்டாஞ்சேனையில் உள்ள வர்த்தக வங்கியில் வங்கிக் கணக்கு ஒன்றும் திறக்கப்பட்டது.
அதன்பிறகு அவருடைய வங்கிக் கணக்குக்கு நோர்வேயிலிருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டது. புலிகளால் வழங்கப்பட்ட தொலைபேசியிலிருந்து கொலைச் சந்தேகநபர் வன்னியிலுள்ள மாதவன் மாஸ்டருடன் மட்டும்தான் தொடர்புகளைப் பேணியிருந்தார்.
2007ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனைக் கொல்லும்படி கொலையாளிக்கு வன்னியிலிருந்து கட்டளை வந்தது. 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொலையாளி வசந்தன் எனப்படும் கொலின் வலன்ரைன் வெள்ளவத்தைக்கு வரவழைக்கப்பட்டு ஒரு“மைக்றோ பிஸ்டல்” 39 ரவைகள் அடங்கிய இரண்டு மகசின்கள் வழங்கப்பட்டன. கொலையாளி 14 ரவைகளை இரண்டு மகசின்களுக்குள்ளும் நிரப்பிவிட்டு மிகுதி 25 ரவைகளையும் வத்தளையில் தனது வீட்டில் ஒளித்து வைத்துவிட்டார்.
அடையாள அணிவகுப்பின்போது “கொலின் வலன்ரைன்” தன் கொலையாளி என உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வளவு ஆதாரங்களின் பின்னும் விஜயகலா புலிகள் தன் கணவனைக் கொன்றது என்பது விஜயகலாவுக்கும் கொலைக்குமசம்பந்தம் இருக்கிறது என்று சந்தேகப்பட வைக்கிறது.
கொலையாளி வசந்தன் மகேஸ்வரனுக்கு அறிமுகமானவராக இருக்கிறார்.. கொலையாளி மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது வசந்தன் சுடாதே என மகேஸ்வரன் அலறியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன, கொலையாளி மகேஸ்வரனுக்கு நெருக்கமானவாராக ஆனபின்னரே கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
பிரேமதாசா கொலை, வினோதன் கொலை, ராசிக் கொலை போல புலிகள் ஒரு அரசியல் பிரமுகரைக் கொல்வதானால் அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி தங்கள்மீது அந்தப் பிரமுகருக்கு சந்தேகம் ஏற்படாதபடி நடந்துவிட்டுத்தான் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.
மகேஸ்வரன் பொன்னம்பலவாணேசர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்குச் செல்கிறார் என்ற தகவலை கொலையாளி வசந்தனுக்குத் தெரிவித்தவர் யார்?
மகேஸ்வரனின் குடும்பத்திலிருந்துதான் அந்தத் தகவல் சென்றிருக்கிறது. வசந்தனுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்தது விஜயகலா என்றே கூறப்படுகிறது. விஜயகலாவுக்கு கொழும்பிலுள்ள புலிகளுடன் தொடர்புடைய வர்த்தகரான “விண்ணன்” எனப்படும் வரதராசசிங்கத்துக்கும் தொடர்புகள் உள்ளதாகவும் அவர்கள் இருவரின் ஒத்துழைப்புடனேயே கொலை இடம்பெற்றதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மகேஸ்வரனைப் புலிகள் கொன்றது வெறும் வதந்தி என்று விஜயகலா புலிகளைக் கொலைக்குற்றசாட்டிலிருந்து தப்பவைக்கவேண்டிய அவசியம் என்ன?
2008ம் ஆண்டு மகேஸ்வரன் புலிகளால் கொல்லப்பட்டார். 4 வருடங்கள் நடைபெற்ற விசாரணையின் பின்2012ல் புலி உறுப்பினரான வசந்தனுக்கு உயர்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி “சுனில் ராஜபக்ச” தீர்ப்பை வழங்கினார்.. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தவறு என்று விஜயகலா கூறுவது நீதித்துறையை அவமதிப்பதாகும். அதுவும் ஒரு அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக இருக்கும் ஒருவர் நீதித்துறையை இப்படி அவமதிக்கலாமா?
மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட கொலின் வலன்ரைன் என்பவரின் பெற்றோர் கூட தங்கள் மகன் அப்பாவி என்று முறையீடு செய்யவில்லை. ஆனால் விஜயகலா அந்தக் குற்றவாளியைத் தப்ப வைக்க முனைவதன் காரணம்தான் என்ன?
புலிகளுக்கும் விஜயகலாவுக்கும் தொடர்பு இருக்கின்றதா?
தொடரும். salasalppu