samedi 21 juin 2014

பிரான்ஸ் புலபெயர் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைக்கிறார்கள்

துயர் துடைக்க வாருங்கள், எங்களையும் பாருங்கள், எங்களுக்காக பேசுங்கள், 
 உடமைகள்  சூறையாடப்பட்டுள்ளன, வீட்டு வாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன, பல தமிழ் முஸ்லிம்கள் காயப்பட்டுள்ளனர், 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரகணக்கான தமிழ் முஸ்லிம் பெண்கள், சிறுவர்கள், வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளனர்.
மியன்மார் ரோஹிங்யா பாகம்- 2 அரச ஆதரவுடன் கடும் போக்குவாத பௌத்த துறவிகளால் அரங்கேற்றப்படுகிறது..
இனவாதத் தீயில் கருகும் இலங்கை தமிழ் முஸ்லிம்களான நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக் குரலை எதிர்பார்கின்றோம்.
பிரான்சில் வாழும் இலங்கை தமிழ் முஸ்லிம்களால் ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன நீதியை நிலைநாட்டச் சொல்லும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு உங்களை அழைக்கிறோம்.
காலம் 22.06.2014 ஞாயிறு
நேரம் 16.00 மணிக்கு
இடம் Esplanade du Trocadero – PARIS
Eiffel Tower அருகாமையில்

முற்றங்கள் முற்றுகை இடப்பட்டுள்ளன, நாளை எங்கள் வீட்டுக் கதவுகள்  உடைக்கப்படும்., விழித்துக் கொள்ளுங்கள்
.

Aucun commentaire:

Enregistrer un commentaire