jeudi 30 janvier 2014

கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான் இதை விட சிறந்த உதாரணம் எதுவும் நமக்கு தேவையில்லை இளைஞர் அணிக் கூட்டம் 2014


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வருடாந்த இளைஞர் அணிக் கூட்டம் 2014
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி கூட்டம் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில்( 26.12.2014ம் திகதி) இடம் பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன கடந்த காலங்களில் இளைஞர்கள் என்றால் வேறுமனே கொடிகள் கட்டுவதற்கும் போஸ்ரர் ஒட்டுவதற்கும் மேடையமைப்பதற்கும் கட்சியின் ஏனைய வேலைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தி வந்தனர் நாம் அனைவரும் அறிந்த விடயம்;.

கடந்த கால நிலமையினை நாம் இன்று மாற்றியமைக் வேண்டும்; அதற்கு இளைஞர்கள் நீங்கள் முன்வர வேண்டும். நாளைய சமுதாயத்தை சிறந்த பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பரிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது எனவே கிழக்கின் இன்றைய அரசியல் நிலைமையினை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து ஒரே பாதையில் சென்றால் மாத்திரமே சிறந்த பலனை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய இன்றைய தலைவர்கள் இளைஞர்களே இளைஞன் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் கடந்த 2008ம் ஆண்டு முதன் முறையாக கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான் இதை விட சிறந்த உதாரணம் எதுவும் நமக்கு தேவையில்லை என்று நினைக்கின்றேன் தற்போது இருக்கின்ற இளைஞர்களை ஒரு தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நேக்கத்திற்காக இன்று நாம் கூடியுள்ளோம். எனவே இளைஞர்கள் முன்வர வேண்டும் பொறுப்புக்க கையில் எடுத்து சமுக சிந்தனையுடன் அரசியல் பங்குதாரராக வேண்டும் கடந்தகால கசப்பான அனுபவங்களை தட்டிவிட்டு கிழக்கின் விடிவிற்காக ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பிரதித் தலைவர் க.யோகவேள் கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா உதவிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire