
இதன்முதற்கட்டமாக, 3 ஆயிரம் மீன்பிடி படகுகளுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய செய்மதி தொடர்பு கருவிகளை பொருத்தப்படவுள்ளது எனவும், இதன்மூலம் படகு ஓட்டுனர்களுக்கு இலகுவாக காலநிலை தொடர்பான தகவல்களை உரிய காலத்திற்குள் வழங்க முடிவதுடன், சட்டவிரோத செயற்பாடுகளையும் தடுக்க முடியும் என, கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியாது, எனினும் எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் 51 மீனவர்கள் பலியாகியதுடன், 6 பேர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire