ராணுவம் மற்றும் புரட்சி படைகள் இருதரப்பினருமே குழந்தைகளை கொன்று வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் புரட்சி படையினர் குழந்தைகளை படையில் சேர்த்து போரிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 11 வயது சிறுவன் கூட புரட்சி படையில் வீரனாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு தடியால் அடிப்பது, உடலில் மின்சாரத்தை பாய்ச்சுவது, நகத்தை பிடுங்குவது, கற்பழிப்பது போன்ற சித்ரவதைகளையும் செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire