vendredi 19 août 2016

இன்னும் பிளைத்துக் கொண்டிருக்கும்!!!

இன்னும் பிளைத்துக் கொண்டிருக்கும்!!!

திரு.. வி. கிருபாகரன் எழுதிய செய்தி சிறப்பு கட்டுரையாக Tamil 24 News எனும் இணைய தளத்தில் 13 ஆனி 2016 அன்று வெளியாகியிருந்தது, இச்செய்தியை பார்க்கும் போது, தமிழ் மக்களின் விடுதலை என சொல்லிக்கொண்டு புலம் பெயர் நாடுகளில் வயிற்று பிளைப்பு நடத்துபவர்கள் இன்னும் ஊசலாடிக்கொண்டிப்பது ஞாபகத்திற்கு வந்தது. முரனான நடைமுறைகளை நடைமுறைப்படுத்தியதில் தமிழ் விடுதலை இயக்கங்கள் என்றுமே முன்னணியில் இருந்துள்ளனர். அது இன்று மட்டும் தொடர்வது மிக கேவலம் எம் சமூகத்திற்கு.

 

 

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை சொல்லிக்கொள்பவர்கள் மிகக் கடுமையான சமூக குற்றவாளிகளாக இருந்தும் அவர்களிற்கு முக்கித்துவம் கொடுத்துவருகின்றது சில கும்பல். நாட்டில் கஞ்சா வித்தால் மரணதண்டனை கொடுத்த புலிகள், புலம் பெயர்நாடுகளில் (heroin) கெறோய்ன் போதைப்பொருள் கடத்தல்களில் முன்னணி வகித்தவர்கள் அதற்காக சிறை சென்றவர்களை பொறுப்பாக நியமித்தார்கள். இவர்களே இன்றும் தங்களை தமிழர்களின் பிரிதிநிதிகளாக தங்களை சொல்லிக்கொளும் கேவலமான நிலை தொடர்கின்றது.  திரு. கிருபாகரன் தனது கட்டுரையில் தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திருச்சோதியை பற்றி முழமையான தகவல்களை மக்களிற்கு கொடுக்காமல் அவரை கண்டிப்புடன் காப்பாற்றி உள்ளார்.

 

யார் இந்த திருச்சோதி?

1988 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கெறோய்ன் போதைப்பொருள் பிரானஸ் நாட்டிற்குள் கடத்திகொண்டு வரும்போது கைதுசெய்யப்பட்டு 6 வருட சிறத்தண்டனை இவரிற்கு விதிக்கப்பட்டது, சிறையில் இருந்த காலத்தில் hotel management கற்றுக்கொள்கறார், பொதுவாக சிறைக்கைதிகளிற்கு கொடுக்கப்படும் தண்டனை குறைப்புகளால்  4 ன்கு வருடத்தில் விடுதலையாகி விடுகின்றார்.

 

 

நான்கு நன்பர்களாக சேர்ந்து Sun Rise எனும் வியாபார நிலையத்தை பாரீஸ் நகரில் நடத்தியத்திய போதே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் தொகை பணத்தை சம்பாதித்துக்கொள்ளும் திருச்சோதி, படம் தயாரிப்பதற்காக இந்தியாவிற்கு செல்கிரார், அங்கு "அம்மா அப்பா விளையாட்டு" எனும் பெயருடைய இவருடைய படத்தை டைரக்டர் பாலுமகேந்தரா இயக்குகின்றார். பணம் பற்றாகுறையால் படம் முடியாமல் நின்றுவிடுகின்றது!!!!!, தொடங்கிய படத்தை முடப்பதற்க்காக பிரான்ஸ்சிற்கு போதைப்பொருள் கடத்துகிரார் திருச்சோதி.

 

 

திரு. தூள்சோதியாக சிறையில் இருக்கும் போது, இவருடைய மிக நெருங்கிய நன்பரும் EPDP டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் ஆலோசகருமான கோவை நந்தன் இவரை சிறையில் இருந்து வெளியில் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுடன் ஒவ்வொருமாதமும் சிறையில் சென்று பார்த்து வந்துள்ளார். சிறைக்கு சென்று தூள்சோதியை பார்பதற்கான அனுமதியை பெற்றவர் கோவை நந்தன் மட்டுமே!!!!!

 

இப்படியாக இலங்கை அரசுடன் இணைந்து இயங்கும் அப்புகளுடனும், இலங்கை அரசுடனும் நெருங்கிய உறவுகளை மேற்கொண்டு வரும் திரு. தூள்சோதி புலிகளின் அனுதாபிகள் மட்டத்தில் ஆதரவுகளை பெற்றுக்கொள்வதற்காக தனக்கும் தமிழர்களிற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான உணர்வுகள் இருப்பதாக காட்டிக்கொள்கிறார்.

 

 

தூள்சோதியின் நன்பரான, வியாபார பத்திரிகை நடத்திவரும் பாலச்சந்திரன் (ஈழநாடு) புலிகள் இயக்கத்தின் முன்னணி போராழியாக  தன்னை படம் காட்டிக்கொண்டவர் மட்டுமின்றி, தலைவன் அனுமதித்தால் நான் தற்கொலை போராழியாக சென்றிடுவேன் எனச் சொல்லி புலம் பெயர் நாடுகளில் உள்ள புலிகளிற்கு அதிர்ச்சி கொடுத்தவர். இன்று இலங்கை அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும்  அரசியல் மாநாடுகளை நடத்தி வருகின்றார்.




இப்படியாக நிழல் உறவுகளை வைத்துக்கொண்டு, வெளிச்சத்தில் வேஷம் போடுபவர்களை இனம் காட்டுவதற்காக இதை எழுதியுள்ளேன்.

 

வாசிக்கும் போது ஆத்திரமாக இருந்தால் ஆதாரத்திற்காக பிரான்ஸ் நீதித்துறையிடம் கேட்டுப்பாருங்கள் முழு ஆதாரங்களும் கிடைக்கும்.

 

தமிழர்