dimanche 30 décembre 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவரின் பின்னணியிலேயே கடந்த காலச் சம்பவங்கள் நடந்துள்ளன.நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது


கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  புனர்வாழ்வு வழங்காமல் மாணவர்களை விடுவிக்க முடியாது என்ற விடயத்தை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பல்கலைச் சமூகத்துக்கு தான் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கோத்தபாய இந்தச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் புனர்வாழ்வு வழங்கிய பின்னரே விடுவிக்க முடியும். அதற்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சாத்தியமே இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் ஏன் போகவேண்டும்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? பல்கலைக்கழகத்துக்குள் சென்று இவர்கள் பயங்கரவாதத்தைத் தூண்டு விடுகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவரின் பின்னணியிலேயே கடந்த காலச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிப்போம்.
மாணவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கிய பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற விடயம் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட பல்கலைக்கழக சமூகத்திடம் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கின்றோம் என கோத்தபாhய தெரிவித்துள்ளார்

புலிகள் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கோமாளிகள் புலிகள் இல்லை என்கிரது 



புலிகள் நாட்டில் மீள ஒருங்கிணைவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – TNAதமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மீள ஒருங்கிணைவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.
 
புலிகள் மீள ஒருங்கிணைவதாக அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் குற்றச் சாட்டுக்கள் முற்று முழுதாக பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் எந்த மாணவருக்கும் புலிகளுடன் தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுடன் தொடர்புகளைப் பேணுவதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சிங்கள மக்கள் நம்ப வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசாங்கமே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக tna பேச்சாளார் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவில் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லை


சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமது மூன்று பெண் நண்பர்களை பாலியல் தொந்தரவில் இருந்து காக்க முற்பட்ட கீனன் சன்டோல் மற்றும் ரூபென் பெர்னாண்டஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து மும்பையில் பல போராட்டங்கள் நடந்தன. இருந்தும் அவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை கூட இன்னும் முடியவில்லை.
இன்னும் குறிப்பாக சிற்றூர்களை – கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் நீதி கிடைப்பது என்பது இன்னும் அரிதான விடயமாக இருக்கும்.
பூர்வ பழங்குடிகள் என்று அரசாங்கத்தால் பட்டியல் படுத்தப்பட்டுள்ள இருளர் சமூகத்தைச் சேர்ந்த, கல்வியறிவற்ற கூலித் தொழிலாளியான விஜயா என்ற பெண், தனது 17 ஆவது வயதில்
(1993 ஆம் ஆண்டில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த 6 போலிஸ் காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் எவரும் தண்டிக்கப்படவில்லை.
பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான விஜாயாவின் வழக்கை நடத்திய மனித உரிமை செயற்பாட்டாளரான பேராசிரியர் கல்யாணி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தேவையான பொருளாதார வசதி தம்மிடம் இல்லாததன் காரணமாகவே இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தமுடியவில்லை என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

tna ஒரு சிறு விடயத்தில் கூட வெற்றிகாண முடியாத நிலையில் மக்களை ஏமாற்ற தமிழ் ஊடகங்களில் மட்டும் வெற்றிச் சவாரி?


சர்வதேசத்திடம் உதவிக்கரம், நீதிமன்றங்களில் வழக்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், காளியம்மனுக்கு சிதறுதேங்காய் !

ஒரு சிறு விடயத்தில் கூட வெற்றிகாண முடியாத நிலையில் மக்களை ஏமாற்ற தமிழ் ஊடகங்களில் மட்டும் வெற்றிச் சவாரி?

வெளிநாட்டுச் சுற்றுலாக்களையும், போராட்டங்களையும் தொடர்வதால் என்ன பயன் என பொறுமையிழந்த தமிழ் மக்கள் கடும் விசனம் :
இறுதி யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வில் இதுவரை ஒரு சிறு முன்னேற்றம் கூடக் காண முடியாத நிலையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது இயலாமையை மூடிமறைக்க தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் பொய்யாக வெற்றிச் சவாரி செய்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாமே எனும் தோரணையில் தேர்தல்களில் பருவகால உறுதிமொழிகளை வழங்கி அம்மக்களது வாக்குகளை அபகரித்து வரும் தமிழ்க் கூட்டமைப்பு சுலோகங்களைத் தாங்கி வீதியோரங்களில் நின்ற தைத் தவிர இன்றுவரை அம்மக் களுக்காக ஆக்கபூர்வமாக எதனை யும் செய்ய எத்தனிக்கவில்லை எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கடந்த மூன்றரை வருடங்களாக சர்வ தேசத்திடம் உதவிக்கரம் கோருகிறோம் எனக் கூறி வெளிநாட்டுச் சுற்றுலாக்களையும், எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதையும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், காளியம்மனுக்கு சிதறு தேங்காய் என்ப தாகவும் தமது காலத்தைக் கழித்துவரு வதையுமே மேற்கொண்டு வருகின்றனர். இதற்குச் சில தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமே முன்பக்கச் செய்திகளையும், வர்ணப் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது. இதனால் தமிழ் மக்களது பிரச்சினைகள் ஒருபோதும் தீரப் போவ தில்லை என்பதே மக்களது குற்றச் சாட்டாகும்.இதுபோன்ற உண்மையான விடயங்களை தமிழ் மக்களுக்குச் சுட்டிக்காட்டி அம் மக்களுக்கான உதவிகளை தமிழ்க் கூட்டமைப்பினர் மூலமாக மேற்கொள்ள எந்தவொரு தமிழ் ஊடகமும் முன்வருவ தில்லை எனக் குறை கூறும் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக இதுபோன்றே இத்தமிழ் ஊடகங்கள் புலிகளையும் வளர்த்துவிட்டு இறுதியில் ஒன்றுமே இல்லாது ஆக்கின என்றும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
எவ்விதமான குற்றங்களையும் புரியாது வெறுமனே சந்தேக நபர்களாகக் காணப் பட்ட நிலையில் பல வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுவிக்க இதுவரை தமிழ்க் கூட்டமைப்பு செய்தது என்ன? காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன? தீர்வு முயற்சிகளில் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதை விட இவர்கள் மேற்கொண்டது என்ன? என்றும் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமது இறுதி ஆயுதமாக கல்வி கற்க வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களைப் பாவித்து கலக நிலையை ஏற்படுத்தி அதில் ஏதாவது குளிர்காய முடியுமா எனப் பார்க்கின்றனர். அன்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி ஒருவரின் சதிக்குப் பலியான மாணவர்கள் சிலர் இன்றும் பொலிஸாரின் கண்காணிப் பில் புனர்வாழ்வு பெறுகின்றனர். தூண்டி விட்ட அந்த எம்.பியோ கொழும்பில் உல்லாசமாக உள்ளார்.
இதனைப் பொதுமக்கள் கேட்டால் துரோகி எனப் பட்டம் சூட்ட முனை வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புலிகள் தலைதூக்குகிறார்கள் என்ற அரசின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை அரசை தமிழர் விடுதலை கூட்டணி கேட்டுக்கொள்கின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு, தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு யாழ். நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  கட்சியின் பொதுச் செயலாளர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இப்பொதுச்சபை கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் 15 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்தீர்மானங்களாவன: 
கட்சி வலுவடைய வேண்டுமாயிருந்தால் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தாம் எடுக்கும் முடிவுகள் தங்கள் கட்சியை சார்ந்ததா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கத்தவர்கள் தான்தோன்றித்தனமாக எடுக்கும் முடிவுகளை தவிர்;த்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது. 
சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்நோக்கும் எத்தகைய பிரச்சினையாயினும், வன்முறையின்றி பேச்சுவார்த்தை மூலமும், இணக்கப்பாட்டுடனும், சமாதானமாகவும் தீர்த்துக் கொள்ளுமாறும் தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகின்றது. 
தமிழர் விடுதலைக் கூட்டணி ஏனைய இன மக்களுடனும், பல்வேறு இன, மத குழுக்களுடனும் நல்லுறவைப் பேணுவதுடன், இலங்கை வாழ் அனைத்து மக்களையும் சமாதானத்துடனும், ஜனநாயக மனிதாபிமான அடிப்படையில் உரிமைகளை அநுபவிக்க உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும் அரசை வலியுறுத்துகின்றது. 
விடுதலைப் புலிகள் தலைதூக்குகிறார்கள் என்ற அரசின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லையென்றும், அவ்வாறு தொந்தரவு செய்து தலைமறைவாவதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டாமென்றும் அரசை தமிழர் விடுதலை கூட்டணி கேட்டுக்கொள்கின்றது. 
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளக்கூடிய தகுதியுடையவர்கள். மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட எவரும் அரசு இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்கவும், நியாயப்படுத்தவும், வாய்ப்பளிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக் கொள்கின்றது. 
ஒற்றையாட்சியின் கீழ் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் மேற்படி தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
இந்நிகழ்வின் போது 2013ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவும் இதன்போது இடம்பெற்றதுடன் இக்கூட்டத்தில், கட்சியின் உறுப்பினர்கள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

samedi 29 décembre 2012

போராளி இயக்கம்! தலைநகரை கைப்பற்ற படையெடுத்து வருகிறது


மத்திய ஆபிரிக்க குடியரசில் (Central African Republic) போராளிப் படையினர், தலைநகரை கைப்பற்றும் நோக்குடன் படையெடுத்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் பென்குய் எந்த நேரத்திலும் போராளி இயக்கத்தின் கைகளில் விழலாம் என்று கூறப்படுகிறது.
இங்குள்ள ஐ.நா. அமைப்புகள் தமது அலுவலகங்களை மூடிவிட்டு, ஊழியர்களை திருப்பி அழைத்து விட்டன. அமெரிக்க தூதரகம், தமது நாட்டு பிரஜைகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவித்துவிட்டது.
எந்த நிமிடமும், எதுவும் ஆகலாம் என்ற நிலையில், மத்திய ஆபிரிக்க குடியரசில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை தருகிறோம், பாருங்கள். கீழேயுள்ள போட்டோவில், போராளி குழு ஒன்றின் தளபதி கிரிஸ்டோஃபி நிடோம்ஜி, தனது இரு பாதுகாவலர்களுடன்.தற்போது தலைநகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் போராளிப் படைகள், ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஒரே நோக்கத்தோடு தலைநகரை நோக்கி வருகிறார்கள். அந்த நோக்கம், ஜனாதிபதியை அகற்றிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதுதான்.
 வரைபடத்தில், மத்திய ஆபிரிக்க குடியரசு எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.ஒரு காலத்தில் பிரான்ஸின் காலனி நாடாக இருந்தது மத்திய ஆபிரிக்க குடியரசு. அதன்பிறகு பிரான்ஸ்காரர்கள் இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு அகன்றார்கள். தற்போது, போராளிப் படைகள் தலைநகரை நெருங்கும் நிலையில், பிரான்ஸ் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பிரான்ஸின் ஆதிக்கத்தில் நீண்ட காலம் இருந்த காரணத்தால், இங்கு பேசப்படும் மொழி, பிரெஞ்ச். போராளி இயக்கத்தினர் தமது ஒன்றிணைந்த படையை, Séléka கூட்டணி என்று அழைக்கின்றனர். இவர்கள் பெரிதும், சிறிதுமாக பல நகரங்களை ஏற்கனவே கைப்பற்றி விட்டனர்.தலைநகரில் போராளிப் படையினருக்கு முழுமையான ஆதரவு உள்ளது என்று சொல்ல முடியாது. அதேபோல, கிராமங்களில் சில கிராமங்கள்தான் போராளிப் படைகளுக்கு ஆதரவானவை. சில கிராமங்கள், தற்போதுள்ள ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பவை.போராளிப் படையினர், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் வைத்திருக்கிறார்கள். இந்த ஆயுதங்கள் ‘நிழலான’ மார்க்கமாக இவர்களை வந்தடைகின்றன. அரசுக்கு நேரடியாக ராணுவ ரீதியில் உதவும் அமெரிக்கா, போராளி இயக்கத்துக்கு ‘சுற்றுப் பாதையில்’ ஆயுத சப்ளை செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.
. போராளிப் படையை சேர்ந்தவர்கள், அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமத்தை, காவலுக்கு நின்ற ராணுவத்தினரை கொன்றுவிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை காணலாம். போராளிப் படையை சேர்ந்தவர்கள், ஒரு கிராமத்தின் ஊடாக சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து கடந்து செல்லும் காட்சி. இவர்களது கூட்டணியில், சில இயக்கங்கள் பெரியவை. ஆயிரக்கணக்கான போராளிகளை கொண்டவை. வேறு சில இயக்கங்களில் சில நூறு போராளிகளே உள்ளனர் .ஹையா.. மத்திய ஆபிரிக்க குடியரசு ராணுவத்தினருடன், ஒரு அமெரிக்க ராணுவ வீரர். அரசுக்கு நேரடியாக ராணுவ ரீதியில் அமெரிக்கா உதவுகிறது என்று குறிப்பிட்டோம். ராணுவத்துக்கு சில பயிற்சிகளை கொடுப்பதுகூட அமெரிக்கர்கள்தான்.யார் எந்த நகரைக் கைப்பற்றினாலென்ன, இவர்களது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படப் போவதில்லை. இந்த யுத்தம் 2004-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 8 ஆண்டுகளாக யுத்தம் நடப்பதால், இந்தக் குழந்தைகள் பிறந்த நாளில் இருந்தே யுத்தத்தை பார்த்து வருகிறார்கள். ஆயுதங்கள் எப்போது மௌனமாகின்றனவோ, அதன்பின்னரே அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை கிடைக்கலாம்.
இன்று உள்ள நிலையில், போராளி அமைப்புகளை முற்றிலும் அழிக்கும் அளவுக்கு அரசுக்கு பலம் இல்லை. அதேபோல, நாடு முழுவதையும் கைப்பற்றும் அளவுக்கு போராளி அமைப்புகளிடமும் பலம் இல்லை.

ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி,மரணம்! அமைதியாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்!





டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவிக்கு மூளைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவி உயிரிழந்ததற்கு இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர், டெல்லி முதல் அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவி உயிரிழந்ததற்கு, அவரது மூளையில் ஏற்பட்ட வீக்கமே முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை அதிகாரி கூறுகையில், மாணவி மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பே முக்கிய காரணம். டில்லி மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்து விட்டது என கூறினார். 

டில்லியில் பலாத்காரத்துக்கு உள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணம் அடைந்ததை அடுத்து, புது தில்லி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாக அமர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலியும், பள்ளிச் சிறுமிகள் சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு அமர்ந்திருந்தனர்.இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-
 
நாட்டு மக்கள் தங்கள் சகோதரியை இழந்துவிட்டனர். இந்த நேரத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு தாய் என்ற முறையில் அனைவரின் உணர்வுகளையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்.
 
உயிரிழந்த மாணவிக்கு கட்டாயம் உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிக்கு தகுந்த கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

நெடியவன் குழுவினர் TNA யின் தலைவராக்க முயற்சி என்கிறது சிங்கள இணையம்:-

இலங்கைப் பாதுகாப்பு தரப்பும் புலனாய்வுப் பிரிவும்  சிறீதரனுக்கும் வலை வீச்சு - சிக்குவாரா?

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி பிரசாரம் செய்து, போரின் மூலமே இலங்கையின் தனிநாட்டை உருவாக்கலாம் என சர்வதேச ரீதியில் கொள்கைளை பரப்பி வரும், நெடியவன் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து, இரா. சம்பந்தனை நீக்கி விட்டு, சிறிதரனை தலைவராக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் ஆற்றிய உரையை அடுத்த நெடியவன் அணியினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் எனவும், ஐரோப்பாவில் இருந்து இயங்கும் தமிழர்களின் சர்வதேச மனிதாபிமான அமைப்பின் ஊடாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தன், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாகவும்  அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தரவை புலிகளின் தலைவர் பிறப்பித்து உள்ளதாகவும்  புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகளுக்கு சீன கம்யூனிஸ்ட் தலைவர் எச்சரிக்கை

china prasident-1ஊழல், பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து மீளாவிட்டால் வீழ்ச்சி ஏற்படும். எனவே, கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு சீன கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார். ஒரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ள சீனாவில், கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொள்பவர்தான் அதிபர் பதவியை வகிக்க முடியும். இப்போது கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள ஜீ ஜின்பிங், விரைவில் அதிபராக உள்ளார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகளின் தலைவர்களை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார் ஜீ ஜின்பிங். இக்கூட்டத்தில், சீன ஜனநாயக தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சாங்ஸி உள்பட 8 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜீ ஜின்பிங் பேசியதாவது:ர்""1945ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாசேதுங்கை சந்தித்த கம்யூனிஸ்ட் அல்லாத கட்சியான சீன ஜனநாயக தேசிய நிர்மாணக் சங்கத் தலைவர் ஹுயாங் யான்பெய், "சீன வரலாற்றில் பல ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அரச வம்சத்தினர் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வீழ்ச்சி அடைந்துள்ளனர்' என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் அமைப்பு, சரியாக செயல்படாவிட்டாலோ, மந்த நிலையில் இருந்தாலோ அதன் வீழ்ச்சி தொடங்கிவிடும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு பொருள் அழுகத் தொடங்கிய பின்புதான், அதில் புழுக்கள் தோன்றும். எனவே, கட்சியினர் ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்'' என்றார் ஜீ ஜின்பிங். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சிலர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சிலர் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே ஜீ ஜின்பிங் இவ்வாறு கூறியுள்ளார்.

சுரங்கத்தில் நச்சுவாயுக் கசிவு மூவர் பலி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி


நிவித்திகலையிலுள்ள மாணிக்கக்கல் சுரங்கமொன்றில் நச்சுவாயுக் கசிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது சுரங்கத்தின் உள்ளே பணியாற்றிய மூவர் நச்சு வாயுக் கசிவினால் மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, நச்சிவாயுவை நுகர்ந்த ஒருவர் மிகவும் கடுமையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

vendredi 28 décembre 2012

பாரதரத்னா விருது மகிந்தவுக்கு விருது வழங்குமாறு சுப்ரமணியம் சுவாமி மீண்டும் வலியுறுத்தல்


இலங்கைக்கு இந்திய இராணுவம் பயிற்சிகளுக்காக அனுப்பப்படுவதை, இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். கோயமுத்தூரில் நேற்ற இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கையுடன் பல்வேறு வழிகளில் நட்புறவை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கம், சிங்களவர்களுக்கும் ஒரே மரபணுக்களே உள்ளன.
புறானகாலத்தில் இராவணனும் வடஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர் என்று சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையுடன் நட்புறவினை அதிகரித்துக் கொள்ள இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் அதிகாரப்பகிர்வுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றும்வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன.


நாட்டில் இன்று வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன. எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார். ஹலால் சான்றிதழுக்காக அறவிடப்படும் கட்டணம் எதற்காக செலவு செய்யப்படுகின்றது என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த மதமானாலும் அடிப்படைவாதக் கருத்துக்கள் தலைதூக்குவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நூற்றுக்கு 7 வீதமான மக்களே ஹலால் சான்றிதழுடைய உணவு வகைகளை உட்கொள்கின்றனர். ஆனால், ஹால் உணவுகளை சாப்பிடக்கூடாது என தடைசெய்வது பிழையான விடயமாகும்.
அதேவேளை ஹலால் சான்றிதழுக்காக செலுத்தப்படும் கட்டணங்கள் எங்கே போய்ச்சேர்கிறது. அது மத ரீதியான அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்கு செலவு செய்யப்படுகின்றதா ? என்பதை ஆராய வேண்டியது கட்டாயமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யா என்றென்றும் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாகும்.



மனித உரிமை மீறல் குற்றச் செயல்களில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய சில மேற்கத்திய வல்லரசு நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது நாகரீகமான செயல் அல்ல என்று இலங்கையில் புதிய ரஷ்ய தூதுவராக பதவியேற்றுள்ள எலக்ஸாண்டரே கர்ச்சாவா கண்டனம் தெரிவித்தார்.
சிலர் மற்றவர்கள் கண்ணில் தூசி படிந்திருக்கிறதென்று கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர்கள் மாலைக்கண் பார்வையுடையவர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்த ரஷ்யத் தூதுவர் மேற்கத்திய, அபிவிருத்தி அடைந்த நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை தெரிவிப்பது தவறில்லை என்றும் அந்த ஆலோசனைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவருவது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார். இவ்விதம் மேற்கத்திய நாடுகள் சில நடந்து கொள்வது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நாடுகள் அநாவசியமாக தலையிடுவதையே உறுதிப்படுத்துகிற தென்றும் அவர் கூறினார்.
ரஷ்ய தூதுவரின் கூற்றை நாம் மனப்பூர்வமாக அங்கீகரிக்கின்றோம். யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளில் இலங்கையில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதிகளினால் புதைக்கப்பட்ட இந்த தரைக்கண்ணி வெடிகள் இன்னும் சிறிதளவு நிலப்பரப்பிலேயே அகற்றப்படாத நிலையில் இலங்கை அரசாங்கம் இராணுவத்தினரதும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் நிதி உதவியுடனும் வெளிநாட்டு தொண்டர்களின் உதவியுடனும் கண்ணி வெடிகளை அகற்றும் பணியை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
கம்போடியா போன்ற நாடுகளில் யுத்தம் 1970ம் ஆண்டு தசாப்தத்தில் முடிவடைந்தது. ஆயினும் இன்றும் கூட கம்போடியாவில் புதையுண்டிருக்கும் தரைக்கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இதிலிருந்து இலங்கை கண்ணி வெடிகளை அகற்றுவதில் உலக சாதனையை மூன்றாண்டு என்ற குறுகிய காலத்தில் ஏற்படுத்தியிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
ரஷ்யா என்றென்றும் சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் போன்று இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாகும். அன்று இலங்கையில் இரண்டு பல்கலைக் கழகங்களே இருந்தன. கொழும்பு பல்கலைக்கழகமும், பேராதனைப் பல்கலைகழகமும் இருந்த காலத்தில் நம் நாட்டு பிள்ளைகளுக்கு வைத்தியம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், பொறியியல் துறைகளில் பட்டப்படிப்பு, முதுமாணிப்படிப்பு, கலாநிதிப் படிப்புகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா போன்ற வளர்முக நாடுகளின் மாணவ மாணவிகளுக்காக லுமும்பா சர்வதேச பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தி எமது நாட்டு இளம் சந்ததியினருக்கு இலவச கல்வி அறிவை பெற்றுக் கொடுத்த ஒரு தார்மீக பொறுப்புள்ள நாடாக திகழ்ந்தது.
லுமும்பா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான டாக்டர்கள், பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இன்று இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உயர் பதவிகளில் இருந்து தாங்கள் வாழும் நாட்டு மக்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறார்கள்.இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த காலப்பகுதியில் இருநாடுகளில் வர்த்தக உறவு பெரும் வெற்றியை அளித்திருக்கிறது. ரஷ்யா இலங்கையின் மின்சக்தி, எரிசக்தி துறைக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து நாம் தேவையான போதெல்லாம் எரிபொருளை வாங்கி வருகின்றோம்.
வியட்னாம் உட்பட பல நாடுகளில் அணுசக்தியின் மூலம் மின்சக்தியை உருவாக்கும் தொழிற்சாலைகளை அமைத்து கொடுத்து வருகின்றது. வியாட்னாமும் ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி மின் உற்பத்தி ஆலை ஒன்றை பெற்றுள்ளது. இலங்கை தேயிலையை பெருமளவில் இறக்குமதி செய்யும் ஒரு நாடாக ரஷ்யா இருந்து வருகின்றது. இது விடயத்தில் நாம் ஓர் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாம் ரஷ்யாவிடம் இருந்து கணிசமான அளவு பொருட்களை இறக்குமதி செய்யாததனால் எங்கள் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் பாரிய இடைவெளி தோன்றியது.
இன்று இலங்கை ரஷ்ய பரஸ்பர வர்த்தகம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த பரஸ்பர வர்த்தக உறவை பெருக்குவதற்கு இலங்கை அரசாங்கம் இப்போது ரஷ்ய செல்வந்த உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ந்தளிக்கும் ஒரு பாரிய பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறது.
2011ம் ஆண்டில் 21 ஆயிரம் ரஷ்ய உல்லாசப் பயணிகளே இங்கு வந்தார்கள். ரஷ்யா வருடத்திற்கு சுமார் 7 முதல் 8 மாதங்கள் கடும் குளிருடனான மாரிகாலத்தை கொண்டிருக்கிறது. இதனால் ரஷ்ய செல்வந்தர்கள் பூமத்திய ரேகைக்கு தெற்கில் அமைந்திருக்கும் உஷ்ண சீதோஷ்ண நிலையை கொண்டிருக்கும் இலங்கைக்கு வந்து தங்கள் விடுமுறையை மகிழ்ச்சியோடு கழிப்பதற்கு மிகவும் விரும்புகிறார்கள்.
அவர்கள் எங்கள் நாட்டின் நாலா பக்கத்திலும் அமைந்திருக்கும் நீலக்கடற்கரையின் சூரிய ஒளியில் குளிர்காய்வதற்கு விரும்புகிறார்கள். அவர்களின் ஆசைக்கனவை நிறைவேற்றுவதற்காக தென்னிலங்கையில் ஹிக்கடுவை, கிழக்கிலங்கையில் அருகம்பே, பாசிக்குடா, நிலாவெளி போன்ற கடற்கரைகளை அடுத்து நடுத்தர வகுப்பினரும் செல்வந்தர்களும் தங்கியிருக்கக்கூடிய பல ஹோட்டல்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
21ம் நூற்றாண்டில் வெளிநாட்டு நாணயமாற்றை சம்பாதிக்கக்கூடிய முதன்மைத் தொழிலாக உல்லாசப் பயணத்துறை இருந்து வருகின்றதென்ற உண்மையை உணர்ந்திருக்கும் எமது அரசாங்கம் அந்தத் துறையை முன்னேற்றி அதன் மூலம் எமது நாட்டின் தேசிய வருமானத்தை பெருக்குவதற்கு எடுத்துவரும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எமக்குண்டு

jeudi 27 décembre 2012

உலகம் முழுக்க ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்’


‘உலகம் முழுக்க ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்’ என்கிற அதிர்ச்சித் தகவலோடு ஆரம்பிக்கிறார் ஜெனிதா. இவர் இந்தியாவில் ஊட்டியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் Freedom firm என்ற உலகம் தழுவிய அமைப்பின்பொறுப்பாளர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறுமிகளை மீட்டெடுத்து, அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைப்பது அல்லது கல்வி அறிவு கொடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.

‘பாட்னா, புனே, டெல்லி, நாக்பூர், சென்னை போன்ற இடங்களில் இதுமாதிரியான பாலியல் தொழில் விடுதிகள் இப்போது அதிக அளவில் இயங்குகின்றன. இதற்காகவே சில தரகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிறுமிகளோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2007லிருந்து செயல்படும் எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 250 சிறுமிகள் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்த்த சிறுமிகளும் உண்டு" என்கிறார் ஜெனிதா.

பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் இதுபோன்ற கடத்தலுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவள் பன்னிரெண்டு வயதாகும் கலைச்செல்வி. அப்பாவின் திடீர் மறைவால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. நோயாளியான அம்மாவுக்கும் வேலை பார்க்கத் தெம்பு இல்லாததால், சென்னையிலிருக்கும் தாய்மாமன் வீட்டில் கலையும் அவள் அம்மாவும் அடைக்கலம் புகுந்தார்கள். தாய்மாமன், கலையை அடுத்தவருடம் பள்ளிக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி, தன் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது மனைவி, இரண்டு பெண்குழந்தைகளின் துணிகளைத் துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, கடைகளுக்குப் போவது என்று அவள் வயதுக்கும் உடம்புக்கும் மீறிய வேலைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தப்பட்டாள் கலை. ஒருநாள் கடைக்குப்போன இடத்தில் தன்னிடம் மிகவும் வாஞ்சையோடு பேச்சுக் கொடுத்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியிடம் தனது கஷ்டங்களையெல்லாம் சொல்லி அழுதாள் கலை.

தன்னோடு வந்தால் கலைக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக மூளைச் சலவை செய்த அந்தப் பெண்மணியை நம்பி அன்றே அவரோடு போனாள் கலை. இரண்டு நாட்கள் ஏதோ ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்ட கலை, அடுத்த நாள் மும்பைக்கு இரண்டு தடியர்களின் துணையோடு ரயிலேற்றப்படுகிறாள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, வழிமுழுக்க இருமல் மருந்து என்று போதை திரவத்தைக் குடிக்க வைத்து அவளை அரை மயக்கத்திலேயே கொண்டு போயிருக்கிறார்கள். ரெட் லைட் ஏரியாவில் இரண்டு வருடங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டதோடு, போதை வஸ்துகளுக்கும் அவள் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அங்கே ரெய்டு நடந்தபோது 14 வயதாகி இருக்கும் கலையும் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். அந்தத் தொண்டு நிறுவனம் மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் கொடுத்தும் போதைப் பழக்கத்திலிருந்து மட்டும் அவளை மீட்க முடியவில்லை. அவள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு அவளது அம்மாவைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. தற்போது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட, சிறப்புச் சிகிச்சைக்காக புனேவிலிருக்கும் ஒரு சேவை இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள், கலை.

இந்தியாவில் 80 சதவிகிதப் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் இதற்குப் பெற்றோர்களின் கவனக்குறைவே காரணம். தெரியாத வெளி ஆட்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பதற்காக தங்களுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் வசம் பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளச் சொல்லி ஒப்படைத்துவிட்டுப் போகிறார்கள். அவர்களில் சிலர்தான் இதுமாதிரியான வக்கிரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்று ஓர் அறிக்கையைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார், மனநல நிபுணர் டாக்டர்.திருநாவுக்கரசு.

பாலியல் வக்கிரங்களுக்காக மட்டுமல்ல, பிச்சைஎடுக்கும் ‘தொழிலில்’ ஈடுபடுத்தவும் பெண்குழந்தைகள் விலை கொடுத்து வாங்கப்படுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வி என்ற பெண்மணி, ஏற்கெனவே தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், நவம்பர் 12ம்தேதி தனக்குப் பிறந்த பெண்குழந்தையை, ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, நூறு ரூபாய் அட்வான்ஸாக பெற்றுக்கொண்டு மூலக்கடையைச் சேர்ந்த முனியம்மா என்ற பெண்ணிடம் விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. அதை வாங்கிய முனியம்மா, கோயம்பேடு பஸ் நிலையத்தில் அந்தக் குழந்தையைக் காட்டி பிச்சையெடுத்தபோது சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். பிச்சையெடுக்க வைக்க அந்தக் குழந்தையை வாங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டதையடுத்து செல்வியும் முனியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தை, ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைப் பேறின்மையும் குழந்தைகள் வாங்கப்படுவதற்கு ஒரு காரணம். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இரவெல்லாம் அழுதுகொண்டிருந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுத்து சமாதானப்படுத்துமாறு அதன் தாய் வற்புறுத்தப்பட்டார். ஆனால், குழந்தை அப்படிக் கதறிக் கொண்டிருக்கும்போதுகூட பால் கொடுக்கத் தயங்கினார் அந்தப் பெண். சந்தேகப்பட்டு விசாரித்தபோது நவம்பர் மாதம் 6ம் தேதி பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் குழந்தையை அவர் இன்னொருவரிடம் வாங்கியது தெரியவந்துள்ளது. இது குறித்து இப்போது அந்தக் குழந்தை கைமாறிய ஐந்து பேரிடம் விசாரணை நடந்துவருகிறது.

குழந்தைகளை விற்பது, வாங்குவது மட்டுமல்ல திருடவும்படுகின்றன. குழந்தையில்லாத சில பெண்கள் அதுமாதிரி திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி. தாய்மை அடையத் தாமதமாகும் பெண்களை நாம் மனரீதியாகக் காயப்படுத்தி, அந்த நிலைக்கு அவர்களைத் துரத்துகிறோம் என்பதால் நாமும் ஒருவகையில் இதற்குக் காரணம்தான். தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக நீங்கள் அறிந்திருக்கக் கூடிய அசோக் ரத்தினம், தான் வாசித்த செய்தி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ‘பொய்க்குடம்’ என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார். 

நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு குழந்தைப்பேறு இல்லாத வருத்தத்தில் இருந்திருக்கிறார். உறவினர்கள் இவரை பல விதத்திலும் மனதை வருத்தி இருக்கிறார்கள். குழந்தையின்மையைக் காரணம் காட்டி, அவரது கணவருக்கு இரண்டாம் திருமணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தனக்கு ஏற்பட்ட குறையை மறைக்கவும் தன் அன்புக் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லாமலும், தான் கர்ப்பமடைந்திருப்பதாக அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார். பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க ஒருவித தவிப்பிலேயே இருந்தவர், ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருக்கும் பிறந்த குழந்தை ஒன்றை திருடப் போன போது கையும் களவுமாகப் பிடிபட்டு பொதுமக்களிடம் அடிபட்டிருக்கிறார். ‘உறவினர்களின் கொடுமையான வார்த்தைகளே என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டியது’ என்று அழுதிருக்கிறார் அந்தப் பெண்மணி. இந்தச் சம்பவத்தையே தன் ‘பொய்க்குடம்’ என்ற குறும்படத்திற்கான மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறார் அசோக் ரத்தினம். அவரது திருட்டுக்குக் காரணம், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை நடத்திய விதம்தான். அதனால், தாய்மை அடைய தாமதமாகும் பெண்களை யாரும் காயப்படுத்தாதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே, நானே அறுபதாயிரம் ரூபாய் செலவுசெய்து, ‘பொய்க்குடம்’ என்ற இந்தக் குறும்படத்தை எடுத்தேன்" என்கிறார் அசோக் ரத்தினம்.

பிறந்த சிறு குழந்தைகளின் நிலைமை இப்படியென்றால், கருவிலேயே அது பெண் குழந்தை என்றால் கலைத்துவிடும் அவலமும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது" என்கிறார், CASSA (campaign against sex selective abortion) என்ற அமைப்பின் மையக்குழு உறுப்பினர் ஜீவா. மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து நாங்கள் நடத்திய ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இயற்கையின் நியதிப்படி 1,000 ஆண்குழந்தைகளுக்கு 952 பெண்குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், 17 மாவட்டங்களில் 952க்கும் குறைவான பெண் குழந்தைகளே உள்ளன" என்கிறார்.

பெண்குழந்தைகளை கருவில் கொலை செய்வதோடு, ஒரு வயதுக்குள் இறக்கும் பெண்குழந்தைகள் மற்றும் காணாமல் போகும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இந்திய அளவில் இது 33 லட்சமாக உயர்ந்திருக்கிறது" என்கிறார் ஜீவா.

பெண்குழந்தைகளுக்கெதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு சார்பில் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன?

பிச்சையெடுக்க தங்கள் பெண் குழந்தைகளையே ஈடுபடுத்தும் அம்மாவையோ, அப்பாவையோ அதற்கென உருவாக்கப்பட்ட யூனிஃபார்ம் அணியாத போலீஸ் படை ( J.A.P.U. ) பிடித்துக் கொண்டு எங்களிடம் வருவார்கள். அந்தப் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்து, பிள்ளைகளை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்ற உறுதிமொழி கொடுத்து அந்தச் சிறுமிகளை தமிழக அரசே நடத்தும் புரசைவாக்கத்தில் இருக்கும் குழந்தைகள் நலக் குழும இல்லத்தில் (C.W.C.) சேர்த்து கவனித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு படிப்போடு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து வருகிறோம். சில தனியார் நிறுவனங்களும் எங்களுக்கு உதவுவதால் இங்கிருந்து போன இரண்டு குழந்தைகள், தற்போது மருத்துவம் மற்றும் விஸ்காம் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார், இந்தக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் ஆக்னஸ் சாந்தி. இவர் ஒரு மனநல ஆலோசகரும் கூட.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் எங்கள் குழுமத்தில் பராமரிக்கப்படுகிறார்கள். தங்களின் பெற்றோர், ஊர் குறித்த விவரங்களைச் சரியாகச் சொல்ல முடியாதபோது அவர்கள் கூறும் ஏதாவது சின்னத் தகவல்களையாவது பெற்று, கூகுள் மேப் மூலமாகவும் இந்தியா முழுக்க இருக்கும் ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாகவும் முயற்சித்து, அவர்களைப் பெற்றோரிடம் சேர்த்து வைக்கிறோம்" என்கிறார், ஆக்னஸ் சாந்தி.

நாம் என்ன செய்ய முடியும்?

ஏதாவது பொருள் வாங்கவோ அல்லது பள்ளிக்கே செல்லும் சிறு குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு விலாசத்தையோ, செல்போன் நம்பரையோ மனப்பாடம் செவித்தோ அல்லது அதை அவர்களது பாக்கெட்டில் எழுதி வைப்பதையோ பெற்றோர் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வழி தெரியாமல் தவிக்கும் சில குழந்தைகள், உடனடியாக பெற்றோரைச் சேரும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

ஏழ்மை நிலையின் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், அழைத்துச் செல்பவர்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அனுப்ப வேண்டும். மாதம் ஒருமுறையாவது அந்தச் சிறுமியைச் சந்தித்து, அவளுக்கு இருக்கும் சங்கடங்களை வெளிப்படையாகப் பேசச் சொல்லி கேட்க வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார் Freedom firm அமைப்பின் பொறுப்பாளர் ஜெனிதா.

மீடியாக்களும் குழந்தைகள் காணாமல் போவதை கட்டணமில்லாத ஒரு சேவையாகவே எடுத்துகொண்டு அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இலவசமாக வெளியிட வேண்டும். அதன் மூலம் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்: வழக்கு எண் 18/9" என்ற படத்தில் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பால மந்திர் இல்லத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதில் காட்டப்பட்ட ஒரு குழந்தையை படத்தில் பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, அது சில வருடங்களுக்கு முன் காணாமல் போன எங்களது குழந்தை என்று தேடி இங்கே வந்தார்கள். தகுந்த ஆதாரங்களை சரிபார்த்த பின்னர், அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்" என்கிறார், குழந்தைகள் நலக் குழுமத்தின் கமிட்டி உறுப்பினராகவும் பரிசு டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான கல்வி அமைப்பை நடத்தும் ஷீலா சார்லஸ் மோகன்.

பெண் குழந்தைகளின் புன்னகையைத் திருடி, அதற்கும்கூட ஒரு விலையை நிர்ணயிக்கும் கல் நெஞ்சுக்காரர்களை மன்னிக்கவே கூடாது. கடுமையான தண்டனைகள் வேண்டும்

இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்!சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு

வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இது அவரின் உரையை திரிவுபடுத்தும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை இராணுவத்திற்கும் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கும் என்ன தொடர்பு என்பது சுமந்திரனுக்கு தெரியாத ஒன்றல்ல. ஒரு நாட்டின் குறித்த பகுதியை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கும் சுமந்திரன், ஒரு நாட்டில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கு இராணுவத்திற்கு அனுமதிவழங்கும் சுமந்திரன் உலக மக்களின் மீதான பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார். இந்த வகையில் காஷ்மிரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமரிக்க நேட்டோ இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், எண்ணை வளத்தைச் சுரண்டுவதற்காக மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் இராணுவப்படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய சியோனிசப் படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும் எதிரான சர்வதேச பயங்கரவாதியாகிறார் சுமந்திரன்.
இலங்கையின் வடகிழக்கை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தை வெளியேறக் கோருவது மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.
சம்பந்தரும் சுமந்திரனும் சர்வதேச அரச பயங்கரவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கின்றனர். இந்த இருவருக்கும் வாக்குப் போட்டது சர்வதேச அரச பயங்கரவாதமா என்ன? இலங்கை அரசு கூட ஏற்றுக்கொள்ளாது என்று எதிர்வு கூறுகிறது சமபந்தர் குழு. இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை நிறுத்துவதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால் இனச்சுத்திகரிப்புக்கூட சம்பந்தரின் ஆசியோடு இனி நடைபெறும் என எதிர்பார்க்கலா

mercredi 26 décembre 2012

சிறிலங்கா அரசாங்கம் திட்டம் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய

நாட்டின் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு எழுத்து மூலமான யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

   உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எழுத்துமூலமான யோசனைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

   தற்போது, சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் 13வது திருத்தம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே, அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

   நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ள நிலையிலேயே அதைச் செய்வது பொருத்தம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 வீதத்தால் அதிகரிப்பு!மக்களின் கடன் சுமை

இலங்கையில் தனிநபர் ஒருவருக்கான கடன் சுமை 25 வீதத்தால் அதிகரித்துள்ளது. என்று இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

   கடந்த வருடம் இந்தத் தொகை 245,980 ரூபாவாக இருந்தது. தற்போது அது 308,171 ரூபாவாக அதிகரித்துள்ளது. தனிநபர் கடன் என்ற அடிப்படையில் இலங்கை அரசுக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையை மொத்த சனத்தொகையால் வகுத்த நிலையிலேயே இந்தத் தொகை கணிப்பிடப்பட்டுள்ளது.

   இலங்கையின் சனத் தொகை 2012 ஆம் ஆண்டில் 20, 277, 597 ஆகும். இந்தநிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 5133 பில்லியன் டொலர்களாகும்.

   இது கடந்த 8 மாதகாலப் பகுதிக்குள் 1,115.6 பில்லியன் தொகையில் இருந்து 6,248.9 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. 

   இதில் உள்நாட்டுக்கடன் 449 பில்லியன்களால் 16 வீதம் அதிகரித்து, 3,253 பில்லியன் களாக உயர்ந்துள்ளது.

   வெளிநாட்டுக் கடன்கள் 666.5 பில்லியன்களில் இருந்து 28.6 வீதமாக அதிகரித்து, 2, 995.8 பில்லியன்களாக அதிகரித்துள்ளன.

   பொருளியல் நிபுணர்களின் கருத்துப்படி, நாட்டின் ஏற்றுமதி வருமானம், கடந்த 9 மாதங்களில் 8.3 வீதத்தால் அதிகரித்தபோது இறக்குமதி செலவுகள் 11.2 வீதத் தால் அதிகரித்தன. 

   இதன் காரணமாக அரசின் கடன் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கள் குறிப்பிட்டனர்.

தேசிய பாதுகாப்பு தினம்


சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், இன்று தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பல பாகங்களிலும் இவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு, வவுனியா பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 7ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்ற மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொகுதித் தலைவர் பரமானந்தம் தலைமையில் மட்டக்களப்பு நல்லையா வீதியல் உள்ள தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நினைவுதின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்ததுடன் நாடபளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

43:400 வீடுகள் நிர்மாணம் பாதிக்கப்பட்ட நாடுகளில் துரிதமாக மீள்கட்டியெழுப்பப்பட்ட நாடு இலங்கை; உலகவங்கி சர்வதேச நிதியங்கள் பாராட்டு


சுனாமி அனர்த்தத்தின் மூலம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் மிகவும் துரிதமாக இயல்பு நிலைக்கு மாறிய நாடாக இலங்கையைக் குறிப்பிட முடியுமென உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான நிதியங்கள் பல குறிப்பிட்டுள்ளன. பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை அதிநவீன முறையில் மீள்கட்டியெழுப்பக்கூடிய மக்களைக் கொண்ட நாடாக இலங்கை இற்றைக்கு 8 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது செயற்பட்ட விதத்தை அடிப்படையாக வைத்து அதனை நினைவுகூரும் வகையில் சர்வதேச நாணய நிதியங்கள் மேற்படி குறிப்பிட்டு ள்ளன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி அனர்த்தம் மூலம் ஏற்பட்ட பாரிய சேதங்களுக்குப் பின்னர் நிவாரணங்களை வழங்கி மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான மீள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சவாலானது ஒரு பாரிய பணியாக அமைந்ததாகவும் சர்வதேச சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.
150:000 ஆயிரம் பேருக்குத் தேவையான வாழ்வாதார வசதிகளை கட்டியெழுப்பி புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகிய பணிகளுக்கான செலவீனமாக 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவானது. இது ஏறத்தாள 22 ஆயிரம் கோடி ரூபாவாகும். இதன் காரணமாக பாரிய தொகை நிதியினை உள்ளூர் மற்றும் சர்வதேச நிதியங்களிலிருந்து பெற்றுக்கொண்டு இலங்கை மீள்கட்டியெழுப்பப்பட்ட விதமானது அனைவரது பாராட்டுக்குரிய விடயமாகும் என்றும் உலக வங்கி மேலும் சுட்டிக்காடுகின்றது.
இன: மத அரசியல் பேதமின்றி நாட் டைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து செயற்பட்டதன்மூலம் மேற்படி வெற்றியை அடைய முடிந்தது என்பதே சர்வதேச சமூகத்தின் கருத்தாகும்.43:400 வீடுகள் சுனாமியினால் பாதிக்கப்பட்டதுடன்: அவை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன. வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் தமது வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக உலக வங்கியின் உதவியுடன் நிதியுதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா இரண்டரை இலட்சம் ரூபா தொகையும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ஒருலட்சம் ரூபா தொகையும் உதவியாக வழங்கப்பட்டன.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 24 பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்படி வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. சுனாமி அனர்த்தத்தின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக அம்பாறை: மட்டக்களப்பு: திருகோணமலை ஆகிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களையும் குறிப்பிடலாம். அப்பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற நிவாரணங்களில் 45 வீதம் ஒதுக்கப்பட்டதுடன் அப்போதைய பிரதமராகப் பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு இணங்கவே இங்கு மீள் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி அவர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டி ருந்தமையினால் திடீர் அனர்த்தமொன்று நாட்டில் ஏற்பட்ட வேளையில் சிறந்த முறையில் நாட்டை வழிநடாத்தி சிறந்த அரசியல் தலைமைத்துவமொன்றை வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அவர்கள் செயற்பட்ட விதமானது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட தென்மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்ற மொத்த நிவாரணத் தொகையில் 26 வீதமும்: வடபிரதேசத்திற்கு 19 வீதமும் மற்றும் மேல்மாகாணத்துக்கு 10 வீதமும் நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறான அனர்த்தத்தின் பின்னர் அவ்வாறானதொரு அனர்த்தம் மீண்டும் ஏற்படும் பட்சத்தில் அதற்கு சிறந்த வகையில் முகங்கொடுக்கக் கூடியவகையிலும் அனர்த்தங்கள் ஏற்படுவதை முற்கூட்டிய நவீன தொழில்நுட்ப கருவிகளின் ஆதாரங்களுடன் அறிந்து கொள்வதற்கும் இலங்கை நடவடிக்கைகள் குறித்து சமூகத்தின் பாராட்டிற்கு ஆளாகியுள்ளது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ஜப்பான், சீனா, உலக வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், யுனிசெப் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டம், அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிலையம், ஜேர்மனி அரசாங்கம், ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்க குடியரசு நிதியம் என்பவற்றிலிருந்து மனிதாபிமான உதவிகளும் இயந்திர சாதன கருவிகள் என்பனவும் பாரியளவில் கிடைக்கப்பெற்றதாக நிதியமைச்சின் வெளிநாட்டு வளத்திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
சுனாமி அனர்த்திற்கு ஆளான மக்களுக்கு உடனடி உணவு வகைகள், துணிமணிகள் தற்காலிக இருப்பிடங்கள், கூடாரங்கள் மருந்துவகைகள் மற்றும் மரணித்தவர்களின் ஈமைச் சடங்குகளுக்குத் தேவையான வசதிகள் என்பவற்றினை உடனுக்குடன் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்தோனேசியாவின் யகார்த்தா நகரில் சுனாமி அனர்த்தத்தின் மூன்றுமாத நிகழ்வு கூட்டத்தின்போது இலங்கையின் செயற்பாடுகள் அங்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டப்பட்டதாகவும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சிகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக நிவாரண அடிப்படையில் குறைந்த வட்டிவீதத்தில் பல சலுகைகளை இலங்கை மத்திய வங்கியின் கடன் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார். அதனடிப்படையில் ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேற்கொள்ளப்பட்ட தொகை அச்சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொடுப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சுனாமி இயற்கை அனர்த்தங்களின் மூலம் பாதிப்புக்கு உள்ளான அனைவரினதும் வாழ்க்கை நிலையினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விவசாயம், கைத்தொழில், சேவைத்துறைகள் அனைத்தும் உடனடியாக மேம்படுத்தப்பட்டன. கடற்றொழில், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையைச் சார்ந்தவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டன. சேதத்துக்குள்ளான வீடுகள், சொத்துக்கள் என்பன அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.
வீதிகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் பாலங்கள், சுகாதார வசதிகள் என்பனவும் மீளக்கட்டியெழுப்பப்பட்டன. இவற்றைவிட பெளத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கு துரித திட்டங்களின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டன.சுனாமி அனர்த்தத்தின் மூலம் உயிரிழந்த மக்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளும், அனர்த்தத்துக்கு ஆளாகியவர்களின் மீட்சிக்காகவும் இன்று நாடளாவிய ரீதியில் மதவழிபாடுகளும், பிரார்த்தனைகளும் இடம்பெறுகின்றன

200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : பிரதியமைச்சர் முரளிதரன்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு உறுகாமம் குளத்தில் 9 அடி நீளமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட திடீர் விஜயம் மேற்கொண்டபோதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கிருந்து நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், 
குறித்த குளத்தில் 9 அடி நீளமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலைமை மோசமடைந்திருந்தது. நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உடனேயே எமக்கு தெரியப்படுத்தியதையடுத்து நாமும் ஏனைய அதிகாரிகளும் துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டோம்.

அதிகமாக வெள்ளம் புகுந்த பிரதேசங்களான சித்தாண்டி வந்தாறுமூலை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினோம். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரையில் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது பிரதான குளங்களான உன்னிச்சை வாகனேரி கட்டுமுறிவு உள்ளிட்ட குளங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் அயராத முயற்சியினாலும் மாவட்ட அரசாங்க அதிபர் சார்ல்ஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் லீவு நாட்களிலும் காரியாலயங்களை திறந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றமையாலும் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலதிகமாக ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு 200 மில்லியன் ரூபாக்களை பெற்று நிவாரண நடவடிக்கைளுக்கு ஒதுக்கியுள்ளோம். மக்கள் எவ்வித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை. எவ்வகையான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய தயார் நிலையில் உள்ளோம். முப்படையினரையும் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

குறிப்பாக வெள்ளத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் ஏக்கர் வயல்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து நிவாரணங்கள் வழங்கவுள்ளோம் என்றார்.

தமிழ் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை எதிர்பார்க்கின்றதா மஹிந்த அரசு?;

"பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும்,  ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம்  தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. 

"பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும்,  ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக அமையும் என்று முஸ்லிம்  தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

முஸ்லிம்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்துவருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில் சிங்களக் குழுவினரால்  முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரண்டு முஸ்லிம் கடைகள் இருக்கின்றன. இந்த இரு கடைகளிலுள்ள வர்த்தகர்கள் சிங்களக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஏன் சிங்களக் குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டனர்?  எதற்காகத் தாக்கப்பட்டனர்?

"புதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பும், ஏனைள சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை. 

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும்,  எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்?

முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் சிறிய செயல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார். 

எமது சமயத்துடனும், மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா?
இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது. 

அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும். 

முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதனூடாக முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டுமென்றா அது எதிர்பார்க்கிறது? வேண்டாம். எம்மை ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளிவிடவேண்டாம்  என்றார் அஸாத் ஸாலி