இந்த விசாரணைக் கமிஷனில் இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமாவுடன், இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் சர் டேஸ்மண்ட் டி சில்வா மற்றும் சர் ஜியாஃபரி நைஸ், அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் துறை பேராசிரியர் டேவிட் கிரேன், இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் அவ்தாஷ் கவ்ஷல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் அஹமத் பிலால் சூஃபி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆறாவது உறுப்பினராக ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியான மோட்டூ நோகுச்சி நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், கம்போடியா நாட்டில் உள்ள கூடுதல் சர்வதேச நீதி மன்றத்தில் நீதிபதியாக திறம்பட செயலாற்றியவர்.
சர்வதேச நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கான பொது நிதியத்தின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire