
இந்த சம்பவத்தின்மூலம் அவர் உலகமெங்கும் பிரபலம் ஆனார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிற மலாலா, தலீபான்களின் தொடர் மிரட்டல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது.மலாலாவின் குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் வசித்து வருகின்றது. பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா 2014-ம் ஆண்டு நோபல் பரிசை வென்றார்.
உயிர்பிழைத்த மலாலா யூசுப்சாய், லண்டனில் உள்ள பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றுவருகிறார் மலாலா, கணிதம், இயற்பியல், தாவரவியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மதிப்பெண் தரவரிசையில் ஆறு 'ஏ * கிரேட்' மற்றும் நான்கு 'ஏ கிரேட்' ரேங்குகளை பெற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire