jeudi 31 juillet 2014

இலங்கையில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் ஆண்டவன் முடிவா?அல்லது ஆண்களின் முடிவா?பெண்களுக்கு தெரியாத ஆண்களின் முடிவுகளுடன் ஆர்ப்பாட்டம்


சர்வதேசத்தில் முஸ்லிம் சமூத்திற்கு ஏற்படும் அநீதியைக் கண்டித்து காத்தான்குடியில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை பொது மக்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு உடனடியாக யுத்தத்தை நிறுத்தி முஸ்லிம்களுக்கு உதவுங்கள் எனக் கோஷம் எழுப்பினர். 
இதன்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கொடிகளை மிதித்தும், பாதணிகளால் அடித்தும் எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இவ் ஆர்ப்பாட்டங்களை ஆனாதிக்க ஆர்ப்பாட்டமாகவே ஆய்வாழர்கள் கருதுகின்றார்கள்

அநுராதபுரத்தில் பெற்றோரை தாக்கிவிட்டு 4 வயது சிறுவன் கடத்தப்பட்டான்

அநுராதபுரம் மீகல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் வீட்டில் இருந்த சிறுவன் ஒருவனை முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து நேற்று முன்தினம் இரவு கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் 4 வயதான மகன் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளான். பெற்றோருடன் வீட்டில் இருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் இவ்வாறு கடத்திச் சென்று ள்ளனர்.
இச்சம்பவத்தின் போது சிறுவனின் பெற்றோறை கடத்தல் காரர்கள் கத்தியால் தாக்கி விட்டே சிறுவனை கடத்திச் சென்றுள்ளமை தெரியவருகின்றது.குறித்த வர்தகரிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கிலேயே சிறுவன் கடத்தப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரையில் கடத்தல்காரர்கள் தொடர்பிலோ சிறுவன் தொடர்பிலோ எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகல்லாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யுத்தத்திற்கு பின்னராக கேள்வி:கருணா நேர்காணலின் முழு வடிவம்!

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) நேர்காணலின் முழு வடிவம்!

கேள்வி: யுத்தத்திற்கு பின்னராக பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பல்வேறு குற்றச் சாட்டுகள் இருந்து வருகின்றன இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பொதுவாக இது முற்றுமுழுதாக தவறான ஒரு கருத்து. ஏனெனில் ஒரு யுத்தம் இடம்பெற்ற நாட்டில் உடனடியாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதென்பது ஒரு முடியாத விடயம். 30 வருடகாலமாக யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது 5 வருடங்கள் நிறைவுற்றி ருக்கின்றது. இந்த வருடங்களுக்குள் எமது அரசாங்கம் பல மாற்றங்களைக் ஏற்பட்டிருக்கின்றன.

பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் - மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வாய்ப்பு - சுதந்திரமாக கல்வி கற்கக் கூடிய வாயப்புகள் சுதந்திரமாக இலங்கையில் எந்த இடத்திற்கும் மூவின மக்களும் சென்றுவரக்கூடிய நிலைமைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் எதுவித கைதுகள், இராணுவ கெடுபிடிகள், முற்றுகைகள் இல்லை. இன்று மிகவும் சிறந்த முறையில் இந்த மனித உரிமைகள் பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த யுத்த காலங்களில் பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

உண்மையில் யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இங்கிருந்த போராட்ட குழுக்களால் கூட பல இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் கைது செய்யப்பட்டார்கள். போராடுவதற்காகக் கூட கொண்டு செல்லப்பட்டார்கள்.

மேலும் யுத்தங்கள் பல காட்டுப் பிரதேசங்களில் கூட இடம்பெற்றது. அங்கு பல உடல்கள் கைவிட்டுச் செல்லப்பட்டன. எனவே யார் யார் எங்கு காணாமற் போனார்கள் என்பதை திடமாகக் கூற முடியாது.

இன்று நாங்கள் ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம் எல்.எல்.ஆர். சி என்ற ஒரு பொதுவான அமைப்பை உருவாக்கி அதனூடாக பலவிசாரணைகளை மேற்கொண்டு அதில் இன்று மக்கள் வெளிப்படையாகச் சென்று தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

இதே போல் எமது இனப்பிரச்சனைகளை சிறந்த முறையில் பேசித் தீர்ப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவினை ஏற்படுத்தி இருக்கின்றோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது அவர்களால் இதனைப் புறக்கணிப்பதன் மூலம் எதையும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். ஏனெனில் அவர்கள் அதில் பங்குபற்றாமலேயே பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.

இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும். ஆனால் நாம் அரசாங்கத்துடன் இருந்து கொண்டு எமது மக்களுக்காக பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வருடா வருடம் எமது மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வித்தரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே இன்னும் இதனை நாங்கள் மேம்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

கேள்வி: புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புகளின் செற்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்கள் எங்களுடைய மக்கள் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் எமது உடன்பிறப்புகள்- சகோதரர்கள்தான் இன்று புலம்பெயர்ந்த மக்களாக வாழ்கின்றார்கள். புலம்பெயர்ந்த மக்களை நாம் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சிறந்த தெளிவாக்கங்களை நாம் உருவாக்க வேண்டும்.

ஏனெனில் அவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் அவர்களுக்கு இங்கு நடக்கின்ற நடைமுறைகள் தெரியாமல் இருக்கலாம். எனவே இங்கிருக்கின்ற வெளிப்படைத் தன்மைகளை நாம் தெளிவாக்குகின்ற போதுதான் அவர்கள் சிறந்த விடயங்களை அறிந்து கொள்வார்கள்.

சில தமிழ் அரசியல் கட்சிகள் புலம் பெயர்ந்த மக்களை தவறாக வழிநடத்து கின்றார்கள் என்று தான் நான் கூறுவேன். ஏனெனில் இங்கு பல அட்டூழியங்கள் நடப்பதாகவும், இராணுவக் கெடுபிடிகள் இருப்பதாகவும், மக்கள் காணாமற் போவதாகவும் தவறான பிரச்சாரங்களை தற்போது மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னைப் பொருத்தமட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மிகவும் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்திருக்கின்றது என்றுதான் கூறுவேன்.

கேள்வி: இங்கு இனஅழிப்பு, இன அடக்கு முறைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறதே!

அண்மையில் முஸ்லிம் சிங்கள மக்களிடையில் தவறான புரிந்துணர்வு காரணாக முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது உண்மையான விடயம்தான். இதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நம் உடனடியாக படைப்பிரிவினரை, காவல் துறையினரைப் அனுப்பி நிலைமையை கட்டுப்படுத்தினோம்.

ஜனாதிபதி அவர்கள் கூட அவ்விடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொடுத்தார். அதெல்லாம் ஒரு பாரிய விடயமாக நாம் கருத முடியாது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதென்பது சாதாரணமான விடயம். ஆனாலும் சட்ட ஒழுங்குகள் சிறந்த முறையில் அந்த இடத்தில் பேணப்பட்டிருக்கின்றது. அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றிருக்கின்றது. எனினும் இது போன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம்பெற விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

கேள்வி: நாட்டில் மீள் நல்லிணக்க செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. அதில் உங்களின் பங்கு என்ன? அதற்காக மக்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

உண்மையில் மீள் நல்லிணக்கம் என்பது மக்கள் மனங்களில் இருந்து உருவாக வேண்டும். ஏனெனில் முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக புரையோடிப்போயிருந்த பிரச்சனை, இதன் நிமித்தம் மக்களின் மனங்களில் இருந்த காழ்ப்புணர்வுகள், நீக்கப்பட்டு மக்கள் மனங்களில் இருந்து உருவாக்கப்படவேண்டிய விடயம்.

தற்போது இது மெல்லமெல்ல உருவாகி வருவதை நாம் காண்கின்றோம். ஏனெனில் காலத்தின் மாற்றம் தான் இது ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருக்கும். இது குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய விடயம் அல்ல. இதில் எனக்கும் பங்கிருக்கின்றது. எவ்வாறெனினில் நான் முதலில் தேசியநல்லிணக்க அமைச்சராகத்தான் இருந்தேன். எனவே இதில் நானும் ஒரு பங்குதாரன் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

கேள்வி: நீங்கள் போராளியாக இருந்து அரசியலுக்குள் வந்திருக்கின்றீர்கள் தற்போது அந்த மாற்றத்தினை எவ்வாறு உணர்கின்றீர்கள்?

அதில் பாரிய மாற்றங்கள் என்று கூறுவதற்கு இல்லை சொல்லப்போனால் முன்பு இருந்த அரசாங்கங்கள் விட்ட தவறின் காரணமாகத்தான் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது 83ம் ஆண்டு ஏற்பட்ட யூலைக்கலவரத்தின் பிற்பாடுதான்.

அந்நேரம் ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் நாட்டின் தலைவராக இருந்தார். அதன் பிற்பாடுதான் பாரிய யுத்தமாக இந்த நாட்டில் வெடித்தது. அதில் போராட வேண்டிய கடமை ஒன்றுக்கு நாம் தள்ளப்பட்டிருந்தோம்.தனி நாடு தேவை என்று ஊக்கப்படுத்தப்பட்டோம். இது ஒரு தேவையற்ற யுத்தம் என்று பல காலத்தின் பின்புதான் உணரக் கூடியதாக இருந்தது. எனவே இந்த யுத்தத்தை நிறுத்தி தற்போது நாங்கள் ஜனநாயக நீரோட்டத்திலே இணைந்து இன்று யுத்தத்தில் ஈடுபட்டதை விட பாரிய வேலைத்திட்டங்களை மக்களுக்கு நாங்கள் செய்து கொணடிருக்கின்றோம்.

இதனூடாக பல இன உறவுகள் ஏற்பட்டு இன்று பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தற்போது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவே இதனை நாங்கள் நன்கு வளப்பத்தி மேலும் மேலும் மக்களுக்கு உதவியை வழங்க வேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
புலம்பெயர்ந்த மக்களிடம் நான் அன்பாகக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இலங்கை ஒரு வன்முறையான நாடு அல்லது தவறான நாடாக சித்தரிக்கப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர்கள் நினைத்தால் என்றும் வரலாம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் இருக்கின்ற பொருளாதார பலங்கள் அறிவியல் ரிதீயான வளங்களை அவர்கள் இங்கு வடக்கு கிழக்கிலே பிரயோகிக்க வேண்டும். மாறாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு கதைத்துக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.

இன்று வடக்கு கிழக்கில் பொருளாதார கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு வர்த்தகங்களை மேற்கொள்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றது. இதில் அவர்கள் முதலீடுகளைச் செய்து எமது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவார்களாக இருந்தால் யுத்தத்தில் இழந்த பல குறைபாடுகளை நாம் நீக்கக் கூடியாக இருக்கும். இதனை விடுத்து வீணே குற்றச்சாட்டுக்களை மாத்திரம் பிரயோகிப்பதில் எதுவித நன்மையும் பெறப் போவதில்லை.

கேள்வி: அபிவிருத்தியில் புலம்பெயர் உறவுகள் எவ்வாறு செயற்பட முடியும்?

அபிவிருத்தி என்பது இரண்டு விதமாக இருக்கின்றது. தற்போது வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் பாரிய அளவிலான கட்டுமான பணிகள் இடம்பெற்று ஒரு வகை அபிவிருத்தி மேற்கொள்ளபட்டு வருகின்றது.

ஆனால் தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் அரசாங்கத்தினால் முழுமையாக வழங்கமுடியாத நிலை ஏற்படும். ஏனெனில் அரசாங்கம் என்பது சட்டதிட்டங் களுக்கு அமைய கல்வித்தகமைகளுக்கு அமைய மாத்திரம் தான் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும்.

இந்த யுத்தத்தின் காரணாக பல இளைஞர்கள் கல்வி கற்கின்ற வாய்ப்புகளை இழந்து தற்போது தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு சில தொழிற்சாலைகள்- தொழில்மையங்கள் வர்த்தக நிலையங்களை ஆரம்பிக்கின்ற போது தான் தொழில் வழங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

இது போன்ற பாரிய முதலீடுகளை புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் மேற்கொள்வார்களாக இருந்தால் இங்கு பலமாற்றங்களை கொண்டுவரலாம் என நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: மீள்குடியேற்றம் தற்போது எந்த நிலைமையில் இருக்கின்றது?

மீள்குடியேற்றத்தைப் பொருத்த மட்டில் 98 வீதம் முடிவடைந்திருக்கின்றது. இரண்டு வீதமான பிரச்சனைகள் தற்போது இருக்கின்றது. அவற்றை மிக விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஏனைய பிரச்சனைகள் தற்போது முடிவடைந்திருக்கின்றது.

அந்த பிரதேசங்களில் இருக்கின்ற குறைபாடுகளை இணை அமைச்சுகளின் ஊடாக நிவர்த்தி செய்து வருகின்றோம். பொதுவாக மின்சார அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, விவசாய அமைச்சு, வீதிஅமைச்சு போன்ற அமைச்சுக்களினூடாக அந்தந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல முன்னேற்றங்கள் நடந்து கொணடிருக்கின்றன.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 45000 வீடுகள் யாழ்ப்பாணத்தில் கட்டப்படுகின்றதன. இதில் 4000 வீடுகள் தற்போது மட்டக்களப்பிலும் 1000 வீடுகள் திருகோணமலை மாவட்டத்திலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போல் வீடு இழப்புகளுக்காக 1700 லட்சம் ரூபா நிதியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தற்போது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு லட்சம் ரூபா வீதம் வழங்கப்படுவதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம். இதே போன்று பல திட்டங்களை தற்போது எமது மக்களுக்காக நாம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

எனவே மிக விரைவில் அவர்கள் சிறந்த வாழ்க்கைக்குள் செல்வார்கள் என்பதை எதிர்பார்க்கின்றோம். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே பாராளுமன்ற தெரிவுக் குழுவினை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

இன்று யுத்தம் முடிவடைந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வாழும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது சிங்கள தமிழ் முஸ்லிம்கள் சேர்ந்து வர்த்தகம் செய்கின்றார்கள். மூவின மக்களும் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றார்கள். அவ்வாறான சிறந்த புரிந்துணர்வு தற்போது ஏற்பட்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்

மாவோயிஸ்ட் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு;மத்திய மந்திரி

டெல்லி மேல்–சபையில் நேற்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள்
இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு? மத்திய அமைச்சர் தகவல்
நமக்குக் கிடைத்த தகவல்களின்படி நாட்டில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் எண்ணிக்கை 8,500 என்று தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் எல்.எம்.ஜி., ஏ.கே.47 ரக ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த அமைப்பில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 433 இளைஞர்கள் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து உள்ளனர். புதுடெல்லி, ஜூலை 30- வட கிழக்கு மாநிலங்களில் தங்களது இயக்கத்துக்கு பலம் சேர்ப்பதற்காக மற்ற தீவிரவாத
குழுக்களுக்கான புரட்சிகர மக்கள் முன்னணி, மக்கள் விடுதலைப்படை, உல்பா, என்.எஸ்.சி.என்(ஐ.எம்) போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் நட்புறவையும் அவர்கள் வளர்த்து வருகின்றனர். ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் இந்த தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்தும் மாவோயிஸ்டுகள் செயல்பட்டு வருகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்து உள்ளது.அப்போது அவர் கூறியதாவது:–
இவ்வாறு அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் வேண்டுகோள் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு கைப்பேசி வேண்டாம்

18 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளின் பாவனைக்கு கையடக்கத் தொலைபsinthu baminiேசிகளை வழங்க வேண்டாம் என்று பெற்றோர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கொன்று யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் உரையாற்றிய காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் சிந்து பாமினி, மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார். 
அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 
'18 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், பாடம் சம்பந்தமாக தொலைபேசியில் நண்பர்களுடன் உரையாடுவதாக இருந்தால், பெற்றோர்களும் அருகில் இருந்து அவர்கள் என்ன உரையாடுகின்றனர் என்பதிதை அவதானிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் தினமும் பாடசாலை சென்று வருகின்றனரா?, அவர்கள் அன்றைய தினம் பாடசாலையில் என்ன கற்றார்கள்? என்பது தொடர்பிலும் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'பிள்ளைகள் பாடசாலைக்குச் செலும் வீதியில் பற்றைக்காடுகள் அல்லது பாழடைந்த வீடுகள் இருக்குமாயின் அவர்களுடன் பெற்றோர்களும் உடன் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், பாடசாலை விட்ட பின்னர் தங்கள் பிள்ளைகள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்' என்றார். 
அத்துடன், அறியாதவர்களிடமிருந்து உணவுகளை வாங்கி உண்பதையும், அவர்களுடன் பயணிப்பதையும் பிள்ளைகள் தவிர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் முன்னெடுக்க வேண்டும்.பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தங்களின் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.இந்தக் கருத்தரங்கில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுகள், சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்கள் பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் வேளையில் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு அறிவிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

mardi 29 juillet 2014

கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு விரைவில் டில்லிக்கு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத முற்பகுதியில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இரா. சம்பந்தன் எம்.பி. யுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோரே விரைவில் இந்தியா புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவியேற்றமையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று புதுடில்லிக்கு விஜயம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -

இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்: வெள்ளை மாளிகை அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரி வித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘உலகின் மிகப்பெரிய குடியரசு நாடுகளான அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுறவை உறுதிபடுத்துவது என்ற வாக்குறுதியை நிறைவேற்றி, இரு தரப்பு நட்புறவை ஆழப்படுத்தி, விரிவுப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட அதிபர் ஒபாமா எதிர்நோக்கியுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி,  வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது நினைவிருக்கலாம்.

இலங்கையில் அரசியள் திருடர்கள் ஆதிக்கம் பெற்றிருக்கிறார்கள்

போராடிய பொடியள் போய்ச் சேர்ந்த பிறகு இப்போது திருடர்கள் ஆதிக்கம் பெற்றிருக்கிறார்கள்.உள்ளுரில் நாளாந்தம் வன்முறைகள், பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் கும்பல்கள் பற்றி பேசவரவில்லை. அதனை இன்னொரு சந்தர்பத்தில் பார்ப்போம்.சமூகத்தை மக்களை ஏமாற்றி உசுப்பேத்தி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்மென்ற விருப்பமும் கிடையாது. தீர்வுக்கான சாத்தியங்கள் உருவானால் அதனை சீர்குலைத்துவிட வேண்டுமென்ற கரிசனையுடன் இவர்கள் செயற்படுகின்றார்கள்.கடந்த 30 வருடங்களில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டதில் முதுகெலும்பு இல்லாத இந்த பிழைப்புவாதக் கூட்டமும் ஒரு காரணமாக இருந்தது.தமிழர்களுக்கு பொறுப்புள்ள தன்நலமில்லாத தலைவர்கள் இருந்திருந்தால் இன்றளவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் பெருமளவுக்கு அவ்வாறு இருக்கவில்லை.அல்லது ஆளுமைமிக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.அல்லது துரோகிகள் என்ற முத்திரையுடன் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள்.இன்றளவும் ஆக்கபூர்வமாக செயற்பட முனைபவர்கள் விரும்பத்தகாதவர்களாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கு சமூகமும் ஒரு முக்கிய காரணி. இந்தச் சமூகமும் துரதிஷ்டவசமாக இந்தப் போக்கிரிகளைத்தான் தமது தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறது.பிரச்சினை நீடித்து நிலவினால்தான் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் அங்கு இருப்பவர்களின் விசா வதிவிட உரிமைகளை உறுதி செய்ய முடியும் என இச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.சொந்த ஊரில் வாழ்வின் இருப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது.இங்கு வாழ்வு சீர்குலைந்து போவதே ஐரோப்பாவில் தமது சந்ததிகளுக்கு வாழ்க்கையை உருவாக்குமென இதன் ஆழ்மனம் கருதுகிறது.எனவே பிரச்சினை தீர்வென்பது இதற்கு கசப்பான விடயம்.ஆனால் மிகவும் வறிய மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை தலைவிதி இங்குதான்.ஆனால் இவர்களும் இந்த சீர்குலைவு கருத்தியலின் செல்வாக்குக்கு உட்படுகிறார்கள்.ஆட்சியாளர்களும் அவர்களது பரிவாரங்களும் கூட இனப்பிரச்சனை நீடித்து நிலவுவதையே விரும்புகிறார்கள்.அவர்களின் வாக்குவங்கி அரசியல் இருப்பு எல்லாமே பேரினவாத அரசியல் சார்ந்தது.எனவே நாட்டில் பிரிவினை பேசும் அரசியல் எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அதாவது அனுகூல சத்துருக்கள் தேவைப்படுகிறார்கள்.அதற்கு இந்த சீர்குலைவு சக்திகள் சமூகப் பிரிவினர் உதவுகிறார்கள். அதுதான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்தச் சக்திகளுக்கு ஜனநாயகம், மனித உரிமை, சமூக பொருளாதார அபிவிருத்தி, முன்னேற்றம் இவை பற்றிய எந்த அக்கறையும் கிடையாது.எனவே ஆக்கத்திற்கான இயக்கங்கள் தேவைப்படுகின்றன.அது இனங்களின் உரிமைகளையும், சாமானிய மனிதர்களின் சமூக பொருளதார உரிமைகளையும், ஜனநாயக மனித உரிமைகளையும் முன்னெடுத்துச் செல்வதாக அமைய வேண்டும்.இராணுவவாதம், நில ஆக்கிரமிப்பு, கலாச்சார ஆக்கிரமிப்பு பாரியளவில் நிகழ்கிறது.தமிழ் தேசியம் தன்னுள் இருக்கும் மேட்டுக்குடித்தனம், சாதீயம் ,பிராந்தியவாதம் பற்றி கேள்வி கேட்கத் தயாராக இல்லை.அது சமூகத்தில் வறியவர்களின் 
sritharan (suku)
நிலைபற்றி பேசுவதில்லை.இந்த இருபக்கத்து அரசியல் சித்து விளையாட்டுக்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான சக்திகள் சமுதாயத்தில் உருவாக வேண்டும்.முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மக்கள் சுயாதீனமாக இயக்கங்கள் நடத்துவதற்கான இடைவெளிகள் இங்கில்லை.அது வெலவேரியாவிலும், கட்டுநாயக்காவிலும் சிலாபத்திலும், பல்கலைகழக மாணவர்களின் போராட்டங்களிலும்,வடக்கு வலிகாமம். மற்றும் முல்லைத்தீவு மக்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.மக்கள் கூடி நின்று தமது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.1953 ஹர்த்தால் அரிசி விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி நடத்திய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்.அதேபோல்  1960 களின் முற்பகுதியில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டம் முக்கியமானது.டெல்லியில் ஜந்தர் மந்தர், எகிப்தின் தஹீரின் சதுக்கம், அமெரிக்காவின் வோல் ஸ்ரீட், பிரிட்டனின் ரபல்கார் சதுக்கம் பிரான்சின் சுதந்திர சதுக்கம் இவ்வாறு மக்கள் கூடி போராட்டங்களை நடத்தும் இடங்கள் இருக்கின்றன.மக்களின் கோரிக்கைகள் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான இடைவெளிகள் வேண்டும்.இலங்கையில் ஜனநாயகம் என்பது மிகவும் கேலிக்குரியது.பேரினவாத மதவாத, சக்திகள் கோஷம் எழுப்ப அனுமதிப்பார்கள். தொழிலாளர்கள், மாணவர்கள் சிறுபான்மை சமூகங்கள் தமது கோரிக்கைகளை எழுப்பும் போது இரும்பு கரம் கொண்டு அடக்குவார்கள்இலங்கைக்கு பெருமைமிகு தொழிலாளர் வெகுஜன இயக்க போராட்ட வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு மீட்கப்பட வேண்டும்.மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக வீதிக்கு வருவதற்கான நிலைமைகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். ஊடகம்இந்தியாவில் இது நான்காவது தூண் எனப்படுகிறது.இந்திய மக்களை பாதிக்கும் பல விடயங்கள் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. விவாதம் செய்யப்படுகின்றன. நலிவுற்ற சமூகப் பிரிவினர் மீதான பாலியல் வன்கொடுமைகள், பால் சமத்துவம், தலித்துக்கள் ஆதிவாசிகள் மீதான ஒடுக்கு முறைகள், மதச்சார்பின்மை;, மூன்றாம் பால் இனத்தாரின் உரிமைகள்.  உச்சபட்ச தண்டனை வழங்குவது, பெருவாரியான மக்களுக்கு  சுகாதாரம் கல்வி கிட்டுவதற்கான வழிவகைகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்படுகின்றன. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.ஆனால் இலங்கையில் இதற்கான இடைவெளி அரிதிலும் அரிது. இராணுவவாத சிந்தனை, சமூகத்தை கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருக்கும் சிந்தனை போக்கு அதிகரித்து வருகிறது.மத மோதல்கள் உட்பட அத்தனை காரியங்களும் நிகழ்கின்றன. எனவே ஜனநாயகத்துக்கான சீர்திருத்தங்கள் அதிகார மட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.ஊடக சுதந்திரம் உண்மையான அர்த்தத்தில் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் ஊடகங்கள் பெருமாலும் ஊடகமுதலாளிகள் அதிகாரவர்க்க சக்திகளின் நலன்களை முன்னிறுத்திN;ய செயற்படுகின்றன.ஆனால் அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களும் இருக்கவே செய்கின்றன. பல விடயங்களை கேள்விக்குள்ளாக்கும் கிழித்துப்போடும் ஊடகங்கள் இருக்கின்றன. எந்த தன்னலமும் இல்லாத ஊடகவியலாளர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  முன்னாள் திருடர்களும் ஊடகவியலாளர்களாக இருக்கிறார்கள்.இவர்கள் சொல்வதை நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. எமது மக்கள் இதிலிருந்து விடுபடுவதற்கு உப கண்ட அளவில், உலகளவில் ஊடகங்களை அவதானிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஈடுபாடு செலுத்த வேண்டும்.அப்போதுதான் உலகம் எவ்வாறு நாம் எவ்வாறு என்பது புரியும். இலங்கையின் அதிகார மட்ட சீர்திருத்தம் சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலிருந்து அவசரகால- பயங்கரவாதத் தடைச்சட்டங்களை நீக்குவதிலிருந்துதான் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.விடயங்கள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.இதற்கு இனபேதம் கடந்து சமூக அரசியல் சக்திகள் செயற்பட முன்வர வேண்டும்.         ...சுகு-ஸ்ரீதரன்

dimanche 27 juillet 2014

ஒருகிராமத்துக்கு ஒருவேலைத்திட்டம் வாகரை பிரதேசத்தின் 16 கிராமங்களிலும் ஒரேநாளில் அடிக்கல் நாட்டு.சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்)

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற்ற ஒருகிராமத்துக்கு ஒருவேலைத்திட்ட நிகழ்;விற்கு பிரதேச செயலாளர் எஸ்.ஆர் ராகுலநாயகி தலைமைதாங்கினார். இதன்போது பிரதமஅதிதியாக கலந்துகொண்ட முன்நாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், மாகாணசபை உறுப்பினரும் மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான சி.சந்திரகாந்தன் பேசும்போது குறிப்பாக 'எமது சமூகம் ஜதார்த்தமாக சிந்திப்பதன்மூலம் எமது தனித்துவத்தையும், அடையாளத்தையும் நிலையானதாக மாற்றமுடியுமென தெரிவித்தார்.
 
மேலும் அவர் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஒருகிராமத்துக்கு ஒருவேலைத்திட்டம் என்ற (ஒருகிராமத்துக்கு 10 இலட்சம் ரூபா) அடிப்படையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள 16 கிராமசேவையாளர் பிரிவுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப நிகழ்வு முதன்முதலாக வாகரைப்பிரதேசத்தில் (பொருளாதார அமைச்சின் வேலைத்திட்டம்) இடம்பெறுகின்றது.
 
எனவே இந்நிகழ்வானது வாகரை பிரதேசத்தின் 16 கிராமங்களிலும் ஒரேநாளில் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறுவதையிட்டு அமைச்சின் சார்பாக அவர் முக்கியமாக பிரதேச செயலாளருக்கும் மற்றும் மாவட்ட உதவிதிட்டமிடல் பணிப்பாளா,; வாகரை செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர், துறைசார்ந்த உத்தீயோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பாராட்டினை தெரிவித்ததோடு தானும் இது தொடர்பாக மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
 
சி.சந்திரகாந்தன் தொடர்ந்து பேசுகையில் கிழக்கில் வாழும் எமது சமூகமானது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, மற்றும் கல்வி ரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்டு, அரசியல் அனாதைகளாக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.
 
நாம் ஜதார்த்தமாக சிந்திக்காமை, தனித்துவத்தை பேணிப்பாதுகாக்க முடியாமை போன்ற அடிப்படை காரணங்களால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தாது கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை இழந்துவிட்டோம். இந்த தவறை உணர்ந்து கொள்ள எமது அயலில்வாழும் சகோதர சமூகத்துடன் ஒப்பிட்டு ஆழமாக சிந்தித்துப்பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கே தெளிவாக புரியும்.  
 
எனவே எதிர்காலத்தில் எங்களை நாங்களே தயார்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவதன்மூலம் அரசுடன் இணைந்து எமது மக்களை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதோடு பொருளாதாரரீதியாக மற்றவரில் தங்கிவாழும் தன்மையை இல்லாமல்  செய்து தங்கள் கைகளை தாங்களே சுயமாக  நம்பகூடியநிலைக்கு மக்களை சிந்திக்க செய்யவும் முடியும் என்றார்.
 
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் எமது வாகரை பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும்  சி.சந்திரகாந்தன் காட்டிவரும் அர்பணிப்பினையும்,அவரது சேவையினையும் பாராட்டி பேசியதோடு பொது மக்கள் இத்தி;ட்டத்துக்கு ஒத்துளைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
 
இதனைத்தொடர்ந்து மாவட்டசெயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும்,  பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.வே.நவிதரன் அவர்களும், இத்திட்டம் தொடர்பாக தெளிவான விளக்கமளித்தனர். இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்,பிரதேச சபை உத்தியோகஸ்தர்களும், ஏனைய துறைசர்ந்த உத்தியோகஸ்தர்களும், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வித்தியசாமான முறையில் புதுப்பொலிவுடன் நாவற்குழி புகையிரத நிலையம்

நாவற்குழி புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகிறது. இந்த புகையிரத நிலையத்துடன் இணைந்து சம்பத் வஙகியும் அமைக்கப்படுகிறது இதனால் ஏனைய புகையிரத நிலையத்துடன் ஒப்பிடுகையில் வித்தியசாமான முறையில் அழகு மிக்கதாக அமைக்கப்படுகிறது. இதேவேளை தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நாவற்குழி பாலம் புனரமைக்கப்படும் சிறிய பகுதியைத் தவிர யாழ் புகையிரத நிலையம் வரை அமைக்கப்பட்டு கற்கள் பரவுவதற்கு புகையிரதம் கொண்டுவரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

நேபாளத்தில் பாலம் வசதியில்லாததால் தினமும் இந்தமுறையில்உயிரைப் பணயம் வைத்து படிக்கச் செல்லும் மாணவிகள்




அனந்தியின் கணவரான எழிலனால் கடத்தப்பட்ட தங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது பதாகைகளை ஏந்திய வண்ணம் மக்கள்

முல்லைத்தீவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திக்கு எதிராக பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைப்புலிகளால் பலாத்கார ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டு காணாமல் போன இளைஞர் யுவதிகளின் உறவுகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உமது கணவரை நீ தேடுகிறாய். உமது கணவனால் காணாமல் போன எங்கள் பிள்ளைகளை யார் தேடுவது என பல பதாகைகளை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவரான ஆனந்தி சசிதரனால் தாக்கல் செய்யப்பட்டு தொடரப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி அவர் முல்லைத்தீவு நீதி மன்றத்திற்குச் சமுகமளித்திருந்தார். அவர் சற்றும் எதிர்பாராதவகையில் அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திடீரென அனந்தியின் கணவரான எழிலனால் கடத்தப்பட்ட தங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே என்று மிகவும் ஆவேசத்துடன் அவரை நோக்கிக் கேள்வியெழுப்பினர். இதனால் ஆனந்திக்கு பாதுகாப்பு படையினரின் உதவியை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தமிழ் மக்கள் திரண்டு வந்து தங்களுடைய பிள்ளைகள் சம்பந்தமாக தன்னிடத்தில் இவ்வாறு கேட்டு முரண்படுவார்கள் என்று ஆனந்தி துளியளவும் எதிர்பார்க்க வுமில்லை.
இதனால் அவர் திக்குமுக்காடிப் போனார். பின்னர் அங்கு நின்ற பொலிஸா ரும், இராணுவத்தினரும் இணைந்து அவரை பொதுமக்களிடமிருந்து மீட்டு அவரது வாகனத்தில் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் காலத்தில் எழிலனினால் கடத்தப்பட்ட இந்த மக்கள் குறித்து ஐ. நாவின் மனித உரிமைகள் அமைப்பு இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனமும் இவர்களது துன்பத்தை கேட்கவில்லை. எந்த ஒரு வெளிநாட்டு தூதுவரும் காணாமற் போன இவர்களது உறவினர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களது துக்கத்தை வெளிக் காட்டுவதற்காக வேண்டி வெறுங் காலுடன் நடந்து வந்து ஆனந்தி சசிதரனிடம் பதில் கேட்டு 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நின்றிருந்தனர். பின்னர் இக்குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு உதவியாளர் திரு. கனகரட்னம் ஊடாக ஜனாதிபதி அவர்களுக்கு மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.

samedi 26 juillet 2014

இலங்கை வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு ஜூலையை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்ற முடிந்துள்ளது : ஜனாதிபதி

நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு ஜூலையை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்ற முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வேலை நிறுத்தப் போராட்டமும் மனித உயிர்கள் பலியாவதற்கும் அன்று காரணமான ஜூலை மாதத்தில் நம் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி கறுப்பு ஜூலையை வெள்ளை ஜூலையாக மாற்றியுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நல்லதையே பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தின் மற்றொரு அம்சமாகவே போஷாக்குள்ள உணவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் தேசிய திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளோம். எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபுரம் திறப்பனை பிரதேசத்தில் மஹாநாம மஹா வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவும் போஷாக்கும் ஆரோக்கிய வாழ்வும் சுகாதார கண்காட்சியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் பந்துல குணவர்தன. துமிந்த திசாநாயக்க, திஸ்ஸ கரலியத்த. எஸ். எம். சந்ரசேன, மாகாண முதல்வர் எஸ். எம். ரஞ்சித். பிரதியமைச்சர் வீரக்குமார திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் உரையாற்றுகையில்,
மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப கூடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து போஷாக்கும் ஆரோக்கிய வாழ்வும் தேசிய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டில் பொதுவாக ஜுலை மாதம் ஒரு இருண்ட மாதமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஜுலை என கூறினாலே எமக்கு ஜுலை 7 ஆம் திகதியே நினைவுக்கு வரும். கறுப்பு ஜுலை என வர்ணிக்கப்படும் இம் மாதத்திலேயே ஜுலை வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது. அதன் பாதிப்புக்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை.
இந்த சம்பவங்களில் அன்று ஆயிரக்கணக்கானவர்கள் தொழில்களை இழந்து உயிர்களை இழந்துமுள்ளனர். அப்படியான ஒரு இருளான மாதமே ஜுலை.
நாம் அத்தகைய கறுப்பு ஜுலையை ஒளி மிகுந்த மாதமாக மாற்றியுள்ளோம். எமது எதிர்கால பரம்பரையான பிள்ளைகளுக்கு சக்திமிக்க போஷாக்கு உணவுகளை வழங்கும் செயற்திட்டத்தை நாம் ஆரம்பித்து ஆரோக்கியமானவர்களாக அவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கத் தவறுவோமானால் அது நாட்டு மக்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகிவிடும்.
தமது பிள்ளைகளை போஷாக்குள்ள ஆரோக்கியமான பிள்ளைகளாக வளர்த்தெடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும். எனினும் நாம் சற்று வித்தியாசமாக இதனை நோக்கியுள்ளோம். பெற்றோர் ஆசியர்களுக்கு உள்ள பொறுப்பிற்கு மேலாக அரசாங்கமும் இளைய தலைமுறையை சக்திமிக்கவர்களாக உருவாக்குவதில் பங்களிபுச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம்.
இதனால்தான் உலக உணவுத் திட்டத்தின் வழிகாட்டலுடன் இத்தகைய போஷாக்குத் திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். இது இன்று நாம் நாடு முழுவதிலும் நடைமுறைப் படுத்தவுள்ள தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாகும். இதனை ஜுலை மாதத்தில் மேற்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
பிள்ளைகள் ‘சொக்கலட்’ போன்ற உணவில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். அதனால்தான் நாம் பால், முட்டை, கஞ்சி என சத்துணவை அறிமுகப்படுத்துகின்றோம். கஞ்சி வழங்கும் திட்டம் கொழும்பு ரோயல் கல்லூரியிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் விரைவில் இது பிரசித்தமானது.
பிள்ளைகளை புத்தகப் பூச்சிகளாக வளர்க்காமல் அவர்களின் நேரத்தை விளையாட்டு உடற்பயிற்சி உள்ளிட்ட விடயங்களிலும் செலவிட ஊக்கு விப்பது அவசியம். எமது முன்னோர்கள் சிறந்த பாரம்பரிய உணவை உட்கொண்டதால்தான் பாரிய குளங்கள். கட்டடங்களை அவர்களால் நேர்த்தியாக நிர்மாணிக்க முடிந்துள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு ஆரோக்கியமான உணவை எமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போஷனை தெனும தினும போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான சிறப்பு விருதினை விழா மேடையில் ஜனாதிபதி கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்தேவி 24 வருடங்களின் பின்னர் யாழ்.நோக்கிப் பயணம்

செப்டெம்பர் 15இல் யாழ். தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப் டெம்பர் 15 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், செப்டம்பர் 15 ஆம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டார். செப்டெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 30 வருட யுத்தம் காரணமாக வட பகுதிக்கான ரயில் பாதையும் ரயில் நிலையங்களும் முழுமையா அழிக்கப்பட்டன. யுத்தத்தின் பின்னர் வவுனியா வரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. இந்திய இர்கொன் கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் வட பகுதிக்கான ரயில்பாதை கட்டம் கட்டமாக மீளமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கத்தின் 183 மில்லியன் டொலர் கடனுதவியுடன் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

அதிரவைக்கும் தகவல்கள் புலிப்பார்வை திரைப்பட குழு தொடர்பில் (காணொளி)

புலிப்பார்வை திரைப்படம் தெடர்பாக
ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்ற வேளையில் புலிப்பார்வை படக்குழுவின் உண்மை முகங்களும் திரைப்படத்தின் பின்னணியும் அதிரவைக்கும் ஆதாரத்துடன் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் மிகவும் சிறிய வயதுடைய சிறுவர்கள் பயிற்சி எடுப்பது போன்ற காட்சிகளும் அந்த சிறுவர்களுள் நிராயுதபாணியாக சரணடைந்து சிங்களப்பேரினவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இணைந்து பயிற்சி எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இன்னொரு காட்சியில் மிகவும் சிரமமான பயிற்சிகளை பாலச்சந்திரன் எடுப்பதுபோலவும் கைத்துப்பாக்கியில் சுடுவது போன்றதும் கனரக துப்பாக்கியை வைத்திருப்பது போன்ற காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பட வெளியீட்டுக்கு பேரம் பேசல்களும் நடைபெற்றதா? 

படம் வெளியாக எந்தவித தடையும்இருக்கக்கூடாது என்பதற்காக தனது நண்பரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி பெற்றுள்ளாராம் இயக்குனர் பிரவீன்காந்த். இது தொடர்பில் நாம் தமிழர் தோழர்களும் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்களும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக வெளியிடவேண்டும்.

இன்னும் தமிழ் தேசிய உணார்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களிடமும் இப்படத்தைப் பற்றிய விவரங்களை பேசி அவர்களிடமம் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல்.

வழமையாக ஈழம் தொடர்பில் வாய்திறந்தாலே தடைசெய்யும் சென்சர் போட் இப்படத்துக்கு ஒப்புதல் வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்ததா என்ற கேள்வி எழுகின்றது.

இவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்ததால் இந்திய நாட்டுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லாததால், சென்சார் வாங்குவது சுலபமாக இருந்ததாகவும் சென்சார் உருப்பினர்கள் படத்தைப் பாராட்டினார்கள் என்று இயக்குனர் தெரிவித்த கருத்தும் நோக்கத்தக்கது. ’வீ லவ் இந்தியா’ என்ற கருத்தையே இப்படம் பேசுவதாக மேலும் அவர் கூறினார்.

யார் இந்த பாரிவேந்தன் ? (கீழே அவரது உரையை கேளுங்கள்)

பிரவீன் காந்த்தின் இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ்மதன் தயாரிக்க, இந்த பாரிவேந்தனின் மகன்தான் இந்த மதன்(தயாரிப்பாளர்) ஒரு குடும்ப நிர்வாகத்தை வைத்து புலிகளின் பெயரை படத்திற்கு சூட்டி தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு பாலச்சந்திரனை ஒரு பயங்கரவாதியாக சித்தரிப்பதே இவர்களின் உள்நோக்கம்.

பயங்கரவாதியாக பயிர்ச்சி பெற வைத்து அவனை ஆயுதத்துடன் கைது செய்த இராணுவம் அவனை போர்களத்தில் ஆயுதத்துடன் கைது செய்து பின்னர் சுட்டு கொன்றமை ஓர் பயங்கரவாதியை அழிப்பதுபோல் சித்தரித்து சிறீலங்காவின்மானத்தை காப்பாற்ற முயல்கிறார்களா?

பாரிவேந்தனின் உரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும், விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்களாம்

  


முன்னைய பதிவு
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு விருப்பத்துடன் இணையும் வயதில் குறைந்த சிறுவர்களை புலிகளே அவர்களால் பாராமரிக்கப்பட்டுவந்த செஞ்சோலை,காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு கல்வி அறிவு போதிக்கப்பட்டு விரும்பினால் அவர்கள் குறிப்பிட்ட வயதை அடையும் போது இயக்கத்தில் இணையலாம் என்பது வழமை.

ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் அப்பாவிச்ச சிறுவனான பாலச்சந்திரனை நிராயதபாணியாக கைது செய்து சுட்டுக்கொன்றமை சர்வதேச போர்க்குற்ற மீறல் எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேளை.

 
அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுபோல அந்த பாலகனையும் கைத் துப்பாக்கியும் விடுதலைப்புலிகளின் வரிச்சீருடையுடன் கைதுசெய்து அழைத்துவருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளமை மிகவும் ஆச்சரியப்பட வைப்பதோடு இறுதி இனவழிப்பு கொடுமையினை தமிழ்நாட்டிற்கு திரிபுபடுத்தி வைளியிட முயற்சிக்கிறார்களா என எண்ணத்தோன்றுகின்றது.

அத்தோடு அதில் தோன்றும் போராளிகளில் சீருடை மற்றும் படையினரின் சீருடைகள் நியத்தில் அவர்கள் பயன்டுத்தும் சீருடைகளுடன் வேறுபடுகின்றன.

ஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தியதாக கூறிக்கொண்டு யதார்த்தத்திற்கு புறம்பான வகையில் நிகழ்வுகளை சித்தரிப்பது மேலும் ஈழத்தமிழர்களை வேதனைப்படுத்துவதாக அமைவதோடு, போராட்டம் தொடர்பில் தவறான புரிதல்களையும் ஏற்படுத்திவிடும்.
எனவே இது தொடர்பாக தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள்,ஆர்வலர்கள் விரைந்து செயற்பட்டு புலிப்பார்வை திரைப்படத்தின் ஆதாரமற்ற விடயங்களை நீக்குவதோடு உண்மையான போராட்ட நிகழ்வுகளை மையப்படுத்தும் காட்சிகளை தத்துருவமாக வெளிவருவதற்கு ஒத்துழைப்பும் ஆலோசனையும் வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் இந்த திரைப்படம் மூலமாக போராட்டத்தை சிதைப்பதற்கும் அதன் உண்மைத்தன்மையை மூடிமறைப்பதற்கும் வேறு யாராவது  பின்னணியில் செயற்படுகின்றார்களா என்பதை அனைவரும் ஆராய வேண்டும்.

இது தொடர்பான கருத்துக்களை வாசகர்களும் கீழ்க்குறிப்பிடும் முகநூல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இந்த திரைப்படத்தை ஓர் வரலாற்று ஆவணமாக தயாரிப்பதற்கு உதவும் என நம்புகின்றோம்.

jeudi 24 juillet 2014

பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால் 13 வயசுப்பெடியனுக்கே சல்யூட் அடிச்சிருக்க வேணும் கூட்டமைப்பு

பொட்டம்மானும் புலிகளும் பிரபாகரனும் இல்லாமற் போனதிலTna_jaffnaசந்தோசப்படுகிற ஆட்கள் ஆராயிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம். 
சந்தேகமேயில்லை. கூட்டமைப்புக்காரரர்தான். 
ஏனெண்டால், பொட்டம்மானும் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால், இப்பவும் சம்மந்தன் அடிக்கடி கிளிநொச்சிக்குப்போய், காவலிருந்து, தமிழ்ச்செல்வனுக்கோ நடேசனுக்கோ அல்லது கழுத்தில சயனைட் குப்பியைக் கட்டியிருக்கிற 13 வயசுப்பெடியனுக்கோ சல்யூட் அடிச்சிருக்க வேணும்.
செல்வம் அடைக்கலநாதனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் உரத்துக் கதைக்கேலாமல், தொண்டைக்குள்ளேயே வார்த்தைகளை அடக்கி விழுங்கியிருக்க வேணும். 
ஐங்கரநேசனோ, சிறிதரனோ, அனந்தியோ, குருகுலராஜாவோ, சிவமோகனோ  அரசியற் பக்கமே தலைவைச்சிருக்க மாட்டினம். இதுக்குப் புலிகள் விட்டிருக்கவும் மாட்டினம். 
சர்வணபவன் கொழும்பை விட்டே வந்திருக்க மாட்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்னும் சந்தாப்பணம் கட்டிக்கொண்டுதானிருந்திருப்பார். 
கஜதீபன், சயந்தன் போல இருக்கிற பெடியளப் புலிகள் பங்கர் வெட்டத்தான் விட்டிருப்பினம். ஆனால், புலிகளுக்கே தண்ணிகாட்டிப்போட்டு, அவுஸ்ரேலியாவுக்கோ இத்தாலிக்கே இந்தப் பயல்கள் நீந்திப்போயிருப்பாங்கள். 
புலி இல்லையெண்டதால தாங்கள்தான் இப்ப தனிக்காட்டு ராஜாக்கள் எண்ட நினைப்புக் கனபேரிட்ட வந்திருக்கு இருக்கு. 
புலிகள் இல்லையெண்டதால தாங்கள் எல்லாம் இப்ப பெரிய தமிழ்த்தேசியவாதிகள், தியாகிகள், புனிதர்கள், போராளிகள், தேசியத்தலைவர்கள், தளபதிகள் எண்ட நினைப்பு வேற.
புலிகள் இருந்திருந்தால் இப்பிடி ஆருக்கும் பயமில்லாமல் குத்துக்கரணம் அடிக்கலாமோ! 
எல்லாத்துக்கும் மேல றிலாக்ஸாக அரசியல் செய்யிறதுக்கு, ‘பொட்டம்மானின்ரை டிப்பாட்மென்ற்’ விட்டிருக்குமோ?
சிறிதரனை அவற்றை மச்சானே போட்டுத்தள்ளியிருப்பார். 
சரவணபவன் இப்பவும் வித்தியாதரன்ரை காலைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டிருந்திருப்பார். 
சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் எல்லாம் பெட்டிப்பாம்பாகச் சுருண்டு கிடந்திருப்பினம். 
அதுக்காக இப்பிடி அவை செய்யிறதெல்லாம் சரியெண்டு நான் சொல்ல வரேல்ல. ஆனால்,  புலிகள் இருந்திருந்தால் இவை இப்பிடியா இருந்திருப்பினம்?
இல்லாட்டிக்கு புலிகளை வைச்சுக்கொண்டு அமிர்தலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்துவினமோ...?
புளொட் உமாமகேஸ்வரனுக்கும் பத்மநாபாவுக்கும் ரெலோ சிறிசபாரட்ணத்துக்கும் வணக்க நிகழ்வுகளை நடத்தலாமோ....?
பஸிலுக்கும் மகிந்தருக்கும் சந்திரசிறிக்கும் ஒரு முகம். புலம்பெயர் உறவுகளுக்கு ஒரு முகம். தமிழ் மக்களுக்கு ஒரு முகம் எண்டு பல முகங்களைக் காட்டலாமோ?
புலித்தேசியமும் பேசிக்கொண்டு, புலிகளால கொல்லப்பட்டவைக்கு அஞ்சலியும் செய்து கொண்டு, ரட்டை முகம் காட்டுகிற சங்கதிதான் நடந்திருக்குமோ...!
அமிர்தலிங்கத்தாற்றை நினைவு அஞ்சலி நிகழ்வைத் தமிழரசுக்கட்சி கொண்டாடுது. அமிர்தலிங்கத்தைக் கொண்டது புலிகள். அப்பிடியெண்டால்.... புலிகளை வைச்சுப் பிழைப்பு நடத்திற அனந்தியும் சிறிதரனும் குருகுலராஜா, அரியரத்தினம், பசுபதிப்பிள்ளை, ரவிகரன், கஜதீபன் போன்ற ஆட்களும் இதுக்கு ஏன் வாய் திறக்காமல் பேசாமல் இருக்கினம்?
அமிர்தலிங்கத்தைப் புலிகள் கொண்டது சரியெண்டு சொல்லுகினமா? இல்லையெண்டால், புலிகள் செய்தது பிழையெண்டதை இப்பதான் தாங்கள் உணருகினம் எண்டு சொல்லுகினமா? 
அப்பிடியெண்டால், இனிமேல் புலிகளை இவை ஆதரிக்க மாட்டினமா?
ஏனப்பா இப்பிடியெல்லாம் தமிழ்ச்சனத்தைப்போட்டு மடையர்களாக்கிறீங்கள்?
தமிழ்ச்சனங்களும் இதுகளைப்பற்றியெல்லாம் ஒரு நாளுமே சிந்திக்கிறேல்ல. இதுதானே இவைக்கும் (தமிழ்த்தேசியவாதிகளுக்கு) வசதியாய்ப்போச்சு. 
இது சிந்திக்காத மக்களை வைச்சுக்கொண்டு, இனவாதத்தை வளர்த்து, வயற்றை நிரப்பிக் கொள்ளலாம் எண்ட கள்ளச் சிந்தனை. 
இப்ப பொட்டு வைக்கிறதுக்கு ஒரு பொட்டம்மான் இல்லையெண்டதால வந்த வினை இதெல்லாம்....
ஆனால், இவை நினைக்கலாம், அந்தப் பொட்டனுக்கே தண்ணி காட்டினனாங்கள்தானே... அதை விட வேற எதுக்குப் பயப்பிடோணும் எண்டு...
நடக்கட்டும் நாடகம். இந்த நாடகத்துக்கும் ஒரு முடிவு வரும். 
எத்தினை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... இந்த மக்களை....?’
குள்ளநரிக்கூட்டத்தை விரட்டியடிப்போம்... அவர் கொட்டத்தை அடக்குவோம்....’ எண்டு இந்தக் காலங்காத்தால ஆரோ ஒரு பெடியன் பாடிக்கொண்டு போறான். தமிழ்ச் சனத்துக்கு ஏதொ நல்ல சகுனம் போலதான் இருக்கு. 

குட்டிமணி தங்கத்துரை நயவஞ்சகத்தனமாக பிரபாகரன் காட்டிக்கொடுப்பு.சித்தார்த்தனின் தம்பி புராணம்.


கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்ட தமிழ்கட்சித் தலைவர்களான ஆனந்தசங்கரி, செல்வம் அடைக்கலநாதன், ரெலோ வின் முக்கியஸ்தர் சிவாஜிலிங்கம் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரின் ஐரோப்பிய சுற்றுலாவில் தொண்டர்களின் தலைமை வழிபாடு, புலிகளின் தலைமை வழிபாட்டு வழிமுறைகட்கு சற்று மேலானதாக அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. 

மேற்படி தொண்டர்கள் ஒருகாலத்தில் புலிகள் தலைமை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்றும் பிரபாரனை சுகபோகமாளிகையில் அடைத்து வைத்து சகல சுகங்களையும் அளிப்பதன் ஊடாக போராட்டத்தை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்றும் பல்வேறு மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் கூக்குரலிட்டவர்கள். ஆனால் இன்று இவர்கள் தமது தலைவர்கட்டு சேவகம் செய்வதற்கு முட்டி மோதிக்கொள்கின்றனர். 

முட்டி மோதி சேவகம் செய்வதற்கு மேற்படி தலைவர்களில் எவரும் தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பை பெற்றவர்களோ அன்றில் தனித்துவமாக மக்களுக்கு சேவையாற்றியவர்களோ கிடையாது. மாறாக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களால் தூக்கி வீசப்பட்டவர்கள். 2000 ம் ஆண்டளவில் புலிகள் தம்மை தமிழ் மக்கள் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என உலகிற்கு பறை சாற்றுவதற்காக உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் உணர்ச்சி ஊட்டும் வாசகங்களும் இன்று இவர்களது கதிரையை உறுதி செய்கின்றது. 

சித்தார்த்தனின் "தம்பி புராணம் '

அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பார்த்து கூலிக்கு பொதி சுமக்கும் கழுதைகள் என்ற புளொட்டின் மத்திய குழு உறுப்பினரும் ரிபிசி யின் அரசியல் ஆய்வாளருமான ஜெகநாதன் பிரபாகரன் ஓரு பொல்பொட், பிணம்தின்னி, தமிழ் மக்களின் அரிய பெரிய தலைவர்களை கொன்றொழித்த கொடுங்கோலன், கற்பிணிகளைக் கூட குண்டுதாரிகளாக மாற்றிய யுத்த தர்மம் தெரியாத கோழை, இறுதியாக மஹிந்த ராஜபக்சவிடம் சரணாகதி அடைந்து முழந்தாளிட்டு மஹிந்தவினதும் இலங்கை இராணுவ அதிகாரிகளினதும் செருப்பை நக்கி உயிர்பிச்சை கேட்டு நின்றான், இவன் தமிழ் மக்களின் அவமானச் சின்னம் என்று வசைமாலை பொழிந்தார். ஆனால் இன்று மேற்படி கொடுங்கோலனை, கோழையை, அவமானச்சின்னத்தை தனது தலைவர் "தம்பி 'என்கின்றபோது கொடுப்புக்குள் புன்சிரிப்புடன் பூரித்துகொள்வதை காணமுடிவதுடன் அதற்குமேலும் ஒருபடி சென்று தள்ளாடும் வயதிலும் தலைமை வழிபாட்டுடன், தவறை தட்டிக்கேட்பதற்கு திராணியற்று சுவிஸிலே இடம்பெற்ற சந்திப்பொன்றில் பிரபாகரன் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அவர் தமிழீழத்தின் மீது கொண்ட பற்றுதல் காரணமாவே மரணத்தை தழுவிக்கொண்டார் என்றும் அந்தர் பல்டி அடித்துள்ளார். 

இச்சந்தர்ப்பவாதிகளின் வாய்சொல்லின் பெறுமதி என்ன? 

இந்தக்கேள்வியை நான் ஜெகநாதனை நோக்கி மாத்திரம் கேட்கவில்லை அன்று ஜெகநாதன் வானொலியில் முழங்குகையில் பிரபாகரனின் கோரமுகத்தை எங்கள் சர்வதேச தலைவர் சர்வதேசத்தின் காதுகளில் கேட்கும் வண்ணம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றார் என்றும் எங்களால் மாத்திரமே பிரபாகரனின் கோரமுகத்தை வெளிக்கொணரமுடியும் என்றும் மார்பினை நிமிர்த்தி நின்ற அத்தனை புளொட்டுக்களையும் பார்த்துக் கேட்கின்றேன். இன்று உங்கள் தலைவர் சித்தார்த்தன் பாடும் "தம்பி 'புராணத்திற்கும் அன்று உங்கள் சர்வதேச பொறுப்பாளர் ஜெகநாதன் முழங்கியவற்றிற்கும் இடையே முரண்பாடுகள் உண்டு. தலைவர் சித்தார்த்தனின் கருத்தை ஏற்றுக்கொள்வதா அன்றில்; சர்வதேச தலைவர் ஜெகநாதனின் கருத்தை ஏற்றுக்கொள்வதா? தலைமை வழிபாட்டின் நிமிர்த்தம் சித்தார்தனின் கருத்தை ஏற்றுக்கொள்வதாயின், பிரபாகரன் எங்கள் தலைவருக்கு "தம்பி! 'என்றும் இந்திய மலையாளி திருவேங்கடம் வேலுப்பிள்ளை எங்கள் அனைவருக்கும் "சித்தப்பா 'என்றும் கூறுகின்றீகளா? 

சித்தார்த்தன் அவர்களே! 

புளொட் இயக்கம் சார்பாக வீரமக்கள் தினம் நாடாத்தி வருகின்றீர்கள். அண்மையிலே சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகளை குத்து விழக்கேற்றி ஆரம்பித்து வைத்த தங்களையும் உருவப்படங்களையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விடுமாறு வேண்டுகின்றேன்.
மேலுள்ள படத்தில் உள்ளவர்களில் தலைவர் உமாமகேஸ்வரனை தவிர வலது புறத்திலுள்ள மாணிக்கதாசன், சிறி சபாரட்ணம் இடது புறத்திலுள்ள அமிர்தலிங்கம் பத்மநாபா ஆகிய யாவரும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள். தங்கத்துரை குட்டிமணியை சிங்களக்காடையர்கள் வெலிக்கடை சிறைச்சாலையினுள் படுகொலை செய்தார்கள். ஆனால் தங்கத்துரை குட்டிமணியை கள்ளக்கடத்தல் போட்டி காரணமாக நயவஞ்சகத்தனமாக பிரபாகரன் காட்டிக்கொடுத்திருக்காவிட்டால் அவர்கள் படுகொலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் இழப்பிற்கு பிரபாகரனே காரணம் என்றும் தங்கள் சர்வதேச தலைவர் ஜெகநாதன் வானொலியில் பகிரங்கமாக கூறியிருக்கின்றார். எனவே ஒட்டு மொத்தத்தில் நீங்கள் மலர்தூவி கண்ணீர் சொட்ட அஞ்சலி செலுத்திய அத்தனை பேரும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

இக்கொலைகள் புலிகளின் மிலேச்சத்தனத்தை உணர்த்துபவை என்றும் புளொட் அமைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியதாகவும் பாசிஸ்டுவான பிரபாகரன் தான் கொண்ட ஏகப்பிரதிநிதித்துவ மோகம் காரணமாக புளொட் இயக்க உறுப்பினர்கள் உட்பட தமிழ் தலைமைகள் மற்றும் சக போராட்ட இயக்க உறுப்பினர்களை கொன்றொழித்ததாகவும் புளொட் இயக்கம் கூறிவந்திருக்கின்றது. 

மறுபுறத்தில் இன்றும் புலிகளால் இக்கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றது. இக்கொலைகள் தமிழீழத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் எனப்படுகின்றது. தமிழீழத்திற்கு எதிரான துரோகிகளை பிரபாகரன் தான் கொண்ட தமிழீழத்தின் மீதான பற்றுறுதிகாராணமாக அழிக்க உத்தரவிட்டதாக அவ்வமைப்பு கூறுகின்றது. 

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவரது நூற்றுக்கணக்கான சகாக்கள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவரது ஆயிரக்கணக்கான தோழர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரட்ணம் அவரது ஆயிரக்கணக்கான தோழர்கள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும் இராணுவத் தளபதியும் இன்றும் கழகத்தின் தோழர்களால் நேசிக்கப்படுகின்றவருமான மாணிக்கதாசன் மற்றும் அவரது ஆயிரக்கணக்கான தோழர்கட்கு மலர்தூவி கண்ணீர் சொரிய அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீரின் ஈரம் முகத்தில் காயமுன்பு நீங்கள் பேசுகையில் "தம்பி பிரபாகரன் தமிழீழம் மீது கொண்டிருந்த பற்றுதலில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தம்பி பிரபாகரனின் பலமும் பலவீனமும் தமிழீழத்தில் அவர் கொண்டிருந்த பற்றுறுதி 'என்றீர்கள். அவ்வாறாயின் நீங்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்கள் யாவரும் துரோகிகள்தான் என்றல்லவா அர்த்தப்படுத்துகின்றீர்கள். 

பிரபாகரன் தமிழீழம் மீது கொண்டிருந்த பற்றுறுதியில் தங்களுக்கு சந்தேகம் இருந்திருக்காவிட்டால் எதற்காக அந்த அமைப்புடன் போரில் ஈடுபட்டீர்கள். இன்று நீங்கள் கலைத்துள்ள புளொட் அமைப்பை அன்றே கலைத்திருக்கலாம் அல்லவா! அதை அன்று செய்திருந்தால் புளொட் என்ற காரணத்திற்காக புலிகளால் வேட்டையாடப்பட்ட உயிர்களும் புலி என்ற காரணத்தால் புளொட்டால் வேட்டையாடப்பட்ட உயிர்களும் எஞ்சியிருக்குமல்லவா? 

சித்தார்தன் அவர்களே! நீங்கள் கொழும்பில் தங்கியிருந்து வழங்கிய கட்டளையை ஏற்று புலிகளுடன் சமர்புரிந்த தங்களது தோழர்கள் மற்றும் தங்களது கட்டளையை ஏற்று மடிந்த சகாக்களின் குடும்பங்கள் இன்றும் வடகிழக்கிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் துரோகிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த துரோகிப்பட்டம் தங்களது "தம்பி பிரபாகரனை 'ஏகப்பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ள மறுத்தமைக்கு வழங்கப்பட்ட பரிசு. 

இத்தனை காயங்களையும் பட்டவர்களை சுமக்கவிட்டு நீங்கள் "தமிழினத்தின் அவமானச்சின்னமான பிரபாகரனை 'தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொண்ட கூட்டணியில் பங்காளியாகியுள்ளீர்கள். இனியாவது தங்களது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டமைக்காக துரோகிப்பட்டம் சுமந்து நிற்கும் அந்த குடும்பங்களை துரோகிகள் என்பதிலிருந்து விடுவிக்க முடியுமா? 

சுவிஸ் வீரமக்கள் தினத்தில் திருடப்பட்ட "வங்கம் தந்த பாடம்" 

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற 25 வது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட புளொட்டின் நோர்வே கிளை பொறுப்பாளர் ராஜன் (புளொட்டின் நோர்வே கிளை பொறுப்பாளர் என்பதை விட புளொட்டின் நோர்வே இலை பொறுப்பாளர் என்பது சிறந்தது. காரணம் நோர்வே கிளையில் ராஜன் எனும் தனி இலை மாத்திரமே உண்டு) தமிழீழப் போராட்டம் மௌனித்துள்ளதாகவும், போராட்டம் என்றோ ஓர் நாள் வெடிக்கும் என்றும் தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் தமிழீழப் போராட்டம் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டதாகவும் இந்தியாவின் கபடநோக்கங்களை தமது அமைப்பு அறிந்து வைத்திருந்தாகவும், இந்தியாவின் கபடநோக்கங்கள் தொடர்பில் தலைவர் உமா மகேஸ்வரன் எழுதிய "வங்கம் தந்த பாடம் 'எனும் புத்தகத்தில் விலாவாரியாக விபரித்துள்ளதாகவும் கூறினார். 

"வங்கம் தந்த பாடத்தை 'வைத்து புளொட்டுக்கு பெருமை தேடிக்கொள்ள முயலும் அதே நேரம் வங்கம் தந்த பாடத்தின் ஆசிரியரும், புளொட்டின் சிந்தனைச் சிற்பியுமான சந்ததியாரை வீரமக்கள் என்ற வரிசையில் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் புளொட் அமைப்பில் தலைவர் சித்தார்தனிலும் முத்த உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்தன், "சந்ததியாருக்கு தலைமையால் மரணதண்டனை வழங்கப்பட்டதால் உள்ள சிக்கல்களுக்கு அப்பால் அஞ்சலி செலுத்துவதாயின் அவரது படத்தை எங்கே வைப்பதென்ற பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இலங்கையிலேயே யுத்தம் நடைபெற்றுகொண்டிருந்தபோது படையினருக்கு ஆசிவேண்டி நோர்வேயிலுள்ள பௌத்த விகாரையில் பிக்குவுடன் இணைந்து பிரித் ஓதிக்கொண்டிருந்த சித்தார்த்தனின் சகா ராஜன் கூறுகின்ற தமிழீழம் எங்கே உள்ளது. சித்தார்தனின் "தம்பி பிரபாகரன் 'தமிழீழம் கோரவில்லை என்று உறுதியாக தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றிலே "நாங்கள் தமிழீழம் கோரமாட்டோம் 'என சத்திக்கடதாசி வழங்க தயார் என்கின்றது. சித்தார்தன் ஒன்றுக்கு நூறு தடவை தனது வாயால் சொல்லியிருக்கின்றார் தாம் ஒருபோதும் தமிழீழம் கோரவில்லையென்று. எனவே சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற 25 வது வீரமக்கள் தினத்தில் பேசப்பட்ட "தமிழீழம் 'எங்கே உள்ளது. எத்தனை நாட்களுக்கு இந்த சுத்துமாத்து?

mercredi 23 juillet 2014

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 200 இளம் வயது மாணவிள் சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர் மரணம்

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் இத்தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளி விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப்போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட மாணவிகளில் சில மாணவிகள் தப்பி வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இன்னமும் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாணவிகள் கடத்தப்பட்ட சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சு வலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடத்தப்பட்ட இரண்டு பெண்களுக்கு தந்தையானவர் ஒரு வகை கோமாவில் சிக்கி மாணவிகளின் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். சில தினங்களுக்கு பின் அவரும் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவிகளின் பெற்றோர் இறந்தது குறித்த தகவல் கிடைத்ததும், அந்நாட்டு அதிபர் குட்லக் ஜோனாதன் கடத்தப்பட்டு தப்பிவந்த மாணவிகளையும், கடத்தப்பட்டுள்ள மாணவிகளின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். யாரும் தவறான முடிவெடுக்கவேண்டாம் என அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.