mercredi 29 février 2012

வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கு ஏதுவாக போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடமொன்றை வவுனியாவில் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்

போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை விசாரணையொன்றுக்காக இராணுவ முகாமுக்கு வருமாறு தெரிவித்துப் போலி கடிதங்கள் தயாரித்து ரப்பர், சீல் குத்தப்பட்டு பெருந்தொகையான பணத்துக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். ஜோசப் முகாம், கண்டி வீதி, வவுனியா என்ற விலாசத்தை குறிப்பிட்டே இந்த போலி கடிதங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன என வவுனியா இராணுவ முகாமின் அதிகாரிகள் சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவத்துள்ளன. இத்தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை கைது செய்துள்ளனர். போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், ரப்பர் சீல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமை புரியும் லிகிதர் ஒருவரும், அலுவலக உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இராணுவத்தினர் விசாரணைக்கு அழைத்து தம்மை துன்புறுத்துவார்கள். சித்திரவதை செய்வார்கள் எனவே நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என வெளிநாடுகளில் காண்பிப்பதற்காகவும் இலங்கையில் தான் இவ்வாறு இராணுவத்தினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் இங்கு வாழ முடியாது. வெளிநாட்டில் புகலிடம் கோருவதற்காகவும் இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து வழங்பியுள்ளதாகத் தெரியவருகிறது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க நிழல் அமைப்புக்கள் மற்றும் ஆதரவு சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சலாந்து ஆகியவற்றுக்கு கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள், புலி ஆதரவு சக்திகள் மற்றும் நிழல் அமைப்புக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், சுவிற்சலாந்து ஆகியன முடிவு கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற அமைப்பின் கோரிக்கை அடங்கிய அறிக்கை வருமாறு; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க நிழல் அமைப்புக்கள் மற்றும் ஆதரவு சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சலாந்து ஆகியவற்றுக்கு கோரிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டு உள்ள போதிலும் இந்த இயக்கத்தின் நிழல் அமைப்புக்கள் இன்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகவும் பலமான நிலையிலேயே செயல்பட்டு வருகின்றன. சுவிற்சலாந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த ஒரு நாடு அல்ல. இன்றும் இந்நாட்டில் புலி ஆதரவுச் செயல்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்கால சமாதானம், அமைதி, சக வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் எதிர்கால சமாதானம், அமைதி, சக வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் பேராபத்தானவையாக பயங்கரவாத அமைப்புக்களின் செயல்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் ஜனநாயகம், மனித உரிமை, மனிதாபிமானம் ஆகியவற்றின் பெயர்களால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிற்சலாந்து ஆகியவை பயங்கரவாத அமைப்புக்களின் செயல்பாடுகளை அனுமதித்து வந்திருப்பது துரதிஷ்டமான நிலைமையே. இலங்கையில் போர் உக்கிரம் அடைவதற்கும், பயங்கரவாத செயல்பாடுகள் தீவிரம் அடைவதற்கும், பயங்கரவாத அமைப்புக்கள் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வளர்வதற்கும் இந்நிலைமை ஊக்கியாக செயல்பட்டு வந்திருக்கின்றது. இன்று பயங்கரவாதம் இல்லாத நாடாக இலங்கை மலர்ந்து உள்ளது. ஆனால் இலங்கையின் எதிர் கால சமாதான முன்னெடுப்புக்கள், இனங்களுக்கு இடையிலான சக வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு தடைக் கற்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிற்சலாந்து ஆகியவற்றின் ஜனநாயகம், மனித உரிமை, மனிதாபிமானம் ஆகியவற்றின் காரணத்திலான கண்ணோட்டம் காணப்படுகின்றது. இலங்கையில் ஏற்படக் கூடிய நிரந்தர சமாதானம் மற்றும் இணக்கத் தீர்வு ஆகியவற்றுக்கு இந்நாடுகளின் மேற்சொன்ன கண்ணோட்டம் பாரிய தடை ஆகி விடும். எனவே இந்நாடுகள் புலிகள் இயக்கத்தின் நிழல் அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். - சமாதானத்தை விரும்பும் இலங்கையர்கள்

lundi 27 février 2012

அமொரிக்காவின் இந்த நடவடிக்கைளுக்கு இந்திய அரசின் ஆதரவும் ஆசிர்வாதம் தான் காரணம் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்களா

ஜெனிவாவில் மார்ச் 27ம் திகதி முதல்; ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் ஏப்பிரல் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஆபிரிக்காவுக்கு 13 இடங்களும் ஆசியாவுக்கு 13 இடங்களும் லத்தீன் அமெரிக்காவுக்கு 8 இடங்களும் கிழக்கு ஐரோப்பாவுக்கு 6 இடங்களும் மேற்கு ஐரோப்பாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் 7 இடங்களும் மனிதஉரிமைகள் பேரவையில் ஒதுக்கப்பட்டுள்ளன. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும் எதிர்பாக்கபடுகிறது குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு அமெரிக்கா என தெரியவருகிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும் அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவே கூறியுள்ளனர். இதில் உள்ள முக்கிய கேள்வி என்ன வென்றால் இந்தியாவின் செயற்பாடு எவ்வாறு இந்த மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர அமையபோகின்றது என்பதுதான் தமிழ் மக்கள் அணைவரும் இந்தியா ஒட்டுமொத்தமாக இலங்கைக்கு எதிராக செயற்பட்டு இலங்கை அரசையை பழிவாங்க வேண்டும் என எதிர்பாக்கின்றனர் ஆனால் அது சாத்தியமா அதற்க்காக புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அல்லது தமிழ் அமைப்புகள் ஊடகங்கள் அல்லது புத்திஜீவிகள் 2009ம் மே 19 பிறகு எந்தவிதமான நடவடிக்கைளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியை நாம் கேட்டு பார்க்கவேண்டும் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளமால் இந்தியாவின் உதவியை எவ்வாறு எதிர்பார்ப்பது என்ற கேள்வி எழாமால் இல்லை எது எவ்வாறு இருந்தாலும் ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த கையோடு, ஜெனிவாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சுவீடன் கொண்டு வந்த போது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவுகாக செயற்பட்டது என ஒரு குற்றசாட்டை எம்மவர்களால் முன்வைக்கபடுகிறது ஆனால் இது ஒரு இந்தியாவின் ராஜதந்திர நகர்வு என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் இந்தியா யுத்த முடிவடைந்த கையுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை முன்நோக்கி பல விடயங்களை மேற்கொண்டது அதில் அணைத்து தமிழர் தரப்பிணையும் ஒரு அணியின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கிய வேளை அதற்கக எதிராக ராஜபக்ச குடும்பம் கருணா பிள்ளையான்; மற்றும் கே.பி. டக்ளஸ் போன்றவர்களுக்கு போதிய அளவிற்க்கு நிதியினையும் ஊடாக வசதியினையும் ஆழனியையும் வழங்கி இந்தியாவிற்க்கு எதிரான கருத்துகளையும் இந்தியாவிற்க்கு எதிரான போரட்டத்தினையும் வெற்றிகர செய்வித்தனர் அதேவேளை புலபெயர்ந்த நாட்டில் சிதறிபோய்யுள்ள புலி ஆதரவு அமைப்புகளும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் அனுகுமுறைபற்றி சிந்திக்காமால் இந்தியாவிற்க்கு எதிரான கருத்துகளை விதைப்பதில் கவனத்தை செலுத்திய அதேவேளை இதற்கு ஆதரவாக இலங்கை அரசிடமிருந்து கே.பி ஊடாக நிதியினை பெற்ற தொலைகாட்சியினை பயன்படுத்தி கொண்டனர் இத் தொலைகாட்சி நிறுவனத்தினர் புலிகளின் காலத்தில் புலிகளிடமிருந்து பெரும் தொகைநிதியினை பெற்று சுயநிர்ணயம் தேசியம் தன்னாட்சி பேசியவர்கள் என்பது குறிப்பிடதக்கது இந்த நடவடிக்கையானது ராஜபக்ச குடும்பம்த்தின் திட்டமான தமிழர்களை இந்தியாவிடன் ஒன்று இணைக்க கூடாது என்பதுக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது இப்படியான ஓரு நிலையில்தான் இந்திய தமிழ் மக்களுக்கு சார்பாக ஜெனிவாவில் செயற்படவேண்டும் எனவும் எதிர்பாக்கபடுகிறது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளை சரிவரப் புரிந்து கொண்டால், இந்தியா இத்தகைய கட்டத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் அண்மைக்கால போக்கைப் பார்க்கின்ற எவருமே, இலங்கை விடயத்தில் அதன் நெகிழ்வுத்தன்மையை குறைத்து மதிப்பிடமாட்டார்கள். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அண்மையில் கொழும்பு வந்திருந்த போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறியிருந்தார். பல நாட்கள் கழித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தான் அப்படியான எந்த உத்தரவாதத்தையும் இந்தியாவுக்கு வழங்கவில்லை என்று குத்துக்கரணம் அடித்தார். எஸ்.எம்.கிருஸ்ணா உறுதிமொழி பற்றிக் கூறியதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவோ, இலங்கை அரசோ உடனடியாக அதுபற்றி எந்தக் கருத்தையும் கூறவில்லை. அதுபோலவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அப்படியான உத்தரவாதம் எதையும் கொடுக்கவில்லை என்று கூறியபோது இந்தியாவும் எந்தக் கருத்தையும் கூறவில்லை. பல நாட்கள் கழித்தாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தான் அப்படிக் கூறவில்லை என்று மறுத்தார். இந்தியாவின் இந்த மௌனம் ஏமாந்து போய் விட்டதை வெளிப்படுத்துகிறது என்றே பலரும் கூறுகின்றனர். ஆனால் அதற்கு மாறான இன்னொரு அர்த்தமும் உள்ளது. தாம் ஏமாந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அது. சீனா விடயத்தில் தாம் ஏமாந்து விடக் கூடாது என்று இந்தியா கருதுகிறது. ஆனால் அதை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சீனாவும், ரஸ்யாவும் சிரியா விடயத்தில் நடந்து கொண்ட முறை மேற்குலகை கடும் அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.மீண்டும் ஒரு முறை இந்த விவகாரத்தினால் குட்டுப்படுவதை மேற்குலகம் விரும்புமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்து விட்டால், சீனாவினது செல்வாக்கு அதிகரிக்கும். அது இலங்கை மீதான இந்தியாவின் பிடியை தளர்த்தி விடும். எனவே இந்த விடயத்தில் இந்தியா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தீர்மானம் ஒன்றுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்குப் பல முறை யோசித்தே முடிவு எடுக்கும். இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஒரு கருவியாகத் தான் அமெரிக்கா கருதுகிறது. அதாவது நல்லிணக்கம், அமைதி, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை அடைவதற்கான ஒரு கருவியாகவே அமெரிக்கா இதனைப் பார்க்கிறது எனவே மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அடுத்த நாளே ஸ்ரீலங்கா அரசையும் மஹிந்த ராஜபக்சவையும் குர்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடப் போவதில்லை. இத்தீர்மானம் நாட்டின் ஆட்சியாளரை சர்வதேச அரங்குகளில் வெட்கித் தலைகுனிய வைப்பதற்கான ஒரு கருவியாக அமையலாம். அதையும் விட உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற கடன் வழங்கும் அமைப்புக்களிலிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வது சிரமமான காரியமாக அமையலாம். தனிப்பட்ட நாடுகளும் கூட தமது பொருளாதார உதவிகளை நிறுத்திக் கொள்ளலாம். தன்னார்வ அமைப்புக்கள் ஸ்ரீலங்காவை பகிஸ்கரிக்குமாறு பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம். ஸ்ரீலங்காவிற்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டாம் எனவும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி பொருட்களை கடைகளில் வாங்க வேண்டாம் எனவும் அவை மக்களை கேட்டு பிரச்சாரம் செய்யலாம். மிக அண்மைக்காலம் வரை பர்மா மீது இத்தகைய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதிகாரத்தின் பெயரால் ஒரு உயிர் பறிக்கப்பட்டதற்கும் ஒரு நபர் காணாமல் போனதற்கும் காரணமாயமைந்தது எது அல்லது யார் என்ற வினாவிற்கு விடை சொல்ல வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. இறுதி யுத்ததின் முடிவில் தமது பிள்ளைகள் அல்லது உறவினர் இராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டதை நேரில் கண்டவர்கள் இன்றுவரை அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்ற கேள்விக்கு விடைதேடி காத்திருக்கிறார்கள். அதேபோல் ஒயாத அலைகளின் போது கைதிகளாகப் பிடிக்கபட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உண்டு. பிரிவும் உயிரிழப்பும் தருகின்ற துயரத்திலிருந்து மீண்டெழுந்து தமது வாழ்க்கையை முன்னோக்கி சீரமைத்துக் கொள்வதற்கான மனரீதியான மற்றும் பொருளியல்ரீதியான உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் முக்கியமான கடமை. அதற்கும் ஒருபடி மேலே சென்று இனங்களுக்கிடையேயான சுமுக உறவையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசின் மிக முக்கிய பொறுப்பு. நாட்டு மக்கள் அனைவரினதும் சுமுகமான எதிர்காலத்தை மனதில் கொண்டு ஐ. நா. தீர்மானம் தரக்கூடிய அழுத்தங்கள் எதிநோக்கப்பட வேண்டும். ஏற்கனவே கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்கள் இத்தகைய பெருந்துயர் கொண்ட பேரழிவு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும் சமூகங்களுக்கிடையேயான நட்பும் புரிந்துணர்வும் வளர்வதற்கான காரணியாகவும் அமைய வேண்டும். தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளைவிட மக்களின் எதிர்காலம் குறித்த அக்கறை முன்னிறுத்தப்பட வேண்டும். இன்றைய நிலையில் அமொரிக்காவின் இந்த நடவடிக்கைளுக்கு இந்திய அரசின் ஆதரவும் ஆசிர்வாதம் தான் காரணம் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்களா ? இனியாவாது தமிழர்கள் ஒன்றிணைந்து இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சi தீர்ப்பதற்க்கு ஒன்றுபடுவார்களா என்ற கேள்வி தான்

dimanche 26 février 2012

.ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/02/120226_suresh.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1 ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன். ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் செவ்வி "ஜெனீவா புறக்கணிப்பு ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு":சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தை த.தே.கூ புறக்கணிக்கும் என்பது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவென்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன். கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும் மாற்று மீடியா வடிவில் இயக்க தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்

30 வருடங்களாக புலிகள் செய்து வந்த படுகொலைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா சென்று பொறுப்பேற்க வேண்டும்

ஜெனீவாவில் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பெரும் ‘யுத்தம்’ செய்யப்போவதாக வரிந்து கட்டிக்கொண்டு நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இப்பொழுது அங்கு செல்வதில்லை என அறிவித்துள்ளது. இந்த திடீர் அந்தர் பல்டி ஏன் என பலரும் மண்டையைப் போட்டு குடைவது நிச்சயம்.

கூட்டமைப்பின் இந்தத் திடீர் முடிவு இலங்கைத் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றுதலால் அல்ல என்பது மட்டும் நிச்சயம். அண்மையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘கூட்டமைப்பினர் ஜெனீவா சென்று புலிகள் செய்த கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என கூட்டமைப்பு ஏற்றுப் பேசி வந்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்த கருத்துக்குப் பிறகுதான், தமிழ் கூட்டமைப்பினர் தமது வாலைச் சுருட்டிக்கொண்டு, மீண்டும் அடுப்புச் சாம்பலுக்குள் புகுந்து கொண்ட பூனைகளாக மாறியிருக்கின்றனர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையின் இறுதியுத்த நேர உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென நியமித்த தருஸ்மன் தலைமையிலான மூவர் கொண்ட குழு தயாரித்து கையளித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமின்றி, புலிகளுக்கு எதிராகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது.

ஆனால் இப்பொழுது ஜெனீவா கூட்டம் பற்றியும், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேசும் பலர், புலிகள் இழைத்த குற்றங்கள் பற்றி ஒரு சொல்கூடப் பேசுவதில்லை. இந்த யுத்தத்தின் ஒரு தரப்பாக புலிகள் தான் இருந்தார்கள் என்பதைக்கூட பலர் மறந்தது மாதிரி நடந்து கொள்கிறார்கள். உண்மையில் புலிகள் பொதுமக்களை தமக்கு மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்த காரணத்தால் தான், இறுதியுத்த நேரத்தில் இவ்வளவு தொகை உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதைப் பலர் சிந்திப்பது இல்லை. அதைவிட தமது கட்டளைக்குக் கீழ்படியாது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புத்தேடி வர முயன்ற ஏராளமான பொதுமக்களை புலிகள் சுட்டுப்படுகொலை செய்ததையும் மறந்தது போல் நடிக்கிறார்கள்.

அதுமாத்திரமின்றி, புலிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டு காலமாக ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வந்துள்ளது. அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாற்று இயக்க தலைவர்கள் - உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஜனாதிபதி, உயர் அரச அதிகாரிகள், கல்விமான்கள், மத குருக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் அடங்குவர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணில், அதுவும் தமிழகத்தில் வைத்தே புலிகள் படுகொலை செய்தனர். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சபாலிங்கத்தை புலம்பெயர் மண்ணான பிரான்சில் அவரது வீட்டில் மனைவியின் கண்ணெதிரிலேயே சுட்டுப் பொசுக்கினர்.

புலிகளின் இவ்வளவு மனித குல விரோதச் செயற்பாடுகளையும் மிதவாதத் தமிழ் தலைமை எனச் சொல்லிக் கொள்ளும் பிற்போக்குத் தமிழ் தலைமை வேடிக்கை பார்த்துக்கொண்டே காலத்தைக் கழித்தது. அத்துடன் நிறுத்திக் கொண்டது என்றாலும் பரவாயில்லை. ஆனால் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என இன்று தமிழினத்துக்காக ‘காவடியாடும்’ தமிழ் தேசியக் கூட்டமைப்புத் திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளது.

இறுதி யுத்த நேரத்தில் ஏராளமான தமிழ் மக்களை அரச படைகள் கொன்றதாக இன்று நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அந்த யுத்தத்தில் புலிகளும் தமது சொந்த மக்களையே சுட்டுப்படுகொலை செய்ததை மூடி மறைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. புலிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை தமது பாதுகாப்புக்காக ஒரு குறுகலான பிரதேசத்தில் தடுத்து வைத்திருப்பதால் பாரிய மனிதப் பேரழிவு ஏற்படும் என்பதைக் கூட்டமைப்பு நன்கு அறிந்திருந்தும், அந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை ஒருபோதும் கோரவில்லை. மாறாக புலிகளின் தலைமையை அழிவிலிருந்து பாதுகாக்கவே நாயாய் ஓடி அலைந்தது.

எனவே புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று அறிவித்ததின் காரணமாகவும், புலிகளின் மனித உரிமை விரோதச் செயற்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வந்ததிற்காகவும், இன்று உலகின் முன்னால் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான். ஆகையால் அவர்கள் நழுவல் போக்கைக் கடைப்பிடிக்காமல் ஜெனீவாவுக்குச் சென்று, புலிகள் 30 ஆண்டுகளாக செய்து வந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த விடயத்தில் போரின் ஒரு கட்சிக்காரரான இலங்கை அரசாங்கத்தை நெருக்கிப் பிடிக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள், போரின் மறுதரப்புக் கட்சியான புலிகள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் நெருக்கிப் பிடிக்க வேண்டும். இரு தரப்பும் தத்தமது நியாயங்களை ஜெனீவாவில் முன்வைப்பதற்கு ஒழுங்கு செய்தால்தான், அது நீதியான செயற்பாடாக இருக்கும்.

இந்த விடயத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணையமும், சர்வதேச சமூகமும், மனித உரிமைக் கோசம் போடும் அமைப்புகளும் எப்படி நடந்து கொள்ளப் போகின்றன என்பதிலேயே நீதியின் தீர்ப்பு அமையும்

சனிக்கிழமை வெளியிடப்பட்ட 80 பக்க அறிக்கையில், மே 2009 ல் யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன் நான்கு ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்

மே 2009 இல் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டு யுத்த காலப்பகுதியில், இறுதி நான்கு ஆண்டுகளில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பான புள்ளிவபரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிக்கையை சிறிலங்காவின் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

'முக்கிய சம்பவங்கள் தொடர்பான பதிவு -2011' [Enumeration of Vital Events-2011] எனப் பெயரிடப்பட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட 80 பக்க அறிக்கையில், மே 2009 ல் யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன் நான்கு ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 22,329 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இறுதி ஐந்து மாத கால யுத்தத்தில் 8,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது, EVE-2011 தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளை வடக்கு மாகாணத்தில் யூன் 10 தொடக்கம் ஆகஸ்ட் 15 வரை மேற்கொண்டது. வயதுபோனவர்கள் அல்லது நோயாளிகளின் இறப்பு, இயற்கை அழிவு, விபத்து போன்றவற்றால் ஏற்பட்ட இறப்பு, கொலை, தற்கொலை, யுத்த நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள், இறப்பிற்கான காரணம் அறியப்படாத சம்பவங்கள் என இந்த அறிக்கையில் இறப்புக்கள் பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நோயால் இறந்தமை, முதியவர்களின் இறப்பு, இயற்கை அழிவுகளின் போது உயிரிழந்தமை போன்றவை இயற்கை மரணத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து, கொலை, தற்கொலை, தீவிரவாத நடவடிக்கையால் கொல்லப்பட்டமை போன்றவற்றை 'ஏனைய இறப்புக்கள்' என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், 2009 ல் இறந்தவர்களில் 71 சதவீதமானவர்கள் அசாதாரண சூழ்நிலையின் போது தமது உயிர்களை இழந்துள்ளதாகவே அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 2009ம் ஆண்டிற்கு முற்பட்ட மற்றும் பிற்பட்ட காலப்பகுதியில் மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இயற்கை காரணங்களால் இறந்ததாகவே EVE -2011 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-2009 காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட பல்வேறு காரணங்களாலேயே 22,239 பேர் இறந்துள்ளனர். ஆனால் இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் அதாவது கிட்டத்தட்ட 11,172 பேர் வரை 2009ம் ஆண்டில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ல் 7934 பேர் 'ஏனைய காரணங்களால்' மரணித்துள்ளனர் எனவும், 2523 பேர் இயற்கை மரணத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட 6858 பேரில் 10 வயதுக்குக் குறைந்த 552 சிறார்களும் உள்ளடங்குகின்றனர். இதில் உள்ளடக்கப்படாத 2,635 பேர் காணாமற் போயுள்ளனர்.

தமிழ்ப் புலிகளின் நிழல் நிர்வாகத்தின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்திலேயே ஜனவரி – மே 2009 வரை அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் 2,614 பேரும், முல்லைத்தீவில் 1,576 பேரும், யாழ்ப்பாணத்தில் 1,273 பேரும், வவுனியாவில் 1,047 பேரும், மன்னாரில் 348 பேரும் இறந்துள்ளதாக குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ல் இடம்பெற்ற மரணங்களில் அதிகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே இடம்பெற்றுள்ளதாக இவ் அறிக்கை மூலம் அறியமுடிகிறது. ஆனால் இறந்தவர்களில் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை போன்றவற்றை இவ் அறிக்கை வரையறுத்துக் காட்டவில்லை.

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த 2009ம் ஆண் டின் முதல் ஐந்து மாதங்களிலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பில் சிறிலங்கா குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும், அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பால் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் இடையில் நீண்ட வேறுபாடு உள்ளது. அதாவது 2009 காலப்பகுதியில் 40,000 வரையானவர்கள் கொல்லப்பட்டதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 997,754 பேர் உள்ளதாகவும் இவர்களில் 934,392 பேர் சிறிலங்காத் தமிழர்கள் எனவும் EVE-2011 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 21,860 சிங்களவர்களும், 32,659 முஸ்லீம்களும் வாழ்வதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் ஐந்து மாவட்டங்களிலும் சிறிலங்காத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்களவர்களில் 75 சதவீதமானவர்கள் வவுனியா மாவட்டத்தில் வாழ்வதாகவும், முஸ்லீம்களில் பெருமளவானர்கள் மன்னார் மாவட்டத்தில் வாழ்வதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் இறுதியாக 1981 ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம், வடக்கு மாகாணத்தின் சனத்தொகை 1,109,404 ஆக இருந்தது. சிறிலங்காவில் 30 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தில் 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இனப்படுகொலைக்கு அங்கீகாரம் ஜெனீவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது

http://inioru.com/wp-content/uploads/2012/02/TNA.jpg ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையகத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கொழும்பில் தங்கியிருக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அமரிக்க மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இந்த முடிவிற்கு வருவதற்கான காரணங்கள் இலங்கை, இந்திய மற்றும் அமரிக்க அரசுகளின் அழுத்தங்களே காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
மனித உரிமை ஆணையகம் எந்த முடிவையும் எப்போதும் மேற்கொள்வதில்லை. அது கருத்துக்களை மட்டுமே வெளியிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையகம் மட்டுமே செயற்திட்டங்களை முன்வைக்க முடியும்.
இலங்கை அரசிற்கும் பேரினவாதத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தக் குறைந்தபட்ச அரச எதிர்ப்பு நிலையக் கூட முன்னெடுக்கத் தயாரற்ற நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பாரளு மன்ற சந்தர்ப்ப வாதிகளை நிராகரித்து மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்குவதும், புதிய அரசியல் தலைமையை உருவாக்குவதும் அவசியம் என்பதை நடைமுறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தியுள்ளது

samedi 25 février 2012

'விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை'

Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .
ஐநா மூத்த அதிகாரி விஜய் நம்பியார்
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் விஜய் நம்பியார் கூறியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்போர், விடுதலைப் புலிகள், மனித உரிமைபோரின் இறுதிக் கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன், சாமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைவது குறித்து தன் மூலமாக சர்வதேச சமூகத்திற்கு சில தகவல்களை அனுப்பப்பட்டதாக சிரியாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் மேரி கொல்வின் தெரிவித்திருந்தார்.

சரணடைபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் ஆனால் சரணடையச் சென்றோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது .

இந்த நிலைமையிலேயே, விடுதலைப் புலித் தலைவர்கள் சரணடைவதை மேற்பார்வை செய்ய தான் அனுமதிக்கப்படவில்லை என்று விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

ஐநா மன்றத்தில் தலைமைச் செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகராக (பர்மா விவகாரம்) உள்ள விஜய் நம்பியார், பர்மா நிலைமை தொடர்பில் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றி உங்களுக்கு என்ன விடயங்கள் தெரியும், அந்த நடவடிக்கைகளில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று விஜய் நம்பியாரிடம் கேள்வியொன்றைக் கேட்டார்.

இதன்போது, பர்மா சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கே பதிலளிக்க முடியும் என்று விஜய் நம்பியாருக்கு அருகிலிருந்த ஐநா தலைமைச் செயலரின் துணைப் பேச்சாளர் கூறியதை அடுத்து, குறித்த ஊடகவியலாளருக்குத் தேவையானால் இலங்கை விவகாரம் குறித்து பின்னர் தனிப்பட்ட ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என்று விஜய் நம்பியார் கூறினார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த விஜய் நம்பியார், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவர் சரணைடைவதற்கு தான் ஏற்பாடு செய்ய முயன்றதாகக் கூறினார்.

'உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது'

'விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது'
சிரியாவில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கொல்லப்பட்ட பிரி்ட்டிஷ் ஊடகவியலாளர் மேரி கொல்வின், தன்னுடன் தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இருவர் சரணடைவதற்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு கேட்டதாக விஜய் நம்பியார் கூறினார்.

இதன் பின்னர், தான் அமெரிக்க இராஜதந்திரி பிளேக்குடன் இரண்டு தடவைகள் தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் இருவரும் சரணடைவதை கண்காணிக்க செல்லத் திட்டமிட்டதாகவும், செஞ்சிலுவை சங்கத்தால் கடல்வழியாக செல்ல முடியாமல் இருந்ததாகவும் அரசாங்கம் தங்களுக்கு அங்கு செல்ல அனுமதியளிக்கவில்லை என்பதால் தம்மால் போகமுடியாமல் போனது என்றும் விஜய் நம்பியார் விளக்கமளித்துள்ளார்.

‘ நடு ராத்திரியில் மேரி எனக்கு அழைப்பு எடுத்தார். இரண்டு பேர், நான் அந்தப் பேர்களையும் மறந்துவிட்டேன்., ஒருவர் சமாதான அலுவலகத்தைச் சேர்ந்தவர், அவர்கள் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் வெளியில் வர ஒருவழியை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவாதம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மேரி கூறினார். சரி, நான் அதனைச் செய்கின்றேன் என்று கூறினேன். அது தொடர்பில் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன். அப்போது சரணடைபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது’ என்று அந்த ஊடகவியலாளரிடம் கூறினார் விஜய் நம்பியார்.

உங்களுக்கு உத்தவாதம் அளிக்கப்பட்டிருந்தால் ஏன் உங்களுக்கு சரணடையும் இடத்துக்குச் செல்ல அனுமதி தரப்படவில்லை? உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏன் நீங்கள் அதுபற்றி மௌனம் காத்தீர்கள்? என்று மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

‘அவர்கள் அவர்களின் ஆட்களாலேயே சுடப்பட்டிருக்க்க் கூடும். எந்த விதமான ஊகங்களுக்கும் செல்ல நான் தயாரி்ல்லை...’என்று பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார் போரின் இறுதித் தருணங்களில் இலங்கைக்குச் சென்றிருந்த ஐநா பிரதிநிதி விஜய் கே. நம்பியார்.
தொடர்புடைய விடயங்கள்
போர், விடுதலைப் புலிகள், மனித உரிமைபோர்
'ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ்க் கூட்டமைப்பு பங்கு கொள்ளாது' 17:25 'விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை' 17:04 'தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பியனுப்ப வேண்டாம்' 12:00 'போர்க்கால குற்றச்சாட்டுக்களை ஆராய இராணுவ மன்றம்'

vendredi 24 février 2012

கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்த

புலிகளுக்கு நிதி வசூலித்து கொடுத்த குற்றத்திற்காக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறு பேருக்கு சிறைத்தண்டனை

பிரான்ஸ் பாரிஸ் நகர மேன்முறையீட்டு நீதிமன்றம் புலிகளின் முன்னரங்க அமைப்பாக செயற்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இத் தீர்ப்பில், விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதிசேர்த்த குற்றத்திற்காக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறு பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு பிரெஞ்சு ஊடகங்களில் வெளியாகியிருந்தன. தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைளுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களிடம் பலவந்தமாக நிதி சேர்த்தார்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்திரனுக்கு ஆகக்கூடிய சிறைத்தண்டனையாக 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேத்தா என்று அழைக்கப்படும் அரவிந்தன் துரைசுவாமிக்கு 5 வருட சிறைத்தண்டனையில் 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யோகராசா சிவதர்சனுக்கு 3 வருட சிறைத்தண்டனையில் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்திரேசுப்பிள்ளை வின்சட், லோறன்ஸ் செல்வராசா அல்லது புலேந்திரன், எம்.ரவிமாணிக்கம் ஆகியோருக்கு 2வருட சிறைத்தண்டனையில் 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதிசேர்த்த குற்றத்திற்காக பிரான்சில் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தக் குற்றச்சாட்டின் பேரில் 22 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

இலங்கை அரச தகவல் : இறுதிப் போரில் 9000 பேர் பலி

இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது.

இவற்றில் 7000 இற்கும் அதிகமான மரணங்கள் நேரடியாக இராணுவ மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.

இந்த அளவுக்கு அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியத்தரும் முதலாவது அரசாங்க புள்ளிவிபரம் இதுவாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக பல வெளிநாட்டு விமர்சகர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த சில நாட்களில் அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வடக்கில் உள்ள மக்களை அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் செவ்வி கண்டு இந்த தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த மரணங்களின் புள்ளிவிபரம் மிகவும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவை.

அந்த அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் - அதாவது போரின் இறுதி நாட்களில்- 7400 பேர் ''பிற'' என்று கூறப்படும் காரணத்தினால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அங்கு அவர்களது இறப்புக்கான காரணம் கூறப்படவில்லை.

அதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள், இயற்கையாகவோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ அல்லது தனிப்பட்ட கொலை செய்தோ இறக்கவில்லை ஆகவே அவர்கள் மோதலினால் இறந்திருக்கலாம்.

இறுதிப் போரின் இரத்தக்களரி இடம்பெற்ற முல்லைத்தீவிலேயே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கிறார்கள்.

மேலும் 2009 ஆண்டு முழுவதிலுமாக 2600 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.

இந்த இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களா அல்லது விடுதலைப்புலிகளா அல்லது அவர்களது இறப்புக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முதலில் தாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று கூறிய இலங்கை அரசாங்கம், பின்னர் அண்மையில் ''சில பொதுமக்களை தமது தரப்பு கொன்றிருக்கலாம்'' என்று ஒப்புக்கொண்டதுடன் இது ஒத்துப் போகிறது.

ஐநா ஆரம்பத்தில் கணித்த எண்ணிக்கையுடன் இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை ஒத்துப்போகிறது. ஆனால் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட 40 000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற கூறப்பட்டதில் இருந்து இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

அதேவேளை பிறிதொரு நிகழ்வாக ஐநாவின் மூத்த அதிகாரியான லூயிஸ் ஃபிரச்செட் அவர்களால், இலங்கையின் இராஜதந்திரியான சவேந்திர சில்வா ஒரு ஐநா ஆலோசனைக்குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டமை குறித்து ஐநாவுக்கான இலங்கையின் குழு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஆசிய நாடுகளால் இந்தக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சவேந்திர சில்வாவை விலக்கி வைப்பதில் ஐநா உயர் அதிகாரி ''அராஜகமாக, சகிக்க முடியாத '' வகையில் நடந்துகொண்டிருப்பதாக அது கூறியுள்ளது.

சவேந்திர சில்வாவால் தலைமைதாங்கப்பட்ட இராணுவ பிரிவு, ஐநாவின் குழுவினால், போர் குற்றங்களுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது

jeudi 23 février 2012

அமெரிக்கா தீர்மானத்தை நிறைவேற்ற குறுக்குவழியில் சதி செய்கிறது - பீரிஸ் குற்றச்சாட்டு

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்கா குறுக்குவழியில் - வதந்திகளைப் பரப்பி உறுப்பு நாடுகளின் ஆதரவைப்பெற முனைவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

"சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக தீர்மானம் ஒன்றை வரைவதற்கு தம்முடன் சிறிலங்கா இணங்கிச் செயற்படுவதாக ஜெனிவாவிலுள்ள இராஜந்திர வட்டாரங்களில் அமெரிக்கா வதந்திகளைப் பரப்புகிறது.

மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் சிறிலங்காவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதைத் தடுக்கவே, அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இணைந்து வரைவதற்கு நாம் இணங்கியுள்ளதாக வதந்தி பரப்புவதன் மூலம், இந்தத் தீர்மானத்துக்கு சிறிலங்காவும் ஆதரவளிப்பதாக உறுப்பு நாடுகளை நம்பவைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

சிறிலங்காவின் ஒப்புதலுடன் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது என்று உறுப்புநாடுகள் நம்பினால், அவை இதனைப் பாரதூரமானதொன்றாக கருதமாட்டாது.

உறுப்பு நாடுகளை அமெரிக்கா தவறாக வழிநடத்த முனைகிறது. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் ஒரு சூழ்ச்சி இது. இந்த வதந்திகளை பலப்படுத்த நாம் அனுமதிக்கப் போவதில்லை.

இந்தத் தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் நாம் ஒருபோதும் இணங்கிச் செயற்படப் போவதில்லை.

சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இது குறித்து நாம் அறிவிப்போம்.“ என்றும் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே

உலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு....

போர்க்குற்ற விசாரணைகளுக்கு பயந்து - அல்லது சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து - அல்லது என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே சில உறுதிமொழிகளை இந்திய அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிடம் வழங்கியிருக்கிறார்.

"சரித்திரம் திரும்பும் ; சரித்திரம் திரும்புகிறது " என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிளிறுவதை கேட்டிருக்கிறேன். இதோ இலங்கையில் ஒரு சரித்திரம் திரும்புகிறது : ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம்!

'மாகாண சபை அதிகாரம்' என்கிற முதல் உரிமைப் படிக்கட்டில் ஏற்றி வைத்த இந்த ஒப்பந்தம் யார் யாராலோ அலைக்கழிக்கப்பட்டு - சிதறடிக்கப்பட்டு -பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த பிறகு - சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் எழுப்பப்படுகிறது : "ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின்படி....

" பழையதைக் கிண்டி அதில் அரசியல் லாபம் தேடுகிற அவசியம் இல்லாத எவரும் இந்தக் கட்டுரையில் - விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.

இன்று ஈழத் தமிழருக்கு வேண்டியதெல்லாம் கண்ணீரற்ற வாழ்க்கை... நிம்மதி...நெடுநாள் இழந்துவிட்ட உறக்கம்...ரத்தம் தோயாத பொழுதுகள்! இவை மட்டுமே! ஆம்! இவை மட்டுமே வேறெந்த பெரிய லட்சியத்தயும்விட முன் நிற்கும் முதல் தேவை! இலங்கை மண்ணில் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நம் தமிழர்களின் வாழ்க்கை கோரிக்கை!

மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்கிற துர்ப்பாக்கிய நிலைமைக்கு தமிழர் போராட்டம் பின்னுக்கு இழுக்கப்பட்ட போக்குக்கு இலங்கையில் இருந்தவர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. தமிழகதிற்கு இதில் மிகப் பெரிய பொறுப்பு - இழிவை தலை சுமக்க வேண்டிய பொறுப்பு உண்டு!

இலங்கையில் போராட்டக் களத்தில் இருந்தவர்களையும், போர்க்களத்தில் இருந்தவர்களையும் தவறாக வழி நடத்தி - அல்லது தவறுகளுக்கு உறுதுணையாக இருந்து ஈழப் போராட்டத்தை சிதைத்த பங்கு தமிழகத் 'தலைவர்'களுக்கு நிச்சயம் உண்டு !

கேவலம் - மிகக் கேவலம்! 'தலை' வெளியே தெரிவதற்காக ஈழத்தை தலையில் சுமந்தவர்கள் - 'நாற்காலி பசை'க்காக தமிழர்களை பகடைக் காயாக மாற்றியவர்கள் - 'தேர்தல் நேர சுயநலத் 'துக்காக தமிழ்க் குரல் எழுப்பியவர்கள் ...என்று பிரிந்து நிற்கிற இந்தத் தமிழக அரசியல்வாதிகள் சாதித்ததெல்லாம் தத்தமது பொழுதைப் போக்கியது மட்டுமே!

இழந்ததெல்லாம்... இழந்ததெல்லாம்...நீங்கள்தாம்...நீங்கள் மட்டும்தாம்...ஈழத் தமிழர்களே...நீங்கள் மட்டும்தாம்! அவர்களுக்கு எந்த இழப்புமில்லை. ஒரு மயிரிழைகூட இழப்பு இல்லை!

கணவனை இழந்தீர்கள் ஈழத் தாய்மார்களே...பெண்டு பிள்ளையரை இழந்தோம் ஈழத்து ஆண் மக்களே... தாய் தந்தையரை இழந்தோம் தமிழர்களே...பச்சிளம் பிஞ்சுகளின் சவத்தை அருகில் கிடத்தி உயிர் சீவித்திருந்தோமே தமிழர்களே...இக்கொடுமைகளில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இந்த தமிழக அரசியல்வாதிகளுக்கு இழப்பு உண்டா?

இல்லை.இல்லவே இல்லை. கிஞ்சிற்றும் இல்லை. ஒரு மயிரளவும் இல்லை.

ஆனால் நீங்கள்...? நீங்கள்...?நாடெங்கே? வீடெங்கே? காலில் நழுவிய பூமிஎங்கே? உறவுகள் எங்கே? குடும்பங்கள் எங்கே? செத்துப்போன நம் பிள்ளைகுட்டி பெண்டுகள் கணவன்மார்கள் எங்கே? எங்கே? தேடுங்கள்...தேடுங்கள்...நாலாபுறங்களிலும் நாற்திசைகளிலும் தேடுங்கள்...இழப்பின் வலியை எந்த ஈனப் பிறவிகளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்?

ஆனால் இன்னும் அவர்கள் உங்களை விட மாட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழனின் தீக்குளித்த பிணம் எந்தத் தெருவில் விழுகிறது என்று மலர் வளையங்களுடன் திரிந்து - புகைப்படக் கருவிகளின் முன் சோக முகம் காட்டி நிற்கிற இழிந்த அரசியல்வாதிகள் இன்னும் உங்களை விட மாட்டார்கள்.

இந்த 'பச்சை தமிழன்'கள், 'செந்தமிழன்'கள், 'புரட்சி புயல்'கள், புதுக் காதல் கொண்டுவிட்ட பொதுவுடைமை சிங்கங்கள்', 'பாட்டாளி சொந்தங்கள்', 'இனமானத்' தலைவர்கள், 'தமிழர் தலைவர்'கள் - இந்தத் தமிழகத்து அரசியல்வாதிகளிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். சிங்கள அரசை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

உங்கள் ரத்தம் இவர்களுக்கு பானம்! உங்கள் மரணம் இவர்களுக்கு அரசியல்! உங்கள் வாழ்க்கை இவர்களுக்கு பகடை! உங்கள் அரசியலோ இவர்களுக்குத் தேவையற்ற ஒன்று!

ஏதாவது நிகழாதா என்று குருதியின் மணம் இன்னும் காற்றில் வீசுகிற மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழனுக்கு தமிழச்சிக்கு தேவை வாழுகிற உரிமை! இப்போதைக்கு அதுவே முன்னுரிமை! அதற்குக்கூட விடமாட்டேன் என்று தமிழகத்தில் 'கொள்ளிபோடுகிற' இந்த அரசியல்வாதிகளை ஈழத் தமிழர்களே...புரிந்து கொள்ளுங்கள்! வெளிநாட்டில் வாழும் தமிழர்களே...இவர்களை கூட்டிவந்து கொட்டிக் கொடுப்பதை நிறுத்துங்கள்!

இவர்களுக்கு இங்கே அரசியல் கிடையாது. தனிநபர்த் தாக்குதல்கள் அன்றி வேறு அரசியலும் தெரியாது! குடும்பம் வளர்ப்பவன் - அவனோடு கோபித்துக் கொண்டு வந்தவன் - குறுக்கில் புகுந்து லாபம் சம்பாதிக்க நினைப்பவன் - இவர்களது பதவிப் போட்டியில் - ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் - இவர்களுக்கு இன்னமும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள்! கழுகுகளுக்கு இரையாக இடம்கொடாதீர்கள்!

உங்கள் புரட்சியை நீங்கள் தீர்மானியுங்கள்! உங்கள் உரிமையை நீங்களே வென்றேடுங்கள் ! உங்கள் வாழ்க்கை இலங்கையில் இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் உயிர் ஈழத்தில் இருக்கிறது! எவர் உதவியும் - எவன் உதவியும் தேவையில்லை உங்களுக்கு! குறிப்பாக, நரிகளின் நாட்டாமை நமக்குத் தேவையே இல்லை!

உங்கள் பிரதிநிதிகள் வாயிலாகவே உங்கள் போராட்டம் நடைபெறட்டும்! புரட்சியைக் கடன் வாங்குகிற நிலைமை நமக்கு இல்லை! இவர்கள் கற்ப்பிக்கிற போக்கும் நமக்கான அரசியலில்லை! நாம் நாமாயிருப்போம்! தொப்பூழ்க்கொடி சொந்தமென்று அணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு - தமிழ்நாட்டில் சுவரொட்டி அடித்து அரசியல் பிழைக்கிறவர்களின் சகவாசம் நமக்கு வேண்டாம்!

நம் வேலையை நாமே பார்க்கப் போகிறோம்! நம் கனவை நாமே அடையப் போகிறோம்! நன்மையுள்ளவன் என்றாலும் நல்ல ஆலோசனை மட்டுமே பெறுவோம்! நாமே போராடுவோம்! அதில் பிழையிருக்கிறதா தோழர்களே?

சென்னையிலிருந்து அழகிய மணவாளன்

பிரபாகரன் மரணத்தில் 75வீத பங்கு இந்தியாவுக்கு தான் இருக்கிறது பிள்ளையான்

2012, 08:02.57 AM. ]
யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் பங்கு தலைவர் பிரபாகரனின் மரணத்தில் அதிகம் இருக்கிறது, அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
இந்தியா பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததும், இந்தியா இராணுவத்துடன் மோதியதும். புலிகள் இயக்கம் இரண்டாக உடைந்ததும் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குக் காரணம்.

இந்திய இலங்கை ஒப்பந்த்தினை ஏற்றுக் கொண்டிருந்தால் சமஸ்டியைவிடவும் அதிகமான, எல்லோரும் கேட்கின்ற தமிழீழம் அளவிலான தீர்வு கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது.

அதனை தலைவர் பிரபாகரன் செய்யத் தவறிவிட்டார். ஒருகாலத்தில் நான் நேசித்த தலைவராக பிரபாகரன் இருந்தாலும் அவர் விட்ட பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்று சொல்வதில் நலன் சார்ந்த விடயங்களைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்காது விட்டமை ஒரு சமூகத்தின் நலன் சார்ந்த விடயமாகவே இருந்தது.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக்கட்சி செய்வது வெறும் கட்சி அரசியல்தான் அதில் தமிழ் மக்களின் நலன் சார்ந்து ஒன்றுமில்லை.

தமிழரசுக்கட்சி இப்போது பல முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. சிவில் சமூகம் என்கிறவர்களுக்கு ஒரு முகத்தினை காட்டுகிறார்கள்.

அதற்கு அவர்கள் தேர்தலில் குதித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் தான் நிதி கொடுக்கிறார்கள் அதற்காக அவர்களுக்கொரு முகம், அரசாங்கத்திற்கு ஒரு முகம் எனப் பல முகங்களை அவர்கள் காட்டுகிறார்கள்.

அந்தவகையில் பார்த்தால் தமிழரசுக்கட்சிக்கு ஒரு தெளிவான கொள்கை இல்லை.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது நடைபெற்றால் முஸ்லிம்களின் தனி அலகை எவ்வாறு பிரித்துக் கொடுப்பார்கள் அந்தப்பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பார்கள்.

அதனை விடவும் கிழக்கிலுள்ள சிங்களவர்களுக்குரிய இருப்பு எப்படியிருக்கும்?

பொறுப்புள்ள அரசியல் கட்சி ஒருவர் ஒரு கடிதம் எழுதினால் அதற்கு ஒரு பதிலையாவது அனுப்பியிருக்கும், நான் சம்பந்தன் ஐயாவுக்கு எழுதிய கடிதத்துக்கு தம்பி பிள்ளையான் கடிதம் கிடைத்தது.

எதிர்காலத்தில் இது குறித்து யோசிப்போம் என்றாவது ஒரு பதில் கடிதத்தினை எழுதியிருக்கலாம் அதனைக் கூட அவர்கள் செய்யவில்லை. இதிலிருந்து தமிழரசுக்கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியல்ல என்பது தெரிகிறது

mercredi 22 février 2012

நபிகள் நாயகம்: கட்டுரைப் போட்டியில் முதலிடத்தில் பௌத்த தேரர்

மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார். சமய கலாசார கல்விக்கான மன்றம் மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிங்கள மொழி பேசும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நடத்திய கட்டுரை போட்டியொன்றை நடத்தியது.

இப்போட்டியில் வண. கசிம தேரர் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

இதன் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சமய, கலாசார கல்விக்கான மன்றத்தின் தலைவர் எம்.எம்.ஏ. தஹ்லான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன், அஷ்ஷெய்க் உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இக்கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட வண. கசிம தேரர் உள்ளிட்ட நாடாளாவிய ரீதியிலான வெற்றியாளர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய வண. சுசிம தேரர்,

“ஒவ்வொரு மாணவனும் ஏனைய மதங்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பாடசாலை புத்தகங்களில் ஏனைய மதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

அப்போது தான் நாட்டில் நிரந்தர சமாதானம் உருவாக முடியும். இது காலம் கடத்தாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்றார்

மலையக தமிழர் தொடர்பில் மலையக சிவில்

வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் முஸ்லிம் சிவில் சமூகம் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக மலையக தமிழர் தொடர்பில் மலையக சிவில் சமூகம் என்ற அமைப்பை உருவாக்குவதில் தேர்தல் அரசியல் தொடர்புகள் அற்ற மலையக அறிவுஜீவிகளும், சமூக முன்னோடிகளும், ஊடகவியலாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

மலையக அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உரிய வழி காட்டல்களை, அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள் அல்லாதோரை உள்ளடக்கிய இத்தகைய சிவில் அமைப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் பேசும் வட-கிழக்கு, மலையக, முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் சிவில் சமூகம் என்ற அமைப்புகள் உருவாவது வரலாற்றின் கட்டாயமாகும். அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உரிய வழி காட்டல்களை இத்தகைய அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள் அல்லாதோரை உள்ளடக்கிய சிவில் அமைப்புகள் வழங்க வேண்டும்.

சமூக நோக்கில் செய்யப்பட வேண்டிய காரியங்கள் மத்தியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய காரியங்களை வரிசைப்படுத்துவதில், தேர்தல் அரசியல் காரணமாக அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் தவறு விடுகின்றன. இது முழு சமூகங்களையும் பாதிக்கின்றன.

அனைத்தையும் அரசியல்வாதிகள் மாத்திரம் செய்து முடித்துவிடுவார்கள் என்று சமூகத்தில் நிலவும் தவறான கருத்து மாற்றப்படவேண்டும். அதுபோல் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் நம்மால் மாத்திரமே தீர்மானிக்க முடியும் என்ற தவறான கருத்து அரசியல் தலைமைகளிடம் இருந்து அகற்றப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளின் தலைமை பாத்திரங்களை அங்கீகரிக்கும் அதேவேளையில் சமூகம் தொடர்பிலான சமகாலம் மற்றும் எதிர்காலம் பற்றிய பொதுவான கோட்பாடுகளை உருவாக்கி தருவது என்ற பாத்திரத்தை சிவில் சமூக அமைப்புகள் ஆற்ற வேண்டும். அடிப்படை கோட்பாடுகளை உருவாக்குவதில் இரு தரப்பினர் மத்தியில் கலதுரையாடல்கள் இடம்பெற வேண்டும். இந்த இணைத்த செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எந்த ஒரு தரப்பையும், சமூகம் நிராகரிக்க வேண்டும்.

இன்று மலையக தமிழ் சமூகம், சமகாலம் மற்றும் எதிர்காலம் பற்றிய வழிகாட்டல்களை தீர்மானிப்பதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. தனிநபர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் காரணமாக முழு மலையக சமூகமே திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகம் இன்று தென்னிலங்கை முழுக்க வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே மலையக சிந்தனையாளர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். பாரிய சவால்கள் நிறைந்த சூழலில் செயல்படும் வட-கிழக்கு சிவில் சமூக செயல்பாட்டாளர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். வட-கிழக்கு தமிழ் சிவில் சமூகம் என்ற அமைப்பும், இன்னமும் கட்டமைப்புரீதியாக உருவாக்கப்பட்டுள்ளதாக எனக்கு தெரியவில்லை.

அது எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என நினைக்கிறன். எனினும் தமிழ் சிவில் சமூக அமைப்பு, முஸ்லிம் மற்றும் மலையக சிவில் சமூக அமைப்புகளின் உருவாக்கம் தொடர்பிலான சிந்தனைக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது. மலையக சிவில் சமூக உருவாக்கத்திற்கு வட-கிழக்கின் தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என்பது திண்ணம்.

எதிர்காலத்தில் வட-கிழக்கு, மலையக, முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கு உரிய பொது அரசியல் கோட்பாடுகளை இந்த மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து உருவாக்கும் காலம் வரும்

சீனா, ரஸ்யா, கியூபா, உறுதியளித்துள்ளன

ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளில் ஐந்து நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதி
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 03:36.03 AM GMT ]
எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இதுவரை ஐந்து நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.சீனா, ரஸ்யா, கியூபா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளே இவ்வாறு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

26 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தயாராகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்குமாறு சில நாடுகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

mardi 21 février 2012

83 இனக் கலவரத்தை தூண்டிய கிரிமினல் பிக்கு பொலிஸ் ஆணைக் குழுவில்

பொலிஸ் ஆணைக் குழுவில்!


கிரிமினலும் சண்டியருமான பிக்கு ஒருவர் சுயாதீன பொலிஸ் ஆணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவரின் பெயர் எல்ல குணவன்ஸ.

இவர் ஒரு பேரினவாதி. பேரினவாதம் பேச தொடங்கினால் நிறுத்தவே மாட்டார்.

இவரைப் போன்ற பிக்குமார் அரசியல்வாதிகளுடன் ஒட்டி நின்று சுயநல தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இவருக்கு காலம் சென்ற அமைச்சர் காமினி திஸநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

அந்நாட்களில் பிக்குமாருக்கு குணவன்ஸ கராட்டி வகுப்புக்களை ஒழுங்கு பண்ணி நடத்துவித்து இருக்கின்றார். பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று இவர் ராஜபக்ஸ அரசுக்கு மிக நெருக்கமானவர். அரசில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்.

1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் முக்கிய பங்காற்றியவர் இப்பிக்கு என டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சிங்க ரணசிங்க 1988 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் எழுதி உள்ளார்.

இவரைப் போன்றவர்கள் பொலிஸ் ஆணைக் குழுவுக்கு நியமனம் பெற்று இருக்கின்றமை நாட்டில் நிரந்தர சமாதானம், சகவாழ்வு, இன ஐக்கியம் ஏற்படும் என்கிற நம்பிக்கையை அறவே இல்லாமல் செய்கின்றன.

பூனையில்லாத வீட்டில் எலிகள் சட்டி பானை உருட்டும் கதையாக கூட்டமைப்பு மாறிவிட்டது

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது நான்கு கட்சிகளைக் கொண்டு புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு பினாமி அமைப்பாகும். புலிகள் இருக்கும்வரை தமிழ் செல்வனும், அன்ரன் பாலசிங்கமும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கிளிநொச்சிக்கு அழைத்து பாடங்கள் நடாத்தி, உத்தரவுகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது அழிவுக்கப் பின்னர், பூனையில்லாத வீட்டில் எலிகள் சட்டி பானை உருட்டும் கதையாக கூட்டமைப்பு மாறிவிட்டது.

கடந்த வருடம் தமிழரசுக்கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடும் நடந்தது. ரெலோ இயக்கத்தின் மாநாடும் வவுனியாவில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் மாநாடோ அல்லது அதற்கு வெளியில் செயல்படுகிற ஏனைய தமிழ் கட்சிகளின் மாநாடோ இதுவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை. சில தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களது வாழ்நாளில் மாநாடு என்ற ஒரு ‘சாமான்’ நடைபெற்றதே கிடையாது.

சில தமிழ் கட்சிகள் நடாத்திய மாநாடுகள் பற்றியும் பிரமித்துக் கதைப்பதற்கு எதுவும் இல்லை. தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை செல்வநாயகம், அமிர்தலிங்கம் இருந்த காலங்களில் கூட திருமலை, கல்முனை, உடுவில், ஆவரங்கால், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மாநாடு என்ற பெயரில் சில கதம்பக் களியாட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. அதற்கு அப்பால் அவற்றை வேறு பெயர் சொல்லி அழைப்பதற்கு அவை லாயக்கற்றவை.

தென்னிலங்கையைப் பொறுத்தவரை, அதிதீவிர முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி முதல் தீவிர இடதுசாரிக் கட்சிகள் வரை ஒழுங்காக மாநாடுகள் நடாத்தாத கட்சிகள் இல்லை எனலாம். இந்த விடயத்தில் உரிமையும் ஜனநாயகமும் பேசும் தமிழ் கட்சிகளை விட, தென்னிலங்கைக் கட்சிகள் பலபடி மேலே உள்ளன.

அதிலும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை உலகம் முழுவதுமே அவர்களுக்கு என்று ஒரு பொது நடைமுறை உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை ‘காங்கிரஸ்’ எனச் சொல்லப்படும் மாநாடுகள்தான் கட்சியின் சகல விடயங்களையும் தீர்மானிக்கின்றன. மாநாடுகளில் தெரிவு செய்யப்படும் மத்திய குழு சர்வ வல்லமை பொருந்தியது. அதுதான் எல்லா முக்கிய விடயங்களையும் தீர்மானிக்கிறது. கட்சி ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தாலும், ஆட்சித் தலைவர் அல்லது பாராளுமன்றக் குழுத் தலைவரை விட கட்சியின் பொதுச் செயலாளரே மேலானவரும் அதிகாரம் வாய்ந்தவருமாக இருப்பார். பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகளில், கட்சிப் பொதுச் செயலாளர் அரச அல்லது பாராளுமன்றப் பதவிகள் எதனையும் ஏற்பதில்லை.

உதாரணமாக இந்தியாவில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் எடுத்துக் கொண்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் காரத்தோ அல்லது இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதனோ கட்சிக்கு அப்பாற்பட்ட பதவிகள் எதனையும் ஏற்பதில்லை. இந்தக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டசபை உறுப்பினர்கள் தமது சம்பளப் பணத்தைக்கூட கட்சியிடமே கொடுத்துவிட்டு, கட்சி மாதாமாதம் தரும் படியை (அலவன்ஸ்) மட்டும் தமது செலவுக்குப் பெற்றுக் கொள்கிறார்கள்!

இந்த நடைமுறையை எமது பாராளுமன்ற உறுப்பினர்களின், அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடைமுறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? எமது நாட்டில் பெரும் பணம் முதலீடு செய்து பாராளுமன்ற உறுப்பினராக வருவதே, கொழுத்த சம்பளங்களையயும், இதர சலுகைகள் வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதற்குத்தானே? இங்கே மக்கள் சேவை என்பது தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற உபயோகிக்கும் வார்த்தை மட்டும்தான்.

தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை கட்சித் தலைமைக்கு எந்த மதிப்பும் கிடையாது. உள்கட்சி ஜனநாயகமும் கிடையாது. பாராளுமன்றக் குழுத் தலைவரே கட்சிக்காரர்களைவிட உயர்ந்தவர். அவர் வைத்ததே சட்டம். சில வேளைகளில் அவரே ஏககாலத்தில் கட்சித் தலைவராகவும், பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் இருப்பார். இரா.சம்பந்தன் இதற்கொரு உதாரணம். அவர் மட்டுமல்ல தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை புலிப் பினாமிக் கட்சிகளுக்கும் சரி, எதிர்ப்புக் கட்சிகளுக்கும் சரி இது பொருந்தும். இதில் கொள்கை வேறுபாட்டைவிட, தமிழனின் தனித்துவம் தான் பொதுவான குணாம்சமாக இருக்கிறது.

இந்த விடயத்தில் வலதுசாரிக் கட்சியான ஐ.தே.க கூட தேவலை எனலாம். அந்தக் கட்சியில், கட்சித் தலைவரைக் கட்டுப்படுத்தும் ஓரளவு அதிகாரம் கட்சிச் செயற்குழுவுக்கு உண்டு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது நான்கு கட்சிகளைக் கொண்டு புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு பினாமி அமைப்பாகும். புலிகள் இருக்கும்வரை தமிழ் செல்வனும், அன்ரன் பாலசிங்கமும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கிளிநொச்சிக்கு அழைத்து பாடங்கள் நடாத்தி, உத்தரவுகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது அழிவுக்கப் பின்னர், பூனையில்லாத வீட்டில் எலிகள் சட்டி பானை உருட்டும் கதையாக கூட்டமைப்பு மாறிவிட்டது.

இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பெரிய கட்சியான தமிழரசுக்கட்சி தன்னைப் பலப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு ‘காலம்’ வந்துவிட்டதால், அடுத்த தலைவர் யார் என்ற குடுமிச் சண்டை அங்கு ஆரம்பமாகியுள்ளது. இதில் முன்னணியில் இருப்பவர்கள் மாவை சேனாதிராஜாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற அரசியலுக்குப் புதியவரானாலும், ‘சப்றா’ நிதி நிறுவன (மோசடி?) அனுபவமும், ‘உதயன்’ பத்திரிகை நிறுவன பலமும், பலமான நிதி ஆதரங்களும் உள்ள கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கூட்டமைப்புத் தலைமைப் பதவியை நோக்கி மெல்ல மெல்லக் காய்களை நகர்த்தி வருகிறார் எனச் சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கூட்டமைப்பை அதிகாரபூர்வமாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற பங்காளிக் கட்சிகளின் (இதில் முனைந்து நிற்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்) தொடர் வலியுறுத்தலை புறந்தள்ளிவிட்டு, தமிழரசுக்கட்சி தன்னைப் பலப்படுத்துவதில் முனைந்து நிற்கிறது.

சரவணபவனின் மைத்துனரும், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வேட்பாளர் நியமனத்தை எதிர்பார்த்து அதை மைத்துனர் சரவணபவன் சாதுரியமாகத் தட்டிப் பறித்துவிட, அந்தக் கோபம் காரணமாக அவரை விட்டுப் பிரிந்து சென்றவருமான, சு.வித்தியாதரனை தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளராக்கியதின் மூலம், சரவணபவனின் காய்நகர்தல்களுக்குத் தடைபோட மாவை சேனாதிராஜா முயன்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அத்துடன் வித்தியாதரனை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த முதலமைச்சர் பதவியில் சரவணபவனுக்கும் ஒரு கண் உண்டு.

தமிழரசுக்கட்சியின் இந்தக் கொழும்புக் கிளை விவகாரம், இன்னொரு பக்கத்தில் மனோ கணேசனை உசுப்பேத்தி விட்டுள்ளது. ஐ.தே.கவின் மடியில் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு, கொழும்பில் வாழ்கின்ற இந்திய வம்சாவழித் தமிழர்களினதும், யாழ்ப்பாணத் தமிழர்களினதும் வாக்குகளைப் பெற்று, ‘சர்க்கஸ்’ அரசியல் செய்துவரும் மனோ கணேசனுக்கு, தமிழரசுக்கட்சி கொழும்பில் கிளை திறந்த விவகாரம் ஆத்திரத்தைக் கிளறிவிட்டுள்ளது. ‘கொழும்பில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் எனக்கு சீதனமாக வழங்கப்பட்டவர்கள். அப்படியிருக்க இன்னொரு மாப்பிள்ளையாக எப்படி அங்கு தமிழரசுக்கட்சியை கொண்டு வந்து நிறுத்த முடியும்?’ என மனோ கணேசன் காட்டமாக உறுமுகிறார். அது மாத்திரமின்றி, ‘நீங்கள் இங்கே வந்தால், நான் அங்கு வந்து காட்டுகிறேன் பார்’ என யாழ்ப்பாணத்துக்கும் ஒரு ‘விசிட்’ அடித்திருக்கிறார். வன்னி மற்றும் கிழக்கிற்கும் செல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்.

தமிழ் கட்சிகள் தேசியமும் சுய நிர்ணயமும் பேசிக் கொண்டு உண்மையில் நடாத்தும் கூத்துக்கள் இவைதாம். ‘குட்டக்குட்ட குனிபவனும் மடையன். குனியக்குனிய குட்டுபவனும் மடையன்’ என்றொரு வழக்கு உண்டு. ஆனால் இங்கே குட்டிக்கொண்டிருக்கும் தமிழ் கட்சிகள் மடையர்கள் அல்ல. தொடர்ந்து எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் குனிந்து கொணடிருக்கம் தமிழ் பொதுமக்களே மடையர்கள்

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 பிப்ரவரி, 2012 - 14:09 ஜிஎம்டி

Facebook
Twitter
பகிர்க
நண்பருக்கு அனுப்ப
பக்கத்தை அச்சிடுக
.




முதல்வர் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்த நாள் பரிசு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ உச்சநீதிமன்றத்தில் செய்த மனுவை ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பொறுப்பு வகித்த போது – 1992 ஆம் ஆண்டில் - அவரது பிறந்த நாள் பரிசாக 2 கோடிரூபாய் அளவுக்கு வந்த காசோலைகளை ஜெயலலிதா தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதாகவும் இதற்காக முறையாக அவர் கணக்கு காட்டவில்லை என்றும் ஜெயலலிதா மீது சி பி ஐ வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை தாக்கல் செய்ய சிபிஐ பெரும் காலதாமதம் செய்ததாகவும், இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் எனவே வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி கோரி ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அந்த மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் வழக்கை 30-9-2011 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தற்பதோது சி பி ஐ உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

விக்கிலீக்ஸ்

(கொழும்பில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பொது ஏஎவ்பீ எடுத்த படம்)

காவல்துறைத் திணைக்களத்தின் திட்டத்திற்கு அமையவே தமிழர்கள்கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.



தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் திட்டத்தை இராணுவம்முன்வைக்கவில்லை என முன்னாள் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.



அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத்திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



எவ்வாறெனினும், காவல்துறையினரின் இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அனுமதி வழங்கியதாக பிரசத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.



2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களுக்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.



கொழும்பில் நிரந்தரமாக வதியாத தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும்திட்டத்தை காவல்துறையினர் முன்வைத்திருந்தனர்.



இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால்இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.



2007ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



முதலில் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்ட போதிலும் வார இறுதியில்மீளவும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக பிரசாத் சமரசிங்கதெரிவித்துள்ளார்.



கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் ஓமந்தை சோதனைச் சாவடிவழியாக பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் முயற்சி செய்ததாகஉறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிட்டதாக ரொபர்ட் ஓ பிளக் தமது குறிப்பில் மேலும்தெரிவித்துள்ளார்

lundi 20 février 2012

உரிமைஉரிமை மீறல்கள் மீறல்கள்உரிமை மீறல்கள்

c

அமைச்சர் பீரிஸ் இன்று காலை ஜெனீவா பயணம்

Share
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பங்கேற்பதற்காக, இன்று காலை 2.55 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவா பயணமானார் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். எமிரேட்ஸ் 349 எனும் விமானத்தில் இவர் பயணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் அமர்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனம்

இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கருணா அம்மான் கலாசார நிலையத்தில் நடைபெற்ற பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டிப்பளை- கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்தாஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பட்டிப்பளை பிரதேச சபைத்தவிசாளர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் நிறைவில் பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினையும் பார்வையிட்டனர். கடந்த காலத்தில் சட்டவிரோத மதுபான விற்பனைகள் மற்றும் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெற்று வந்தன. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதிய மதுபான சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்களிடமிருந்து முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தினை புனித பிரதேசமாக அறிவிப்பதாகவும் புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அறிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். கடந்த கால யுத்தங்களின் போது மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் தற்போது மீள் எழுச்சி பெற்றுவருகின்றமைள குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி சிறந்தத் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பார் – பிள்ளையான்

February 20,2012
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகச் சிறந்த தீர்வுத் திட்டத்தைமுன்வைப்பார் என கிழக்கு மகாhண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும்பிள்ளையான் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளை நிர்வாகம் செய்யத் தேவையான சகல அதிகாரங்களும் 13ம்திருத்தச் சட்ட மூலத்தில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட மூலத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அதிகாரங்கள் அமுல்படுத்பத்பட வேண்டியது முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட தேவையான அதிகாரங்கள் ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்றன எனவும், புதிதாக அதிகாரங்களை கோர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து ஒன்றுபடும் நேரம் வந்துவிட்டது; நான் கட்டிய வீட்டுக்குள் வர வெட்கம் எதற்கு? வவுனியா கருத்தரங்கில் ஆனந்தசங்கரி

February 20,2012
காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான் கட்டிய வீடு. எனது வீட்டுக்குள் வர நான் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உரிமையுடன் கூறினார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி. நேற்று முன்தினம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஆனந்தசங்கரி இப்படிக் கூறினார். வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளும் ஒன்றாக கலந்துகொண்டன. இந்த நிகழ்வில் மேற்படி கட்சிகளின் தலைவர்களான சம்பந்தன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோரும் உரையாற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சரவணபவன், சுமந்திரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அங்கு தொடர்ந்து உரையாற்றி ஆனந்தசங்கரி மேலும் கூறியதாவது: நாம் பிரிந்து நின்று எதனையும் சாதித்துவிடப் போவதில்லை. பட்டம் பதவிகள் தேவையில்லை. நமது தேவை தமிழன் தமிழனாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும். நமது பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். நமக்காக, நமது விடிவுக்காக சேவையாற்றி தலைவர்கள் உயிர் நீத்த தியாகிகள் ஆகியோரின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் சங்கரி

பிரித்தானிய கலைஞர்களின் தமிழ் இசைக் காணொளி

dimanche 19 février 2012

வேலையில்லாப் பிரச்சினைகள் ஒரு சமூகவியல் பார்வை

இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வேலையில்லாப் பிரச்சினை ஒரு மூல காரணம் எனலாம். அதாவது வேலையில்லாப் பிரச்சினை என்பது ஒரு நாட்டின் மொத்த ஊழியப்படையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு முயற்சியும் தகுதியும் ஆர்வமும் கொண்டிருந்த போதிலும் தகுந்த வேலை வாய்ப்பினை பெற முடியாதிருக்கும் மக்களின் பங்கு அதிகரிப்பதை குறிக்கும். இங்கு ஊழியப்படை எனப்படுவது சனத்தொகையில் 15 - 64 வயதுக்கு இடைப்பட்டவர்களில் அங்கவீனர்கள், நிரந்தர நோயாளிகள், வேலை செய்ய விரும்பாதவர்கள் முதலானவர்களைக் கழித்துப் பெறப்படும் தொகையாகும்.

இந்த வேலையில்லாப் பிரச்சினை இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒரு பொதுப்பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனால், பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, கலாசார சீர்கேடுகள் நிகழ்வதும் விருத்தியின் உச்சத்தில் தற்கொலை செயல் அதிகரிப்பதும் நாடு அபிவிருத்தியடைய முடியாத நிலையில் பின்னடைவுக்கு உள்ளாவதும் கண்கூடாகும்.

வேலையில்லாப் பிரச்சினை என்ற கருத்துகைக்கு உள்ளே கீழ் உழைப்பு, பருவகால வேலையின்மை, மறைமுக வேலையின்மை என்பனவும் அடங்குகின்றது. கீழ் உழைப்பு என்பது ஒருவரின் கல்வி தராதரத்திற்கு உரிய வேலை கிடைக்காது தன் தரத்திற்கு குறைவான வேலை செய்வதாகும். உதாரணத்திற்கு பட்டதாரி ஒருவர் கூலித் தொழில் செய்தல். பருவகால வேலையின்மை என்பது குறித்த காலத்தில் மட்டும் வேலை வாய்ப்பு கிடைக்க, ஏனைய காலங்களில் தொழிலின்றி இருப்பதாகும். மறைமுக வேலையின்மை என்பது ஒரு பணிக்காக அல்லது தொழிலுக்காக அமர்த்தப்பட்ட போதிலும் கடமை அல்லது அதிகாரம் அற்றவராக இருத்தல். இவ்வாறான தொழில் பிரச்சினைகளால் ஒருவர் சமூக, பொருளாதார, உளவியல் ரீதியில் பல தாக்கங்களை பெறுவர். இதனால் ஒருவர் சமுதாய ரீதியாகவும் தன்னிலிருந்தும் அந்நியமயமாக வாய்ப்புண்டு.

எந்தவொரு பொருளாதாரத்தினதும் இறுதி நோக்கம் நிறை தொழில் மட்டம் அல்லது முழு வேலைவாய்ப்பு என்பதாகவே இருக்கிறது. ஆனாலும், அடம்சிமித் முதலானோரின் கருத்துப்படி எந்தவொரு நாட்டிலும் நிறை தொழில் மட்டம் காணப்படுவதில்லை. வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் உலகளாவிய ஒன்றாகவே காணப்படுகிறது. ஆயினும் இலங்கை முதலான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இது ஒரு பாரிய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் பாதிப்புகள் எல்லை கடந்தனவாக காணப்படுகின்றன. அதாவது கல்விமான்கள் வெளியேறுகின்ற நிலையும் காணப்படுகின்றது.

இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினை வளர்ந்து கொண்டு செல்லும் சிக்கலாகவே இருக்கிறது.

இளவயதினர் மற்றும் பெண்களுக்கிடையேயான தொழில் வாய்ப்பின்மை வீதம் சார்பு ரீதியில் உயர்ந்து காணப்படுகின்றது. எனினும், குறிப்பாக 15 - 19 வருடங்களைக் கொண்ட வயதுத் தொகுதிகளிடையேயான இளைஞர்களின் தொழில் வாய்ப்பின்மை குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்திருந்துள்ளது.

காலாண்டு தொழிற் படை அளவீட்டை மதிப்பீடுகளின்படி இளவயதுத் தொகுதியிலான தொழில் வாய்ப்பின்மை வீதம் 2005ல் 33.2 சதவீதத்திலிருந்து 2006ல் 23.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் 20-29 வயதுத் தொகுதியினரிடையேயான தொழில் வாய்ப்பின்மை வீதம் தொடர்ந்து மாறாதிருந்தது. மேலும் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் மற்றும் உயர் தகைமைகளை கொண்டோரின் தொழில் வாய்ப்பின்மை வீதங்கள் முறையே 10.6 சதவீதம் மற்றும் 12.2 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதம் மற்றும் 11.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தன. எனினும், இம்மதிப்பீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2006ன் காலாண்டு தொழிற்படை அளவீடு நடத்தப்படாததால் இரண்டு ஆண்டுகளுக்கும் இம்மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை. இந்த ஆய்வினூடாக பார்க்கும் போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் வழங்கிய வீதத்தில் பாரியளவு வித்தியாசம் (குறைவு) காணப்படவில்லை என்பது புலனாகின்றது.

வேலை வாய்ப்பின்மை காரணமாக பெண்கள் மத்திய கிழக்கு நாடு போன்ற வெளிநாட்டு பிரயாணங்கள் மூலம் வேலை தேடுகின்றனர். இதனால் குடும்ப கலாசார சீர் கேடுகள் ஏற்படுவதுடன் பாதகமான பல நோய்களுக்குள்ளாகின்ற நிலையும் ஏற்படுகின்றது. 2004ம் ஆண்டுகளிற்குப் பின்னர் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டமைக்கு காரணம் சுனாமியைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வந்த தனியார் நிறுவனங்களின் வேலைத் திட்டங்களைக் கூறலாம். இன்றைய காலகட்டங்களில் பாதுகாப்பின்மை காரணமாகவும் வேலைத் திட்டங்கள் முடிவடைந்த நிலையினாலும் தமது சொந்த நாடுகளுக்கு போகின்ற நிலையைக் காண முடிகின்றது. எனவே, 2007ம் ஆண்டில் வேலையற்றோர் வீதம் அதிகரிக்கலாம்.

இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினைக்குப் பிரதான காரணமாக இருப்பது, நாட்டில் யுத்தத்திற்காக பெருமளவு செல்வம் வீணழிக்கப்பட்டதாகும். இச்செல்வம் தொழில் பேட்டைகளை உருவாக்கப்படுமாயின் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடிவதுடன், நாடும் அபிவிருத்தி கண்டிக்கும். தொழில் அடிப்படையிலான கல்வி வாய்ப்பின்மை, சுயதொழில் முயற்சிகளில் ஆர்வம் காட்டாமை முதலான காரணங்கள் வேலையில்லாப் பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணங்களாகும்.

பல்கலைக்கழகங்கள் தொழில் தேர்ச்சி இல்லாத பட்டாதரிகளை உருவாக்குவதால் தனியார் நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. பின் வந்த தனியார் நிறுவனங்கள் பலவும் சில வேலை வாய்ப்பினை வழங்கியது உண்மை. ஆனால், யுத்தம் காரணமாக தம் சொந்த நாடுகளுக்கு திரும்பிய வண்ணமேயுள்ளனர். உயர் கல்வி கற்ற நிலையிலும் தொழில்வாய்ப்பு கிடைக்காமல் அல்லது கீழ் உழைப்பு வேலைகளில் விரக்தியடைந்த நிலையில் இளைஞர்களும் யுவதிகளும் காணப்படுகின்றனர். இதனால் அவர்களின் உழைப்பு பயன்படுத்தப்படாதிருப்பதுடன் மனிதவளமும் சீரழிக்கப்படுகின்றது.

இவ்வாறு இளைஞர்கள் தொழில் வாய்ப்பின்றி காணப்படுதல் சமூக, அரசியல் விரோதமான நிலை வளர்வதற்கு ஊக்கமளிப்பதுடன் போதை வஸ்துப் பாவனை, கடத்தல், கொலை, கொள்ளை முதலான நடவடிக்கைகளையும் செய்யத் தூண்டுகின்றன. எனவே, வேலையில்லாப் பிரச்சினையை உடன் தீர்க்க வேண்டிய சமூகப் பொறுப்பு நன்நோக்குள்ள சகலருக்கும் உரியதாகும்.

இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினையை பின்வரும் மூன்று வழி முறைகளினூடாக தீர்க்க முயற்சிக்கலாம். அவையாவன; சுயதொழில் வாய்ப்பு, தொழில்நுட்ப பயிற்சிக் கல்விகளை வழங்குதல் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வேலை வாய்ப்புகள் வழங்குதல், தேசிய ரீதியாக பிரதேசத்துக்குப் பிரதேசம் காணப்படும் வளங்களை மதிப்பீடு செய்து அவற்றக்கு ஏற்றதாக சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் போன்றன மூலம் தீர்க்கலாம். மேலும் மானியம் வழங்குதல், வங்கிக்கடன், உரிய சந்தை வாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலமும் சுயதொழில் வெற்றியைக் காணலாம்.

புதிய சுயதொழிலாயின் நவீனரகமான உத்திகள் பயிற்சிகளை வழங்குதல் என்பனவும் அவசியமாகும். சுனாமியின் பின்னர் தொழில்வாய்ப்பு பரவலாக்கப்பட்டாலும் அது அதிகமானோரை சென்றடையவில்லை என்பதே உண்மை. கல்வி வெறும் சான்றிதழ்களை வழங்கும் விடயமாக அமைதல் கூடாது. தொழில்நுட்பப் பயிற்சிக்குப் பின்னர் அதனை பயன்படுத்தி தொழில் புரியக் கூடிய சந்தர்ப்பங்களுக்கு வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.

அடுத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பற்றி கருதினால் இங்கு புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்படுவதுடன் தொழிலாளர் தேவைப்படும் வகையிலான விரிவாக்கமும் செயற்படுத்தல் அவசியமாகும். புதிய செயற்திட்டங்களை உருவாக்குதல், ஓய்வு பெறுவோரை ஊக்குவித்தல், வினைத்திறன் மிக்க இளம் வேலையாட்களை சேர்த்தல், சேவைக்குரிய நேரத்தை விரிவாக்கம் செய்து மாற்றொழுங்கு அடிப்படையில் அநேகமானோரை வேலைக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். வேலையில்லாப் பிரச்சினை உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய ஒரு சமூகப் பிரச்சினையாகும்.

இளைஞர் வளம் விரக்தி நிலைக்கு உள்ளாக்கப்படுவதுடன் பல அரசியல் சமூகச் சீரழிவுகளுக்கும் இது அடிகோலும் என்பது திண்ணமாகும். இளைஞர்கள் நிலை கொள்ளல் இன்றி திரிவதற்கும், அதிருப்தி மனோ நிலையில் அழுத்தத்துடன் வாழ்வதற்கும் முக்கியமான காரணியாக வேலையில்லாப் பிரச்சினை இனங்காணப்பட்டுள்ளது.

அரசியல் கல்வி, தொழில் நிலையங்கள், முதலானவற்றில் ஏற்படுத்தப்படும் பாரிய சீர்திருத்தமே தொழிலின்மையை நீக்க உதவக் கூடியது. எனவே, பல்வேறு வேலைத் திட்டங்கள் வழங்க அரசு, தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம் வந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற மனநிலையில் பலர் உள்ளனர். ஆகவே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் சுய தொழில் உற்பத்தியை அதிகரிக்கவும் உச்ச வளத்தினைப் பயன்படுத்தவும் நாட்டினை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் வேலையில்லாப் பிரச்சினை தீர்வுக்கு உள்ளாக்கப்படுவது முக்கியமாகும்.

மலையகம் பற்றிய இங்கிருந்து திரைப்படத்தை முடிப்பதற்கு உதவிதேவை


எனது வேண்டுகோள். ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம். பப்ளிசிடி குடுக்கவும்!!!!

D/2/3/3 Torrington Flats, Stage 3
Longden Place
Colombo 07
01-12-2011


மலையகம் பற்றிய இங்கிருந்து திரைப்படத்தை முடிப்பதற்கு உங்களது உதவியை நாடுகின்றேன்!!!!

ஒரு உயிரோட்டமுள்ள தேயிலை எஸ்டேட்டில், ஒரு வாய் பேசாத பெண்ணும், பட்டினி மத்தியில் தன் குடும்பத்தை காப்பாற்ற முயலும் தாயும், கொழும்பில் இருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளரும் அங்கு காணப்படும் சமூக பிரச்சனைகளுக்குள் காந்தம் போல இழுக்கப்படுகிறார்கள். 2000 ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பிந்துநுவேவவ கலவரம் இதன் பின்னணியாக விளங்குகிறது. ‘இங்கிருந்து’ திரைப்படம் மலையக மக்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் சித்தரிக்கும் ஒரு கதையாகும்.. மலையக மக்களின் குடும்ப வாழ்க்கையையும், தோட்டத்தொழிலின் சவால்களையும், போராட்டங்களையும், அத்துடன் அரசு, கம்பனி, சமூகம் போன்ற அமைப்புகளுக்கூடாக எழும் வன்முறைகளையும், சித்தரிக்கின்றது.

இப் படம் நவீன டிஜிடல் தொழில்நுட்பங்களை கையாண்டு எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் முதல் கட்ட வேலை நீலன் திருச்செல்வம் ட்ரஸ்ட் மற்றும் வேறு நிறுவனங்களின் அணுசரணையுடன் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டது. அமெரிக்க நாட்டின் கம்பனி குளோபல் பிலிம் இனிசியேட்டீவ் (Global Film Initiative) ஒரு விருது ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தமது டிஸ்டிரிபியூசன் (distribution) வட்டத்துக்கு படத்தை தருமாறும் கோரியுள்ளார்கள்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், ஹட்டன் பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளை மையமாக வைத்து எனது படவேலையை போன வருடத்திலிருந்து ஆரம்பித்தேன். அங்குள்ள மக்களுக்கு நடிப்புக் கலையிலும், திரைப்படம் சம்பந்தமான வேறு தொழில் நுட்பங்களிலும் பயிற்சியை அளித்தேன். எஸ்டேடட்டுகளில் படம் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்கள் சம்மதம் அளிக்காத நேரத்தில், மக்களின் ஒத்துழைப்புடன் கொரில்லா பாணியில் படப்பிடிப்பை மேற்கொள்ள நேரிட்டது. என்னை சூழ இருந்த மலையக மக்களின் உழைப்பினாலும், அவர்கள் எனக்கு கொடுத்த தைரியத்தினாலும்தான் இப் படப்பிடிப்பை நிறைவேற்ற முடிந்தது.

படவேலையில் எனக்கு ரூபா 3.5 மில்லியன் செலவாகியது. படத்தை பூர்த்தி செய்யவதற்கு இன்னும் ரூபா 1. 5 மில்லியன் தேவையாகவிருக்கிறது. இத் தொகையை, பல்வேறு மூலங்களில் இருந்தும் பெறுவதற்கு நான் முயற்சிக்கிறேன். இம் முயற்சிக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நேரடியாக நன்கொடை அளிக்க விரும்பினால். கீழே தந்க விளிம்புகள் பெர்ஃபோர்மிங் ஆர்ட்ஸ் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Villimbuhal Performing Arts
Bank of Ceylon, Thimbirigasyaya
Account No: 0070810393
SWIFT CODE: BCEYLKLX

அல்லது, இதனைப் பற்றி என்னைத் கீழே தந்த மின்னஞ்சல் விலாசத்தில், தொலைபேசியில் தொடர்பு கொள்க.
அதோடு ஃபேஸ்புக் பக்கம் Ingirunthu Sumathy I (இங்கிருந்து சுமதி) பார்க்கவும்.

என்னைப்பற்றி…..
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணி புரிகின்றேன். நான் நாடகத்துறையில் கடந்த 25 வருடங்களாக ஈடுபட்டுவந்துள்ளேன். விருதுபெற்ற இலக்கியங்களை, நாடகங்களை, திரைப்படங்களை ஆக்கியுள்ளேன். படைத்துள்ளேன். அத்துடன் ‘ஒரு பாதையைத் தேடி’ என்ற இனப்பிரச்சினை பற்றிய விவரணப்படத்தின் பிரதியாளராயுள்ளேன். இப்படங்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்திய நாட்டு சாகித்திய மன்றம் பிரேம்சண்ட் கலை விருதை (Premchand Sahithya Academy Award, India) எனக்கு வழங்கியுள்ளது.

பல வருடங்களாக நான் மலையக மக்களுடன் பல்வேறு வகைகளில் வேலை செய்திருக்கின்றேன். நாடக பயிற்சிப் பட்டறைகளையும், பல்வித கலந்துரையாடல்களையும், ஆராய்ச்சிகளையும் நடாத்தியுள்ளேன். 2000 ஆண்டு, ஒக்டோபர் மாதம், மலையகப் பிரதேசமான பிந்துநுவேவவில் நடைபெற்ற மலையக மக்களுக்கு எதிரான கலவரத்தைப் பற்றிய ஆராய்ச்சி விவரணப்படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். அத்துடன், இனப்பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை என்பன சம்பந்தமாக பல்வேறுபட்ட பட்டறைகளையும் மலையக மக்களுடன் சேர்ந்து நடாத்தினேன்.

நன்றி,

இப்படிக்கு

சுமதி சிவமோகன்
Villimbuhal performing arts
villimbuhal@gmail.com
0094-71-8016081

Why this Kolavery by Akkini

மன்னார் இராணுவ முகாமுக்கு பெண் அமைப்புக்கள் எதிர


இராணுமுகாமுக்கு பெண்கள் அமைப்புக்கள் எதிர்ப்பு

இராணுமுகாமுக்கு பெண்கள் அமைப்புக்கள் எதிர்ப்புமன்னார் புறநகர்ப்புறத்தில் எழுத்தூர் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இங்குள்ள பல மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கையெழுத்திட்டு எழுத்து மூலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.

குடியேற்றக் கிராமமாகிய ஜீவன்புரம் உட்பட ஒன்பது மீள்குடியேற்ற கிராமங்களுக்கு நடுவே தரவன்கோட்டைக்குச் செல்லும் வீதியில் இந்த இராணுவ முகாமை அமைப்பதற்குரிய காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அத்துடன் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகுந்த இந்தப் பகுதி மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு ஐநாவின் அபிவிருத்தி நிறுவனம் (யுஎன்டிபி) அமைத்துக் கொடுத்துள்ள குளத்திற்கு அருகில் இந்த முகாம் வரவிருப்பது இப்பகுதி மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

பெண்களைத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களும் வளர்ந்த பெண்பிள்ளைகளை அதிகமாகக் கொண்ட குடும்பங்களும் இங்கு பெருமளவில் வசிப்பதாகவும், இதனால், இங்கு புதிதாக இராணுவத்தினர் நிலைகொள்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் உருவாகக் கூடும் என்று, இந்தப் பெண்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

குளத்தில் குளிப்பது, துவைப்பது, கழிப்பறை வசதிகள் இல்லாமையினால் அருகில் உள்ள காட்டுப்புறத்திற்கு இயற்கைக் கடன்களைக் கழிப்பது, போன்ற விடயங்களில் தடங்கல்களும், பிரச்சினைகளும் எழக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இராணுவ முகாம் அமையவுள்ள வீதியொன்றே இந்தப் பகுதி மக்களின் பொது போக்குவரத்திற்கு உரியதாக இருப்பதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் வளர்ந்த பெண்பிள்ளைகள் போன்றோரின் பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படும் என்பதால், இங்கு இராணுவ முகாம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு என தமிழ்ப் பிரதேசம் எங்கும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதி காணிகளில் இராணுவத்தினர் முகாம்கள் அமைப்பதை ஒரு திட்டமாகவே அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.