அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், Operation Sovereign Borders என்ற பெயரில் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே, போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அவுஸ்ரேலியா பேச்சுக்களை நடத்தியுள்ளது.
ஏனைய நாடுகள் வழியாக சட்டவரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை எந்தச் சூழ்நிலையிலுவும் அவுஸ்ரேலியா ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களைத் திருப்பி அனுப்புவதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருப்பதாகவும் மொறிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அவுஸ்ரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நடந்து கொண்டிருந்கும் இந்த நடவடிக்கையால், அவுஸ்ரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியப் பயணத்தின் போது கோத்தாபய ராஜபக்ச, அந்த நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொண்டு முதல் பயணம் இதுவாகும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire