dimanche 30 novembre 2014

மத மூடர்கள் விழாவில் 5 ஆயிரம் எருமை மாடுகள் பலி

நேபாள நாட்டில் பாரா மாவட்டம், பரியார்புர் கிராமத்தில் காதிமய் என்ற  மத அம்மன் கோவில் உள்ளது. இந்த மத கோவில் விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் நேபாள பக்த மூடர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் பறவைகளை பலி கொடுப்பது வழக்கம்.

அதன்படி கடந்த 2 நாட்களாக அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலி கொடுக்கப்பட்டன. அதோடு ஆயிரக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன. இந்த பலிக்கு இந்திய பகுதியில் இருந்தும் எருமைகள், ஆடுகள் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தடை விதித்தது. இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தான் உலகிலேயே மிகப்பெரிய பலி கொடுக்கும் விழா என்று கருதப்படுகிறது. விழா அமைப்பாளர்கள் இது பாரம்பரியமாகவும், முன்னோர்கள் வழக்கப்படியும் நடைபெறுகிறது. இந்த பலி அம்மனை சாந்தப்படுத்துவதாக நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிருகவதை தடுப்பு சங்கத்தினர் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விழாவுக்கு பீகாரில் இருந்து சென்ற ஒரு பெண் நெரிசலில் சிக்கியும், ஒரு வயது குழந்தை ஒன்று குளிர் தாங்காமலும் இறந்தனர்.

18 வருட வழக்கு இரு சோடிகளும் பாமரரை பாப்பனமும் சேர்ந்து பழிவாங்கிவிட்டது

வருமான வரி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவை வருமான வரித் துறை ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமரச மனுவை ஏற்றுக்கொண்டு, வரி செலுத்தாத காலத்துக்கு அபராதத் தொகை செலுத்துமாறு வருமான வரி துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த விவரம்: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும் வருமான வரித் துறை 1996, 1997-ஆம் ஆண்டுகளில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எழும்பூர் சென்னை பெருநகரக் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வழக்கில் சமரசம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். பின்னர், அந்த மனுவை ஏற்றுக்கொண்டு வரி செலுத்தாத காலத்துக்கு அபராதத் தொகை செலுத்துமாறு வருமான வரித் துறை உத்தரவிட்டது. மேலும், சமரச மனுவை ஏற்றுக்கொண்டது குறித்து எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....18 வருட வழக்கு பாமரரை  பாப்பனம் பழிவாங்கிவிட்டது 

பத்து மாதங்களில் மட்டும் 18,735 பேர் தண்டவாளத்தில் மரணம் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன

ரயில் விபத்துக்காளால் நாளொன்றுக்கு 60 பேர் சாவதாக இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இதில் மிகக் குறைந்த மரணங்களே, நேரடி ரயில் விபத்துக்கள் மூலமாக ஏற்படுகின்றன. பெரும்பாலான மரணங்கள் ரயில் பாதைகளை கடப்போர் ரயிலில் அடிபடுவதால் ஏற்படுகிறது.
மும்பையில், புறநகர் போக்குவரத்து ரயில் தண்டவாளங்களில் அடிபட்டு ஆண்டுதோரும் 6 ஆயிரம் பேர் சாகின்றனர். புறநகர் ரயில்களை பயன்படுத்துவோர், நடை மேம்பாலங்களை பயன்படுத்துவதுமாறு அறிவுறுத்தப்பட்டும் ஏராளமானோர் ரயில் தண்டவாளத்தை கடப்பதால் பல மரணங்கள் நிகழ்வதாக அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நெரிசலான ரயில்களில் இருந்து கீழே விழுவதால் ஆண்டுக்கு ஆயிரம்பேர்
வரை உயிரிழப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரயில் பாதுகாப்புக் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் பலர் ஒடும் ரயில் முன் பாய்கின்றனர்.
ஆட்களால் இயக்கப்படாத ரயில் கடவைகளின் எண்ணிக்கை 11,563 இருக்கிறது. இந்தப் பகுதிகளில் வேகமாக சாலையில் வரும் வாகனங்கள் ரயிலில் மோதுவதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க ரயில்வே கடவைகள் உள்ள பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
ரயில் பாதுகாப்பை மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தப்பட்டும், மரணங்களின் எண்ணிக்கை அதிகமாவது தொடர்கிறது. 2011 ஆம் ஆண்டு ரயில்கள் சம்மந்தப்பட்ட விபத்தில் 14,973 பேர் இறந்தனர். இந்த எண்ணிக்கை இல் 16.336 ஆக உயர்ந்தது 2012. கடந்த ஆண்டு இது 19.997 ஆக இருந்தது.
உலகிலேயே சாலை மரணங்களில் அதிகம் பேர் இறக்கும் நாடாகவும் இந்தியா இருக்கிறது.

ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி? கலையகம்

"ஒரு தேசிய இனம் தேசியத்தை உருவாக்குவதில்லை. மாறாக, ஒரு தேசியமே தேசிய இனத்தை உருவாக்குகின்றது." - சரித்திரவியலாளர் Eric Hobsbawm

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் வரை, "தேசிய இனம்" என்றால் என்னவென்று எவருக்கும் தெரியாத காலம் ஒன்றிருந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், இனம், தேசிய இனம் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை தான். முந்திய காலங்களில் மக்கள் தாம் சார்ந்த மதத்துடன், இனக்குழு, சாதி, பிரதேசம், குடும்பம் இவற்றுடன் சேர்த்து பார்க்கப்பட்டனர். அவற்றையே தமது அடையாளமாக காட்டிக் கொண்டனர். உலகில் எந்த மூலையிலும், "தேசிய இனம்" என்ற ஒரு பிரிவு இருக்கவில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், "சிங்களவர்களும், தமிழர்களும் தனிதனி தேசிய இனங்கள்." என்று எவராவது கூறினால், எல்லோரும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். புராதன காலத்தில் பௌத்த, இந்து மதங்கள் மட்டுமே பிரதேசம் கடந்து, சாதிப் பாகுபாட்டைக் கடந்து மக்களை ஒன்றிணைத்தன.

"தேசியம்" என்றால் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுப்பது கடினம். அதன் அர்த்தம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டு வந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூறப்பட்ட தேசியம், பிரான்சின் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரஜைகளையும் குறித்தது. பிற்காலத்தில் "தேசியம்", "இனம்" இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டது. ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை தேசிய இனம் என்றார்கள். மேற்கொண்டு அந்த அர்த்தத்திலேயே தேசியத்தை ஆராய வேண்டியிருக்கின்றது. ஐரோப்பாவில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ம் நூற்றாண்டு முழுவதும், இன்று நாம் காணும் அடிப்படையைக் கொண்ட நவீன தேசங்கள் உருவாகின. தொழிற்புரட்சி, பொருளாதார வளர்ச்சி என்பன, தேச பரிபாலனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு, மக்களை ஆள்வது முன்னர் எப்போதும் இல்லாதவாறு கடினமாக இருந்தது. முன்பு மதமும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், இந்திய உபகண்டத்தில் சாதியமைப்பும் மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைத்திருந்தது. அத்தகைய சமூக அமைப்பு முதலாளித்துவ பொருளாதாரம் வளருவதற்கு தடைக்கல்லாக இருந்தது. மேலும் பிரெஞ்சுபுரட்சியின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கம், தாராளவாத சித்தாந்தமே சிறந்தது என்று நம்பினார்கள்.

மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு, மேலிருந்து அவர்களை ஆளுவதற்கு தேசியவாதம் சிறந்த தத்துவமாகப் பட்டது. தேச எல்லைக்குள் பொதுவான மொழி ஒன்று உருவாக்கப்பட்டது.பெரும்பான்மையான தேசிய அரசுகளில் ஆளும் வர்க்கம் எந்தப் பிரதேசத்தை சேர்ந்ததோ, அந்தப் பிரதேச மொழி பொது மொழியாகியது. ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வை தோற்றுவிக்க பொது மொழி பயன்பட்டது. மேலும் பொதுவான பண்பாடு, வரலாறு என்பன உருவாக்கப்பட்டன. அதற்கு முன்னர், ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென தனியான கலாச்சாரத்தை, வரலாற்றைக் கொண்டிருந்தனர். அவை சில நேரம் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கலாம், அல்லது ஒரே மாதிரியாகவும் இருக்கலாம். தேசிய அரசு அவற்றை மேவிகொண்டு ஆதிக்க கலாச்சாரம் ஒன்றை தோற்றுவித்தது. தேசிய அரசு தோன்றின காலத்தில் இருந்து ஒரே மாதிரியானதாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

தேசியவாதம் எங்கே, எப்படித் தோன்றியது? பிரிட்டனும், பிரான்சும் நூறு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டிருந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று யுத்தம் செய்வது சர்வசாதாரணம். பிரிட்டனின் அரச பரம்பரையும், பிரெஞ்சு அரச பரம்பரையும் தமக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளத்தான் போரில் ஈடுபட்டார்கள். ஆனால் நூறாண்டு காலப் போர் நீடிப்பதற்கு ஏதாவதொரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அது "நாட்டுப்பற்று" என்ற வடிவம் எடுத்தது. நூறாண்டு காலப் போரின் முடிவில் பிரிட்டிஷ், பிரெஞ்சு "நாட்டுப் பற்றாளர்கள்" உருவாகியிருந்தனர். கிறிஸ்தவ நாடுகளில் தந்தை வழிக் கலாச்சாரம் வேரூன்றியிருந்தது. (கிறிஸ்தவ மதத்தில் கடவுள் ஒரு ஆணாக கருதப்படுகிறார்.) அதனால் ஒரு தேசிய அரசு "தந்தையர் நாடு" என்று அழைக்கப்பட்டது. தாய்வழிக் கலாச்சாரம் கொண்ட கீழைத்தேய நாடுகளில் அது "தாய் நாடு" என்று மொழிபெயர்க்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் "வெகுஜன தேசியவாதம்" தோன்றியது. அதாவது பொதுவான மொழி, கலாச்சாரம் என்பன மக்கள் மயப்பட்டன. அதன் அடிப்படையில், "தேசிய உணர்வு", "இனம்" என்பன மையப்படுத்தப் பட்டன. "இனம்" என்ற ஒன்று புதிதாக தோன்றிய பின்னர், ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், மற்ற இனத்தை சேர்ந்தவர்களை அன்னியர்களாகப் பார்த்தனர். அன்னியப்பட்ட இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையும், சந்தேகமும் தோன்றியது. ஒரு இனத்தின் அவலத்திற்கு, மற்ற இனம் மீது பழி போடப்பட்டது. பழிச் சொல்லுக்கு ஆளாகும் இனம் ஒரே நாட்டை சேர்ந்த சிறுபான்மையினமாக இருக்கலாம். அல்லது வேறொரு தேசத்தை சேர்ந்த இனமாக இருக்கலாம். ஒரே தேசத்திற்குள், உழைக்கும் வர்க்கம் முதலாளிகளுடன் சமரசத்தை பேண வேண்டும். (தேசிய ஒற்றுமைக்கு மிக அவசியம்) அதனால் பொருளாதார பிரச்சினைகளுக்கும் மற்ற இனத்தின் மீது பழி போடப்பட்டது. உதாரணத்திற்கு, ஜெர்மனியில் 20 ம் நூற்றாண்டு வரையில் அத்தகைய அந்நியர்களை வெறுக்கும் தேசியவாதம் நிலவியது. அதன் விளைவுகளும் உலகறிந்தவை தான்.

(தொடரும்) 

samedi 29 novembre 2014

இலங்கைக்கு புகை மூட்ட‌ மத தலைவர் வருகை


மத பாப்பராசர்  பிரான்ஸிஸ் இலங்கை பயணம் குறித்து; மத பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் 12 மறை மாவட்டங்களின் மத ஆயர்களும் எதிர்வரும் 1ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் ஒன்று கூடி ஆராயவுள்ளனர் என்றும் அதன் பின்னரே மத பாப்பரசரின் வருகையை உறுதிப்படுத்த முடியும் என்றும் மத பேராயர் இல்லம் கூறியதாக  கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டார்.ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மத பாப்பரசர் இலங்கைக்கு செல்வதை வர்த்திக்கான் மத நிர்வாகம் விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டிய மத பேராயர் இல்லம் அது தொடர்பாக கலந்துரையாடி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கோரியதாகவும் தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள மாநாட்டில் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளதாகவும் மத பேராயர் இல்ல தகவல்களை மேற்கோள்காட்டி செய்தியாளர் தெரிவித்தார்.இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கில் உள்ள நான்கு தமிழ் மத ஆயர்களும் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு சென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.அதேவேளை வடக்கு கிழக்கில் குறிப்பாக வடபகுதியில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையிடுவது மற்றும் இராணுவ அடக்குமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை நான்கு தமிழ் மத ஆயர்களும் மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ;                                                       .இந்து இஸ்லாம் பவுத்தம் கிருஸ்தவம்.அனைத்திலும் மனதலவில் விழ‌க்கம் இல்லாமல் உறுப்பினர்கள் ஆக்கப்பட அனைத்து அப்பவி மக்களும் மதங்களின் கைகலில்  விழாமல் பாதுகாக்குமா  இலங்கையின்னுள் அனைவருக்கும் பசியை போக்கும் உளகமகா சட்டம்  ...

வடஇந்தியப் பள்ளிகளில் தமிழ் அறிமுகம் 2015 இந்தியப்பள்ளிகளிள் அனைத்திலும் வள்ளுவன் பிறந்தநாள் நாடத்தப்படும்


உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவரும், டெல்லி மேல்-சபை பா.ஜனதா எம்.பி.யுமான தருண் விஜய் தமிழின் மேன்மை குறித்தும், வடஇந்தியப் பள்ளிகளில் தமிழை அறிமுகம் செய்வது பற்றியும் தொடர்ந்து வடமாநிலங்களில் பேசி வருகிறார். அண்மையில் இதற்காக தருண் விஜய்யை தமிழ்நாட்டில் சில தமிழ் அமைப்புகள் சென்னைக்கு வரவழைத்து பெரிய அளவில் பாராட்டு விழாவும் நடத்தின. 

இந்த நிலையில், நேற்று டெல்லி மேல்-சபையில் தருண் விஜய் பேசும்போது கூறியதாவது:- 

மொழிகள் எப்போதும் இந்திய மக்களின் மனங்களை இணைக்கும் பாலமாக செயல்படவேண்டும். பேதங்களை வளர்க்கும் அரசியலாக மாறக்கூடாது. வடக்கில் உள்ளவர்கள் தென்னிந்திய மொழிகளின் சிறப்பை உணர்ந்து அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். தமிழ் இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். உலக அளவில் தன்னுடைய தடங்களைப் பதித்த மொழி தமிழாகும். யுனெஸ்கோ நிறுவனத்தின் நினைவுப் பதிவேட்டில் இந்தியாவின் முதன்மையான மொழியாக தமிழ் மொழி பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் சிறப்பை இந்தியா முழுமைக்கும் உணர்ந்து கொண்டாடவேண்டும். 

வரும் ஆண்டு(2015) முதல் திருவள்ளுவரின் பிறந்த நாளை வடஇந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் திருவள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புகளை வடஇந்தியாவின் பள்ளிக்குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையிலும் மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இப்படி கோரிக்கை வைத்துவிட்டு தன்னுடைய பேச்சை திருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற குறளுடன் முடித்தார், அவர். அவருடைய கோரிக்கையை பாராட்டும் விதமாக மேல்-சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருசேரக் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். 

ஏ.நவநீதிகிருஷ்ணன், எஸ்.முத்துக்கருப்பன் போன்ற அ.தி.மு.க. எம்.பி.க்களும் கனிமொழி, திருச்சி சிவா ஆகிய தி.மு.க. எம்.பி.க்களும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பவன் வர்மா, சமாஜ்வாடி தலைவர் ராம்கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகமது ஹசன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் ஆகிய எம்.பி.க்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பி ஆதரவு அளித்தனர். 

தருண் விஜய் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்வதாக மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். அடுத்த ஆண்டு(2015) முதல் இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்றும் இதற்கான அரசு ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

vendredi 28 novembre 2014

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்கிறார்'

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.இதனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தை  திங்கட்கிழமை (24) மாலை  திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நூறு நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கமுடியாது. ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையப்போவதில்லை. தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது எட்டாக்கனியாகும்.  நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச்செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் அவசியமாகும். அதை எதிரணியால் செய்யமுடியாது.சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இவற்றை இல்லாமல் செய்யாமல், நிறைவேற்று அதிகாரத்தை நூறு நாட்களில் இல்லாமல் செய்யமுடியாது. தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை, சிங்களத் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாகும்' எனவும் கூறினார்.  இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பி.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

jeudi 27 novembre 2014

இது ஒரு ஆரம்பம்! முடிவல்ல. மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்

கடற்புலி - நிரூபன் (PK, Canon-23 heavy weapon) ஆகிய சீழ்வடியும் சாந்த குமார்:- தொகுப்பு - நடராஜா குருபரன்:-
2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்
படுக்கையில் - நிரூபன்
விடுதலைக்காக புறப்பட்டு மரணித்த, வீர காவியமாக மாறிய அனைத்து போராளிகளுக்கும், போராட்டத்தில் கொல்லப்பட்ட எம் மக்கள் அனைவருக்கும், சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.... உங்கள் தியாகங்கள் என்றோ ஒரு நாள் போலிகளை  கூட்டெரிக்கும்..... 

இந்தப் பதிவு புனைவு அல்ல – போலி அல்ல – பாட  போதனை அல்ல -– தமிழருக்கு ஒன்றுமே இல்லாத தெற்கின் அரசியல் மாற்றமும் அல்ல -  வியாபாரமும் அல்ல - உண்மையின் தரிசனம்..... ஓரு சிலர் கேட்ட எம்மவர் வரத்தின் தரிசனம்....

ஆம்... எம் நேர்மையின் மீது, நாம் கடந்து வந்த பாதையின் மீது – நாம் நேசிக்கும் எம் ஊடக செயற்பாட்டின் மீது எம் தார்மீக உணர்வின் மீது – எமது இணையத்தின் மீது – ஆசிரியர் பீடத்தின் மீது எம் வானொலி மீது -  தம் நிலை உணராத அற்பர்கள் விடுத்த சாவாலுக்கான முதலாவது பதிவு... இதற்கான சகல ஆதாரங்களும் எம்மிடம் உண்டு.. தவிர்க்கப்பட வேண்டிய பல பெயர்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. எதிர்வினையாற்ற விரும்புகிறவர்கள் மறைந்து நிறு கல்லெறியாது சொந்த பெயரில் முகவரியில் பதிலுறுக்க முடியும்...

இது ஒரு ஆரம்பம்! முடிவல்ல..... 

நடராஜா குருபரன்.... 

நான் கடற்புலிகளின் கனரக ஆயுதங்கள் பாவிக்கும் குழுவில் இருந்த ஒரு குழுத்தலைவன். எனது இயக்கப் பெயர் நிரூபன் சாந்தகுமார் என்ற இயற் பெயருடைய எனது வயது இப்போ 30. என்னை உங்களுக்கு தெரியுமா?

என்னோடு போராடிய பலர் இப்போ ஒஸ்ரேலியாவிலும் கனடாவிலும் இருக்கிறீர்களே... பலதடவை உங்களுடன் பேச முற்பட்டேனே...  முன்பு களத்தில் இருந்தபோது PK, Canon-23 heavy weapon என்றால் உடனே என்னை ஞாபகப்படுத்தி இருப்பீர்கள்... இப்போ என்னை உங்களுக்கு தெரியாது... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....

ஒரு காலத்தில் தரையில் சண்டை இருக்கும் போது எனது கனரக ஆயுத அணியைத் தானே  தரைப்புலிகள் தளபதிகள்  அழைப்பார்கள்.. அதுவும் என்னோடு போராடிய என்னை தெரிந்த இப்போது வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போ தெரிய நியாயம் இல்லை... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....

இறுதி யுத்தத்தில் விழுப்புண் அடையாது, நானும் முன்னைய யுத்தம் ஒன்றில்  மரணித்திருந்தால் இன்று உலகம் முழுவதுமாக கொண்டாடப்படும் மாவீரர் தினங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுட்டி விளக்குடன் உருவப்படமாக இருந்திருக்கலாம்... எனக்கு கவிதை எழுதியிருப்பீர்கள்.... இந்தியாவில் பாட்டு இயற்றி சமூக வலைத் தளங்களில் ஏற்றி இருப்பீர்கள்... கட்டுரை எழுதியிருப்பீர்கள்... கூடவே மரணித்த பின் நான் நேசித்த என் தலைவரால் லெப்.கேணல்  பட்டம் வழங்கப்பட்டு இருக்கும்... அத்தைகைய தரத்தில்தான் இருந்தேன்... இவை எல்லாம் குறைந்த பட்சம் என் ஏழைத் தாயிற்கு ஒரு கௌரவமாகவும் இருந்திருக்கலாம்....
ஆனால் படுக்கையை விட்டு இறங்க முடியாது இருக்கும் என்னை பார்ப்பதற்கு என் ஏழைத் தாய் கூலி வேலைக்கு போகிறார்... இயக்கத்தில் இருந்த என் உற்ற நண்பர்கள் சிலர் பெயின்ட் அடித்து பணம் அனுப்புகிறார்கள்...
மாற்றுவதற்கான சாரத்திற்கு ஆகவும், ஓடிக்கலோனுக்காவும்.... அவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை அனுப்பவில்லை.... தமது ரூபாய்  உழைப்பில் மிச்சமாக்கி தருகிறார்கள்...

என் இயலாமையால் எனது முகநூலை துண்டித்து விட்டேன்.... எத்தனை பேரிடம் உதவி கேட்டு இருப்பேன், பிச்சை போடுங்கள் என மண்டியிட்டு இருப்பேன்... எவரும் உதவவில்லையே...

இப்படி ஒரு அறிவித்தலையும் நண்பர்கள் வெளியிட்டு இருந்தார்களே..

உதவும் கரங்களை எதிர்பார்த்து படுத்த படுக்கையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னால் போராளி:-

ஈழத்தமிழ் இளைஞனின் உயிரைக்காப்பாற்ற உதவும் கரங்களுக்கு உதவும் கரங்களை எதிர்பார்த்து படுத்த படுக்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளின் முன்னால் போராளியான நிரூபன் த/பெ சாந்தகுமார் , வயது 30, என்பவர் தற்போது வவுனியா செட்டிக்குளம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவர் 2009.03.18 ஆம் திகதியன்று ஈழத்தில் நடந்த யுத்தத்தில் விழுப்புண் அடைந்தார்.

அதன் காரணமாக இடுப்புக்கு கீழ் முற்றாக செயலிழந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை படுத்தபடுக்கையிலே உள்ளார். இவருக்கு படுக்கை புண் மிக மோசமான நிலையில் இருந்த போது, ஒரு மாதத்திற்கு முன்னர் முகப்புத்தகம் வாயிலாக (பேஸ்புக்) இவரது சிகிச்சைக்காக உதவி கேட்டும் , யாரும் உதவ முன்வரவில்லை.

தற்போது காச நோயாலும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் உள்ளார். எமது சகோதரன் நிருபனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து செல்கிறது. எனவே இவரது மருத்துவ சிகிச்சைக்காக மனிதநேயமுள்ள உறவுகளே உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம். என அறிவித்தும் இருந்தார்கள்???

எவருமே உதவவில்லையே ... காரணம் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத விழுப்புண்ணுடன் எப்போதும் மரணிக்கலாம் என மரணத்தைக் காத்திருக்கும் ஒரு ஏழைத் தாயின் மகன் தானே....

நான் துன்பத்தின் உச்சியில் இருந்த போது யுத்தத்தில் தப்பி வந்து உங்கள் புலம்பெயர் தேசத்தில் லண்டனில் இருக்கும் எங்கள் இயக்கத்தின் முக்கிய தளபதியிடம் கூட உதவி கேட்டேனே... அவர் வசதி அற்றவர் அல்ல... எங்கள் கடற்புலியில் முக்கிய இடத்தில் இருந்தவர்... இப்போ பல இலட்சங்களுக்கு அதிபதி... அவருக்குக் கூட என்னை ஏமாற்ற எப்படி மனம் வந்தது....

பலருடைய வற்புறுத்தல்களால் இந்தியாவுக்கு வரவழைத்த அவர் அங்கு நிர்க்கதியாக விட்டு லொச்சில் தவித்தேன்...
இந்த நேரத்தில் தமிழகத் தோழர் .....ன் (தனது பெயரை் வரக் கூடாது எனவிரும்பும் உதவியாளர்) உதவியாளர்களின் சிறிய பண உதவியில் அல்லாடி எனது ஆசிய நண்பர்கள் சிலரின் கூலிவேலையால் கிடைத்த உதவியாலும் காத்திருந்தேன் உங்களது உதவிக்காக.. 
இந்திய ரூபாயில் 6000.00 ரூபாயை வங்கிக்கு அனுப்பி இதை விட உதவ முடியாது எனச் சொல்லி பிறிதொரு நாட்டில் அனாதரவாய் விட்டுவிட எப்படி உங்களுக்கு முடிந்தது...

காரணம் இப்போ புலம் பெயர் தேசத்தில் நீங்கள் நாட்டை மீட்கும் 5ஆம் கட்டப் போருக்கு தயாராகும் புலியாக மாறி இருக்கிறீர்கள்...  நானும் என்போன்றவர்களும் இடுப்புக்கு கீழ் இயங்காத படுக்கைப் புண்ணுக்கு உள்ளான சாதாரண ஏழைத் தாய்மாரின் பிள்ளைகள் தானே....

நான் இந்தியாவில் இருந்த போது இந்திய கனவானாகிய உணர்வாளர் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி ம.....ம்... (இவரும் தன் பெயரை பிரபல்யப் படுத்துவதை விரும்பாதவர்) இந்திய மதிப்புக்கு 8 லட்சம் ரூபாய் (பிரித்தானிய பண மதிப்பில் இப்போதைய பெறுமதி 8ஆயிரம் பவுண்ட்) செலவுடைய சத்திர சிகிச்சையை 2 லட்சம் ரூபாய்க்கு பிரித்தானிய பணப் பெறுமதி 2000.00 பவுண்ட் வைத்தியசாலைக் கட்டணத்துடன் செய்வதாக கூறினாரே... (2013ஆண்டின் பிரித்தானிய மாவீரர் தின மண்டபச் செலவு அண்ணளவாக 87ஆயிரம் பவுண்ட்...) ஆனால் எவரும் எனக்கு உதவவில்லையே....

என்னுடன் இருந்த எனக்கு தெரிந்த என் நண்பர்களுக்கு தெரிந்த, புலம்பெயர்ந்து வாழும் எத்தனை முன்னாள் போராளிகளிடம் இந்த உதவியைக் கேட்டு இருப்பேன் யாரும் திரும்பியும் பார்க்கவில்லையே... என் மக்களுக்காக ஆயுதம் தூக்கியதை தவிர நான் என்ன தவறு செய்தேன்...

இறுதியாக எதுவுமே முடியாது மீண்டும் இலங்கை சென்று படுக்கையில் விழுந்தேன்.... குறைந்தது என் மன ஆறுதலுக்கு என்னுடன் பேசுமாறு எத்தனைபேரிடம் கெஞ்சியிருப்பேன்.... நீங்கள் பேசக்கூட இல்லையே... காரணம் நான் தீண்டத்தகாத விழுப்புண் அடைந்து மரணத்திற்காக காத்திருக்கும் படுக்கைப் புண்... நோயாளி ஆச்சே....

இனி நீங்கள் பேசினால் கூட என்ன பயன் கிடைக்கப் போகிறது... இப்போ நான் உடலாலும் உளத்தாலும் மனதாலும் சீழ் வடியும் சாந்த குமார்... போராளி - தளபதி – கடற்புலி நிரூபன் அல்ல... காரணம் அடுத்த கட்ட போருக்கு தயாராகும் உங்களுக்கு கடற்புலி நிருபன் தளபதி நிரூபன்  என்றால் சீழ் புண்ணுடன்  இருப்பதனால் இழுக்காக இருக்கலாம்...

ஆனாலும் எனக்கு புலம்பெயர்ந்த மக்கள் மீதும் எமது அமைப்பின் பெயரால் இயங்குபவர்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு எனது மரணத்தின் பின்பு  2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப் போகும் பிரமாணட்டமான மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிட்டு மாலைபோட்டு, முண்டி அடித்து வந்து  சுட்டி விளக்கு எரிப்பீர்கள்... உங்களது அந்த கௌவரவத்  திருவிழாவில், ஒரு படம் பிடித்து, என் ஏழைத் தாய் உயிருடன் இருந்தால் அவரது விலாசத்திற்கு  உன் மகன் மாவீரர் என்று பெயரிட்டு அனுப்பி விடுங்கள்... ஏனென்றால் நீங்கள் வரையும் வீர காவியங்களை முகநூலில் பார்வையிட முடியாத ஏழை அவர்...... படத்தை பார்த்து மகிழக் கூடும்...புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு ஈழத்தில் இருந்து முன்னாள் பெண் போராளியின் வேண்டு  அன்பான உறவுகளே எம் மக்களின்...http://www.globaltamilnews.net/…/language/ta-IN/article.aspx  

mercredi 26 novembre 2014

இலங்கையின் முன்னேற்றத்திற்கு சீனா ஊடுருவல் என்றாள்..சீனா சென்னை முதல் டெல்லி வரையிலான அதிவேக ஊடுருவல் புல்லட் ரயில் சேவையாம்

China - Transport - Rail Network - Bullet Trainசென்னை முதல் டெல்லி வரையிலான அதிவேக புல்லட் ரயில் இயக்குவதற்காக, சீனாவில் செயல்படுத்தபட்டு வரும் புல்லட் ரெயில் திட்டங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்தின் இடையே 2, 298 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதையில் அதி நவீன புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதற்கு பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
china bullat train 1
மணிக்கு சுமார் 300 கி.மீ. வேகத்தில் ஓடும் இந்த புல்லட் ரயில்கள், இப்பாதையின் ஒட்டுமொத்த தூரத்தையும் எட்டே மணி நேரங்களுக்குள் கடந்து விடுவதால், உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் சேவையாக இது கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
இதே போல, இந்தியாவிலும் முக்கிய நகரங்களை இத்தகையை அதிநவீன புல்லட் ரயில்களின் மூலம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா வந்த சீனப் பிரதமரிடமும் இது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சென்னை – டெல்லி இடையிலான 1,754 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
சென்னை – டெல்லி புல்லட் ரயில் திட்டத்துக்கு சுமார் 32.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு இந்தத் திட்டப் பணிகளுக்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை இலவசமாக வழங்குவதாக சீனா அறிவித்தது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ரயில்வே துறையை சேர்ந்த சில மூத்த அதிகாரிகள், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றுள்ளனர்.
புல்லட் ரயில் பாதைக்கான கட்டமைப்பு பணிகள், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டு ரயில்வே உயரதிகாரிகளுடன் அவர்கள் தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
சீனாவின் உதவியோடு அமையும் சென்னை – டெல்லி இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கி விட்டால், உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது புல்லட் ரயில் சேவையாக இது அமையும்.

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மன நிறைவாக இணைந்தார்

.திமுகவில் முக்கிய பேச்சாளராக விளங்கிய நடிகை குஷ்பு கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினார். திமுகவின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றிய சர்ச்சையான கருத்தை அவர் வெளியிட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்த குஷ்பு பாஜகவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று ட்விட்டரில நேற்று தெரிவித்திருந்தார்.அவர் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.அதன்பின் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, காங்கிரஸ் இணைவதாக முறைப்படி அறிவித்தார். மேலும் காங்கிரஸில் இணைந்தது மன நிறைவாக உள்ளது என்று கூறினார். அவர் திமுகவை விட்டு வெளியேறியதற்குக் காரணம் கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.மேலும் கடந்த சில காலமாகவே திமுகவில் இருந்து வெளியேற வேண்டும் என்று எண்ணியதாகவும் அதற்கு முன்பு நடந்த சம்பவங்களே காரணம் என்பதை மறைமுகமாகக் கூறியதுடன் அதுபற்றி பேச முடியாது என்றும் தெரிவித்தார்.இன்று காலை டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், ஒரு முடிவு, உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடும். எனவே கவனமாக இருங்கள். உங்களுக்குச் சரியென்று தோன்றினால், அதில் இறங்கிவிடுங்கள். அதன் பிறகு திரும்பியே பார்க்காதீர்கள். ஒவ்வொருவரின் பார்வையும் மாறுபடும். எல்லாவற்றின் மீதும் ஒரு கண் வையுங்கள், காலை வணக்கம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மகேந்தாவுக்கு பிரச்சாரம்;வைகோ

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த ராஜபக்சேவை சந்தித்தது கவலைக்கொடுப்பதாகவும், ராஜபக்சேவுடனான சந்திப்பு தமிழகர்களின் மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது. 

வருகிற தேர்தலிலும் நீங்களே ஜெயித்து ஜனாதிபதியாக வரவேண்டும் என்று வாழ்த்து சொல்லியிருக்கிறார் நரேந்திர மோடி. பதவிப் பிரமாணத்திற்கு அழைத்தபோதே நான் எனது மனதிலே உள்ளதை கொட்டினேன். வாஜ்பாய் அணுகுமுறை ஒன்றுக்கூட இல்லையே. எங்கள் தலையில் கல்லைப்போடுகிறதுபோல் பேசுகிறார். இதையெல்லாம் சகிக்க முடியாது என்றார்.