மாவோயிஸ்ட்களின் கொள்கைகள், நமது அரசியலமைப்புடன் ஒருங்கிணைக்க முடியாத பட்சத்திலும், மாவோயிஸ்டாக இருப்பதே குற்றம் அல்ல என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். ஆனால் ஒரு தனிப்பட்ட நபரோ, அமைப்போ வன்முறையில் இறங்கினால், அதை சட்ட அமைப்பு தடுக்கலாம் ஆனால் மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை கைது செய்ய முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில், சியாம் பாலகிருஷ்ணனுக்கு கேரள மாநில அரசு 1 லட்ச ரூபாயை 2 மாதங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire