வன்னி மக்களுக்கு உதவ 4,000 இராணுவத்தினர் அனுப்பிவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விநியோகிக்கும் பொருட்டு வன்னி பிரதேசத்தில் நான்காயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீட்பதற்கான பணிகளை இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிடுகின்றார். இந்த நிவாரணப் பணிகளுக்காக கிழக்கு பிரதேசத்திலிருந்து ஏழு இராணுவப் படையணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்தவர்களுக்கான சமைத்த உணவுகளை இராணுவத்தினர் வழங்கி வருவதாகவும் இராணுவ ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார். இதுதவிர தேவையான முதலுதவிகளையும், அவசர சேவகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire