இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர் தீவிரவாதிகன் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காசிக் மனிதாபிமானம் மிக்கவர். தீவிரவாதிகளின் இச்செயல் மிகவும் கொடூரமானது. மனித தன்மையற்ற இச்செயலை உலகம் ஏற்றுக் கொள்ளாது’’ என்றார்.
காசிக்கின் பெற்றோர் எட்–பவுலா இண்டியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் வருத்த செய்தியில் எங்களது மகன் காசிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பிளக்கிறது. ஆனால் அவன் இறுதிவரை மனிதாபிமானத்துடன் வாழ்ந்தான் என நினைக்கும் போது பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
பீட்டர் எட்வர்டு காசிக் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 5–வது பிணைக்கைதி ஆவார். இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லோப், இங்கிலாந்தை சேர்ந்த ஆலன் ஹென்னிங், டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 4 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire