jeudi 30 janvier 2014

புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாய் மகிந்த ராஜபக்ஷ .நானும் எதிரியை மதிக்கின்றேன்;பொன்சேகா!

News Service
விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாய் பணத்தை கொடுத்தே 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு கோட்டையில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லாளன் இறந்த பின்னர் துட்டகைமுனு மன்னன், எல்லாளனுக்கு நினைவிடம் ஒன்றை அமைத்து கௌரவப்படுத்தினான்.
இந்த முன்னுதாரணத்தை அடிப்படையாக கொண்டு நானும் எதிரியை மதிக்கின்றேன். எனக்கு எதிரியுடன் எந்த பகையும் இல்லை. எனினும் நாட்டின் இன்றைய ஆட்சியாளர் அவ்வாறான நற்குணங்களை அறிந்தவர் அல்ல. நான் பிரபாகரன் பற்றி பேசும் போது ஆட்சியாளரின் மனம் கஷ்டப்படுகிறது.
ஆனால் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சியாளர்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் விடுதலைப் புலிகளுக்கு 500 மில்லியன் ரூபாவை கொடுத்தனர். நாங்கள் இராணுவத்தில் இருந்த போது 12 ஆயிரம் எதிரிகளை கைது செய்து அவர்களை சிறந்த முறையில் நடத்தினோம். எவருக்கும் நாங்கள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி செய்த எங்கள் மீது அரச ஊடங்களை பயன்படுத்தி தொடர்ந்தும் சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனநாயகக் கட்சியை பதிவு செய்த காலத்தில் அந்த பெயரை கூட அறிந்திராத இந்த ஊடகங்கள எம்மீது சேறுபூச ஆரம்பித்துள்ளன.
அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே சவால் ஜனநாயகக் கட்சி என்பதால் எங்கள் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இன்றைய ஆட்சியாளர்கள் செல்லும் பயணம் சரியானதா என்பதை இம்முறை தேர்தலில் அறிந்து கொள்ள முடியும். சர்வதேச சமூகத்துடன் மோதல்களை ஏற்படுத்தி நாட்டை ஆபத்தில் தள்ளியுள்ளனர். கடாபி போன்று தன்னை சுற்றி பெண்களை வைத்திருக்கும் தலைவர்கள் மற்றும் சுவாசிலாந்து நாட்டின் மன்னர் போன்று நிர்வாணமாக பெண்களை வைத்திருக்கும் தலைவர்களுடன் பழகும் நாட்டின் ஆட்சியாளர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர் என்றார்.

கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான் இதை விட சிறந்த உதாரணம் எதுவும் நமக்கு தேவையில்லை இளைஞர் அணிக் கூட்டம் 2014


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வருடாந்த இளைஞர் அணிக் கூட்டம் 2014
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி கூட்டம் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில்( 26.12.2014ம் திகதி) இடம் பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன கடந்த காலங்களில் இளைஞர்கள் என்றால் வேறுமனே கொடிகள் கட்டுவதற்கும் போஸ்ரர் ஒட்டுவதற்கும் மேடையமைப்பதற்கும் கட்சியின் ஏனைய வேலைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தி வந்தனர் நாம் அனைவரும் அறிந்த விடயம்;.

கடந்த கால நிலமையினை நாம் இன்று மாற்றியமைக் வேண்டும்; அதற்கு இளைஞர்கள் நீங்கள் முன்வர வேண்டும். நாளைய சமுதாயத்தை சிறந்த பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பரிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது எனவே கிழக்கின் இன்றைய அரசியல் நிலைமையினை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து ஒரே பாதையில் சென்றால் மாத்திரமே சிறந்த பலனை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய இன்றைய தலைவர்கள் இளைஞர்களே இளைஞன் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் கடந்த 2008ம் ஆண்டு முதன் முறையாக கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான் இதை விட சிறந்த உதாரணம் எதுவும் நமக்கு தேவையில்லை என்று நினைக்கின்றேன் தற்போது இருக்கின்ற இளைஞர்களை ஒரு தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நேக்கத்திற்காக இன்று நாம் கூடியுள்ளோம். எனவே இளைஞர்கள் முன்வர வேண்டும் பொறுப்புக்க கையில் எடுத்து சமுக சிந்தனையுடன் அரசியல் பங்குதாரராக வேண்டும் கடந்தகால கசப்பான அனுபவங்களை தட்டிவிட்டு கிழக்கின் விடிவிற்காக ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பிரதித் தலைவர் க.யோகவேள் கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா உதவிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

குதறப் பட்ட கடாபியின் பெண் போராளிகள்

லங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட "கிளர்ச்சிக் குழு", உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது.

இலங்கையில், முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். லிபியாவில் கடாபிக்கு ஆதரவான Sirte சுற்றிவளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். ஈழத்தின் இறுதிப் போர் ஒரு கடற்கரைப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்ததைப் போன்று, லிபியாவின் இறுதிப் போரும்(Battle of Sirte), ஒரு கடற்கரையோரப் பிரதேசமான சிர்ட்டில் நடந்தது.

ஈழத்தில் சரணடையவிருந்த பிரபாகரன் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், லிபியாவில் சரணடையவிருந்த கடாபி கொல்லப் பட்டார். ஈழத்தில் பெண் போராளிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். ஒரு ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை, போர்க்குற்ற ஆவணமாக உலகை உலுக்கியது. அதே மாதிரி, லிபியாவிலும் நடந்துள்ளது. 


கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களான பெண் இராணுவ வீரர்கள், நேட்டோப் படையின் கூலிப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர்.கடாபி பிடிபடுவதற்கு முன்னரே, அவர் தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களை, எங்காவது தப்பியோடுமாறு கலைத்து விட்டார். ஆனால், "லிபிய முள்ளிவாய்க்கால்" பகுதியில் இருந்தும் யாருமே உயிரோடு தப்ப முடியவில்லை.

கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களாக தெரிவு செய்யப் பட்ட நானூறு பெண்கள், சிறப்பு இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர். உலகில் வேறெந்த நாட்டின் தலைவரும், பெண் மெய்ப்பாதுகாவலர்களை வைத்திருக்கவில்லை. அரபு ஆண்கள், பெண்களை சுடத் தயங்குவார்கள் என்பதாலேயே, கடாபி அவர்களை தெரிவு செய்ததாக சொல்லப் படுகின்றது. அத்துடன், கடாபி தன்னை ஒரு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்ணியவாதியாக காட்டிக் கொள்ளும் நோக்கமும் இருந்தது. மேலும், கடாபியின் அழகிய மெய்ப்பாதுகாவலர்கள், உலகம் முழுவதும் ஊடகங்களின் விசேட கவனத்தைப் பெற்றனர்.

லிபியப் போர் முடிந்த பின்னர், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு என்ன நடந்தது? அது பற்றிய கவலை யாருக்கும் இருக்கவில்லை. ஆனால், லிபியாவின் புதிய ஆட்சியாளர்களும், கடாபியை வெறுக்கும் மேற்கத்திய ஊடகங்களும், பல வதந்திகளை கட்டவிழ்த்து விட்டன. பாலியல் வக்கிரம் கொண்ட வதந்திகளை பரபரப்பான செய்திகளாக வெளியிட்டன. 

கடாபி தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, வன்புணர்ச்சி செய்ததாக கதைகளை கட்டி விட்டனர். அநேகமாக, அந்தத் தகவல்கள் எல்லாம், கடாபிக்கு எதிராக போரிட்ட, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்தே வந்தன. பொதுவாகவே, பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகள், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களை எவ்வாறு ஜீரணித்துக் கொள்வார்கள்?

லிபிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், கடாபியின் லிபரல் கலாச்சாரத்தை வெறுத்து வந்தனர். கடாபி தனது மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்ற பல கதைகள், அவர்கள் மத்தியில் உலாவின. கடாபி ஆட்சி நடக்கும் பொழுதே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அந்தப் பெண் மெய்பாதுகாவலர்களை, "கடாபியின் விபச்சாரிகள்" என்ற பெயரில் அவமானப் படுத்தி வந்தனர்.

தற்போது, மேற்கத்திய ஊடகவியலாளர்களும்  "கடாபியின் விபச்சாரிகள்"  பற்றிய கதைகளை வாங்கி, சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில், BBC தொலைக்காட்சி, இன்னும் ஒரு படி மேலே சென்று, பழமைவாதிகளின் பெண்களுக்கு எதிரான அவதூறுகளை தொகுத்து, ஒரு ஆவணப் படமாக தயாரித்துள்ளது. (Mad Dog: Gaddafi's Secret World) இது தான், மேலைத்தேய ஜனநாயக நாடுகளின் "பெண் உரிமை." 


உண்மையில், கடாபியின் பெண் போராளிகளுக்கு என்ன நடந்தது? தனது ஆண் நண்பருடன் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப் பட்டு, இருவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். சில மெய்ப் பாதுகாவர்கள், மாறுவேடம் பூண்டு, மக்களோடு மக்களாக வெளியேற முயன்றார்கள். ஆனால், அவர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நேட்டோ தலைமையிலான கூலிப் படையினர், அந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, சித்திரவதை செய்து கொன்றனர். அவர்களது சடலங்கள்,புதர்களுக்குள் வீசப் பட்டு, நாட்கணக்காக அழுகி நாறின.

லிபியாவில், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு நடந்த கொடுமை ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் ஆகும். ஆனால், மேற்குலக நாடுகள், லிபிய போர்க்குற்றங்களை விசாரித்து, போர்க் குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களை தப்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. "ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி",  "கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி" போன்ற உணர்ச்சிவசமான பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், லிபிய போர்க்குற்றங்களில் இருந்து, உலக மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன.

லிபிய போர்க்குற்றங்கள், சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு கொண்டு வரப் பட்டால், நேட்டோ படைகளின் பெயரும் கெட்டுப் போகும். ஏனென்றால், லிபியாவின் இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலைக்கு, நேட்டோப் படைகளும் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்..

mercredi 29 janvier 2014

நாட்டின் உயிர் வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

மிதவாத கொள்கைகளை உடையவர்கள் கருத்துக்களை வெளியிட அஞ்சுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மிதவாத கொள்கையுடையோர் கருத்துக்களை வெளியிட அஞ்சுகின்றனர் – சந்திரிக்கா
கொலை செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சம், அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் காரணமாக மிதவாத அல்லது நடுநிலையான கொள்கைகளை உடையவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளியிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக கடும்போக்குவாதிகளே தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் இதனையே மக்கள் செவிமடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தாம் அமைதி பேணி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஏதெனும் ஓர் விடயம் குறித்து கருத்து வெளியிட்டால், தமக்கு எதிராக அரசாங்க ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களையும் சேறு பூசல்களையும் கட்டவிழ்த்துவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை கிடையாது என அரச ஊடகங்கள் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நாட்டின் உயிர் வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும், மூத்த பிரஜை என்ற ரீதியிலும் சில விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் திட்டம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு சிலர் அழைத்த போதிலும் தாம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூலகம் மற்றும் கற்றல் வளநிலையம் மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது


நிகழ்வு கல்லூரி முதல்வர் கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார்,  கோட்டகல்வி அதிகாரிகளான பொ.சிவகுரு, ந.குணலிங்கம், கல்லூரின் முன்னாள் அதிபர் வ.கந்தசாமி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முன்னாள் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏழைப் பெண்ணுக்கு உதவுவதற்காக 90 வயதுடைய ராதாகிருஷ்ணன் திருமண பந்தம்

90 வயதுடைய ராதாகிருஷ்ணன் 60 வயதுடைய ராதா என்ப வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தகவல்கள் படிப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கக் கூடும். ஆனால், திரும ணத்தின் பின்னணி, மாப்பிள்ளையைப் பொருத்தவரை மிகவும் கொள்கைப்பிடிப்புக்கானது.

மாப்பிள்ளைக்கு வயது அதிகமில்லை. சதமடிக்க இன்னும் 10 ஆண்டுகள்தான் பாக்கி. மணமகளும் 60 ஐக் கடந்தவர்தான். ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் வயநாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். கதராடையில் மணக் கோலம் கண்டிருக்கிறார் ராதாவுக்கு தன்னைவிட 30 வயது மூத்த புதியதோர் உறவு கிடைத்திருக்கிறது.

5 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்தவர் ராதா. தங்கைகளுக்கு திருமணமாகிவிட்டது. பெற்றோர் இயற்கையெய்தி பின்னர் தனி மரமாகவே இருந்தார் ராதா. ராதாகிருஷ்ணனின் மூத்த மனைவி இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. நண்பர்கள் மூலம் இந்தத் திருமண பந்தம் ஏற்பட்டதாம்.

ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் வருகிறது. அவரின் மறைவுக்குப் பின், ஏழைப் பெண் ஒருவருக்கு அந்தத் தொகை கிடைக்க வேண்டும் என விரும்பினார். சட்டரீதியான நடைமுறைகளுக்காக இத்திருமணம் நடைபெற்றது' என்றார் ராதா.

ராதாகிருஷ்ணனின் முதல் மனைவிக்குப் பிறந்த 5 வாரிசுகளும் திருமணத்துக்கு வரவில்லை. திருமண பந்தம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடும். அது ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவுவதற்காகக் கூட இருக்கலாம் என 90 வயதுடைய ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

மிகவும் மோசமான நிலைமை கல்வி குறித்து யுனெஸ்கோ எச்சரிக்கை

மிக மோசமான கல்வித்தரம் காரணமாக பல நாடுகளால் சிறுவர்களை படிக்க வைக்க முடிவதில்லை என்று ஐ.நா மன்ற கல்வி,அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் ( யுனெஸ்கோ) கூறுகிறது.
ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் கணக்குப் போடும் திறன் கிடைக்கவில்லை என்று யுனெஸ்கோவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மூன்றில் ஒரு பங்கு நாடுகளில், கால் பங்குக்கும் மேலான ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி தரப்படுவதில்லை என்றும் அது கூறியது.
மிகவும் மோசமான நிலைமை நீடிக்கும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில், குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே படித்தல் மற்றும் கணிதம் ஆகிய இரு விஷயங்களின் அடிப்படையான அம்சங்கள் தெரிந்திருக்கின்றன என்று இஸ்லாமாபாதில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

dimanche 26 janvier 2014

முரளிதரன் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறை அற்றதாம்.

தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது.போர்க் குற்றச் செயல் விசாரணை குறித்து கோருவதன் மூலம் நாடு இன்னும் நெருக்கடிகளையே எதிர்நோக்க நேரிடும். புலிகள் அமைப்பு எவரையம் பாவம் பார்க்கவில்லை.
அவ்வாறு என்றால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்தப்பட முடியும்.
இம்முறை ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை மாநாட்டில் பங்கேற்க முயற்சித்து வருவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.முரளிதரன் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது. இந்தியாவின் தலைமை தலைவர் பதவியை  தமிழர் அப்துல்கலாம் கடைமையாற்றினார் என்பதை மறந்து  தமிழர் ஒருவர் தலைவர் ஆவது நடைமுறைச்சாத்தியமற்றது என்பது அதி முட்டாள் தனம் முரளிதரன் பேச்சு என்று ஆய்வாழர்கள் கருதுகிறார்கள் .இலங்கை அரச சட்டமைப்பை கேலிசெய்வதாகவும் ஆய்வாழர்கள் கருதுகிறார்கள் .

மஹிந்த அரசுடன் இணைந்து செயற்பட த.தே.கூ. தயார்!சம்பந்தே மிகுந்த ஆர்வம்;தம்பிமுத்து

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தனது காலத்தினுள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சம்பந்தன் அவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார் எனவும் பிரதேச அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அரசுடன் ஒத்துழைப்பது அவசியமானதே என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அருண் தம்பி முத்து, எனினும் தமிழ் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தனக்குத் துரோகி என மக்கள் பட்டம் சூட்டிவிடுவார்கள் எனும் பயத்தினாலேயே அவர் இவ்விடயத்தில் பின்னிற்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் அவர்களின் எண்ணப் போக்கை வரவேற்ற ஜனாதிபதி, இணக்க அரசியலை மேற்கொண்டால் அதனூடாக வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்பி, தமிழ் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்கள் சேவை செய்யலாம் எனவும் தெரிவித்ததாகவும் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.
வடக்கின் தற்போதைய நிலைமை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு போன்றன தொடர்பில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த வாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெப்ரவரி மாத முதல் வாரத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்திய உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு சந்திப்பு நடாத்த உத்தேசித்துள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திக்குத்திசை தெரியாத உலகுக்கு வழிகாட்டும் இந்திய பெண்கள்;

இந்திய பொருளாதாரம் இயற்கையிலேயே பெண் தன்மை கொண்டது என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி ‘‘திக்குத்திசை தெரியாத உலகுக்கு வழிகாட்டும் இந்திய பெண்கள்'' என்ற தலைப்பில் ஆயிரம் பெண் தொழில் வல்லுனர்கள் சந்திப்பு சிறப்பு மாநாடு சென்னை நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பத்மா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சென்னை அடையாறு புற்றுநோய் மைய தலைவர் டாக்டர் வி.சாந்தா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் ஆதித்ய பிர்லா குழும இயக்குனர் ராஜஸ்ரீ பிர்லா, பேராசிரியை பிரேமா பாண்டுரங் மற்றும் அகிலா ஸ்ரீனிவாசன், ஹேமா கோபால், டாக்டர் கமலா செல்வராஜ், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பிரிதா ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி ‘ஆன்மீகமும்-பொருளாதாரமும்' என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஆய்வு நடத்த அறிவுரை
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, நூலகங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் கடந்த 20 ஆண்டுகளாக வகுப்புகள் நடத்தி வந்துள்ளேன். இதன் மூலம் பல்வேறு அனுபவமும் எனக்கு கிடைத்துள்ளது.
குறிப்பாக மேல்நாட்டு பொருளாதாரத்தை பற்றி தான் இந்த கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் நடந்துள்ளன.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான், பொருளாதாரத்தில் வலிமையான நம் நாட்டு பொருளாதாரம் பற்றி வரும் காலங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கினேன்.
தடை
ஆனால் அங்குள்ள பேராசிரியர்கள், ‘‘கௌரவ பேராசிரியராக வந்தால் பாடத்தை மட்டும் நடத்திவிட்டு செல்லுங்கள்'' என்று என்னுடைய அறிவுரையை தடுத்தனர். இதுபோன்ற அனுபவமும் எனக்கு கிடைத்தது.
பொருளாதார வலிமை
பொருளாதாரத்தை பொறுத்தவரையில் 1715ம் ஆண்டு இந்தியாவில் தனி மனித வருமானம் 24.5 சதவீதமாகவும், சீனாவில் 34 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 2 சதவீதமாகவும் இருந்துள்ளது.
அந்த அளவிற்கு பொருளாதாரத்தில் இந்தியா வலிமை கொண்டிருந்தது. இவ்வளவு இருந்தும் நம் நாட்டு பொருளாதாரம் பற்றி ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
பெண்ணிய பொருளாதாரம்
ஆசிய நாடுகள் குடும்ப அமைப்பு நாடுகள், ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்புகளில் இருந்து மாறுபட்டு உள்ளது.
சமூகத்தின் அமைப்பை பொருளாதாரம் நிர்ணயிக்கிறது என்று ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் தன்னுடைய ஆய்வில் கண்டறிந்து உள்ளார். நம் நாட்டில் நதிகள் மற்றும் தெய்வங்கள் பெண் பெயர்களிலும், வடிவங்களிலும் இருப்பது போல் இந்திய பொருளாதாரமும் பெண்ணியம் கொண்டதாக இருக்கிறது.
காரணம் இங்கு குடும்ப அமைப்புகள் முறையாக இருப்பதுடன், குடும்பத்தை திறம்பட நிர்வகிப்பவர்களும் பெண்களாகவே இருப்பது தான். குழந்தைகள், முதியவர்களை காப்பது, சேமிப்பது, குடும்ப பொருளாதாரத்தை திறமையாக கையாள்வது, சிக்கன தன்மை போன்றவற்றை நம் பெண்கள் திறமையாக கையாள்கின்றனர்.
இதனால் தான் நம் நாட்டு பொருளாதாரத்திற்கும் இயற்கையிலேயே பெண்தன்மை இருக்கிறது. பெண்கள் நிதியை நிர்வகிப்பதால் 2013ம் ஆண்டு 10 லட்சம் கோடி ரூபாய் வரை குடும்பங்களில் சேமிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு ரூ.6 லட்சம் கோடி தான் சேமித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருப்பதால் அங்கு ஆண் தன்மை கொண்ட பொருளாதாரமாக பொருளாதார நிலை உள்ளது.
இதனால் அமெரிக்காவில் 108 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொதுமக்கள் கடனாளிகளாக மாறி உள்ளனர். ஆன்மீகத்திலும் பெண்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது சிறப்பு தன்மையாகும்.
இதனால் பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளும் பெண்கள் எளிதாக கையாள்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் சென்று பேசும் போது கூட கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் பெண்களை மையமாக வைத்து தான் வழிபடுகிறோம் என்ற கருத்தையும் வலியுறுத்தினேன்.
இது ஒரு புறமிருக்க அழகு சாதனங்களை அதிகளவில் வாங்குவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் அழகு சாதனங்களை உற்பத்தி செய்து நம்நாட்டு பெண்களிடம் விற்கின்றனர்.
இவற்றை தவிர்த்து பெண்களுக்கு மேலும் சேமிப்பை ஊக்குவிப்பதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் மேலும் சிறப்படைய வாய்ப்பு என்று கூறியுள்ளார்

மூடநம்பிக்கை மற்றும் தேவையற்ற விஷயங்களுக்கு எதிரான அறிவு ஆகியனவே நாட்டின் சீர்திருத்தத்திற்கு தேவையான, பயன்தரும்;அப்துல் கலாம்

புவனேஸ்வர் : இளைஞர்கள் அடிமைத்தனமான மனநிலை விட்டு, சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்திய சமுதாயத்திற்கு சீர்திருத்தத்திற்கான மாற்றங்கள் தேவை எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், சுவாமி சிதானந்தா ஜன்மா ஷதாபார்ஷிகி மகோற்சவா என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்துல் கலாம், இந்திய இளைஞர்கள் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : அறிவியல் ரீதியிலான முன்னேற்றம் தொடர்பான அறிவு, மூடநம்பிக்கை மற்றும் தேவையற்ற விஷயங்களுக்கு எதிரான அறிவு ஆகியனவே நாட்டின் சீர்திருத்தத்திற்கு தேவையான, பயன்தரும் அம்சங்களாகும்; மத தலைவர்களும், ஆன்மிக தலைவர்களும் இது போன்ற சமுதாய மாற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்; மதம் சார்ந்த அடையாளங்கள், இனம் மற்றும் ஜாதி ஆகியன இந்திய சமுதாயத்தில் மாற்றமுல், சீர்சிருத்தமும் ஏற்பட மிகப் பெரிய சவாலாக உள்ளன; சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த அறிவை பெற இளைஞர்களை தூண்ட வேண்டும்; அவற்றை ஆராய்ந்து, அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மூட நம்பிக்கைகளில் இருந்து விடபட செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இளைய இந்திய தலைமுறை, மற்றவர்களின் வழிகாட்டுதல் இன்றி தானே தன்னை உணர்ந்து சுயஅறிவை வளர்த்துக் கொள்ளும் திறனை ஏற்படுத்துவது நமது கடமை; வழிகாட்டி திறமையை வெளிப்படுத்துவது உண்மை இல்லை; சுயமாக உருவாக்குவது, சுயமாக அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இது அறிவுத்திறஜ் குறைபாட்டை ஏற்படுத்தாது; உறுதி குறைப்பாட்டை ஏற்படுத்தி விடும்; தனி மனிதனை விட நாடு முக்கியம்; இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்; மக்களை வலிமைப்படுத்தி, பிரிவினையை அகற்ற மத தலைவர்கள் முன்வர வேண்டும்; மனித சமுதாயம் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டுள்ளது; பயங்கரவாதமும், மத மோதல்களும் உலகின் பல பகுதிகளை பாதித்துக் கொண்டுள்ளது; இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட ஆன்மிக சமுதாயத்தினர் உறுதி கொள்ள வேண்டும்; மத ஒருங்கிணைப்பு ஏற்பட கோட்பாடு மற்றும் உலக ஒத்துழைப்புடனான வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலாம் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் தான் எழுதிய வட்டத்தை சதுரமாக்குவது : இந்திய மறுமலர்ச்சிக்கு ஏழு படிகள் என்னும் புத்தகத்தை மேற்கோள் காட்டியும் அப்துல் கலாம் உரை நிகழ்த்தினார்.

jeudi 23 janvier 2014

‘காதல் செய்த குற்றம்’25000ரூபாய் .கட்டப்பஞ்சாயத்து தலைவர் உட்பட இதுவரை 13 பேர் கைது


பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும் அவை தொடர்கின்றன
பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும் அவை தொடர்கின்றனஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு கிராமத்தில் மூத்தவர்களின் உத்தரவின் பெயரில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியமை தொடர்பில் 13 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

ஒரு ஆணுடன் அந்த பெண்ணிற்கு இருந்த உறவை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தினர் இந்த தண்டனையை அளித்துள்ளனர்.

20 வயதான அந்தப் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இழந்த மரியாதையை மீட்பதாக கூறி தவறிழைக்கும் ஜோடிகளை கொலை செய்ய இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் அனுமதி அளிப்பது அடிக்கடி நடக்கும் ஒரு செயலாக நீடிக்கிறது.2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான கவனம் அதிகரித்துள்ளது.அந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பாலியல் வன்முறை மீதான சட்டங்களை கடுமையாக்கியுள்ள பின்னணியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பிர்பம் என்ற பக்கத்து கிராமத்தில் பழங்குடியினத்தை சாராத ஒரு ஆணுடன் உறவு வைத்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

காதல் செய்த குற்றம்
‘'கடந்த ஐந்து வருடங்களாக இவர்களுக்கு இடையில் இந்தக் காதல் தொடர்பு இருந்தது. திங்கட்கிழமையன்று இந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்க அந்த பெண்ணின் இல்லத்திற்கு அந்த நபர் வந்ததை கண்டதும் கிராமத்தினர் தங்களின் கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டினார்கள். அதில் விசாரணை நடக்கும் பொழுது இருவரும் கைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்'', என்று பிபிசியிடம் கூறினார் பிர்பம் காவல்துறை உயர் அதிகாரி சி.சுதாகர்.

காதல் புரிந்த குற்றத்திற்காக அவர்களுக்கு இந்திய பணம் 25000ரூபாய் அபராதத்தை கிராமத்தின் தலைவர் விதித்ததாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.

அந்த ஆண் அபராதப் பணத்தை கட்டிவிட்டதாவும், ஆனால் பெண்ணின் குடும்பத்தால் அந்த அபராதத்தொகை கட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. பின் அந்த பெண்ணின் தூரத்து உறவினரான அந்த கிராமத்தின் தலைவர் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவிட்டார் என்றும் காவல் துறை அதிகாரி கூறினார்.
‘அவளது குடும்பத்தினால் பணம் கட்ட இயலவில்லை, அதனால் அந்த பெண்ணை அனுபவித்து மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று அந்த தலைவர் கூறியதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.
அந்த கட்டப்பஞ்சாயத்து தலைவர் உட்பட இதுவரை 13 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமையன்று நடந்தாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் புதன்கிழமை மாலைதான் காவல் துறையை அணுகினர். புதன்கிழமையன்று அந்தப் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2010ஆம் ஆண்டில் பிர்பம் என்ற இந்த கிராமத்தில் குறைந்தது 3 பெண்களையாவது நிர்வாணமாக கிராமத்தினர் முன்னர் நடக்க கிராம பெரியவர்கள் உத்தரவிட்டதாக, காவல் துறையினர் கூறுகின்றனர். அந்த பெண்கள் அவர்கள் ஜாதி அல்லாத மற்ற ஜாதி ஆண்களுடன் உறவு வைத்து கொண்டதற்காக அவர்களுக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டது.

பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவில் பொதுவான ஒரு செயல் என்றும், அதில் பல சம்பவங்கள் புகார் செய்யப்படாமல் சென்றுவிடுகின்றன என்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் கடுமையாக்கினாலும், சமூகம் இந்தச் சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்தாலும், இந்தியாவில் உள்ள பல பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு பயந்து வாழ்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னமும் காவல்துறையின் அக்கறையின்மை காரணமாக பெரும் அவதிப்படுகின்றனர்.

mercredi 22 janvier 2014

யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் உள்ள நீதிமன்றமொன்றில் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பிலான செயன்முறைகளுக்கு தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் குழு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் விபரங்கள் 2031ம் ஆண்டு வரையில் இரகசியமாகப் பேணப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி தாரூஸ்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் அறகி;கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் பற்றிய தகவல்களை வெளியிடத் தயாரில்லை என  அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் அமெரிக்காவும் சொந்த நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து கவனம் செலுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ ஏனைய சர்வதேச அமைப்புக்களோ நேரடியாக தலையீடு செய்ய முடியும் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து இரத்த திலகம் இட்டவர்கள் தற்போது எங்கே சென்றார்கள்?

தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான் அதிகம் தேசியம் பற்றி பேசுகின்றார்கள்"

தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத் தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்போது தேசியத்தின் பால் ஈர்க் கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் கையை கீறி இரத்த திலகம் இட்டார்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே சென்றார்கள்? அவர்களின் தற்போதைய நிலைதான் என்ன?என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றுகின்றபோது மேடையின் முன்னால் அமர்ந்து இருந்து உணர்ச்சிவசப்பட்டு கையைக் கீறி இரத்த திலகம் இட்ட மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்த பரிசு தியாகிகள் மற்றும் மாவீரர்கள் என்ற சொற்பதங்கள் மாத்திரம்தான்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிழக்குவாழ் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அம்மக்களே தற்போது நன்கு உணர்ந்துள்ளார்கள். இதற்கு உண்மையான காரணம் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்தான் என்பதனையும் அம்மக்கள் உணரா மல் இல்லை. உண்மையை கூறப்போனால் தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான் அதிகம் தேசியம் பற்றி பேசுகின்றார்கள்.

ஏன்? நான் இதனைக் குறிப்பிடுகின்றேன் என்றால் அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்போது தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் அதாவது கையை கீறி இரத்த திலகம் இட்டார்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே சென்றார்கள்? அவர்களின் தற்போதைய நிலைதான் என்ன? ஆனால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னின்றவர்களில் வடக்கைச் சேர்ந்தவர் களின் பெரும்பாலானவர்களின் குடும்பங்கள் அனைத்துமே ஐரோப்பிய நாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றார்கள். நமது மாகாணத்தவரின் நிலை என்ன? என்பதனை சற்று சிந்தியுங்கள்.

ஆனால் எமது மாவட்ட மக்களை எல்லாம் உசுப்பேற்றி உணர்ச்சிவயப்படுத்தி அழிவிற்கான அடித்தளமிட்டது அத் தீர்மானம் என்பதை முன் கூட்டியே அறிந்தும் கூட தங்களது அரசியல் அதிகாரங்களை அதாவது அவர்கள் வகித்த பதவிகளுக்கான கதிரைகளை பாதுகாப்பதற்கான ஓர் கபட நாடகத்தை நிறைவேற்றிய வடபுலத்தை சேர்ந்த சிலருக்கு கிடைத்த பரிசு என்றால், அது தங்களது குடும்பம் பிள்ளைகளுடன் ஐரோப்பிய நாடுகளில் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதுதான்.

இன்றும்கூட சம்பந்தன் மற்றும் மாவை இது போன்று இன்னும் பலர் தற்போது அரசியல் செய்கின்றவர்களின் பிள்ளைகள்கூட வெளிநாட்டிலே வைத்தியர்களாக தொழில் புரிகின்றார்கள். இது எல்லாம் எமது சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. தெரிவிக்க வேண்டும் என்பதற்காக என்னைப் போன்றவர்கள் பேசினாலும் அதனை எமது ஊடகங்கள் பிரசுரிப்பதும் இல்லை. எனவே மக்களே தற்போதைய நிலையிலாவது நீங்களே உங்களை கேள்வி கேட்டு ஏனைய சமூகங்களுடன் அரசியல் ரீதியில் ஒப்பிட்டு வாழ வேண்டும்.

தேசியம் பேசியவர்கள மற்றும் தற்போது அதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்ற வர்களின் ஒரே ஒரு ஆயுதம் கோசம்தான். அதாவது தேசியம் பேசிப் பேசி எமது பிரதேசத்தையே நாசமாக்கி சுடுகாடாக்கினார்கள். அத்தோடு நின்றுவிடாது கோசம் எழுப்பி எழுப்பி எம்மை எல்லாம் விசமாக்கி நாசமாக்கினார்களே தவிர, வேறு எதனையுமே சாதிக்கவில்லை. அதனால்தான் கடந்தகாலங்களில் நாம் விட்ட தவறை இனிவரும் காலங்களில் நிச்சயம் விடக்கூடாது என்று நான் தற்போது கூறுகின்றேன்.

இனிவருகின்ற காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் யாரிடமும் ஏமாறக் கூடாது. எம்மை யாரும் ஏமாற்றக் கூடாது என்கின்ற சிந்தனை மாற்றத்திற்கு கல்வி அவசியம் என்பதனை உணர்ந்துதான் கல்வி அபிவிருத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றேன்' என்றார்.

பல்லாயிரம் கொலைகள் நிகழ்ந்ததாக கூறுகின்ற ஒரு இனம் அதன் சூத்திரதாரிக்கு எப்படி பெரும்பான்மை வாக்குகளை அளிக்கமுடியும்?

bishops+tamilselvanஎதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை நிலைமைகளை மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
அதே வேளை கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் இறுதிக்கட்டப் போரின் போது, இடம்பெற்றதாக சொல்லப்படும் யுத்த குற்றங்கள் பற்றி பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மட்டுமன்றி ஆயர்களும் இணைந்து இலங்கை அரசு மீது கடுமையான குற்றசாட்டுகளை தெரிவித்துள்ளனர்.சிறிலங்கா படையினரால் வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் விமானக்குண்டுகள், இரசாயனக் குண்டுகளாலேயே, அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் போர்க்குற்ற விவகார நிபுணரிடம் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் முறையிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றசாட்டுக்கள் எதுவும் புதியவையல்ல.இவற்றில் மிகைப்படுத்தல்கள் இருந்தாலும் அடிப்படையில் இறுதி யுத்தத்தின் போது மக்கள் வகைதொகையின்றி இறக்க நேரிட்டது என்பது பொய்யானதல்ல.ஆனால் இந்த குற்றசாட்டுகளை அரசு கடந்த  ஐந்து வருடங்களாக இலங்கை அரசு எதிர்கொண்டு வருவதுடன் அவற்றை வெற்றிகொண்டெ வருகின்றதென்பதும் கவனிக்கத்தக்கது. இந்தநிலைமைக்கு காரணங்கள் பல காரணங்கள் உண்டு.எந்த இறுதி யுத்தத்தில் மக்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது என முறையிடப்படுகின்றதோ அந்த யுத்தத்தை முன்னின்று நடாத்திய ஜெனரல் சரத் பொன்சேகாவை நாட்டின் ஜனாதிபதியாக்க 2010ல்  தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவே முதன்மையான காரணியாகும்.
தம்மீது பல்லாயிரம் கொலைகள் நிகழ்ந்ததாக கூறுகின்ற ஒரு இனம் அதன் சூத்திரதாரிக்கு எப்படி பெரும்பான்மை வாக்குகளை அளிக்கமுடியும்? நாட்டினுள்ள இருபத்தி இரண்டு மாவட்டங்களில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பதினெட்டு  மாவட்டங்களிலும் தோல்வியடைந்த பொன்சேகாவுக்கு வடக்குகிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழர் கூடுதலாக வாழும் நுவரெலியாவிலும் மட்டுமே வெற்றி கிடைத்தது.கூட்டமைப்பினரின் அரசியல் சூனியமான இந்த முடிவுதான் இலங்கை அரசின் மேலான யுத்தகுற்றங்களை சர்வதேச ரீதியில் நீர்த்துப்போக செய்த முதற்காரணி ஆகும்.தமிழ் மக்களின் அரசியல் வழிகாட்டிகளான யாழ்ப்பாண பெருகுடிகள் (63 வீத) 113877 வாக்குகளை அளித்து சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயன்றனர்.இறுதியுத்தம் நடந்த படு கொலைகள் நடந்த வன்னி மாவட்டத்தில் (66 வீத) 70367 வாக்குகள் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அந்த சரத் பொன்சேகா  தலைமையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடந்தது என கூறுவதை உலகில் எந்த மடையன் நம்புவான்?    இந்த மடத்தனத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்லாயிரம் ஆண்டு சென்றாலும் பரிகாரம் தேடமுடியாது.
இவை ஒருபுறம் இருக்க சர்வதேச யுத்த குற்றம் பற்றிய தீர்ப்பாயம் சம்பந்தமான ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை பங்கெடுக்காமை ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் மிக்க ரஷ்யா ,சீனா போன்ற நாடுகளை தமிழர் தரப்பினர் இன்றுவரை வெற்றிகொள்ள முடியாதிருக்கும் கையாலாகாத்தனம்,போன்ற பல விடயங்கள் இலங்கை அரசுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றன.எனவே மீண்டும் மீண்டும் இந்த யுத்த குற்றங்களை பேசிபேசியே தமிழர் தரப்பு காலத்தை கடத்துவதும்  அப்பாவி மக்களை ஜெனிவா கனவுகளில் மிதக்க செய்வதும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயலேயாகும். போதாமைக்கு வடமாகாண சபையை கொண்டு நடத்த முடியாது திணறுகின்ற கூட்டமைப்பினர் இன்னும் மூன்று மாத காலத்துக்கு காலம் கடத்த இந்த ஜெனிவா கதையளப்பு கைகொடுக்கும்.
இந்த லட்சணத்தில் இருக்கும் அரசியல் வாதிகள் போதாதென்று எமதுsarath fonseka-1ஆயர்களும் இப்போது முழுநேர அரசியல் வாதிகளாகி விட்டனர். இலங்கை பிரச்சனைக்கும் இந்த ஆயர்களுக்கும் அன்றிலிருந்து இன்றுவரை நல்ல நெருக்கம் என்பதை இலங்கை அரசியல் தகவல்களில் பரிச்சயமானவர்கள் மறுக்கமாட்டார்கள்.அன்று சிங்கராயர்,சின்னராசா,மட்டக்களப்பு ஜோசெப் மேரி தொடங்கி இன்று இம்மானுவேல், ஜெகத் கஸ்பார், இராயப்பு ஜோசேப்பு   வரை இந்த பட்டியல் நீளுகிறது. புலிகளின் தாகம் தமிழீழ தாயகமே என்று ஒற்றை கொடிபிடிக்கும் நெடியவனின் ஆலோசகராக செயற்படும் இம்மானுவேலுக்கு சற்றும் தளராத வகையில் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகார நிபுணருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள் இந்த இலங்கை வாழ் ஆயர்கள்.பாவங்களை மன்னிக்க பிறந்த யேசுபிரானின் வார்த்தைகளை பிரசங்கிக்கின்ற இந்த உபதேசிகள் மக்கள் மறந்தாலும் நாம் விடுவோமோ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். ஆனால் மக்கள் ஆயிரக்கணக்கில் இறப்பதற்கு காரணமான புலிகளையிட்டு மட்டும் ஏனோ இவர்களிடம் இந்த ஆவேசம் இருப்பதில்லை குழந்தைகளின் கைகளில் புலிகள் வெடிகுண்டுகளை திணித்த பொழுதுகளிலும்இபல்லாயிரம் மக்களை மனித கேடயங்களாக தடுத்துவைத்து பலியிட்ட பொழுதுகளிலும்  பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்கள் பாவங்களை மன்னியுமென்று மன்றாடியிருப்பார்கள்  போலும்.
சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றுதான் கர்த்தரின் வார்த்தைகள் சொல்கின்றன.ஆனால் நமது பாதிரிகளோ சமாதானத்துக்கு கேடு விளைவிக்கின்றார்களே?   பழிவாங்கலும் வஞ்சம் தீர்த்தலும்  நாட்டில் மீண்டும் மீண்டும் குரோதங்களையே விளைவிக்கும் என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.அந்த பரமபிதாவை விட அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய விசுவாசத்தில் திளைத்திருக்கிறார்கள் இந்த உபதேசிகள்.கர்த்தரின் வார்த்தைகளைவிட இந்த ஏகாதிபத்திய சாத்தான்களின் அப்பங்கள் இந்த பாதிரிகளுக்கு நித்திய ஜீவனளிக்கின்றதா? அமேரிக்கா தலையிட்டு எந்த நாட்டில் சமாதானம் வந்தது? ஐரோப்பா ஆயுதங்கள் விற்காத தேசம் ஏதேனும் இம்மண்ணுலகில் உண்டா?   என்று  இந்த பாதிரிகள் மக்களுக்கு சொல்ல வேண்டும்.அயலவனை நேசி என்று தேவன் சொல்ல மனித வெடிகுண்டு மட்டுமே மானிடவிடுதலையை வென்றுதரும் என்றுதானே புலிகள்  சொன்னார்கள். தேவனின் ஆலயத்தை   வியாபாரிகள் தங்களுக்குரியதாய் பங்கு போட்டுகொண்டபோது அந்த யேசுபிரானுக்கே  கோபமுண்டயிற்றே,ஆனால் மடுமாதா தேவாலயத்தின் சுரூபத்தையே களவாடி சென்றார்களே புலிகள்.இந்த  பாவங்களுக்கெல்லாம் தங்களிடம்  பாவசங்கீர்த்தனம் செய்த புலித்தலைவர்கள் எவரேனும் உண்டா? என்பதை இந்த ஆயர்கள் ஒப்புவிக்க வேண்டும்.
இந்த பாதிரிகளின் பாவங்கள்  இப்போது மட்டக்களப்பிலும் அதிகரித்து வருகின்றது.புலிகள் பிரிந்தபோது வன்னிபுலிகள் செய்த அத்தனை கொலைகளையும் மறைக்கும் முயற்சியில் திட்டமிட்ட சதியொன்றை இவர்கள்  மேற்கொண்டு வருகின்றார்களோ என்று எண்ண தோன்றுகிறது.எந்த மார்ச் மாதத்தில் இவர்கள் ஜெனிவா கனவு காணுகிறார்களோ அதே மார்ச் மாதத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த தொடர் படுகொலை ஒன்றை இவர்கள் எண்ணிபார்ப்பதேயில்லை.புலிகள் பிளந்த போது வெருகலாற்றில் சரணடைந்த போராளிகள் மீது  இடம்பெற்ற படுகொலையை எண்ணி ஒருபோதும் இந்த பாதிரிமார் மனம் வருந்துவதில்லை.புலிகளின் பிளவினால் தமக்கு விரோதமாகிவிட்டார்கள் என பிரபாகரன் விடுத்த கட்டளையிநிமித்தம் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் அளவு கணக்கற்றவை.சச்சு மாஸ்டர் மட்டகளப்பு சிறைக்குள்ளே வைத்து சுடப்பட்டார்.நித்திரைபாயில் வைத்து ரெஜி கொல்லப்பட்டார். கொழும்புக்கு தப்பியோடிய குகனேசனையும் மற்றைய போராளிகளையும்  கொட்டாவையில் வைத்து நஞ்சூட்டிகொன்றார்களே புலிகள்.catholic-church-prabhakaran
அதுமட்டுமா  அக்கரைப்பற்று நீதிமன்றில் புகுந்தும் புலிகள் கொலை செய்தார்கள்.பொட்டம்மான் என்னும் சாத்தானுக்கு அஞ்சி தங்களை தாங்களே ஒப்படைத்து சரணடைந்த நிலாவினியுடனான நான்கு ஸ்திரிகளையும் உங்கள் பாதிரியார் ஒருவர் தானே புலித்தளபதி ரமேஷிடம் கையளித்தார்.அவர்கள் உயிருக்கு என்ன நடந்தது என்பதை அறிய என்றாவது நீங்கள் சித்தம் கொண்டதுண்டா?இவைகள் எல்லாம் எந்த யுத்த தர்மத்தின் பாற்பட்டவை என்பதை இந்த உபதேசிகள் விளக்க வேண்டும்.அவை எல்லாம் போராளிகளுக்குள் நடந்தவை என்று பாதிரிகள் ஒதுங்கிகொள்ள கூடும் ஆனால் மட்டகளப்பு தொழில்நுட்ப கல்லூரி அதிபர்  தில்லைநாதன் சோறு அள்ளிய கரங்களுடன் கொன்று வீசப்பட்டாரே அதையிட்டு இந்த பாதிரிமார் என்றாவது கவலைகொண்டதுண்டா? கிங்ஸ்லி இராசநாயகம் எம்பி கொல்லப்பட்டமை எந்த நியாயபிரமாணங்களுக்கு உட்பட்டது போதகர்களே?  அனைத்துக்கும் மேலாக இராஜன் சத்திய மூர்த்தியை கொன்றது மட்டுமன்றி அவரது பிரேதத்தை தோண்டியெடுத்து வஸ்திரங்களை கழற்றி வன்மம் கொண்டாடி மகிழ்ந்தார்களே வன்னிபுலிகள் இதையிட்டு இன்று நீதிமான்களாக வேசமிடும் எந்த பாதிரிமார் குரல்கொடுத்தார்கள்? இவையனைத்துக்கும் நியாயதீர்ப்பு எப்போது வழங்கப்படும்.அதை சொல்லிவிட்டு ஜெனிவாவுக்கு அடிக்கும் உங்கள் பெட்டிசங்களை தொடருங்கள்.                          மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்

இலங்கையில் இருந்து வெளிவரும் ஆயுதத்தை மறந்த‌ சினிமா சிந்தனை. பத்திரிக்கையை எதிர்க்கும் மக்கள் .பணத்தை சூறையாடும் பத்திரிகை(வீடியோ)

lundi 20 janvier 2014

இலங்கையில் தமிழ், சிங்களம் தாய்மொழிகளாகக் காணப்படுவதால் சமஉரிமை வழங்க வேண்டும்- அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் இலங்கையில் தாய்மொழிகளாகக் காணப்படுவதால் இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமையை நாம் அனைவரும் வழங்க வேண்டும் என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடத்திய 2014 ஆண்டுக்கான தைப் பொங்கல் விழாவின் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
மேலும் நாட்டின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளாக இவ்வாறான நிகழ்வுகள் கொண்டாடப் படுவதன் மூலம் அவர்களுடைய பாரம்பரிய, கலாசாரங்கள் வெளிப்படுத்தப் படுவதுடன் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட அவர் வட பகுதியிலும், தென்பகுதியிலும் இருக்கக் கூடிய கலாசாரங்களுக்கிடையில் வேறுபாடு கிடையாது என்பதுடன் இரு இடத்திற்கும் மொழிகள் மட்டுமே மாற்றாக இருந்தாலும் அவை இரண்டும் தாய் மொழி யாகக் கொள்ளப்படுவதால் இரு மொழிகளுக்கும் சமமான உரிமை உள்ளது என தெரிவித்தார்.

இதனை விட எங்களுடைய வரலாறு, பாரம் பரியக் கலாசாரம் என்பவற்றைக் கொண்டே நாம் வாழ் கின்றோம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

முன்னதாக விழாவுக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய கிராமிய நடனத்துடன் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இது கதை அல்ல நியம் தமிழ் தேசியம் பேசிய பாதணி

யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதைசெலுத்தினர். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உள்ளிட்ட பொலிஸாரும் படைத்தரப்பினரும் தங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தினர்.
வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் கைகளை முன்பக்கமாக குவித்துகொண்டிருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  கைகளை வயிற்றுக்கு முன்பாக குவித்துவைத்துகொண்டு நின்றதுடன் அவருடைய பாதணிகள் இரண்டும் கழற்றப்பட்டிருந்தன.

முன்வரிசை கதிரையில் முதலமைச்சர் அமர்ந்திருந்தமையினால் அவர் தனது பாதணிகளை கதிரைக்கு முன்பாக கழற்றிக்கொண்டு அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறுதான் அவர் அமர்ந்திருந்தாலும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அவர் எழுந்துநின்றமையினால் அவை கதிரையின் அடியில் அல்லது அவருடைய கால்களுக்கு பின்னாலே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

samedi 18 janvier 2014

மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் முதலீடு செய்வோம்’ மாநாடு

கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திக்கும், மறுமலர்ச்சி க்கும் ‘கிழக்கில் முதலிடுவோம்’ சர்வதேச மாநாடு அடித்தளமாக அமையுமெனத் தான் நம்புவதால் இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள மலேசிய நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான டட்டோ சிறி பேராசிரியரும் கலாநிதியுமான கோபால கிருஷ்ணன் நேற்றுத் தெரிவித்தார். பாம் மரத் தோட்டம் மற்றும் சர்க்கரை துளசி செய்கைகளில் நாம் கிழக்கு மாகாணத்தில் முதலிடத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் அலங்கார மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு ஆகிய கைத்தொழில்களில் முதலிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளோம் எனவும் அவர் கூறினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும்,
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினதும் ஒத்துழைப்பில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலா அமைச்சின் ஏற்பாட்டிலான ‘கிழக்கில் முதலிடுவோம் சர்வதேச மாநாடு’ இன்று 17ம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறுகின்றது. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலா அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்கின்றார். இம்மாநாட்டில் கிழக்கில் முதலிடுவோம் என்ற தொனிப் பொருளில் இணைய தளமொன்றும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. முன்னூறுக்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.
இம்மாநாட்டில் மலேசிய நாட்டின் பி. என். ஜி. ஹோல்டிங்க்ஸ் தனியார் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நிறுவனத்தின் பணிப்பாளர் டட்டோ சிறி, பேராசிரியர் குணபால கிருஷ்ணனும், நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் எஸ். சப்ரினாவும் பங்குபற்றியுள்ளனர்.
இம்மாநாடு தொடர்பாக கலாநிதி கோபால கிருஷ்ணன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ‘இது விஷேட பண்பைக் கொண்டிருக்கும் ஓர் மாநாடு. இந்நாட்டின் ஒரு பிராந்தியத்தை அடையாளப்படுத்தியே இம்மாநாடு நடாத்தப்படுகின்றது. இதன் மூலம் கிழக்கில் முதலிடுவதற்கான வாய்ப்புகளையும், வளங்களையும், வசதிகளையும் எம்மால் இனங்கண்டுகொள்ள முடியும்.
அதேநேரம் இந்நாட்டிற்கு அதிகளவு முதலீடுகள் வந்து சேருவதற்கு இவ்வாறான மாநாடுகள் பெரிதும் உதவும். இம்மாநாட்டின் மூலம் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ள துறைகள், அவற்றுக்குரிய ஊக்குவிப்புகள், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த தெளிவுகளை எம்மால் பெறலாம் என நம்புகின்றோம். இம்மாநாட்டை நாம் பெரிதும் வரவேற்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம் சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில்

சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.
ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.
பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன.                                                                 இத்தாலியில் கன்னிகாஸ்திரீ ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன.தாயான கன்னிகாஸ்திரீ (பழைய படம்)

இத்தாலியின் மையப்பகுதி நகரான ரியெட்டியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
எல் சால்வடோரைச் சேர்ந்த இந்த 32 வயது கன்னிகாஸ்திரீ,தான் கர்ப்பமாக இருப்பதாக தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறினார்.
தனக்கு வயிற்று வலி வந்திருப்பதாகக் கருதி அவர் கூறியபிறகு, அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.

தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

mardi 14 janvier 2014

திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த இரு சீனப் போர்க்கப்பல்

சீனக் கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள் மூன்று நாள் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. 

 திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த இரு சீனப் போர்க்கப்பல்களுக்கும் சிறிலங்கா கடற்படையினர் பெரும் வரவேற்பு அளித்தனர். 

திருகோமலைக்கு வந்துள்ள சீனப் போர்க்கப்பல்களில் ஒன்றான, ஜிங் காங்சான் ஒரு துருப்புக்காவி ஈரூடகத் தாக்குதல் கலமாகும். 

210 மீற்றர் நீளத்தையும், 20 ஆயிரம் தொன் எடை கொண்டதும், 168 கடற்படையினர் பணியாற்றுவதுமான இந்தப் போர்க்கப்பலில், 800 வரையான படையினரையும் 20 வரையான போர் வாகனங்களையும் தரையிறக்கும் வசதிகள் உள்ளன. 

இதில்  நான்கு சுப்பர் பிரீலோன் வகை கனரக போக்குவரத்து உலங்கு வானூர்திகளும் தரித்து நிற்கும் வசதிகள் உள்ளன. 

134 மீற்றர் நீளமும் 4ஆயரம் தொன் எடையும் கொண்ட ஹெங் சூயி என்ற நாசகாரி போர்க்கப்பலும் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. 

165 கடற்படையினர் பணியாற்றுகின்ற இந்தப் போர்க்கப்பலில், நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ரொக்கட்டுகள், மற்றும் தரைத்தாக்குதலுக்கான குறூஸ் ஏவுகணைகள், உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதிலும் காமோவ் கே.ஏ.-28 உலங்கு வானூர்தி ஒன்று தரித்து நிற்கிறது. 

சீனப் போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி றியர் அட்மிரல் றொகான் அமரசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

அண்மைக்காலமாக சீனப் போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்கு நல்லெண்ணப் பயணங்களை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.

எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேல் மாகாணசபைக்கான தேர்தலின் மூன்று மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேல் மாகாணசபைத் தேர்தலில் மரச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில,;; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகித்த போதிலும், 13ம் திருத்தச் சட்டம் அமுலாக்காமை மற்றும் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்கள் நடாத்துவதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

இலங்கையில் தமிழ்த் திரைப்படத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட்டு பல முயற்சிகளை மேற்கொண்டுவருபவரான ஞானதாசின் செவ்வி இது.

தொழில்நுட்பத்தின் மூலமாக, எமது சமூகத்தை உலகக் குக்கிராமத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் விழிப்புணர்வுக் கருந்தரங்கு

உலகத்தையே ஒரு குக்கிராமமாக மாற்றி, அதில் எண்ணி லடங்காத சாத்தியங்களை உருவாக்கிய பெருமை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தையே சாரும். ஒரு தனிநபரின் அன்றாட தேவைகளுக்குள் கணினி மற்றும் இணையம் அடங்க வேண்டிய கட்டாயத்தை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உண்டுபண்ணியுள்ள தெனலாம். விடியும் ஒவ்வொரு பொழுதும் புதிய பலசவால்கள் நிறைந்ததாகவும் தொழில்நுட்ப சாத்தியங்களின் அளவு அதிகமானதாயும் காணப்படுகின்றது.

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்ட கண்டுபிடிப்பான இணையம் தனிநபருக்கும் சமூகத்திற்கும் வழங்கும் நன்மைகள் அளப்பறியன. பொருளாதார விருத்தி, இலகு தொடர்பாடல் வசதி, வினைத்திறனான செயற்பாட் டுக்கான வழி என அதன் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறான நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு அது தொடர்பான தெளிவான அறிவும் விழிப்புணர்வும் அவசியமாகின்றது. 

தமது திறமைகளுக்கு களமில்லாமல் தவிக்கின்ற பலரினதும் ஏக்கங்கங்களை இணையம் இல்லாதொழித்திருக்கிறது. உலகளவிலே தமது திறமைகளை வெளிக்காட்டி அதற்கு பல நாடுகளின் ஆர்வலர்களிடமிருந்தும் விமர்சனங்களைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியத்தை இணையம் ஏற்படுத்தியுள்ளது. 

வடக்கு மாகாணத்தின் மாணவச் செல்வங்களுக்கும் ஏனையவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவர்களாக புடம் போடச் செய்வதற்காக சமுயோ கனடா நிறுவனத்தின் அணுசரனையில் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28.01.2014) காலை 10 மணிக்கு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இணையத்தின் நன்மைகளை அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பிரயோகிக்க முடியும் என்பதில் விஷேட பாண்டித்தியம் பெற்ற, இலத்திரனியல் வணிக ஆலொசகரும் சுயஆளுமை விருத்தி பேச்சாளரும், இலங்கைக்கான சர்வதேச இணைய சமூக அத்தியாயம் மற்றும் இணைய பொறியியல் பணிப்பிரிவின் செயற்குழு உறுப்பின ருமான, இஸ்ரத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இந்த விழிப்புணர்வு கருந்தரங்கு நடைபெறவுள்ளது.

இணையத்தை தமது கல்வி தொடர்பான விடயங்களை மேற்கொள்ள எவ்வாறு பயன்படுத்துவது, வீட்டிலிருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் மற்றும் இணையத்தில் பொருள்களை சந்தைப்படுவது எவ்வாறு, சமூக ஊடகம் அதன் நன்மை தீமைகள், பாதுகாப்பான இணையம் என பல விடயங்கள் மிகவும் தெளிவாக இஸ்ரத் இஸ்மாயில் அவர்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

நாளைய தலைவர்களாக உருவாகவிருக்கும் மாணவச் செல்வங்கள், நாளுக்கு நாள் முன்னேறிவரும் இணையம், சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப விடயங்களை தமது அறிவுக்கு இற்றைப்படுத்திக் கொள்ளும் அவசியம் காலத்தின் தேவையாகும். இதன் போதே, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தமது முன்னேற்றத்தின் வழிக்காக பாவிக்கக்கூடிய வழிகள் உணரப்படும். எதிர்காலத்தில் தொழில்நுட்ப சாத்தியங்கள் கொண்ட புத்தாக்கங்களை வெளியிடக்கூடிய அறிவும் இதன் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெறும் என்பது வெளிப்படையான உண்மையே.

ஒரு சமூகத்தில் ஏழை மற்றும் பணக்காரர் என்ற பாகுபாடு காணப்படுவது போல், இப்போது, 'டிஜிடல் இடைவெளி' என்ற சுட்டியும் ஒரு சமூகத்தின் தொழில்நுட்ப அறிவை அளந்து கொள்ளும் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. தொழில்நுட்ப விடய ங்களை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை இழிவளவாக்குவதில் இந்தக் விழிப்புணர்வு கருத்தரங்கு பெரும் பங்காற்றும் என நம்பப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் மூலமாக, எமது சமூகத்தை உலகக் குக்கிராமத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் எதிர்காலச் சிற்பிகளை செதுக்கும் என்ற செயற்றிட்டத்தின் முன்னோட்டமாக இந்த விழிப்புணர்வுக் கருந்தரங்கு இடம்பெறவுள்ளது. இன் நிகழ்வில் விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்வதுடன் இந்த முயற்சியும் முன்னெடுப்பும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

சுட்டெரிக்கும் சூரியனின் வரவு . உள்ளங்ளின் மனங்கள் மாறி ஆரோக்கியம் நிறைய அக்னி செய்தியின் வாழ்த்துக்கள்!



தமிழரின் புத்தாண்டு 'தை' இல்லை; 'சித்திரை' என்று இப்போதும் மறுப்பவர்கள் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள். வரலாறு அறியாத இவர்கள் ஆரியர்களின் சூழ்ச்சியை கேள்விக்குட்படுத்துவதற்கு பதில் பெரியாரையும், திராவிட ஆதரவாளர்களையும் கடுமையாக கண்டனம் செய்கிறார்கள். இவர்கள்தான் 'தமிழர்களின் விரோதி' என்கிறார்கள்.  

இனஎதிர்ப்பு சொல்லுக்காக ஆரிய இனத்திற்கு எதிராக திராவிட இனத்தை முன்னிருத்தி அரசியல் போராட்டத்தை நடத்திய பெரியார், தமிழர்கள் ஆரிய அடிமைகளாய் கிடந்த காலங்களில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த கடுமையாக ஆரியர்களுக்கு எதிராய் போராடிக் கொண்டிருந்தார்.   

"இந்த ஆரியர்கள், நம் நாட்டைத் “தமிழ்நாடு” என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இனி நம்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும். தமிழன்  கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் - நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலை நிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன" என்று பொது மேடைகளில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். 
 
தமிழனின் இழிவுக்கு மறுக்க முடியாத - முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம். கிறித்துவர்கள் காலத்தைக் காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக் காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

"தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்" என்றார் பெரியார். அதேப்போல் தமிழர் புத்தாண்டு தினம் 'தை'யை ஆரியர்கள் சித்திரையாக மாற்றியதையும் கடுமையாக விமர்சித்தார்.  

பின்னாளில்  திராவிட கட்சியான தி.மு.க அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய போது அப்போதைய அண்ணா தலைமையில் இயங்கிய தி.மு.க 14.01.1969 - இல் அறிஞர் அண்ணா தமிழ்நாட்டு என்று தமிழர் மாநிலத்திற்கு பெயர் சூட்டியது. அப்போது கடுமையாக எதிர்த்தவர்களும் இதே ஆரிய கூட்டங்கள்தான்.  

அப்போது யார் தமிழர்களுக்கு எதிரிகளாய் இருந்தார்கள்? தமிழர்களின் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கூடாது என்று தடுத்தது யார்? ஆரியனா? திராவிடனா?  

இன்று வரலாறு தெரியாதவர்கள் திராவிட ஆதரவாளர்களை இனத்துரோகிகள் என்கிறார்கள்.  பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்றால் இல்லை அது இந்துக்களின் பண்டிகை என்கிறார்கள். தை தமிழர்களின் புத்தாண்டு தினம் என்றால் இல்லை சித்திரைதான் புத்தாண்டு என்கிறார்கள்.  இந்த வேளையைத்தான் நெடுங்காலமாய் ஆரியம் செய்து கொண்டிருக்கிறது. 

அதேப்போல் கருணாநிதியும் தை மாதம் தமிழர்களின் புதுவருட தினமாக அறிவித்து அது அ.தி.மு.க.வின் பார்ப்பன தலைமையான ஜெயலலிதாவால் மீண்டும் சித்திரைக்கே மாற்றப்பட்டது. 

இதுதான்  தமிழ்நாட்டு அரசியல். 

தற்போதைய தி.மு.க.வின் அரசியல் மீது கடும் விமர்சனங்கள் இருந்தாலும் தி.மு.க முன்பு தமிழர் நலன்களுக்காக முற்போக்கான பல அரசியல் சீர்திருத்தங்களை சட்டமாக்கி இருப்பதை நாம் மறுக்க முடியாது. திராவிட கட்சிகள்  தற்போது அரசியல் பாதை திசைமாறி விட்டது. 

பெரியாரியல் தமிழர்களுக்கு எதிரானது இல்லை. ஆரியத்திற்கு எதிரானது என்பதால் எப்போதுமே பெரியாரில் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. பெரியார் தமிழர்களுக்கு எதிரானவராக சித்தரிக்க எடுக்கப்படும் சூழ்ச்சியுரைகளுக்கு   ஆரிய அடிமைகள் பலியாகலாம். தன்மானமிக்க தமிழர்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

"ஆரிய அடிமைகள், திராவிடத்தை தமிழர்களுக்கு எதிராய் முன்னிருத்தி ஆரியத்தை  ஆதரித்து சுய இனத்தின் துரோகிகளாய் வாழும் வாழ்வையும் நாம் வாழ்வென்பதா? ச்சே.. ச்சே... நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்ற புரட்சிக்கவி வார்த்தைகளைத்தான் நாம் மீண்டும் இங்கே ஆரிய அடிமைகளுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. 

- தமிழச்சி
14/01/2014