vendredi 31 août 2012

பிரபல கொலைகாரனும். பயங்கரவாதியுமான மண்டையன் என அழைக்கப்படும் சுரேஸ் பிரேமச்சந்திரனின்



 

பிரபல கொலைகாரனும். பயங்கரவாதியுமான மண்டையன் என அழைக்கப்படும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அறிக்ககைக்கான பதில்.
இன்று சிங்களப் பேரினவாதம்பற்றி பேசும் கும்பல்களே பிரபாகரனின் கொலைவெறி ஆயுதத்திலிருந்து உமது உயிரையும் உமது சகாக்களின் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அன்று சந்திரிகாவின் முந்தானைக்குள் நீரும் உமது தலைவரென அழைக்கப்படும் தலைமைப்பயங்கரவாதியுமான சம்பந்தனும் (1995 முதல் 2001வரை) தஞ்சம் புகுந்திருந்தமையை மறந்துவிட்டீர்கள் போலும்!
எமது தலைவரால் பௌத்த மக்களின் அதிமுக்கிய புனிதத்தலமான உங்களின் நிர்வாகத்தில் செயற்படும் தலதா மாளிகைக்கு (25.01.1998ல்) எங்கள் தலைவரின் கட்டளைக்கமைய குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவதற்காகவே நாங்கள் மலர்க் கொத்துடன் உங்களின் கால்களில் வீழ்கின்றோம் எங்களை மன்னித்துவிடுங்கள். எமது உயிரினை பாதுகாக்க முடியாத நிலையும். எமது குடும்பத்தவர்களின் வாழ்க்கைக்கு போதிய பணமும் இல்லாமையினாலேயே நாம் தலைவரினதும் கால்களில் முத்தமிட்டோம். அவர் எங்களை கௌரவமாக மன்னித்துவிட்டார். நீங்களும் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் என (12.10.2004ல்) கண்டி மஹாநாயக்க தேரரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட காட்சியினையே வாசகர்கள் இங்கு காண்கிறீர்கள்.
படிப்பு. அல்லது கல்வித் தகைமைபற்றி பேசுவதற்கு உமக்கு என்னடா தகைமை இருக்கின்றது. உங்களின் கடந்தகால  அதிமேதகு ஜம்பவான்களான திருவாளர்கள் சி. சுந்தரலிங்கம். ஜி.ஜி பொன்னம்பலம். எஸ்.ஜே.வி செல்வநாயகம். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். முருகேசு சிவசிதம்பரம் போன்ற கல்விமான்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணி என்ன என்பதனை உம்மால் விளக்கமுடியுமா? அவர்கள் எவராலும் தீர்க்கமுடியாதுபோன பிரச்சினையினை தீர்்ப்பதற்காகவே ஐந்தாம் வகுப்பும் படியாத சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரனின் பாதணிகளை நீங்கள் சுமந்த வரலாற்றினை மறந்துவிட்டாய்போலும்!
தலைவர் பேசுவார் நாங்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினருடன் இணைந்து கிழக்கில் மாகாண சபை ஆட்சியினை அமைப்போமென. புலிக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரென தெரிவிக்கப்படும் மண்டையன் பேசும்போது பிள்ளையானுக்கு விழக்கூடிய ஒருசில வாக்குகள் மற்றொரு இஸ்லாமியரை உருவாக்குவதற்கு உதவுமே தவிர, பிள்ளையானை உறுப்பினராக்குவதற்கு உதவாது என! இவர்களின் இடத்திற்கு இடம் பேசும் இனவாதம் கிழக்கில் வாழும் மூவின மக்களுக்கு மத்தியில் ஓர் இன வன்முறையினை தூண்டுவதற்கு உதவுமே தவிர அங்கு வாழும் மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்காது என்பதனை கிழக்கு மாகாண மக்கள் சிந்தித்து மேற்கூறிய இனவாதிகளை கிழக்கிலிருந்து விரட்டுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவெனக்கருதி அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்களென நாம எதிர்பார்க்கின்றோம்
மண்டையனின் அறிக்கை
நான் இந்த மேடையில் வைத்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பிள்ளையானுக்கு விழக்கூடிய ஒருசில வாக்குகள் மற்றொரு இஸ்லாமியரை உருவாக்குவதற்கு உதவுமே தவிர, பிள்ளையானை உறுப்பினராக்குவதற்கு உதவாது. அவர் அமீர்அலியைவிடவோ அல்லது ஏறாவூரைச் சேர்ந்த அலிசாயி மௌலானாவைவிடவோ அவரால் அதிகப்படியான விருப்புவாக்கைப் பெறமுடியாது. ஆகவே தமிழ்             மக்களின் விலைமதிப்பற்ற வாக்கை முஸ்லிம்களுக்குப் பெற்றுக்கொடுக்கத்தான் இவரால் முடியுமே தவிர, இவரால் ஒரு உறுப்பினராக வரமுடியாது. காலம் இன்னும் கடந்துவிடவில்லை. தயவு செய்து பிள்ளையான் யோசிக்க வேண்டும். பிள்ளையான் படிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு அனுபவம் இருக்கின்றது. அந்த அனுபவத்திலிருந்தாவது அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு சிந்தித்தால் தமிழ் மக்களுக்கு ஒரு உதவியைச் செய்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். என்னதான் தலைகீழாக நின்றாலும் குறைந்தபட்சம் எட்டு ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் போய்விடும் என்பதை உணர வேண்டும். மட்டக்களப்பில் எட்டு ஆசனங்கள், அம்பாறையில் மூன்று ஆசனங்கள், திருகோணமலையில் நான்கு ஆசனங்கள் இரண்டு போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து மொத்தம் பதினேழு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். இதனை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க முடியாமலா போகப்போகின்றது?

இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ









பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

   அணிசேரா நாடுகள் மாநாட்டில் கலநது கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

   பாயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

   நாடுகளின் உள்விவகாரங்களில் உலக நாடுகள்தலையீடு செய்யக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

   ஐக்கி;ய நாடுகள் பிரகடனம் மற்றும் அணிசேரா நாடுகள் பிரகடனத்திலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாடு பாரியளவில் அபிவிருத்தியை எட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

   தெளிவான நிலைப்பாட்டுடன் செயற்பட்ட காரணத்தினால்3 தசாப்த யுத்தத்தை இல்லாதொழிக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். 

இந்ததியா விரைகிறார் மஹிந்த மன்மோகன் சோனியாவுடன் செப்.20 இல் முக்கிய பேச்சு

news


 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ சந்திப்பார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஜயமொன்றை மேற்கொண்டு செப்ரெம்பர் 20ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட்ட முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சுகளை நடத்தவுள்ளார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருகிறது என  இந்தியா இராஜதந்திர மட்டத்தில் எதிர்ப்புகள் வலுவடைந்துவரும் ஒரு சூழ் நிலையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெறுகிறது.
அதேசமயம், இலங்கையில் சீனாவின் பங்களிப்பு இந்திய இலங்கை உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தாது என்பது பற்றிய விளக்கங்களையும் இந்தியத் தரப்பினருக்கு ஜனாதிபதி வழங்குவாரென உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தன.
இதேவேளை, நேற்று ஈரான் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ அங்கு நடைபெறும் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே சந்திப்பாரென்றும், அங்கு இருவருக்குமிடையில் உத்தியோகபூர்வ பேச்சுகள் நடைபெறாதென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது




எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (29.08.2012) மாலை களுதாவளையில் இடம் பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டரிடம் (ஸ்ராலின்) வழங்கி வைத்து வைபவ ரீதியாக அதனை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து களுதாவளைப் பிரதேசத்தின் விளையாட்டுக் கழகங்கள், அபிவிருத்திச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், விவசாயிகள் சங்கம், மாதர் அமைப்புக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் என்று பலதரப்பட்ட நிறுவனங்களின் சார்பில் கட்சித் தலைவர் சந்திரகாந்தனிடம் விஞ்ஞாபனத்தின் பிரதிகளைப் பலரும் பெற்றுக் கொண்டனர்.
சுமார் இரண்டாயிரம் பொதுமக்கள் திரண்டு வந்து இப் பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்தனர். இந் நிகழ்வில் முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் இணைந்து வேட்பாளர்களான பூ.பிரசாந்தன், சிறிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பினர் மணிவண்ணன் (ஆசிரியர்), செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, தமயேந்தி (முன்னாள் அதிபர்), கட்சியின் உபசெயலாளர் ஜெ.ஜெயராஜ் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக் கூட்டத்தில் உரையாற்றிய சின்னா மாஸ்டர் “நேற்று இந்த மைதானத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது, கூட்டமைப்பினர் இளைஞர்களைத் தூண்டிவிட்டு வன்முறைக்குத் தூபமிடுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார், அத்தோடு “கூட்டமைப்பினரின் இச் செயற்பாடுகள் கடந்த நான்கு வருடமாக நாங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பிய அமைதியையும், ஜனநாயகத்தின் மீள்வரவையும் சீர்குலைப்பதோடு மீண்டும், மீண்டும் கைதுகளையும், விசாரணைகளையும், சோதனைச் சாவடிகளையுமே எமது மக்களுக்குப் பரிசளிக்கும்” எனத் தெரிவித்தார்

jeudi 30 août 2012

தமிழ் மக்களின் அவமானச்சின்னம் இரா சம்பந்தன்.


திரு இரா சம்பந்தனால் அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்களின் நிகழ்வுகளும், நினைவுகளும்.
அண்மைக்காலமாக  தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்கள் (பிரபாகரனின் தலைமையில் உருவான பயங்கரவாதிகளாவர்) தமிழ் மக்களின் வாக்குகளை காலத்திற்கு. காலம் ஐ.தே.கட்சியினருக்கு குத்தகைமுறையில் விலைபேசி விற்பனை செய்யும் நிகழ்வுகள் திரு சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது. ஏற்கனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அறிமுகப்படுத்திய அரசியல்வாதிகள் எவராலும் மேற்கொள்ளப்படாத வாக்கு விற்பனை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் (10.05.2008ல்) இடம்பெற்றபோது தமிழ் மாபியாக்களால் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஒரு சாராரின் வாக்குகள் பல மில்லியன் ரூபாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு விற்கப்பட்டபோதும் அவ்விடயம் தோல்வியிலேயே முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாபியாக்கள் ஐ.தே.கட்சியினருடனும். திரு சரத் பொன்சேகா அவர்களுடனும் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கமைய பல மில்லியன் டொலர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை விலைபேசி வடக்கு. கிழக்கிலுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் மேடைகளமைத்து சரத் பொன்சேகாவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தனர். மேற்படி அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவுற்றபோதும் பல மில்லியன்  டொலர்களுக்கு சம்பந்தனும். சகாக்களும் உரிமையாளர்களாயினர்.
இன்று மீண்டும் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்கான தேர்தல் இடம்பெறும் நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினருடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போகின்றோமென கூறிய சம்பந்தன் மறு நாளே ஐக்கிய தேசியக் கட்சியினருடன் இணைந்து ஆட்சி அமைப்போமென தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறாயின் சம்பந்தன் கூறும் சிங்களப் பேரினவாதிகள் யார்.?  அது வேறுயாருமல்ல சம்பந்தனுடன் இணைந்து தமிழ் மக்களின் வாக்குகளை கொள்வனவு செய்வதற்கு சம்மதம் தெரிவிக்காத திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரே தவிர. தமிழ் மக்களின் நிரந்தர எதிரிகளான ஐக்கிய தேசியக் கட்சியினர் அல்ல என்பது தெளிவாகின்றது. அதற்கமையவே கடந்த மே மாதம் முதலாந் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின விழாவின்போது இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக் கொடியினை தமது கைகளில் ஏந்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் கை கோர்த்து தமது ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தினை இலங்கை வாழ் மக்களுக்கு சம்பந்தன் பகிரங்கமாகவே வெளிக்காட்டினார்.
 
இதுபோன்ற சம்பவங்களை ஏற்கனவே தமிழ் மக்களின் தலைவர்களென தம்மை அறிமுகப்படுத்திய எவரும் மேற்கொண்டதாக வரலாறு கிடையாது. சம்பந்தனின் அரசியல் வரலாறுகள் அனைத்தும் பணத்தினை குறிக்கோளாகக் கொண்டதேயன்றி மக்களின் நலன்சார்ந்ததல்ல என்பதனை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இக்கட்டுரையினை நாம் வெளியிட்டுள்ளோம்.

கிழக்கு மாகாண சபை ஆட்சியை த.தே.கூ கைப்பற்றினால் எவரும் உதாசீனம் செய்யமுடியாத நிலை ஏற்படும்‘ சம்பந்தன் 12 .08.2012
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் அல்லது கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றினால் அது ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் மற்றும் எவரும் எம்மை உதாசீனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று முக்கிய வெளிநாடு ஒன்றின் தூதுவர் ஒரு சந்திப்பின்போது தெரிவித்தார்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை புறநகர் பகுதியான பாலையூற்று முருகன் கோவில் வீதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசுகையில் இத்தகவலை வெளியிட்டார்.
முஸ்லிம் மக்களுடன் திடீரென முளைத்த நல்லிணக்கப்பாடு உலகத் தலைவர்களை துணைக்கு அழைத்து இரா. சம்பந்தன் பேச்சு தேர்தல் காலத்தில் மட்டுமே பிறக்கும் ஞானோதயம் (05.08.2012)

முஸ்லிம் மக்களுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருட னான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப்புடன் அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வடக்கு மாகாணத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை ஒன்றையும் கல்முனை சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை இணைத்து தென்கிழக்கு மாகாண சபை ஒன்றையும் உருவாக்குவது பற்றி ஆரா யப்பட்டது.
அதன்படி வடக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றும் தென்கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராகவும் தமிழ் ஒருவர் பிரதி முதலமைச்சராக வும் இருக்க வேண்டும் என்று அப்பேச்சு வார்த்தையின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம் களுடன் ஒற்றுமையாக வாழக்கூடியதாக தாராளமாக விட்டுக்கொடுத்து நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காண விரும்புகின்றோம்” என தெரிவித்தார். தொடர்ந்து 10 நாட்களின்பின்னர் வெளியிடப்பட்ட கருத்து
Sri Lanka Tamil party confident in setting up an administration with UNP in the East Thu, Aug 16, 2012, 11:01 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
Aug 16, Colombo: Sri Lanka’s major Tamil party, the Tamil National Alliance (TNA) has expressed confidence in setting up an administration in the Eastern provincial Council that will be led by the opposition political parties.
TNA Leader R. Sampanthan has said the TNA and the main opposition United National Party (UNP) together would be able to form an opposition-led administration in the Eastern Provincial Council following next month’s election. He has predicted that the TNA was likely to get 13 seats in the Eastern elections and if the UNP wins seven seats, the two parties could join forces and form the administration in the Council.
There are 35 seats in the Eastern Provincial Council and a majority would mean over 17 seats. According to Sampanthan’s calculation, the TNA and the UNP together would have 20 seats in the Council. Sampanthan has expressed these sentiments during a meeting with the Tamil Welfare Association in Trincomalee.
கல்வித்துறை குளறுபடிகளே பயங்கரவாதத்திற்கு வழிவகுத்தன: ரணில் விக்கிரமசிங்க  20. 08. 2012 (1977—1981—1983)களில் ஐ.தே.கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட கலவரத்தினையும். படுகொலைகளையும் அவர் மறந்துவிட்டார்.
 
கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளே இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்த பிரதான காரணி  என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறினார்.பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவாக முடியாத நிலையிலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
“1973. 1974. 1975 ஆம் ஆண்டுகளில் இது நடந்தது. அரசாங்கம் இதை மனதில் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் வடபகுதி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாத நிலையால் பெரும் குழப்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்ததாகவும் வசதியுடைய பெற்றோர் தமது பிள்ளைகளை பிரிட்டனுக்கு கல்வி கற்க அனுப்பியதாகவும் கூறினார்.
“ஈழ மாணவர் பொது ஒன்றியம் மற்றும் ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) முதலாவது மாணவர் அமைப்புகளாகின. அவர்கள் இரு பிரிவினராக பிரிந்தனர். அதுவரை தமிழர் போராட்டம் அரசியல் தலைமைத்துவத்தினால் கையாளப்பட்டது. இளைஞர்கள் அதில் ஈடபடவில்லை’ என அவர் கூறினார். தனது சகாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் பிரிட்டனில் கல்வி கற்ற ஒருவர் எனவும் பலஸ்தீனத்தில் ஆயுதபயிற்சி பெறுவதற்காக கல்வியை கைவிட்டவர் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் அளித்த வாக்குகளின்மூலம் பாராளுமன்ற பலகணியில் அமர்வதற்கான வாய்ப்பினை தமதாக்கிக் கொண்ட எம்.ஏ சுமந்திரன் அடுத்து வரும் தேர்தலில் அந்தப்புலுடா பலிக்காது என்பதனை அறிந்துவிட்ட நிலையில் கொழும்பில் தற்சமயம் காலியாக இருக்கும் ரீ. மகேஸ்வரனது இடத்தினையும். புலிகளின் கொழும்பு மாவட்ட அன்றைய தரகரான மனோ கணேசனது இடத்தினையும் ஏதோ ஒன்றினை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் அவர்களால் வடகிழக்கில் பட்டம் சூட்டப்பட்ட பேரினவாதிகளின் அனுசரணையுடன் (ரணில்) தற்போதே களமிறங்கியுள்ளார்.
ஏழு வருடங்களுக்குள்(1977—1983) மூன்று இனக்கலவரங்களை இலங்கையில் உருவாக்கி பல்லாயிரக்கணக்கான தமிழ மக்களின் உயிர்களை பலிகொண்டு. சொத்துக்களையும் சூறையாடிய  ஐ.தே.கட்சியினரும். அவர்களின் செல்லப்பிள்ளைகளும்.
 1 ஆட்சியமைத்து ஒரு வாரகால இடைவெளியில் (04.08.1977 –12.08.1977) முதலாவது இனக்கலவரம்.
2 (31.05.1981) இரண்டாவது இனக்கலவரம்
3. 1983ல் நடாத்த வேண்டிய பொதுத் தேர்தலை நடாத்தாது ஜனநாயக மரபுகளை உதாசீனஞ்செய்து சர்வஜன வாக்கெடுப்பு என்னும் பெயரில் ஓர் தேர்தலை (22.12.1982ல்) நடாத்தி மேலும் ஆறு வருடகாலங்கள் (8) உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியுடன் ஆட்சியினை தொடர்ந்தனர்.
3 (25.07.1983) மூன்றாவது இனக்கலவரம்
இக்கலவரங்கள்பற்றி எம்மால் வெளியிடப்பட்டுள்ள (இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும் என்னும் 516 பக்கங்களைக்கொண்ட) நூலில் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் குடா நாட்டிற்கான பொருளாதாரத் தடை. யாழ் நூல் நிலையம் தீயிட்டு எரிக்கப்பட்டமை.வெலிக்கடை படுகொலைகள். ஐ.தே.கட்சியின் ஆட்சியின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளின் விபரங்கள் போன்ற பல அடாவடித்தனங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இலங்கை அரசியலில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக செயலாற்றி மக்களை ஏமாற்றிய ஆரம்பகால தலைவர்களின் வரலாறு.
 தமிழ் மக்களின் தலைவர்களென தம்மை அறிமுகம் செய்து கடந்த (30) முப்பதுஆண்டுகாலமாக (1947—1977) அரசியல் நடாத்திய திரு ஜி.ஜி பொன்னம்பலம். திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து தமிழர்களின் தலைமையினைப் பொறுப்பேற்ற திரு அப்பாப்பிள்ளை. அமிர்தலிங்கம். திரு முருகேசு சிவசிதம்பரம் போன்றவர்கள் வழிநடாத்தியபோதும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கமுடியாது தத்தமது வாழ்க்கையினை நிறைவு செய்தனர்.  மேற்கூறியவர்களில் முன்னைய இருவரும் தமது வதிவிடமாக கறுவாக்காட்டினை தளமாகக்கொண்டு தேர்தல் காலங்களில் மட்டும் யாழ் குடாநாட்டீல் பிரசன்னமாவதனையே வழமையாக்கிக்கொண்டு செயற்பட்டனர். பின்னையவர்கள் இருவரும் இலங்கையின் தலை நகரமான கொழும்பிலும். யாழ்ப்பாணத்திலுமென விமானப் பயணங்களை மேற்கொண்டு தத்தமது அரசியலை நடாத்தினர்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கென ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயலாற்றிய திரு ஜி.ஜி். பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலேயே திரு செல்வநாயகம் அவர்களும் ஏனைய நான்கு உறுப்பினர்களும் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வடமாகாணத்திலிருந்து கட்சிரீதியாக தெரிவாகி பாராளுமன்றம் சென்றிருந்தனர். ஊர்காவற்றுறை. சாவகச்சேரி. மன்னார். வவுனியா ஆகிய தொகுதிகளிலிருந்தும் நால்வர் சுயேச்சையாக களமிறங்கி வெற்றியீட்டியதன்மூலம் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையிலேயே திரு டி.எஸ் சேனநாயக்கா அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற ஆட்சிக்காலத்தின்போது இலங்கையின் மத்திய பிரதேசமான மலையகப் பிரதேசங்களில் தோட்டப்பயிர்ச்செய்கையினை மேற்கொண்டிருந்த இந்திய வம்சாவழி மக்கள் (975.000) மக்களின் வாக்குரிமையும். குடியுரிமையும் இல்லாதொழிக்கப்பட்டது. மேற்படி சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தமிழ் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த (04) நால்வர் ஆதரவாக வாக்களித்த நிலையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம். எஸ். சிவபாலன் ஆகிய இருவர் மட்டும் பிரேரணையினை எதிர்த்து வாக்களித்தனர். மற்றும் கு வன்னியசிங்கம். வி. குமாரசாமி. சி.சிற்றம்பலம். சி. சுந்தரலிங்கம் ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது  ஒதுங்கிக்கொண்டனர். இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை அடுத்த கட்டுரையில் தெரிவிக்கின்றோம்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரே அன்றைய இனவிகிதாசாரத்திற்கமைய இலங்கையில் வாழ்ந்த மொத்த தமிழ் மக்களில் (53%) தமிழர்களின் வாக்குரிமையினை இல்லாதொழித்தமைக்கு பிரதான பங்காளிகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. மேற்படி சட்டமூலத்தினை ஆதரிக்க விரும்பாத ஐ. தேகட்சியின் உறுப்பினர்கள் (07) பேர் வாக்களிப்பில் பங்குபற்ற விரும்பாது வெளிநடப்புச் செய்தநிலையிலேயே தமிழர்களின் பாதுகாவலர்களாக புறப்பட்ட வடபகுதி அரசியல்வாதிகள் மந்திரிப்பதவிக்காக உடன்பிறப்புக்களான தமிழர்களின் வாக்குரிமையையும். குடியுரிமையையும் இல்லாதொழிப்பதற்கு அனுசரணை வழங்கியமையை எவ்வாறு நாம்விபரிப்பது.
பின்னையவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தி தத்தமது பொருளாதார வசதிகளை மேம்படுத்தினார்களே தவிர தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக வரலாறு கிடையாது. மாறாக வடமாகாண அரசியல்வாதிகள் அனைவரும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளான ஐக்கிய தேசியக் கட்சியினரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவும். இடது சாரிக்கொள்கையினை தமது அரசியலாகக்கொண்ட எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் இணக்கப்பாட்டுடன் இணைந்து பணியாற்ற விரும்பாதவர்களாகவே செயற்பட்டுள்ளனர்.
உதாரணமாக 1956ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி (51) ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெற்றதற்கமைய அரசாங்கத்தினை திரு பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையில் அமைத்தது. அரசாங்கம் அமைத்து இரு மாதகால இடைவெளியில் அதாவது (15.06.1956ல்) இலங்கையின் அரச நிர்வாக மொழி சிங்களம் என்னும் சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றினார்.
குறிப்பு— இலங்கையின் இனரீதியான புள்ளிவிபரங்களுக்கமைய 1960ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்களின் விகிதாசாரம் (72%) வீதமாக அமைந்திருந்தது. மேற்படி சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டபோது இலங்கையின் ஆட்சி மொழி ஆங்கிலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தமை முக்கியமானதாகும். 1933ம் ஆண்டு அன்றைய அரசாங்க சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய ஆங்கிலம் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண அரசியல் தலைமைகள் தமிழ் மொழி பற்றி வாய் திறக்கவேயில்லை காரணம் அது அவர்களுக்கு தேவையற்ற ஒன்றாகவே காணப்பட்டது. அன்று வெள்ளையரின் ஆட்சியில் அரச இயந்திரத்தின் இயக்குனர்களாக செயற்பட்ட தமிழர்களுக்கே தமிழ் அறிவு பற்றாக்குறையாகவும். ஆங்கில மொழியில் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அவர்கள் இருந்தமையால் அவர்களுக்கு சாதாரண பொதுமக்கள்பற்றிய சிந்தனை அவர்களின் உள்ளங்களில் துளிகூட குடிகொண்டிருக்கவில்லை.
ஆனால் நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களாக அன்று இருந்த சிங்கள மக்கள் எதற்காக அன்னிய மொழியினை தமது தாய் மொழியாக ஏற்கவேண்டும் எனச் சிந்திப்பது நியாயமானதே!
 1956ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்  தேர்தல் பிரச்சாரங்களின்போது பின்வரும் வாக்குறுதிகள் திரு பண்டாரநாயக்கா அவர்களால் சிங்கள மக்கள்முன் வைக்கப்பட்டது.
1 தாம் ஆட்சியமைத்ததும் திருகோணமலை துறைமுகத்தில் நிலைகொண்டிருக்கும் பிரித்தானியரின் கடற்படையினரை ஒரு மாதகால இடைவெளியில் அங்கிருந்து அகற்றுவேன்.
2 கட்டுநாயக்க விமானத்தளத்தில் நிலைகொண்டிருக்கும் பிரித்தானியரின் விமானப்படையினரும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
3.இலங்கையின் ஆட்சி மொழியாக கடைப்பிடிக்கப்படு்ம் ஆங்கில மொழியினை 24 மணித்தியாலங்களுக்குள் அகற்றி சிங்கள மொழியினை இலங்கையின் ஆட்சி மொழியாக பிரகடனப்படுத்துவேன் என வாக்காளர்களுக்கு உறுதி மொழி வழங்கினார்.
மேற்கூறிய மூன்று விடயங்களும் அவரின் ஆட்சியின்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் ஆங்கில மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகள் அனைத்தும் சுவீகரிக்கப்பட்டு அங்கு சுய மொழிகள் அதாவது (சிங்களம். தமிழ்)ஆகிய மொழிகள் கற்பிப்பதற்கான நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டன.
இந்நிலையில் ஏகாதிபத்தியங்களின் செல்லப்பிள்ளைகளாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டதே 1956ம் ஆண்டு இனக்கலவரமாகும். இக்கலவரத்தின்போது காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே என்பதும் அன்று நிரூபணமான விடயமே! ஏற்கனவே திரு ஜே.ஆர் ஜயவர்தனா அவர்கள் அரசாங்க சபையில் அங்கம்வகித்தபோது (1944ம்) ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்னும் பிரேரணையினை முதன் முதலாக  சபையில் சமர்ப்பித்தபோது அப்பிரேரணை அங்கீகரிக்கப்படாது தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள மொழியினை அரசகரும மொழியாக பிரகடனப்படுத்திய திரு பண்டாரநாயக்கா அவர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலையினை கருத்தில்கொண்டு திரு செல்வநாயகம் அவர்களுடன் ஒரு வருடகால இடைவெளியில் ஓர் உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு அதற்கான தீர்வினை காண்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டார்.அதற்கமைய உருவாக்கப்பட்டதே (27.07.1957ல்) பண்டா—செல்வா உடன்படிக்கையாகும்.இவ்வுடன்படிக்கைக்கு எதிராக சிங்கள பௌத்த பிக்குகளையும். பொதுமக்களையும் தூண்டிவிட்டதுடன் அவ்வுடன்படிக்கையினை உடனடியாக இரத்துச் செய்யவேண்டுமென பௌத்த மக்களின் புனிதத் தலமான தலதா மாளிகைக்கு ஊர்வலமொன்றினை நடாத்தியவரும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான திரு ஜே.ஆர். ஜயவர்தனா என்பதனை தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வரவில்லை காரணம் அவர்களின் ஏகாதிபத்திய உறவு அதற்கு இடம்கொடுக்கவில்லை.
தமிழ் மக்கள் அன்று பெரும்பான்மையாக வாழ்ந்த வடக்கு. கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி அரசியல் போன்ற ஒரு கட்டமைப்பினையும் அப்பிரதேசங்களின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியினையும் உறுதிப்படுத்தியதே அவ்வுடன்படிக்கையாகும். அவ்வுடன்படிக்கையினை கிளித்தெறிவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவதற்கு முன்வந்தமைக்காக பண்டாரநாயக்காவின் உயிரைப் பலிகொள்வதற்குமான (25.09.1959) நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்பதனை யாருமே மறுக்கமுடியாது.
தொடர்ந்து 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 19ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியினரோ அன்றி சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரோ பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய பெரும்பான்மையினை பெறவில்லை. இந்நிலையில் தமது நண்பர்களான தமிழரசுக் கட்சியினரின் ஆதரவு கிடைக்குமென எதிர்பார்த்த ஐ.தே.கட்சியினர் (23.03.1960ல்) அரசாங்கத்தினை அமைத்தனர். அதற்கமைய சிம்மாசனப்பிரசங்கம் இடம்பெற்றபோது தமிழரசுக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்க முன்வராமையால் ஐ.தே.கட்சியின் அரசு கலைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் (46) உறுப்பினர்களை தம்வசம் கொண்டிருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர். தமிழரசுக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தமக்கு ஆதரவு தருமாறும் அவ்வாறு ஆதரவு வழங்கும்பட்சத்தில் பண்டா—செல்வா உடன்படிக்கையினை தாம் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதியளித்தனர். ஆனால் அவர்களின் வேண்டுகோளை தமிழரசுக் கட்சியினர் நிராகரித்தனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இடைத்தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் (75) உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைத்தனர். பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் ஆட்சிக்காலம் முழுமையாக பூர்த்தி செய்ததன்பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியினருடன் ஒர் இரகசிய உடன்படிக்கையினை ஐ. தே கட்சியினர் ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையிலும் அரசாங்கம் அமைப்பதற்கான போதிய பெரும்பான்மையினை ஐ.தே.கட்சியினர் பெறாதநிலையில் தமிழரசுக் கட்சியினரையும். தமிழ் காங்கிரஸ் கட்சியினரையும் தம்முடன் இணைத்ததுடன் (24.03.1965ல்) டட்லி—செல்வா உடன்படிக்கை என்னும் பெயரில் தமிழரசுக் கட்சியினருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியினருக்குமிடையில் ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
ஏற்கனவே தமிழ் மக்களுக்கான தனியான நிர்வாகம் ஒன்றினை வடக்கு. கிழக்கில் ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்தானபோது அதனை நிறைவேற்றவிடாது பாதயாத்திரை சென்ற ஐ.தே.கட்சியினருடன் தமிழரசுக் கட்சியினர் இணைந்தமை அவர்களின் ஏகாதிபத்திய சிந்தனையை வெளிக்காட்டியது. அத்துடன் அவ்வுடன்படிக்கை அரச தரப்பினராலேயே நடைமுறைப்படுத்தமுடியாதென தெரிவிக்கப்பட்டு செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் (27.05.1970ல்) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் மேற்குலக ஏகாதிபத்தியங்களை இலங்கையிலிருந்து முற்றாக வெளியேற்ற வேண்டுமென்னும் நோக்குடன் இலங்கையை சுயநிர்ணயமும். தன்னாதிக்கமுமுள்ள ஓர் குடியரசு நாடாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு (இலங்கை சோசலிஸ ஜனநாயகக் குடியரசு) என அரசியல் திருத்தத்தின்மூலம் நிறைவேற்றி பிரித்தானியாவிடமிருந்த அதிகாரத்தினை இலங்கை மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன் நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது.


(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட'மரணங்களின் நினைவு கூர்த்தல்என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)
"One day some gun will silence me and it will not be held by an outsider but by theson born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.
இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்துநிற்பது வெளிப்படுகின்றது.

1986 டிசம்பர் தொடக்கம் 1987 ஜுலை வரையிலான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கில்புலிகள் தமது ஏகபோக முடியாட்சியை நடத்தினர். இக்காலகட்டத்தில் புலிகள் தவிர்ந்த வேறுஎந்த அமைப்புக்களும் வடக்கு கிழக்கில் செயற்பட முடியவில்லை. விதிவிலக்காக தீப்பொறிக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பு போன்ற அமைப்புக்கள் தனதுமட்டுப்படுத்திய புலிகளை கோபத்திற்குள் உள்ளாக்காத செயற்பாட்டை மட்டும்கொண்டிருந்தனர்.

வடமராட்சியில் ஆரம்பித்து யாழ்பாணத்தை கைப்பற்றுதல் என்ற இலங்கை அரசின் இராணுவநடவடிக்கையை தடுத்து நிறுத்த 1987 ஜுன் 2ம் திகதி ஒப்பரேசன் பூமாலை என்றமனிதாபிமான சாப்பாட்டு பொதிகளை ஆகாயத்திலிருந்து வீசுதல் என்ற நடவடிக்கையைஇந்திய அரசு மேற்கொண்டதுஇதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி தனது வழிக்கு ஜேஆர்ஜெயவர்தனாவை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து ஜேஆர் ஜெயவர்தனவுடன் ராஜீவ்காந்தி வடக்கு கிழக்கில் அதிகாரப் பரவலாக்கலுக்கான இலங்கை இந்திய ஒப்பந்தம்கைசாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படையின் வடக்குகிழக்கிற்கான வருகையும் நடைபெற்றன. பூரண கும்பம் மாலை ஆரத்தி கூடவே இந்தியஅமைதிகாக்கும் படையின் இராணுவ வாகனத்தில் இந்தியக் கொடியுடன் கூடியபுலிக்கொடியுடன் இருவரும் ஒன்றாக பவனி வருதல் என்று தேன்நிலவுடன் புலிகள் இந்தியஅமைதிகாக்கும் படை உறவுகள் வடக்கு கிழக்கு எங்கும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏனைய விடுதலை அமைப்புக்கள் மீண்டும் வடக்கு கிழக்கில் தமதுஅரசியல் செயற்பாட்டை ஆரம்பிக்க தொடங்கினபோர் நிறுத்தம் சமாதானம் என்றுஆரம்பித்த இந்த ஜனநாயக இடைவெளியை பாவித்து ராஜினி போன்றவர்களால்உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பும் தனது செயற்பாட்டைவிஸ்தரித்தது.

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன்நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது. இதற்குமுக்கிய காரணம் ஏனைய விடுதலைஅமைப்புக்களின் செயற்பாடுகள் தமதுஏகபோகத்தை இல்லாமல் செய்துவிடும்என்பதினால். மக்கள் கேள்வி கேட்கும்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தருணம்பார்த்து இருந்தனர் புலிகள் இவற்றிற்கு முற்றுப்பள்ளி வைக்ககடலில் ஆயுதக் கப்பலுடன்இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமதுஉறுப்பினர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையைஇந்திய அமைதிப்படை நிறைவேற்றவில்லைஎன்ற கோதாவில் புலிகள் இந்திய அமைதிப்படையை வலிந்த யுத்தத்திற்குள் இழுத்தனர்.இதனையே ஜேஆர் என்ற குள்ள நரி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது எதிர்பார்த்துசெயற்பட்டார். இதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள் புலிகள்.

இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் இடையிலான சண்டை ஆரம்பிப்பதற்கு சிலதினங்களுக்கு முன்பு தான் மட்டக்களப்பில் புளொட் ஈபிஆர்எவ்எவ் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் புலிகளின் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்தியஇராணுவத்தின் கண்முன்பே மட்டக்களபு மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டனர்இதனைத்
திசை திருப்புவதற்கான தருணமாகவும் வலிந்த சண்டை நிகழ்வுக்கு திகதி குறித்திருந்தனர்புலிகள்.
புலிகள் இந்திய அமைதி காக்கும் படையேயான யுத்தத்தின் போது இரு தரப்பினரும் மனிதஉரிமை மீறல்களை செய்தனர். இவ்விடயங்களை ராஜினி பல்கலைக்கழக ஆசிரியர் மனிதஉரிமை அமைப்பு ஊடாக அறிகை வெளியீடுகள் மூலம் அம்பலப்படுத்தி வந்தார்.பல்கலைக்கழகம் என்ற தளத்திற்கு அப்பால் இவ் செயற்பாட்டை விரிவு செய்திருந்தால்இன்னும் பல வெற்றிகளை இவர்கள் கண்டிருக்க முடியும். இவர்களிடம் இருந்த மத்தியதரபுத்திஜீவித் தன்மை இதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
(தொடரும்......)

mercredi 29 août 2012

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள்

16 வருடங்களாக ஸ்ரீதர் தியேட்டரை டக்ளஸ் ஆக்கிரமிப்பு



 
news
 யாழ். நகரத்தினுள் உள்ள ஸ்ரீதர் தியேட்டரை கடந்த 16 வருடங்களாக வாடகை கூடத்தராமல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையகப் படுத்தி வைத்திருக்கிறார் என்று திரையரங்கின் உரிமையாளரான ரட்ண சபாபதி மகேந்திர ரவிராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார். 
 
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து வரும் மகேந்திர ரவிராஜ், அங்குள்ள "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்கு இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அந்தப் பத்திரிகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டதற்கு, மகேந்திர ரவிராஜ்தான் திரையரங்கின் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தினால் தான் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனைக் கையளித்துவிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
 
இதற்குப் பதிலளித்திருக்கும் ரவிராஜோ, "இவர் இப்படித்தான் கடந்த வருடமும் சொன்னார், அதற்கு முந்திய வருடமும் சொன்னார். நான்தான் திரையரங்கின் உரிமையாளர் என்பது முழுக் குடாநாட்டுக்குமே தெரியும். அது அமைச்சருக்கும் நன்கு தெரியும்'' என்று கூறியிருக்கிறார்.
 
இது பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கும் "தி ஆஸ்திரேலியன்', கடும் அச்சமூட்டக்கூடிய அரசியல்வாதியும் அரச ஆதரவு துணைப் படையின் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடமே திரையரங்கம் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. அத்துடன், அவர் அமைச்சராக இருக்கின்றபோதும் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில் இந்தியாவில் தேடப்பட்டு வருகின்றவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
 
மகேந்திர ரவிராஜுக்கு இப்போது வயது 66. அவரது குடும்பத்தின் சொத்தாக யாழ்ப்பாணத்தில் எஞ்சி இருப்பது இந்தத் திரை அரங்கு மட்டுமே என்று அவர் கூறுகின்றார். 
 
தனது சொத்துக் குறித்து மகேந்திர ரவிராஜ் "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்குத் தெரிவித்திருப்பதாவது: எனது சொத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு சட்டத்தரணியை அமர்த்தித் தருமாறு எனது நண்பர்கள் பலரிடம் நான் கேட்டேன். ஆனால் ஒருவரும் அவருக்கு எதிராக நிற்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவரைப் பற்றி அவ்வளவு பயம் அங்கு இருக்கிறது. 
 
அவரை அங்கிருந்து (திரையரங்கம்) வெளியேற்றுவது கடினம் என்றும் அந்த வழக்கு வருடக்கணக்கில் இழுத்துச் செல்லப்படும் என்றும் என் நண்பர்கள் கூறுகிறார்கள். 
1996ஆம் ஆண்டு திரையரங்கத்தை தன்வசப்படுத்த முன்னர் டக்ளஸ் என்னுடன் பேசினார். அந்தக் காலத்தில் கடுமையான சண்டை எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருந்தது. 
 
அப்போது நான் சொன்னேன், திரையரங்கத்தை நான் மீண்டும் திறக்கப் போகிறேன் என்றும் அந்தச் சமயத்தில் நீங்கள் வெளியேற முடியுமா என்று கேட்டேன். "எப்போது நீங்கள் திரையரங்கைத் திறப்பதாக இருந்தாலும் நான் விட்டுவிடுகிறேன்'' என்று அவர் சொன்னார். அதனால் நான் சம்மதித்தேன்.
 
 அத்துடன் எப்போது திறக்கப் போகிறேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றும் கூறினேன். ஆனால் அதற்குப் பின்னர் பல நூறு தடவைகள் நான் அவருக்கு (டக்ளஸ்) தொலைபேசி அழைப்புக்களை எடுத்தேன். எண்ணற்ற கடிதங்களை அனுப்பினேன். எதற்கும் பதிலில்லை. 
 
இது பற்றி நான் எல்லோருக்கும் எழுதினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த விடயத்தில் நீதி எங்கே போயிற்று? 
இதுபோன்ற பிரச்சினைகளுடன் நிறையப் பேர் இருக்கிறார்கள். நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில் என்னுடைய வாழ்க்கை பின்னர் ஆபத்தில் போய் முடிந்துவிடலாம். 
இனிமேலும் என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. 
 
இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: 
நான் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்குப் பொறுப்பானவர். மகேந்திர ரவிராஜ் அண்மையில் என்னுடன் பேசினார். இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்கை விடுவதாக நான் சொன்னேன். ஆனாலும் இதுவரைக்கும் திரையரங்கின் உரிமை உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
சரியான உரிமையாளர் தெளிவுபடுத்தப்பட்டால் அதனைக் கையளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி நடந்தால்  இந்த வருட இறுதிக்குள் நாம் கையளித்துவிடுவோம்.
 
டக்ளஸின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த திரையரங்கு உரிமையாளர், "இந்த வருட இறுதியில் வெளியேறுவதாக டக்ளஸ் சொல்கிறார். ஆனால் அவர் இதனைத்தான் கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடமும் சொன்னார். 1996இல் அவர் என்னிடம் பேசிவிட்டுத்தான் திரையரங்கில் குடிபுகுந்தார்'' என்று கூறியிருக்கிறார். 
 
திரையரங்குக்கான வாடகையை தான் மகேந்திர ரவிராஜின் கூட்டாளி ஒருவருக்குக் கொடுத்தார் என்று டக்ளஸ் கூறுகின்ற போதும் அப்படி ஒருவர் கிடையவே கிடையாது என்று மகேந்திர ரவிராஜ் தெரிவித்திருக்கிறார் என்றும் "தி ஆஸ்திரேலியன்' தெரிவித்திருக்கிறது. 

குறிவைக்கும் 'அக்னி' ஏவுகணைகள்


 [ கார்வண்ணன் ]
சிறிலங்காவின் கேந்திர நிலைகளை குறிவைத்து இந்தியா ‘அக்னி‘ ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

“போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுமுகமான உறவை விடவும் குறைவான உறவே நீடிக்கிறது என்பது இரகசியமான ஒன்றல்ல.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது இதில் முக்கியமானதொரு சம்பவமாகும்.

இந்தநிலையில் கடந்தவாரம் தமது நாட்டுக்கு வரவிருந்த சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவுக்கான பயண அழைப்பையும் திடீரென இந்தியா விலக்கிக் கொண்டது.

இரு அயல்நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள சில இணையதளங்கள் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா, அக்னி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டன.

இந்தச் செய்தி வெளியானதும், சிறிலங்காவுக்கு எந்த ஏவுகணை ஆபத்தும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டது.

எனினும், இந்திய அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தச் செய்திக்கு இந்தியா விளக்கம் கொடுக்கவும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை.

இதுகுறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தொடர்பு கொண்டு வினவியபோது, இணையதளங்களில் வெளியான இந்தச் செய்தி குறித்து தாம் கரிசனை கொள்ளவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

அத்துடன் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இல்லை என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

dimanche 26 août 2012

இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் இலங்கையின் 7 முக்கிய நிலைகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்



இந்திய அக்னி ஏவுகணைகள் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து

இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் இலங்கையின் 7 முக்கிய நிலைகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டுள்ளதாக  அமெரிக்காவின் க்ளேமன்ட் இன்சிடியூட் நிறுவனத்தின்  மிசையில் திரேட் என்ற இணையத்தளம் வெளியிட்ட தகவல் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.
 
இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, இந்தியாவின் றோ புலனாய்வு முகவர்கள் சிக்கியுள்ளனர். இந்த ரகசிய தகவல் வெளியானத்தை அடுத்து இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய போர் தளப்பாடம் மற்றும் வேறு உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைமையகத்தை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
 
 
சீனாவின் இந்த பாரிய நிறுவனம் கொள்வனவு செய்ய இணங்கியுள்ள கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் காணி தொடர்பாக, இந்திய அரசாங்கம், இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அழைத்து தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக உயர் மட்டத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வன்னியில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது, குறித்த சீன நிறுவனமே இலங்கை இராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்கியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான், இலங்கை, மியன்மார் ஊடான சீனாவின் விநியோக பாதையை சீர்குலைக்க இந்திய - அமெரிக்க ரகசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி ரகசிய தகவலை வெளியிட்டிருந்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.
 
 
 
 
சீனா அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை அமைக்க உதவியதை அடுத்து, இந்திய அங்கு தூதரக பிரதிநிதியின் அலுவலகம் ஒன்றை திறந்தமை குறிப்பிடதக்கது.

களுவாஞ்சிக்குடியில் தமிழ் தேசிய கூட்டடைப்பின் அட்டகாசம் த.ம.வி.புலிகளின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொது மகன் கடும் தாக்குதலுக்கு இலக்காகி களுவாஞ்சிக்குடி பொது வைத்தியசாலையில் அனுமதி.

இன்று (25.08.2012) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் கறுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை கடந்த காலங்களில் பலதரப்பட்ட கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டு தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனா என்பவர் தலைமையிலான காடையர் கும்பல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரின் பிரச்சார நடவடிக்கையினை தடுக்கும் வகையில் குளப்பங்களை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது மகன் ஒருவரை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதன் காரணமாக வினோதன் என அழைக்கப்படும் குறித்த பொது மகன் களுவாஞ்சிக்குடி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதலை நடத்திய ஜனா தலைமையிலான கும்பல் இனங்காணப்பட்டு வாகனங்களின் இலக்கங்களும் அடையாளம் காணப்பட்டு பொலிசார் தேடுதல் நடத்துவதுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
                                                                                                                                                                                      களுவாஞ்சிக்குடி நிருபர்.
 

வெனிசுலாவில் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து : 39 பேர் சாவு

கராகஸ், ஆக 26- தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிகுந்த நாடு. அமெரிக்காவுக்கு தேவையான பெருமளவு எண்ணை இங்கிருந்துதான் ஏற்றுமதி ஆகிறது. 

இந்த நிலையில் அங்குள்ள பால்கான் மாகாணத்தில் அமுய் என்ற இடத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சுத்திகரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணை கொளுந்து விட்டு எரிந்தது. எனவே, அங்கிருந்து கரும்புகை வெளியேறியது. மேலும் அங்கிருந்த எண்ணை பாரல்கள் வெடித்து சிதறின. 

இந்த தீ விபத்தில் 39 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் . அவர்களில் 18 பேர் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேசிய படையை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர மற்ற 15 பேர் பொதுமக்கள் மேலும் 6 பேர் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த விபத்து வெனிசுலாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள கியாஸ் கசிவே விபத்துக்கு காரணம் என பெட்ரோலிய மந்திரி ரபேல் ரமியர்ஷ் தெரிவித்துள்ளார். 

விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஹுகோ சாவேஷ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் இந்த விபத்து தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. மேலும் இது வெனிசுலாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். 

தீ விபத்தில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெனிசுலாவில் 3 நாள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படஉள்ளது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு அதிபர் சாவேஷ் உத்தரவிட்டுள்ளார்.

100 மில்லியன் அமெரிக்கடொலர்கள் ஒதுக்கீடு .....வடக்கு கிழக்கில் இராணுவ தங்குமிடங்களை அமைக்கத் திட்டம் சீனா


சீன அரசாங்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ தங்குமிடங்களைஅமைக்கத் தீர்மானித்துள்ளது. இராணுவ நலன்புரித் திட்டமொன்றை சீனா ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புஅமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நல்ன்புரி; திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்கடொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உட்கட்டுமான வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவற்றைஏற்படுத்திக் கொடுப்பதற்காக நஇ;தப் பணம் செலவிடப்பட உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
மன்னார், பலாலி, ஆணையிறவு, பூணகரி, தல்லாடி,காரைநகர் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இராணுவ முகாம்களின் உட்கட்டுமான மற்றும் தங்குமிடவசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் குவான்கில் எதிர்வரும் 29ம் திகதிஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் இந்த உதவிகள்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியை நவீனமயப்படுத்த1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கவுள்ளது.
படைத்தரப்பு மற்றும் காவல்துறை சேவையில் ஈடுபட்டுள்ள நபர்களின்பிள்ளைகள் கல்வி பயில்வதற்காக இந்தக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.