வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகலிங்கம் உதயலிங்கம் நேற்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி கடத்தியபோது, குறித்த நபரின் வாகனமும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தியாகலிங்கம் உதயலிங்கம் தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்து வந்தவேளை நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்ட்ட சந்தேக நபரான தியாகலிங்கம் உதயலிங்கம் இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire