lundi 20 février 2012

ஜனாதிபதி சிறந்தத் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பார் – பிள்ளையான்

February 20,2012
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகச் சிறந்த தீர்வுத் திட்டத்தைமுன்வைப்பார் என கிழக்கு மகாhண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும்பிள்ளையான் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளை நிர்வாகம் செய்யத் தேவையான சகல அதிகாரங்களும் 13ம்திருத்தச் சட்ட மூலத்தில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட மூலத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அதிகாரங்கள் அமுல்படுத்பத்பட வேண்டியது முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட தேவையான அதிகாரங்கள் ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்றன எனவும், புதிதாக அதிகாரங்களை கோர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

1 commentaire: