பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், மத்தீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்ததுடன், ருவென்டி 20 உலகக் கிண்ணத்தையும் முதன் முறையாகப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் குமார் சங்ககார 35 பந்துகளை எதிர்கொண்டு 1 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மோஹித் ஷர்மா, அஸ்வின், மிஸ்ரா, சுரேஸ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இன்றைய இறுதிப் போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் குமார் சங்கக்காரவும் தொடர் நாயகனாக இந்திய அணியின் விராத் கோளியும் தெரிவாகினர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire