இலங்கைத் தமிழர்களை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவே தமிழக அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளின் உணர்வுபூர்வமான கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயல் வீட்டவர் நுழைய வேண்டிய அவசியமில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அயலவர்கள்(தமிழகம்) தலையீடு சேய்வது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் விவகாரத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் முரண்பட்டுக் கொள்ளும் தாம் மறுநாள் இணைந்து செறய்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் இலங்கைத் தமிழர்கள் மீது காட்டி வரும் அனுதாபம் வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, தீர்வுத் திட்டம் என்பது உள்நாட்டு ரீதியில் எட்டப்பட வேண்டியதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது எப்படியிருக்கு? தமிழீழ மாணவர் படை விடும் எச்சரிக்கை… முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களே உங்கள் வயதிற்கும், உங்கள் அனுபவத்திற்க்குமே நாங்கள் மரியாதை செலுத்துகின்றோம்.
தமிழக உறவுகள் எப்போதும் ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி உறவுகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களவர்கள் உங்கள் குடும்பத்திற்கு கணவன், மனைவி உறவாக இருக்கலாம் அது தப்பில்லை ஆனால் இந்த சிங்களவர்களின் கணவன், மனைவி உறவு உங்கள் குடும்பத்துடன் மட்டுமே தவிர ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களுடன் அல்ல…
ஏற்கனவே நீங்கள் முன்பு ஒரு முறை தமிழீழ தேசிய தலைவரை பயங்கரவாதி என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்றும் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இன்றும் ஆறாத வடுவாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஐயா.
சிங்கள, இந்திய ஊடகங்களுக்கு ஒரு கருத்தும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கருத்தும் எப்போதும் தெரிவித்து கொண்டே இருக்கிறிர்களே…
உங்கள் நோக்கம் தான் என்ன…?
அன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளால் சுடப்பட்டவர் யார் என்று உங்களுக்கு நல்லா தெரியும்…
தமிழின துரோகி துரையப்பா…
தமிழின துரோகி துரையப்பா…
இன்றைய தலை முறை பிள்ளைகளை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளி அவர்களின் பசிக்கு துரோகி என்ற பட்டத்துடன் நீங்கள் இரையாக வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றோம்…
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
தமிழீழ மாணவர் படை
Aucun commentaire:
Enregistrer un commentaire