
இந்த நிலையில், நேற்று டெல்லி மேல்-சபையில் தருண் விஜய் பேசும்போது கூறியதாவது:-

வரும் ஆண்டு(2015) முதல் திருவள்ளுவரின் பிறந்த நாளை வடஇந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் திருவள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புகளை வடஇந்தியாவின் பள்ளிக்குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படி கோரிக்கை வைத்துவிட்டு தன்னுடைய பேச்சை திருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற குறளுடன் முடித்தார், அவர். அவருடைய கோரிக்கையை பாராட்டும் விதமாக மேல்-சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருசேரக் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
ஏ.நவநீதிகிருஷ்ணன், எஸ்.முத்துக்கருப்பன் போன்ற அ.தி.மு.க. எம்.பி.க்களும் கனிமொழி, திருச்சி சிவா ஆகிய தி.மு.க. எம்.பி.க்களும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பவன் வர்மா, சமாஜ்வாடி தலைவர் ராம்கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகமது ஹசன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் ஆகிய எம்.பி.க்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பி ஆதரவு அளித்தனர்.
தருண் விஜய் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்வதாக மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். அடுத்த ஆண்டு(2015) முதல் இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்றும் இதற்கான அரசு ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire