dimanche 29 juin 2014

இராக்கில் 160 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் கொன்று குவித்தனர்!!

160 பேரை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் அவர்களை கொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். கிளிர்ச்சியாளர்கள், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

1,700 ராணுவ வீரர்களை கொன்று குவித்துள்ளதாக தீவிரவாதிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் இணையத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டனர். ஆனால், அந்த புகைப்படங்கள் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப்பெரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது குறித்து இராக் அரசு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜூன் 11 - 14 தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் 160 முதல் 190 பேர் வரை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் திக்ரித் நகரில் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என இராக்கில் உள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire