ஈராக்கில் பிறக்கும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் குறை காணப்படுவதாக அறியப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பல குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு ஈராக்கில் உள்ள நைன்வே மாகாணத்தின் 3 நகரங்களில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக இந்த மொசூல் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெடிகுண்டுகள் வீச்சின்போது, மண்ணில் கலந்த யுரேனியம் கதிர் வீச்சுகளால்தான் இதுபோன்ற புற்று நோய்களும், உடல் உறுப்பு பாதித்த குழந்தைகளின் பிறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஈராக்கில் 1990-ம் ஆண்டும் நடந்த போருக்கு பின்னர் அங்கு பிறந்த 1 லட்சம் குழந்தைகளில் 4 பேர் மட்டுமே இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் இதுபோன்ற நோய் தாக்குதல் விகிதம் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் தற்போது பிறந்த 1 லட்சம் குழந்தைகளில் 22 பேர் கொடிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற நோய்கள் எதிர்காலத்தில் பரவாமல் தடுக்க, தகுந்த ஆய்வுகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம் என ஈராக் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire