இன்று காலை 9 மணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷவிடம் சுமார் நான்கு மணிநேரம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது பிரதானமாக அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த பதவிக்காலத்தில் தனது தனிப்பட்ட பாவனைக்காக பாதுகாப்பு தரப்பின் ஹெலி விமானங்களை பாவித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 15 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விசாரணைகளின் போது மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire