dimanche 29 juin 2014

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்;வே மதிமாறன்

சென்னையில் கட்டிடம் இடிந்து ஆந்திரவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலி.
சென்னையில் கட்டிடம் இடிந்து ஆந்திரவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலி.
இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு கொத்தடிமையாக உழைக்க வந்தவர்களை, குழந்தைகளோடு சேர்த்து பலி வாங்கியிருக்கிறார்கள் கொலைக்காரர்கள்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் லட்சணம் இது.

பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து எத்தனை தொழிலாளர்களின் குடும்பங்களை முற்றிலுமாக சீரழிக்கப் போகிறார்களோ?

பல சிவில் இன்ஜியர்களை இந்த நாட்டுக்கு அர்பணித்திருக்கிற கல்வி வள்ளல் ஜேப்பியார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் கல்லூரியில் தான் கட்டிக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தபோது, பல வடஇந்திய தொழிலாளர்களின் கணக்கை முடித்தார்.

பலபேர் இறந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தபோது 10 பேர் இறந்ததாக வழக்கு முடிந்தது. அந்த 10 பேரின் குடும்பத்திற்காகவது என்ன நீதி கிடைத்ததோ?

‘தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்ட ஜேப்பியாரை கைது செய்து கொண்டு போகிறார்கள்’ என்று கவலைப்பட்ட ஊடகங்கள் எதுவும் இன்று வரை  இறந்த தொழிலாளர்கள் நிலை குறித்து துப்பறியவே இல்லை.

தமிழகம் முழுக்க  சிதறிக்கிடக்கிறார்கள் சோத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இந்தியை தாய் மொழியாகக் கொண்ட  தொழிலாளர்கள்.
அவர்களின் உணவுக்கு வழி செய்ய முடியாவிடிலும் உயிருக்கு உலை வைக்காமல் இருந்தாலே போதும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இப்போது வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகமாக  மாறி வருகிறது. இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு கொத்தடிமையாக உழைக்க வந்தவர்களை, குழந்தைகளோடு சேர்த்து பலி வாங்கியிருக்கிறார்கள் கொலைக்காரர்கள்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் லட்சணம் இது.

பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து எத்தனை தொழிலாளர்களின் குடும்பங்களை முற்றிலுமாக சீரழிக்கப் போகிறார்களோ?
பல சிவில் இன்ஜியர்களை இந்த நாட்டுக்கு அர்பணித்திருக்கிற கல்வி வள்ளல் ஜேப்பியார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் கல்லூரியில் தான் கட்டிக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தபோது, பல வடஇந்திய தொழிலாளர்களின் கணக்கை முடித்தார்.
பலபேர் இறந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தபோது 10 பேர் இறந்ததாக வழக்கு முடிந்தது. அந்த 10 பேரின் குடும்பத்திற்காகவது என்ன நீதி கிடைத்ததோ?
‘தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்ட ஜேப்பியாரை கைது செய்து கொண்டு போகிறார்கள்’ என்று கவலைப்பட்ட ஊடகங்கள் எதுவும் இன்று வரை இறந்த தொழிலாளர்கள் நிலை குறித்து துப்பறியவே இல்லை.
தமிழகம் முழுக்க சிதறிக்கிடக்கிறார்கள் சோத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இந்தியை தாய் மொழியாகக் கொண்ட தொழிலாளர்கள்.
அவர்களின் உணவுக்கு வழி செய்ய முடியாவிடிலும் உயிருக்கு உலை வைக்காமல் இருந்தாலே போதும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இப்போது வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகமாக மாறி வருகிறது.

உண்மைகளை எழுதத் தவறாதீர்கள்! அல்பிரெட் துரையப்பா அவர்களை நினைவு கூருவது இக்காலத்தில் பொருத்தமானது

duraiyappaதன் இளம் வயதிலேயே தமிழ் மக்களுக்கான சேவைகளை மேற்கொள்வதற்கு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாநகர சபையினதும் யாழ்ப்பாணத் தொகுதியினதும் மக்கள் மனம் கவர்ந்த உறுப்பினராகவும் மேயராகவும் விளங்கிய மக்கள் மேயரென்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற அல்பிரெட் தங்கராஜா துரையப்பா அவர்களின் 39 வது நினைவை இந்த இணையத்தினூடாகப் பகிர்ந்து கொள்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாண நகரம் இருந்த நிலைமையையும் திரு துரையப்பா அவர்கள் யாழ் மேயராக இருந்த காலத்திற்குப் பின்னர் யாழ் நகரம் அபிவிருத்தி அடைந்த விடயத்தினையுமுங்கள் மனக் கண்முன் நிறுத்த விரும்புகின்றோம்.
சாதாரண பொதுமக்களின் அன்றாட பாவனைக்ககான யாழ் பஸ் நிலையம் பயணிகளினதும் ஏனையவர்களின் கவனத்திற்குரியதாக மாற்றப்பட்டதும் யாழ் பொது நூலகம் 1954 பங்குனி 29 சாம் சபாபதி அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு அரைகுறை நிலையில் இருந்ததை 1959ல் தனது இளம் வயதில் யாழ் மேயராக வந்ததும் இந்தியாவிலிருந்து சிற்பக் கலைஞர்களை அழைத்து அந்நூல் நிலையத்தை ஆசியாவின் சிறந்த நூல் நிலையமாக மாற்றியமைத்த பெருமை அல்பிரெட் துரையப்பா அவர்களுக்கே உரியது. இந்நூல் நிலையத்தை பொது மக்களின் பாவனைக்கு மேயர் துரையப்பா அவர்கள் 1959 ஐப்பசி 11ல் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். 1960,1966,1970,1975ம் ஆண்டுவரை மக்கள் மேயர் என்ற நாமத்துடன் துரையப்பா திகழ்ந்து வந்தார். இக்காலங்களில்தான் யாழ்ப்பாண libraryமாநகரசபைக்கான கட்டிடம்,யாழ் திறந்தவெளி அரங்கு,துரையப்பா விளையாட்டரங்கு, (விளையாட்டரங்கின் காணியின் ஒரு பகுதி திரு துரையப்பா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது) யாழ்ப்பாண நவீன சந்தை,நல்லூர்க் கல்யாண மண்டபம், யாழ் நகர்த்தில் ஒற்றை வழிப் பாதைகளை இரு வழிப்பாதைகளாக்கியதும்,யாழ் நகரை அழகுபடுத்தியத்குடன்,தமிழ் வளர்த்த பெரியார்களுக்கும் புலவர்களுக்கும் சிலை வைத்து அழகு பார்த்ததையும்,யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று உறுதியாக நின்று அந்தப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமானவர்களில் துரையப்பாவும் ஒருவர்.அத்தோடு 1974ல் பல்கலைக்கழகத் திறப்புவிழாவை சிறப்பாக நிறைவுசெய்து யாழ் முற்றவெளி மைதானத்தில் பகிரங்கக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இலங்கையின் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா உட்பட 22 அமைச்சர்களை அழைத்து பிரமாண்டமான கூட்டத்தை நடாத்தியதுடன் அன்றைய காலகட்டங்களில் அன்றைய அரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சில தமிழ் இளைஞர்களை தடுத்து வைத்திருப்பதை அவர்களின் எதிர்கால நலனில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவிடம் மகஜரைக் கையளித்து அவர்களை விடுதலை செய்யும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார்.
duraiyappa2துரையப்பா ஏழைகளின் தொண்டன் என்பதையும் அவர் சாதி,மத,மொழி,இனம் என்பதற்கப்பால் மனிதத்தை நேசித்ததையும் அக்கால கட்டங்களைச் சார்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். யாழ்ப்பாண கர்நாடக சபா தங்கள் ஆண்டுவிழாவில் மேயர் துரையப்பா அவர்களை பிரதம விருந்தினராக  அழைத்திருந்தார்கள். அவ்விழாவில் ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ்க் கலைஞர் ஒருவரை பங்கு கொள்ள விடாமல் தடுத்ததை அறிந்த அல்பிரெட் துரையப்பா அவ்விழாவில் பங்கு கொள்வதைப் பகிஸ்கரித்தார். இதனால் துரையப்பா அவர்களின் நேசத்திற்குரிய மக்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் இருக்கிறார்கள். தான் தலைமை தாங்கிய மாநகர சபையிலும், யாழ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் தான் சார்ந்த அரசிடமும் வேலை வாய்ப்புகளை தமிழ் இளைஞர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் முன் நின்றார். தனது சட்டத் துறையைப் பயன்படுத்தி பணம் எதுவும் அறவிடாமல் இலவசமாக நீதிமன்றங்களில் ஆஜரானார். மக்கள் குறைகளைக் கெட்டறிந்து அவர்களின் இடங்களுக்கே நேரடியாகச் சென்று குறை நிறைகளைப் பார்வையிட்டு மக்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்த ஒரு மக்கள் மேயர் துரையப்பா அவர்கள். அவருடைய சேவைகளை எழுதுவதற்கு நிறைய உண்டு. இருந்தபோதிலும் நீட்டிக் கொண்டு போகாமல் அவருடையduraiyappa.tombநினைவு தினமாகிய இன்று அவரை நினைவு கூருகிறோம். அவர் ஒரு கிறீஸ்தவனாக இருந்தபோதிலும் இந்து மதத்திலும் நம்பிக்கை உள்ளவராக இருந்த கார்ணத்தினால் பொன்னாலை வரதராசப் பெருமாள் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். எந்த இளைஞர்களை சிறயிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டிருந்தாரோ அவர்களில் ஒரு சிலரின் துணையுடனே துரையப்பா அவர்கள் அழிக்கப்பட்டார். துரையப்பாவின் காலங்களில் யாழ்ப்பாணம் கண்ட மாற்றங்களின் பின்னர் யாழ்ப்பாணம் எவ்வித அபிவிருத்தியும் அடையவில்லை என்பதை சகலரும் அறிந்து. அல்பிரெட் துரையப்பா அவர்களை நினைவு கூருவது இக்காலத்தில் பொருத்தமானது.

இயந்திரத்தில் கல்லுக் கிளறப்படும் காட்சிகளையே குடை நிழலில் பார்க்க உலாவரும் முதலமைச்சர் ஐயாவே!

f-12கடை நிலையில் இருப்பவர்களையும் கொஞ்சம்சரி கவனிக்க மறுப்பதேன்?
வடக்கு மாகாணத்தில் உள்ள இடங்களுக்கு சுற்றுலாவுக்காகத் திரிவது போல் வடக்கு மாகாண முதலமைச்சர் படை பட்டாளங்கள் சகிதம் சுற்றுலா செய்து வருகிறார். மக்களின் குறைகளைக் கேட்பதாகத் தெரிவித்துக் கொண்டு இயந்திரத்தில் கல்லுக் கிளறப்படும் காட்சிகளையும் பொது இடங்களில் நின்று கொண்டு மக்களின் குறைகளைக் கேட்பது போல் கேட்டு அதற்குள்ளும் அரசியலைப் புகுத்தி எந்தவித உதவியும் செய்யாது கையை விரித்து விட்டு வரும் முதலமைச்சரின் கவனத்திற்கு சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.
ஐயா, நீங்கள் முல்லைத்தீவு மற்றும் ஏனைய இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தமையால் அப்பகுதி மக்களுக்கு என்ன நன்மைகள் வந்துள்ளன என்றால் எதுவுமில்லை என்பதே உண்மை. பாரிய இயந்திரம் மூலம் கல்லுடைப்பவர்கள் தொடர்ந்து அதைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். உங்களிடம் பொது இடத்தில் குறை சொன்ன மக்களின் நிலையும் மாறியதாகத் தெரியவில்லை.
பிரித்தானியாவில் இருந்து வந்த அந் நாட்டுப் பிரதமர் இவ்வாறான இடங்களைப் பார்க்கவில்லை. அவர் முதலில் புகுந்தது மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்களின் முகாம்களுக்கே, நீங்கள் பதவிக்கு வந்து எப்போதாவது ஒரு ஏழையின் வீட்டைப் புகுந்து பார்த்திருக்கின்aர்களா?
யுத்தத்தால் கடும் காயமடைந்த அங்கவீனர்களாக உள்ள போராளிகள் எவரையாவது சந்தித்திருக் கின்aர்களா? கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இடுப்புக்குக் கீழ் செயற்படாத நிலையில் பல போராளிகள் பாராமரிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்க ளையாவது நீங்கள் சந்தித்திருக்கின்aர்களா?
16 வயது மாணவன் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துள்ளான். அவனது தந்தை புலிகளுக்கு உதவிய தாகத் தெரிவித்து தற்போது பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தொழில் இழந்த குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தாயிடம் சேர்ந்தது. தாய் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தனது மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கப் போதுமான பொருளாதார நிலை இல்லாமல் குடும்பம் வறுமையில் இருந்துள்ளது. இந்நிலையில் தாய் துன்பப்படுவதைப் பார்க்க முடியாத மகன் தானும் தொழிலுக்குப் போக இருக்கையில் தாய் அவனைத் தடுத்து கல்வியைத் தொடரச் சொல்லியுள்ளார்.
க. பொ. த (சா/த) எடுத்த இம் மாணவன் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தபோதும் வறுமை காரணமாக தொழிலுக்கு செல்ல முற்பட்டுள்ளார். தமக்கு ஏற்பட்ட வறுமையின் விரக்தியிலேயே மாணவன் தூக்கில் தொங்கியுள்ளார்.
கொடூர யுத்தத்தில் பங்கு பற்றி அதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நொந்து நூலாகி வந்தவர்களின் வாக்குகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே! இவ்வாறானவர்களின் வறுமையைப் போக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்Zர்கள்.
வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங் குங்கள் என வாழ் நாள் பூராவும் மந்திரங்கள் ஓதிக் கொண்டிருப்பவர்களே!
முதலில் உங்களுக்கு வாக்குப் போட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி செய்யுங்கள். யாரும் கொடுக்கும் நன்கொடைகள், நிதி உதவிகளுக்கு ஓடிப்போய் புகைப்படம் எடுத்து அதனைப் பேப்பர்களிலும் இணைங்களிலும் வருவதற்கு வழி சமைத்துக் கொடுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபனைப் போன்றவர்கள் இவ்வாறான இழவு வீடுகளுக்குச் செல்லாமல் இருப்பது ஏன்? உங்கள் பொக்கற்றுக்களில் பணம் இல்லையா? இவர்களுக்கு வாக்குப் போட்டுவிட்டு நிர்க்கதியில் நிற்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் இது சமர்ப்பணம்.

இராக்கில் 160 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் கொன்று குவித்தனர்!!

160 பேரை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் அவர்களை கொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். கிளிர்ச்சியாளர்கள், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

1,700 ராணுவ வீரர்களை கொன்று குவித்துள்ளதாக தீவிரவாதிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் இணையத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டனர். ஆனால், அந்த புகைப்படங்கள் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப்பெரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது குறித்து இராக் அரசு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜூன் 11 - 14 தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் 160 முதல் 190 பேர் வரை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் திக்ரித் நகரில் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என இராக்கில் உள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

samedi 28 juin 2014

சென்னையில் போரூர் முகலிவாக்கத்தில் 13 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது130 க்கும் மேற்பட்டோர் சிக்கிவுள்ளனர். 11 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு மேல் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சென்னை நகரின் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் போரூர் முகலிவாக்கத்தில்  தனியாருக்கு சொந்தமான 13 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த இரண்டு கட்டடங்களில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் (13 மாடி) இடிந்து விழுந்தது. இந்த கட்டத்தில் ஏராளமானோர் சிக்கிவுள்ளனர். இவர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து உள்ளனர். 108 ஆம்புலன்ஸ்களும் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள்   அருகில் உள்ள மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் 5 மாடிக்கு மேல் எந்த கட்டிடம் கட்டப்படவில்லை. இந்த இடம் இருந்த பகுதியில் ஏரி இருந்தாக கூறப்படுகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலானோர் ஆந்திராவைச் சேரந்தவர்கள். இன்று வார இறுதி நாள் என்பதால் அதிக அளவில் வேலைக்கு வந்துள்ளனர்.
 தற்போதைய நிலவரங்கள்:
இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட 15 பேர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரையைச் சேர்ந்த மருது பாண்டி (வயது 25) என்பவர் உயிரிழந்தார். மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கட்டிட இடிபாடுகளில் இருந்து தற்போது மேலும் 4 மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மருதுபாண்டியை காப்பாற்ற அவருடன் பணிபுரிந்தவர்கள் அருகே சென்ற ஆட்டோ மற்றும் குட்டியானை வாகனத்தை நிறுத்தி உதவி கேட்டபோது நிறுத்தாமல் அவர்கள் சென்றுவிட்டதாக மதுரை டி கல்லுப்பட்டி தொழிலாளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மேலும் தக்க சமயத்தில் உதவிக்கு ஆம்புலன்ஸ வரவில்லை என்றும், மிகவும் காலதாமதாகமாகவே உதவிக்கு ஆம்புலன்ஸ் வந்ததாகவும் தெரிவத்தனர்.
ஜெயலலிதா உத்தரவு; இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த  விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்/
 கட்டிட நிறுவனம் விளக்கம்: இடிந்து விழுந்த கட்டடம் இடி தாக்கியதால் விழுந்ததாகவும், சி.எம்.டி.ஏ.,விடம் உரிய அனுமதி வாங்கியுள்ளதாகவும், விதிமீறல் ஏதுமில்லை என்றும், மண் பரிசோதனை செய்யப்பட்டு உரிய சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளதகாவும், , எத்தனை ஊழியர்கள் தொழிலாளர்கள் இருந்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்றும், மழை காரணமாக பணிகள் ஏதும் நடைபெறவில்லை எனவும், கட்டடத்தில் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், மழை காரணமாக தொழிலாளர்கள் ஒதுங்கியுள்ளனர் என்றும், சம்பவத்துக்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வல்கள் கோரிக்கை: இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கட்டிட அனுமதியை முறைப்படுத்த வேண்டும் என்றும் , அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மைனாரிட்டிகள் மீது நடக்கும் கலவரங்கள் – இயக்குவது யார்?

– எஸ்.ஜே. இதயா
இலங்கையில் ‘பொதுபல சேனா’ என்றொரு பௌத்த அமைப்பு, தனது செயல்பாடுகளால் அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இந்த அமைப்புக்கு ராஜபக்ஷ அரசின் மறைமுகமான ஆதரவு இருப்பதாக இலங்கையின் எதிர்க் கட்சிகள் அடிக்கடி குற்றம்சாட்டி வருகின்றன. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மைனாரிட்டிகள் மீது இந்த அமைப்பு அடிக்கடி மோதும் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
கடந்த வாரம் இந்த அமைப்பு சில முஸ்லிம் கடைகளையும், தொழில் நிறுவனங்களையும் தாக்கியது. இந்தக் கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அச்சமயம் வெளிநாட்டிலிருந்த ராஜபக்ஷ, இதற்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாக அறிவித்தார். ஆனால், இலங்கையில் இதை யாரும் நம்புவதாக இல்லை.
இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள், தமிழ் பேசும் இந்திய வம்சாவழி முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பாலும் தொழில் செய்வதால், சிங்களர்களோடு இணக்கமாகச் செல்வதையே விரும்புவார்கள். ஆனால், சமீப சில ஆண்டுகளாகப் ‘பொதுபல சேனா’ அமைப்பு, முஸ்லிம்களைக் குறி வைத்துக் கலவரங்களை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. “ராஜபக்ஷ அரசு நினைத்தால், இந்த அமைப்பைத் தடை செய்யவோ, கட்டுப்பாட்டில் வைக்கவோ முடியும். ஆனால், செய்ய மறுக்கிறார். காரணம் – அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷதான். அவர் இந்த அமைப்பை மறைமுகமாக இயக்கி வருகிறார்” என்று குற்றம் சாட்டுகின்றன முஸ்லிம் அமைப்புகள்.
இதனிடையே ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகள் போலியான பாஸ்போர்டுகள் மூலம் இலங்கைக்குள் ஊடுருவி வருவதாக இன்டர்போல் உளவுப் பிரிவு, இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பில் கூட, இலங்கை தீவிரவாத தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியானது நினைவில் இருக்கலாம். விடுதலைப் புலிகளை ஒடுக்கிய இலங்கை அரசுக்கு, ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்த சவாலாக அமையக் கூடும் என்று பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். இது போன்ற தருணத்தில், பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்குவது, இலங்கையில் தீவிரவாதம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்து விடக் கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சில செய்தியாளர்கள். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நாடு கடந்த தமிழீழ அமைச்சர் வரவேற்றுள்ளார். இலங்கை ராணுவத்தின் கடுமையான போர் நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, தமிழீழம் இனி சாத்தியமில்லை என்ற நிலை 2009-ல் உருவாக்கப்பட்டு விட்டது. எனினும், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலி அமைப்பினர், ‘நாடு கடந்த தமிழீழம்’ என்றொரு மாயையான (Virtual) தமிழீழத்தை உருவாக்கி ஆட்சி செய்து வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் ருத்திர குமார் என்பவர், இந்தத் தமிழீழத்தின் பிரதமராக ஆட்சி செய்து வருகிறார். உள்நாட்டு அபிவிருத்தி அமைச்சர் என்ற பொறுப்பை முருகதாஸ் என்பவர் வகித்து வருகிறார். வெளிநாட்டில் இருந்தபடியே தமிழீழத்தின் உள்நாட்டு அபிவிருத்தியைக் கவனித்து வரும் இவர், மோடியின் அமெரிக்க வருகையை வரவேற்றுச் செய்தி வெளியிட்டுள்ளார். “ருத்திர குமாரிடம் இருக்கும் பாஸ்போர்ட்டை வைத்து, அவர் இந்தியா செல்லும் வாய்ப்பில்லை. நரேந்திர மோடிக்கு இதுவரை அமெரிக்கா விஸா வழங்காமல் இருந்தது. இதனால், ஆசியப் பிராந்தியத்தின் இந்த இரு முக்கியப் பிரதமர்களும் சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. தற்போது மோடி அமெரிக்கா வர இருப்பதால், இந்தியப் பிரதமரும், தமிழீழ பிரதமரும் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடி, இந்த நாடு கடந்த தமிழீழப் பிரதமரைச் சந்திக்கப் போகிறாரா, இல்லையா என்பது அவர் அமெரிக்கா செல்லும்போதுதான் உறுதியாகும்.         நன்றி: துக்ளக்

மரண அறிவித்தல்

நெடுந்தீ பிறப்பிடமாகவும் இந்தியாவில் தற்கால வசிப்பிடமாக கொண்ட குனரெட்னம் டீவதாஸ் 27/06/2014 அகால மரணம் ஆகியுள்ளார் அன்னாரின் இறுதிக்கிரிகை 30/06/2014 திருவன்னாமலையில் நடைபெறும்.

இவ் அறிவித்லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தொடர்புகளுக்கு தொலை பேசி எண் 00919566541427 ___  00917639050542                                                                                டீவதாஸ் அவர்களின் அன்பு மகன் திலீபன்ராஜ் அவர்களின் விபத்துக்குள்ளான‌ சம்பவம்  09/05/2014 அன்று இடம்பெற்றது மோட்டச்சைகிலுடன் கேன்டனர் மோதி இறந்த  துக்கம்  டீவதாஸ் அவர்களின் மணதில் ஆறாத துயரச்சம்பவம் அடங்குமுன். டீபன் அவர்களின் இறப்பு  உறவினர்கள் நன்பர்கள் அனைவரினது மணங்களிளும் ஆறாத துயராக.......                                                            நீ உயிராய் நேசித்த                                                                
உன் மகன்  ......உன்  உயிராக நினைதாயே
....உதறி விட்ட உன் உயிர்
 போனாலும்......
நீ கொண்ட
பிள்ளை பாசம் உருக்குலையாது..........................                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                                         - மரண அறிவித்தல்-

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் திரு.ஞானசேகரன் endlf [ராஜன்],அன்புத் தாயார் அன்னை. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ரோசலின் ஞானப்பிரகாசம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற திரு ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் திரு.ஞானசேகரன் [ராஜன்],மற்றும் ஞானராசா அவர்களின் அன்புத் தாயாருமான அன்னை.திருமதி ரோசலின் ஞானப்பிரகாசம் [பொன்றோஸ்] அவர்கள்  [26-06-2014]அதிகாலை 4 மணியளவில் ஆட்மா மண்ணை விட்டு மறைந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரின்   பூத உடல், வருகிற புதன் கிழமை (02-07-2014) அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வளசரவாக்கம், கேசவர்த்தினி,  மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு தொலை பேசி எண் :- 99627 77617 

jeudi 26 juin 2014

இன்று நடு நிலை வாதியான‌ வட்டரக்க விஜித்த தேரர் அநாதரவான நிலையில் எந்த சக்தியினதும் ஆதரவுமின்றி தனிமைப்பட்டுப் போயுள்ளார் என்பது மிக மிக கவலைக்கிடமான விடயம்! - என்.சரவணன்.

"நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும் சற்று நேரங்களில் கைதுசெய்யப்படப் போகிறேன்." வட்டரக்க விஜித்த தேரர் ஜூன் 25 அன்று கைதுசெய்யப்படுவதற்கு சற்று சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் வைத்து கூறியது இது.

மிகவும் பயந்த நிலையில் பீதியுடன் அங்கும் இங்குமாக தலையைத் திருப்பி அவதானித்தபடி ஊடகங்களுடன் உரையாற்றினார். பயந்த சுபாவமுள்ள அவர் இலகுவாக பயமுறுத்தலுக்கு உள்ளாகக்கூடியவர் என்பது ஏப்ரலில் நிப்பொன் ஹோட்டலில் நடந்த சம்பவம் நமக்கு உறுதிப்படுத்தியது.
"....இந்த நேரத்தில் என்னால் எதுவும் பேச முடியாத நிலையில் உள்ளேன். நீங்கள் பல மணிநேரமாக காத்திருப்பதால் இதனைக் கூறுகிறேன். இதுவரை எந்தவித ஊடகங்களுக்கும் நான் நடந்ததைக் கூறவில்லை. அப்படியிருந்தும் சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. 
கேடுகெட்ட இனவாதிகள் ஒருபுறம் என்னிடம் இரத்தம் கேட்கும் போது இந்த ஊடகங்களும் வேறுசிலரும் மறுபுறம் என்னை கொன்றே விட்டனர். 
இது மின் ஒழுக்கு அல்லது மின்தாக்கி ஏற்பட்டதல்ல. முன்னைய காலத்தில் இரத்தப்பலி கொடுத்ததைப்போல நானும் இரத்தத்தை பூஜைக்காக கொடுக்க எந்தவித அவசியமும் இல்லை. 
அழுத்கமையில் தீவைத்து அழித்தொழிப்பு செய்து, கொலை செய்த ஞானசார தேரோ வெளியில்... அமைதி, நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும்சில நேரங்களில் கைதுசெய்யப்படப்போகிறேன்...." என்றார்.
"... தான் தாக்கப்பட்டதாக கூறிய அவர் பின்னர் தன்னைத்தானே அவ்வாறு செய்துகொண்டதாக கூறியிருக்கிறார்,.. எனவே பிழையான வாக்குமூலத்துக்காக அவரை கைதுசெய்யவிருக்கிறோம்.." என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யார் இந்த வட்டரக்க விஜித்த தேரர்
பொதுபல சேனாவினால் மட்டுமல்ல ஒட்டுமொத்த பேரினவாதத் தரப்புக்கும் சவாலாக மாறி அவர்களால் இலக்குவைக்கப்பட்டிருக்கும் விஜித்த தேரர் இன்று ஊடகங்களில் அதிகம் அறியப்பட்டிருந்தாலும் அவரின் செயற்பாடுகள் இருபது வருட பின்னணியுடயது.

1994இல் மஹியங்கன விகாரைக்கு விகாராதிபதியாக சென்றார். அங்கிருந்தபடி அவர் ஏனைய சமூகங்களுடன் நெருங்கி சர்வமத ஐக்கியத்துக்காக; அவை சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றத் தொடங்கினார். சில வருடங்களில் அப்போதைய துறைமுக அமைச்சராக இருந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு நெருக்கமானார். அதன் அஷ்ரப்பின் இணைப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றினார். இதன் தொடர்ச்சியாக அஷ்ரப் அவர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய ஐக்கிய முன்னிணியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

சோம ஹிமியின் பரப்புரை
வட்டரக்க விஜித்த தேரர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக தெரிவானதிலிருந்து தான் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பு அவரை இலக்குவைத்து தாக்கத்தொடங்கியது. சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த கங்கொடவில சோம ஹிமி உரையாற்றும் ஒரு காணொளியை சமீபத்தில் காணக்கிடைத்தது. அதில் அவர் பல நூற்றுக்கனகனக்கானவர்கள் மத்தியில்  பௌத்த போதனை செய்யும் போது நீண்ட நேரம் வட்டரக்க விஜித தேரோவை மோசமாக சாடுவதை காணக்கூடியதாக இருந்தது. இந்த தசாப்த்தத்தில் பேரினவாத தலைமைக் குறியீடாக ஞானசார இருப்பதுபோல 90களில் கங்கொடவில சோம தேரோ மிகவும் பிரசித்திபெற்ற பேரினவாத பிரச்சாரகர்.

முஸ்லிம்களுக்கு எதிராக புனையப்பட்டுள்ள பல விஷக் கருத்துக்களுக்கு காரணகர்த்தா சோம தேரர்.
முஸ்லிம்கள் வேகமாக பல்கிப் பெருகுகிறார்கள்... வியாபார, வர்த்தகத்துறைகளை ஆக்கிரமிக்கிறார்கள்... கலாசார ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளுக்கு போகிறது... சிங்களவர்கள் அதிக பிள்ளைகளை பெறவேண்டும் இல்லாவிட்டால் நாடு அந்நியர்கள் கைகளுக்கு போய்விடும்...
போன்ற கருத்துக்களை அவர் சாந்த முகத்தோடும், வெளித்தெரியாத ஆத்திரத்தோடும் பௌத்த உபதேசங்களோடு கலந்து பௌத்தர்களுக்கு ஊட்டினார். அப்போது சோம தேரோவோக்கும் அஷ்ரப்புக்கும் இடையில் நடந்த பகிரங்க TNL தொலைக்காட்சி விவாதம் (27.09.1999) மிகவும் பிரசித்திபெற்றது. (இது குறித்து எனது விரிவான கட்டுரை 1999.09.30 சரிநிகரில் வெளியாகியிருக்கிறது)

வட்டரக்க விஜித தேரோ குறித்து சோம ஹிமி சாடும்போது “...ஒரு முஸ்லிம் இயக்கமொன்றுக்கு எப்படி பௌத்தர் ஒருவர் அதுவும் பௌத்த பிக்கு ஒருவர் தலைமையேற்க முடியும். இது பௌத்தர்களுக்கு செய்யும் நிந்தனை...” என்று பிரசாரப் படுத்தினார். வட்டரக்க விஜித தேரவின் மத நல்லிணக்க முயற்சிகையும் கடுமையாக சாடினார். உண்மையில் அது முஸ்லிம் ஐக்கிய முன்னணி அல்ல. அது அஷ்ரப் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியாகும். இன்றைய சிங்கள இனவாத ஊடகங்கள் பலவும் விஜித தேரரை சாடும் போது வசதியாக அவர் “முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர்”  என புனைகின்றனர்.

வட்டரக்க விஜித ஹிமி பற்றி அன்று சோம ஹிமி பரப்பிய பொய் பரப்புரைகள் இன்றும் நம்பவைக்கப்பட்டுள்ளன. அஷ்ரப் அவர்கள் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் விபத்தில் 16.09.2000 அன்று மரணித்ததன் பின்னர் ஓரளவு தனித்துப் போன விஜித தேரர் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

விஜித தேரவுக்கு “ப்ரஹ்ம தண்டனை”
மஹியங்கன தொகுதியில் பிரதேச சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றை ஏற்படுத்தி வாளி சின்னத்தில் போட்டியிட்டபோதும் அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர் மீண்டும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னையின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியையே பிரதிநித்தித்துவப்படுத்துகிறார். இன்றும் அவர் ஆளும்கட்சி பிரதேச சபை உறுப்பினர் என்பது கவனிக்கத்தக்கது.

பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் மஹியங்கன நகரில் வர்த்தக நிறுவனமொன்றின் மேல் மாடியில் நடத்தப்பட்டு வந்த கிறிஸ்தவ ஒன்றுகூடலை தாக்க முற்பட்டபோது அந்த கிறிஸ்தவர்களை பாதுகாத்தவர் விஜித தேரோ. அப்படி அவர் நடந்துகொண்டது பௌத்த விரோத செயல் என்று பௌத்தர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அது போல அவர் முஸ்லிம்களின் ரமழான் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியதையும் (08.08.2013) சுட்டிக்காட்டி அவருக்கெதிரான குற்றப்பத்திரிகையொன்று மகியங்கனவில் பௌத்த பிக்குகளினால் விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் 12.08.2013 அன்று அவருக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி அவர் சங்க சம்மேளனத்திலிருந்து அவரை நீக்குவதாகவும் அவரை “ப்ரஹ்ம தண்டனை”க்கு உட்படுத்துமாறும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தான் ஞானசார பல கூட்டங்களிலும் விஜித தேரரை சங்க சம்மேளனம் எப்போதோ நீக்கிவிட்டதாகவும் அவர் இதற்குமேல் ஒரு சீருடை தரிக்க அருகதையற்றவர் என்றும் பிரச்சாரம் செய்துவருவதை கவனித்திருப்பீர்கள். ஆனால் பொது பல சேனாவின் கட்டுபாட்டிலுள்ள சில பௌத்த விகாரைகளை சேர்ந்த பிக்குமார்களைக் கொண்ட ஒரு சிறு அமைப்பு தான் அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.


இந்த தீர்மானத்தை நிராகரித்த விஜித தேரர் எப்போதும்போல கடமையாற்றிக்கொண்டிருந்ததை சகிக்காத பிக்குமார் கூட்டம் விஜித தேரரை நிராகரிக்காதவரை தமது விகாரைகளில் நடத்தப்படும் “தஹாம்பாசல்” எனப்படும் சிறுவர்களுக்காக நடத்தப்படும் பௌத்த வகுப்புகளை இடைநிறுத்திவைப்பதாக அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து அவர் பௌத்தர்களால் நடத்தப்படும் பல நிகழ்வுகளுக்கு அழைக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி பிரதேச சபைக்கூட்டங்களுக்கு கூட அவர் எதிர்ப்புகளின் மத்தியிலும், பொலிஸ் பாதுகாப்பு மத்தியிலும் செல்ல நேரிட்டது.

தொடர் தாக்குதல்
சென்ற 21.08.2013 அன்று விஜித தேரர் தனது தாயின் மரண நினைவு சடங்கில் (சிங்களத்தில் “பிங்கம”) கலந்துகொள்வதற்காக அவரது ஊரான வடரக்கவுக்கு புறப்பட்டவேளை அவரது வாகனத்தை முச்சக்கர வண்டிகளில் பின்தொடர்ந்த பொது பல சேனா வை சேர்ந்தவர்கள் பெராதேனிய பகுதியில் வைத்து கடுமையாக தாக்கிவிட்டு ஓடி மறைந்தார்கள். காயமடைந்த விஜித தேரர் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றார்.

ஞானசார தேரர் பல இடங்களில் விஜித தேரவை கொல்வதாக மிரட்டியிருந்தார், முஸ்லிம்களுக்காக கதைக்கும் அவர் விஜித தேரர் அல்ல... அவர் “மொஹமட் விஜித” என்றும் கேலி செய்திருந்தார். இதனை அவர்களது உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சமூக வலைத்தளங்களிலும் படங்களாக வெளியிட்டு பிரச்சாரம் செய்தனர்.


இப்படியான ஒரு சூழலில் தான் யுத்தத்தின் பின் வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு கலவரத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தது. ஞானசார தேரோ பொது பல சேனாவை சேர்ந்த பலரை திரட்டிக்கொண்டு கூட்டமாக சென்று முஸ்லிம்களை விரட்டும் பணியில் ஈடுபட்டார். பொலிசாரின் தலையீட்டில் கலவரமின்றி அது முடிந்தாலும் பொது பல சேனா அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்தது.

நிப்பொன் ஹோட்டலில் சண்டித்தனம்
இந்த நிலைமையை சரிசெய்வதற்காகத்தான்  கடந்த ஏப்ரல் 9 அன்று நிப்பொன் ஹோட்டலில் “ஜாதிக பல சேனா” என்கிற அமைப்பை வட்டரக்க விஜித தேரோ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிப்பதற்காக ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். தொடங்குவதற்கு முன்னரே அங்கு வந்த ஞானசார தலமையிலான குண்டர்கள் பொலிசாரையும் விலத்திவிட்டு; அந்த ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்து நிறுத்தியதோடு ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

“இந்த மாநாட்டை நடத்த வந்த வட்டரெக்கே விஜித தேரர் உண்மையான பௌத்தர் அல்ல காவியுடை தரித்துக்கொண்டு முஸ்லிம்களின் பணத்துக்கு விலை போனவர்.
அவ்வாறான ஒருவரை வைத்து மாநாடு நடத்துவதை இடமளிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள்.
முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம்...”

என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். பின்னர் சிறிய பிக்குவொருவரிடம் பௌத்த மதம் தொடர்பாக பௌத்த மதம் தொடர்பில் பல கேள்விகள் கேட்டு பதிலளிக்காத நிலையில் “இங்கு முஸ்லிம்களுக்கு காவியுடை போர்த்தப் பட்டுள்ளது” என்று கூறி அங்கிருந்த சில குருமார் இவர்களுக்கு சாரத்தை கொடுங்கள் என்றனர்.

பின்னர் வட்டரெக்கே விஜித தேரரை மோசமாக திட்டியபடி அடிக்க கையோங்கினார் ஞானசார. ஞானசார கை நீட்டி திட்டிக்கொண்டிருந்தபோது தன்னை தாக்கிவிடுவார் என்று அஞ்சி வட்டரக்க விஜித தேரர் அடிக்கடி கையால் தன்னை பாதுகாத்தபடி இருந்ததை அந்த கானொளியில் அனைவரும் கண்டிருப்பார்கள். செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர்; வட்டரக்க விஜித தேரவை மிரட்டினார்.

நடுங்கிய நிலையில் வட்டரக்க விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார்.
“..நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.

ஜனாதிபதி வழங்கிய உயிர் உத்தரவாதம்
இந்த சம்பவத்தோடு வெறியேறிப்போயிருந்த பொது பல சேனா தன்னை எதுவும் செய்யக்கூடுமென்று தொடர்ந்தும் தலைமறைவாக வாழ நிர்பந்திக்கப்பட்டார் விஜித தேரர். தனது உயிருக்கு உத்தரவாதம் தரும்படியும் பாதுகாப்பு தரும்படியும் ஜனாதிபதியிடம் கோரினார். ஜனாதிபதியும் அதற்கு ஒத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் விஜித தேரர் தெரிவித்திருந்தார்.

நடக்கும் அட்டூழியங்கள் அனைத்துக்கும் ஆசீர்வாதம் வழங்கிக்கொண்டிருக்கும் ஒருவரிடம்போய் பாதுகாப்பு கேட்டால் எப்படி. எனவே வட்டரக்க விஜித தேரரை வெறிகொண்டு தேடியலைந்த பொதுபல சேனா கும்பல் ஏப்ரல் 23 அன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது. குண்டர்கள் “காவியுடை” தரித்திருந்ததால் பொலிசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லையாம்.எனவே அவர்கள் அறை அறையாக சென்று தேடினார்கள். இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் தந்தது என்று அங்கிருந்த போலீசார் கேட்கவில்லை. போலீசார் காவியுடைக்குள்ளும், பிக்குகள் பொலிஸ் சீருடைக்குள்ளும் இருந்து அதிகாரம் புரிந்தார்கள். விஜித தேரோ வந்தது CCTVயில் பதிவாகியிருக்கும் எனவே அதனை தமக்கு காட்டும்படி பொலிசாரிடம் சண்டித்தனம் காட்டினர். மறுத்த பொலிசாரை பிக்குமார் தாக்கவும் முற்பட்டனர்.

காத்தலும் அழித்தலும் நாமே!


பொது பல சேனாவுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டன. தமக்கெதிரான போக்கை தடுத்து நிறுத்துவதற்காக ஞானசார தேரர், மகா சங்கத்தினரை அணுகினார். மல்வத்து பீடாதிபதியை 23 ஏப்ரல் அன்று சந்தித்த ஞானசார அவரிடம் “..புத்தரையும் பௌத்த மதத்தையும் மோசமாக நிந்திக்கிறார்கள் முஸ்லிம்கள்... நாட்டுக்கு மிகப்பெரும் நெருக்கடியை தந்திருக்கிறார்கள்... இது குறித்து உரிய இடங்களில் முறையிட்டும் எந்த தீர்வும் இல்லை. என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் குறித்து தாம் தயாரித்திருக்கிற அறிக்கையை அவரிடம் கையளித்தார். இதற்கு மேலும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாம் களத்தில் இறங்க வேண்டிவரும் என்று தயவாக எச்சரித்தார். அதற்கு பதிலளித்த மல்வத்து பீடாதிபதி சுமங்கல தேரர் இப்படி கூறுகிறார்.
“இனத்துக்காகவும் நமது மதத்துகாகவும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்... ‘எங்களால் அரசாங்கத்தை உருவாக்கவும் முடியும்... அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும்; என்று நீங்கள் உரையாற்றியதை பார்த்தேன். எதையாவது செய்யுங்கள்...”
கைகூப்பி அவரை வணங்கியபடி ஞானசார தேரர் 
“..நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்கிறோம்.. இந்த மோசடி அரசியல்வாதிகள் சொல்வதை நாங்கள் கேட்கப்போவதில்லை..” என்றார்.
இந்த ஆணை தான் அளுத்கம கலவரத்துக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என்றால் அது மிகையில்லை. அரசின் அனுசரணை உள்ளது. படையினரின் துணை இருக்கிறது. நடத்தி முடிக்க ஆளணி தயாராக இருக்கிறது. எது நடந்தாலும் தம்மை பாதுகாக்க பௌத்த உயர் பீடம் இருக்கிறது.

பௌத்த மதத்துக்கு “குடியரசு அரசியலமைப்பின்” படி வழங்கப்பட்ட சிறப்புரிமை, சிறப்பு சலுகை என்பவற்றை எந்த கொம்பனால் தான் தடுத்து நிறுத்த முடியும், எனவே பௌத்தத்தின் பேரால் நினைத்ததை சாதிக்கும் வரம் பெற்றவர்கள் அல்லவா.

ஆக... ஒரு சிறிய சம்பவத்தை சாட்டாக வைத்து நடத்தி முடித்தது தான் அளுத்கம வேட்டை. அது ஒரு வெறும் ஒத்திகை தான். பொது பல சேனா எதிர்பார்த்தபடி தமக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை, மாறாக போதிய பாதுகாப்பும், பக்கபலமும், அவர்களுக்கு கிடைத்தபடி இருக்க. மறுபக்கம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தலைமைகளுக்கு அரச யந்திரத்தின் எச்சரிக்கையும், ஆலோசனைகளும் கண்துடைப்பு நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

சுன்னத் முயற்சி
இதனால் களிப்பூட்டபட்ட இனவாத தரப்பு; முஸ்லிம்களை மேலும் சீண்டிப்பார்க்கும் நோக்கில் அங்காங்கு தமது அட்டூழியங்களை தொடர்ந்தது. அந்த களிப்பின் வெளிப்பாடு தான் (19.06.2013) தாம் சொன்னபடி வட்டரக்க விஜித தேரரை தேடிக் கண்டுபிடித்து சுன்னத் செய்ய எடுத்த முயற்சி. அடுத்த இரண்டே நாட்களில் நடந்த பாணந்துறை “No limit” (21.06.2013)அழிப்பும் அதன் தொடர்ச்சி தான்.
வட்டரக்க விஜித தேரரை பிக்குகள் சகிதம் சென்ற குழு அவரின் கை கால்களை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி சுன்னத் செய்வதாகக் கூறி அவரது ஆணுறுப்பை சேதப்படுத்தியிருக்கின்றனர். அதன் பின்னர் அவரை நிர்வாணமாக்கி நள்ளிரவில் வீதிக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட புதரில் எறிந்துவிட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை அவரை வைத்தியசாலை கொண்டுசென்று சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். நடந்ததை அவர் கூறியிருக்கிறார். ஆனால் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த அவரை; தானே தனக்கு சேதம் விளைவித்துக்கொண்டதாக வாக்குமூலம் பதிவாக்கிக்கொண்டனர் போலீசார். பொலிஸ் தரப்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் விஜித தேரர் அப்படி ஒன்றுக்குப்பின் முரணாக பேசிய குற்றச்சாட்டுக்காக 25 அன்று வைத்தியசாலையில் கைது செய்து கொண்டு சென்றனர்.

வட்டரக்க விஜித தேரர் இன்று அநாதரவான நிலையில் எந்த சக்தியினதும் ஆதரவுமின்றி தனிமைப்பட்டுப் போயுள்ளார் என்பது மிக மிக கவலைக்கிடமான விடயம்.

அன்று அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறிய நாட்டின் ஜனாதிபதி வெறும் ஜனாதிபதி மட்டுமல்ல அவரே பாதுகாப்பு அமைச்சர். அவரே முப்படைகளின் தளபதி என்பதும் குறிப்படத்தக்கது. 

இனி இவர் போன்ற எவருக்கும் இது தான் கதி என்று பேரினவாதமும் அதைக் காக்கும் அரச இயந்திரமும் இதன் மூலம் அனைவரையும் எச்சரித்துள்ளது.
பேரினவாதத்தின் தொடர்ச்சியான வெற்றியின் ஒரு படி இது.

தற்போது கண் துடைப்புக்காக மதவெறியூட்டும் கூட்டங்களுக்கு தடை விதித்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்காக பொது பல சேனா பதுங்கவில்லை. இருக்கவே இருக்கிறது இன்னொரு வடிவத்தில் “Plan-B”. ஞானசார தேரோ இதற்கெல்லாம் அஞ்சவுமில்லை, பதுங்கவுமில்லை. அரசியலமைப்பின்படி பௌத்த மதம் அரச மதம். பௌத்தத்தை கட்டிக்காப்பது அரசின் கடமை.பொது பல சேனாவின் பகிரங்க மேடைக்கூட்டங்கள் இப்போது பௌத்த விகாரைகளை அண்டிய பகுதிகளில் மத உபதேச கூட்டங்களாகவும், கருத்தரங்குகளாகவும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கண்டி தலதா மாளிகைக்கு வெளியில் 24 ஜூன் அன்று நடத்தப்பட்ட கூட்டம் ஒரு உதாரணம். இந்த கூட்டத்தில் ஒரு முக்கிய செய்தி உண்டு. அது மேலும் கிலியூட்டும் செய்தி. அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் புலிகள் முஸ்­லிம்களை விரட்டியடித்தபோது இன்று ஹர்த்தால் செய்தவர்கள் அன்று எங்கிருந்தார்கள்:ஜனா­தி­பதி

வடக்­கி­லி­ருந்து கிழக்கிலிருந்து விடு­தலைப் புலி­கள் விரட்­டி­ய­டித்த போது காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட போது கடை­ய­டைப்பு ஹர்த்தால் செய்­வ­தற்கு எவரும் இருக்­க­வில்லை. இன்று ஹர்த்தால் செய்­த­வர்கள் அன்று எங்­கி­ருந்­தார்கள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ.
இன்று சிறு சிறு சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்துக் கொண்டு ஹர்த்தால் செய்­கின்­றனர். இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரு தரப்­பி­னரும் நிறுத்திக் கொள்ள வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.
கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அம்­பாந்­தோட்டை மாகாம்­புர மஹிந்த ராஜபக்ஷ துறை­மு­கத்தில் 76 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட எரி­பொருள் தாங்­கி­களை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்றும் போது,
அன்று வடக்­கி­லி­ருந்து 19000 முஸ்லிம் மக்­களை உடுத்த உடுப்­போடு இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் கையில் கிடைத்­ததை எடுத்துக் கொண்டு வீடு­க­ளி­லி­ருந்தும் கிரா­மங்­க­ளி­லி­ருந்தும் விடு­த­லைப்­பு­லி­களே விரட்­டி­ய­டித்­தனர்.
அப்­போதே ஹர்த்தால் கடை­ய­டைப்பு எங்கே? இன்று ஹர்த்தால் மேற்­கொள்வோர் அன்று எங்­கி­ருந்­தார்கள்?எவரும் எதையும் செய்­ய­வில்லை.காத்­தான்­குடி பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்தி விடு­தலை புலிகள் முஸ்­லிம்­களை கொலை செய்­தனர்.யார் ஹர்த்தால் செய்­தார்கள்?ஆனால், இன்று சிறு சம்­ப­வத்­திற்­காக ஹர்த்தால் செய்­கின்­றனர்.இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.
நாட்டின் சமா­தா­னத்தை அமை­தியை பாது­காக்க அர­சாங்கம் மட்­டு­மல்ல மக்­களும் பங்­க­ளிப்பு வழங்க வேண்டும்.அன்று சிங்­கள முஸ்லிம் தமிழ் மக்கள் விடு­தலைப் புலி­களால் கொலை செய்­யப்­பட்­டார்கள்.
அப்­போ­தெல்லாம் ஹர்த்தால் எங்­கி­ருந்­தன ?நாட்டில் ஆங்­காங்கே சிறு சிறு சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது தொடர்பில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு ஆலோ­ச­னைகள் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இன்று அளுத்­க­ம­விற்கு ஏன் இரா­ணு­வத்­தி­னரை அனுப்­ப­வில்லை என கேள்வி எழுப்­பு­கின்­றனர்.ரத்­துபஸ் வலைக்கு இரா­ணு­வத்தை அனுப்பி வைத்தோம். இன்று அது தொடர்பில் ஐ.நா. எம்­மிடம் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றது.
இந்­நாட்டில் இன­வா­தத்­திற்கு தூப­மி­டு­வதை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.சம்­பவம் இன்று முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் வதந்­திகள் பரப்­பப்­ப­டு­வதை இன்று நிறுத்த வேண்­டி­யுள்­ளது.
எமது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு சீனா மட்­டு­மல்ல இந்­தியா, கொரியா, ஜப்பான், பிரிட்டன் போன்ற பல நாடுகள் உத­வி­களை வழங்­கு­கின்­றது.ஆனால், சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இவ் அபி­வி­ருத்­தி­களை தடுக்கும் கைங்­க­ரி­யங்­களில் ஈடு­ப­டு­கி­றது.இதனால் நாடும் மக்­க­ளுமே பாதிப்­ப­டை­வார்கள்.
எதிர்க்­கட்சி…
நாட்டில் எதிர்க்­கட்­சி­யொன்று இருக்க வேண்டும். ஆனால் அபி­வி­ருத்­தி­களை எல்லாம் தடுத்து நிறுத்தும் முட்­டுக்­கட்டை போடும் எதிர்க்­கட்­சி­யாக இருக்கக் கூடாது. அபி­வி­ருத்­திக்கும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் ஒத்­து­ழைப்பு வழங்கும் எதிர்க்­கட்­சி­யாக இருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறானதொரு கொள்கை எமது நாட்டு எதிர்க்கட்சியிடம் கிடையாது.நாட்டின் அபிவிருத்திகளை மக்களே அனுபவிப்பார்கள் எதிர்கால சந்ததியினரே பயன்படுத்துவார்களென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஸன யாபா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் உரையாற்றினர்.

அனுமதிக்காவிட்டாலும் மனித உரிமை விசாரணை நடக்கும் ...

கொழும்பு: இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித  உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் நிபுணர் குழுவில¢ இடம்பெறும்  நிபுணர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம்  அறிவித்துள்ளது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க  முன்னாள் தலைவரும், பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய  முன்னாள் தலைவருமான அஸ்மா ஜகாங்கீர், பின்லாந்து நாட்டின்  முன்னாள் அதிபரும் நோபல் பரிசை வென்றவருமான மார்ட்டி அடிசாரி,  நியூசிலாந்தின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் கவர்னர்  ஜெனரலாக பணியாற்றிய சில்வியா கார்ட்வ்ரைட் ஆகியோர் நிபுணர்கள்  குழுவில் இடம் பெற்றுள்ளனர். விசாரணைக்கு இலங் கை அரசு  அனுமதிக்கா விட்டாலும், ஒத்துழைக்கா விட்டாலும், நபுணர் குழுவின்  விசாரணை அங்கு நடைபெறும் என்று ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அறிவித்தார்.

இலங்கையில் கடந்த 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 40  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும்,  பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசின் மீது மனித உரிமை  விசாரணை நடத்த, கடந்த மார்ச்சில் நடந்த ஐ.நா. மனித உரிமை  கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து  நிறைவேற்றியது. இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இருப்பினும், மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க பல்வேறு  நிபுணர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவை ஐ,நா மனித உரிமை  கவுன்சில் அமைத்துள்ளது. இக்குழு இலங்கைக்கு சென்று விசாரணை  நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க இலங்கை  அதிபர் ராஜபக்சே மறுத்து விட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திலும், நிபுணர் குழு  இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது,  விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று அரசு தீர்மானத்தை  நிறைவேற்றியது. இதனிடையில் நிபுணர் குழுவினர் பெயர்களை நவநீதம்  பிள்ளை நேற்று அறிவித்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த சவாலான இந்த விசாரணையை நடத்த,  நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த  மூன்று பேரும் தமது நிபுணத்தன்மை, அனுபவத்தின் மூலம்  ஒருங்கிணைந்த, சுதந்திரமான, பாகுபாடற்ற விசாரணையை  மேற்கொள்வார்கள் என்று முழுமையாக நம்பலாம். இவர்களுக்கு  உதவுவதற்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள  விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை விசாரணை செய்யும். இந்த  நிபுணர் குழு விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று  இலங்கை அறிவித்துள்ளது. அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காவிட்டாலும்  விசாரணை தொடர்ந்து நடைபெறும். இருப்பினும், உண்மையை  வெளிச்சத்துக்கு கொண்டு வர இலங்கை அரசும், அதன் மக்களும்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

mercredi 25 juin 2014

பாரீஸ் மாக்கட்டி பொசனியரில் அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்ட ஞானம் அம்மாவின் பயணம்(விக்டோன்.லைக்கா)

பாரீஸ் மாக்கட்டி பொசனியரில்  அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்ட ஞானம் அம்மாவின் பயணம் இலங்கை மக்களிற்கு கோடான கோடி பணத்தை வாரி வழங்கி வருவது அக்னிசெய்தி www.akkininews.com தனது நன்றியையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்து கொள்கிறது .திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா விக்டோன், லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவர் திருவாளர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித் தலைவர் திருவாளர் பிறேம்
சிவசாமி மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ் டூலி ஆகியோருக்கும்   மற்றும் அனைத்து நாடுகளிளும் தொழிள் புரியும் விக்டோன்.லைக்கா உழியர்களுக்கும் உங்கள் மக்கள் பணி தொடர . ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்கு வைத்து ஞானம் அறக்கட்டளை  செயள்பட அக்னிசெய்தி www.akkininews.com மக்களுக்காக நன்றியுடன் செயள்படும் 

மட்டக்களப்பு குருக்கள்மடம் கடலோரப் பகுதியில் புதைகுழிகள் தோண்ட நீதிமன்றம் உத்தரவு

muslimkilllingsகாணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு குருக்கள்மடம் கடலோரப் பகுதியில் ( ஆவணப்படம்)
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில், விடுதலைப்புலிகளால்,1990ம் ஆண்டில், கடத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தோண்டுமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் 1990ல் முறிந்து மீண்டும் போர் ஆரம்பமானபோது விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில், 1990ம் ஆண்டு ஜுன் மாதம் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த குறிப்பாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 165 பேர் குருக்கள்மடம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலோரப்பகுதியில் புதைக்கப்பட்டதாக முஸ்லீம்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
படுகொலை செய்யப்பபட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் சிலர் அண்மையில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடுகளை செய்துள்ளார்கள்.
காத்தான்குடி நகர சபை உறுப்பினரான மஜீத் ஏ . றவூப் தனது உறவினர்கள் இருவர் தொடர்பாக செய்த முறைப்பாடு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
தமது உறவினர்கள் இருவர் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடங்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என மஜீத் ஏ . றவூப் பொலிஸ் விசாரனையின் தான் தெரிவித்தாகக் கூறுகின்றார்.
சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவரால் அடையாளம் காட்டப்பட்ட கடலோரப் பகுதியில் தற்போது பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோகன குறிப்பிடுகின்றார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அமர்வின் போதும் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பலரும் இது தொடர்பாக சாட்சியமளித்திருந்தார்கள்..
சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்ய ஆணைக்குழு உதவ வேண்டும் என அந்த அமர்வின்போது சாட்சியமளித்தவர்கள் கோரினர்.
இதனையடுத்து இந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் கடலோரப் பகுதியை ஆணைக்குழு தலைவர் உட்படபிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பேச்சுக்கு தடை:விரைவில்

on-2(42)இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான குரோத பேச்சுகளை இந்நாட்டில் தடைசெய்யும் நோக்கில் அமைச்சரவைப்பத்திரமொன்று விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே இந்த அமைச்சரவைப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவின் தலைமையிலான அமைச்சரவை உப-குழு, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு முன்வைத்த ஆலோசனைகளை அங்கீகரித்து விட்டதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்த அமைச்சரவைப் பத்திரம், காழ்ப்புணர்வு பேச்சுகளுக்கு எதிரான தண்டனைக் கோவை சட்ட ஏற்பாடுகளை பொதுச்சட்டத்தின் பகுதியாக்கி, இன மோதல்களையும் அமைதியின்மையினையும் தடுப்பதற்கு முயல்கின்றது.
அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இச்சட்டத்தின் மூலம் தணிக்கைக்கு உள்ளாகலாம். சமுதாயங்களுக்கிடையே காழ்ப்புணர்வை தூண்டியமை நிரூபிக்கப்படின் மறியல் தண்டனை அல்லது தண்டம் இல்லையேல் இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

தீவிரவாதிகளால் நைஜீரியாவில் மேலும் 60 பெண்கள் கடத்தல்: 38 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் மேலும் 60 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2 கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கும்மாப்ஜா என்ற கிராமத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய திடீர் தாக்குதலில் பெண்கள் உள்பட 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் உள்பட 60 பெண்களையும் கடத்திச் சென்றனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தப்பியோடி அருகிலிருந்த கிராமத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் இந்தத் தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்தச் சம்பவத்தை அந்நாட்டு அரசு உறுதி செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளது.
38 பேர் பலி: இதனிடையே நைஜீரியாவின் கடூனா மாநிலத்தில் 2 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 38 அப்பாவி கிராமவாசிகள் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

lundi 23 juin 2014

பிரபாகரன் இறந்து நாளாகிவிட்டது நாடு இன்னமும் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடவில்லை

பிரபாகரன் இறந்து நாளாகிவிட்டது ; அவரின் மனசற்ற வன்முறைகள் கvijitha theroடந்த கால சங்கதி. ஆனால் ஞாயிற்றுக் கிழமை வன்முறைகளைக் பார்க்கின்ற பொழுது நாடு இன்னமும் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடவில்லை.அளுத்கமயிலும்  வேருவளையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் முடிந்த கையோடு ஒரு பௌத்த பிக்குவின் மீது மிருகத்தனமான தாக்குதல் - பாதிக்கப்பட்ட வரின் படி இந்தத் தாக்குதல் பௌத்தர்கள் அல்லாதவர்களால் அல்லாது,  ஆனால் பௌத்த துறவியின் மஞ்சள் அங்கி அணிந்த குழுவொன்றினால்- நடத்தப்பட்டிருக்கிறது.வியாழக் கிழமை அதிகாலை நேரத்தில் வண. வாட்டாறகே விஜித தேரர் கடத்தப்பட்டிருக்கிறார்;.தாக்கப்பட்டிருக்கிறார்; வீதி ஒன்றிலே  வீசப்பட்டிருக்கிறார். தாக்குதலுக்கு முன்னரே ,  அவர் கலந்து கொண்டிருந்த பல் மத நிகழ்ச்சி ஒன்றினைக்  பொது பல சேனா குழப்பியதுடன் அவரைப் பயமுறுத்தி இருந்ததைத் தொடர்ந்து அவர் தனது உயிருக்கு ஆபத்து  உண்டென்று ஒரு முறைப்பாட்டினை போலீசில் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து  அவர் பொதுவிடத்தில் வன்முறையுடன் நடத்தப்பட்டார் . அவரை பாதுகாக்க ஒதுக்கப்பட்ட இரண்டு போலிஸ் காவலர்கள் வியாழக் கிழமை தாக்குதலுக்கு சுமார் இரு வாரங்களுக்கு முன்னர் மீளப் பெறப்பட்டுள்ளனர்.முரண்நகையாக , கைது செய்யப்பட்டு,  தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பௌத்த பிக்கு ஒருவர் மீது  தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதே , ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு  தூண்டுதலாகும்.அந்த தாக்குதலுக் கெதிராக பொது பல சேனாவினால் நடத்தப்பட்ட  எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.ஆனால் விஜித தேரர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் மீது புத்த மதத்தின் தற்காப்பாளர்கள் என்று சுய நியமனம் செய்து கொண்ட புத்த பல சேனாவினர் வாய் திறக்கவில்லை, ஏன் ?   தங்களைத் தாங்களே சிங்கள பௌத்த சார்பு நலன்களுக்காக போராடும் வீர்கள் என்று உரிமை பாராட்டுகின்ற இன வன்முறைகளில் விருப்பம் கொண்ட பயித்தியக்காரர்கள் , அவர்களின் இன மத தீவிரவாதத்தை எதிர்க்கும் கருத்துவேறுபாடு கொண்ட பிக்குகளுக்கு தீங்கிழைக்கும் விசேட உரிமத்தை கொண்டிருக்கிறார்களா?.விஜித தேரர் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் மஹியங்கன பிரதேச சபை உறுப்பினர். , ஆனால் ஆச்சரியமாக அவரை வைத்தியசாலையில் சென்று பார்வையிட அரசின் பிரபலஸ்தர்கள் யாரும் அக்கறை காட்டவில்லை.விஜித தேரருக் கெதிரான வன்முறையின நியாயப்படுத்தும் வகையில் அவருக்கு மாசு கற்பிக்கும் முயற்சிகள் சில இடங்களில் செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் அவரின் அரசியல் சித்தாந்தத்துடன் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் பெரிதாயினும் , சிறிதாயினும் எல்லா சமூகங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உண்டு என்பதில் அவருடன் உடன்படுவார்.அவருக்கு தீங்கிளைத்தவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். ஒரு சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு அமைச்சரகத்துள் ஒரு பிக்கு குழுவினர்  புகுந்து அவரைத் தேடினர் , அந்த அத்துமீறி நுழைந்தவர்களை பொலிசார் விசாரணை செய்தால் வியாழக்கிழமைச்  சம்பவத்துடனான துப்பினக் பெறக் கூடியதாக இருக்கலாம்குருநாகலையில் இரண்டு போக்குவரத்து போலீசாரைக் கடத்திச் சென்றதில் ஒரு போலீஸ்காரர்  சுடப்பட்டு அண்மையில் இறந்ததும் , அக் குற்றக் கும்பலின்  தலைவனை நேரம் தாழ்த்தாது பொலிசார் கண்டு பிடித்தனர், சந்தேக நபர் பொலிசாரின் பாதுகாப்பில் இறந்து போனார். பொலிசார்  வியாழக்கிழமை தாக்குதலுக்கு பொறுப்பானவர்களையும் அதே வேகத்துடன் கைது செய்யக்  கூடியதாக இருக்க வேண்டும் .தனக்குத்தானே தேசாபிமானி பெயர் சூட்டிக் கொண்ட முஸ்லிம்கள் மீதான ஞாயிறு வன்முறைகளுக்கு பொறுப்பான சிலர்  முன்பு முஸ்லிம் கிராமங்களின் மீதும் பள்ளிகளின் மீதும் புலிகள் கொடுமையான தாக்குதல்களை நடத்தியதற்காக , பிரபாகரனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நியாயப்படுத்தியவர்கள், அந்த துரதிஷ்டமான பலியாட்களுக்காக கண்ணீர் வடித்தவர்கள்.இன்று இலங்கையின் தெற்குப் பகுதிகளில் , சாமாதான காலத்தில் வடக்கு கிழக்கில் புலிகள் முஸ்லிம்களுக்கு எதைச் செய்தார்களோ அதையே இப்பொழுது அவர்கள் செய்கிறார்கள்பிரபாகரன் இருந்த பொழுது "எல்லைப்புற கிராமங்கள் " என்று சொல்லப்படுகின்ற வாழ்ந்த தங்களின் சகோதரர்களைப்  போல் அலுத்கமவிலும் , வேருவளையிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும்  முஸ்லிம்களும் பாதுகாப்பின்மையை உணர்ந்து இருக்க வேண்டும்..முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு முன்னாள் பொது பல சேனா ஆக்கிரமிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்த பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் முளையிலேயே கிள்ளப்பட்டிருக்கலாம். , ஆனால் பொலிசார் வேறு விதத்தில் அதை நோக்கினர். கலகக்கும்பல்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலிருந்து சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தும் படிமுறை மாற்றம் பெற்றுள்ளது.  இன்னமும் , பொலிசார் அவற்றைக் கட்டுப்பாட்டிற்கு  கொண்டுவர அதிகம் செய்யவில்லை.  குற்றவாளிகளுடன் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து  தீர்வு கண்டுகொள்கின்றவாறு  பலியாட்கள் ஆக்கப்பட்டனர். இப்பொழுது , இந்த வெறியர்கள் உயிர்களை அழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.அளுத்கம /வேருவளை வன்முறைகளுக்கும் விஜித தேரர் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பான மனச் சிதைவுற்றோரின் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு இந்த தருணத்தில் கட்டளை இட்டிருக்கிறது.  குற்றம் புரிவோர் வீராப்பு பேசும் எந்த வித எதுக்களையும் பொருட்படுத்தாது,  எல்லா விதமான பயங்கரவாதத்தில் இருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டும். அதுவே இன , மத அல்லது வேறு வகையிலும் சகல சமூகங்களின் உறுப்பினர்களும்,  சம பிரஜையாக அமைதியுடனும் ஒற்றுமையுடனும்  வாழ முடியக் கூடியதாக இருக்கும்."
(தி ஐலண்ட் ஆசிரியர் தலையங்கம் 21/06/14 )
தமிழாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்

மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பினை சேர்ந்த வீரர்கள் சாதனை

தேசிய ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பினை சேர்ந்த வீரர்கள் சாதனைகளை படைத்து மட்டக்களப்புக்கு பெருமைசேர்த்துள்ளனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நொச்சிமுனை,சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர்களே இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் நுவரேலியாவின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் 84கிலோ போட்டியில் எஸ்.ரொயிஸ்டின்,96கிலோ எடை போட்டியில் ஷேன் பல்தாஷர் ஆகியோர் மூன்றாம் இடத்தினை பெற்று இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் பிரதேச செயலக மற்றும் மாவட்ட,மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டு இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் வழிகாட்டலில் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான வேலு.திருச்செல்வத்தினால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகம் கடந்த காலத்தில் மாகாண,தேசிய ரீதியில் பல வீரர்களை பிரகாசிக்கசெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாதனைபடைத்து மட்டக்களப்புக்கு பெருமைசேர்த்துள்ள இவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளா வி.தவராசா,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,உதவி ஆணையாளர் தனஞ்சயன், பொறியியலாளர் அச்சுதன் ஆகியோர் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு மட்டு.நியூஸ் இணையத்தளமும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.