கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆணைக்குழுவிடம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இவ் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளது.
காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் அதன் உறுப்பினர்களான காஞ்சனா வித்தியாரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகியோரும் குழுவின் சட்டத்தரணிகளும் அதிகாரிகளும் இந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதன்போது ஆணைக்குழுவினர் இந்த இடம் மற்றும் கடத்தப்பட்டவர்களின் விபரங்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கிடம் கேட்டறிந்து கொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire