| இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு விடுத்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| ஈராக்கில் இஸ்லாம் மதத்தின் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி, மக்களை கதிகலங்க வைக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் போர் தொடுக்கப் போவதாக ரமலான் விரதத்தையொட்டி அந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் மிரட்டியுள்ளனர். மேலும் இந்தியா, இந்தோனேசியா, எகிப்த், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்கள் சிறையில் இருப்பதால், புனித ரமலான் மாதத்தில் போர் செய்வது தடுக்கப்பட்ட போதிலும், தமது உரிமைகளை காப்பாற்ற முஸ்லிம்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஈராக்கில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தொடந்து ஐ.எஸ்.ஐ.எஸ் குறிப்பிட்ட நாடுகள் மீது போர் தொடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
Aucun commentaire:
Enregistrer un commentaire