அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியது. இது நல்லிணக்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பான முறையில் முன் நோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறுதெரிவித்தார். நாட்டில் புதிய அரசியல் முறையை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும். இந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் ஆட்சிபீடம் ஏறினோம்.
குறித்த இலக்குகளை பொறுமையுடன் கையாண்டு வெற்றிகொள்ள வேண்டும். அத்தோடு சர்வாதிகார ஊழல் மோசடிகளுடனான ராஜபக்ஷ ஆட்சியை தோல்வியடையச் செய்து நாட்டின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவது முக்கிய குறிக்கோளாகும். அதற்காக வேண்டியே மக்கள் வரம் எமக்கு கிடைக்கப்பெற்றது என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire