mardi 23 juin 2015

உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் புதிய ஆய்வு ஒன்று

உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு கால கட்டம் பூமியில் உருவாகி வருவதாகவும், இந்த கால கட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விலங்கினங்கள் அதிர்ச்சியளிக்கும் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. மனிதத் தலையீடு இல்லாமல் சாதாரணமாக விலங் கினங்கள் அழியும் வேகத்தோடு ஒப்பிடுகையில், தற் போது நூறு மடங்கு அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிந்துவருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விலங்கினங்களுடைய வாழ்விடங்கள் மாறிப்போவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும், காலநிலை மாற்றமும் இந்த அழிவிற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்தனை உயிரினங்கள் அழியக் காரணமாக இருப்ப தால், தனக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும் கட்டமைப் பையும் மனித இனம் தானாகவே அழித்துக்கொள்கிறது என இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவர் கூறுகிறார். ஆறரை கோடி வருடங்களுக்கு முன்னால், பெரும் விண்கல் பூமியில் விழுந்து டைனோசர்கள் உட்பட ஏராளமான உயிரினங்கள் அழிந்த காலகட்டத்துக்குப் பிற்பாடு, மிக அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிவது தற்போதுதான் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள்;கலையகம்

புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும்.

சுவிட்சர்லாந்து போன்ற அழகான இடங்களைக் கொண்ட லிஜியான் நகரத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் மொசுவோ மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. சீனாவின் அங்கீகரிக்கப் பட்ட தேசிய இனங்களில் அதுவும் ஒன்று.

சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள், தீபெத்தோ- பர்மிய இனக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திபெத்திய, பர்மிய மொழிகளுக்கு இடைப்பட்ட தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் பாலின சமத்துவம் நிலவுவது அந்த இனத்தின் சிறப்பம்சம் ஆகும். அந்தச் சமுதாயத்தில் பெண்கள் தான் தலைமை வகிக்கின்றனர். வயலில் இறங்கி கடின வேலைகளை செய்வதும் பெண்கள் தான்! ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிப் பொழுதுபோக்குவார்கள்.

மொசுவோ மக்கள் இன்றைக்கும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றனர். வயது வந்த பெண்களுக்கு மட்டும் தனியான அறை ஒதுக்கப் பட்டிருக்கும். ஒரு பருவமடைந்த பெண், தனக்கான ஆண் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவர் விரும்பும் ஆண், அன்றைய இரவு அவருடன் தங்கலாம். விடிந்தவுடன் அந்த உறவு முடிந்து விடுகின்றது. மொசுவா மக்கள் இதனை "நடக்கும் திருமணங்கள்" என்று அழைக்கின்றனர்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை வெளியில் உள்ளோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மொசுவா பெண்களின் பாலியல் சுதந்திரம் என்பது, தினசரி ஓர் ஆடவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதல்ல. ஓர் உறவானது, ஒரு நாள் மட்டுமல்லாது வருடக் கணக்காகவும் நீடிக்கலாம். அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும், மாற்றிக் கொள்ளவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்ட எந்த ஆணும், தானே தந்தை என்று சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பது, முழுக்க முழுக்க பெண் வீட்டார் பொறுப்பு. இவர் தான் தந்தை என்று யாராவது இனம் காணப் பட்டாலும், குழந்தைக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. தொடர்ந்து, தாயான பெண்ணின் சகோதரர்கள் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள். மொசுவா மொழியில் "அப்பா என்ற ஒரு சொல்" கூடக் கிடையாது!

வேலைக்குப் போவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும் பெண்களாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாதிக்க சமுதாயமாக இருக்கவில்லை. மாறாக எல்லாக் கட்டத்திலும் பால் சமத்துவம் பேணப் படுகின்றது. சிலநேரம், ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டால், ஆண்கள் அதிகமாக உள்ள இன்னொரு குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை பரிமாறிக் கொள்வார்கள்.

மொசுவா சமுதாயத்தில் பாலியல் சுதந்திரம் சர்வ சாதாரணமான விடயம் என்பதால், அங்கு யாரும் புறம் பேசுவதில்லை. ஒருவரது "கள்ள உறவு" பற்றிய கிசு கிசு கதைகளை யாரும் பேசுவதில்லை. அது மட்டுமல்ல, யாரும் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. 

அந்தச் சமுதாயமானது, புராதன கால பொதுவுடைமைச் சமூக- பொருளாதார உற்பத்திகளை இன்று வரைக்கும் தொடர்ந்தும் பேணி வருகின்றது.  "இது எனது உடைமை... எனது சொத்து..." என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அதனால், சண்டை, சச்சரவு, திருட்டு, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை போன்ற எந்த விதமான சமூகவிரோத செயல்களும் அங்கு இல்லை. 

சீனா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதும், மொசுவா மக்களை தனியான தேசியமாக அங்கீகரித்தனர். கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் மாத்திரம், நடக்கும் திருமண முறையை கைவிட்டு விட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். உண்மையில் அன்றிருந்து பலர் நீடித்த திருமண உறவுகளை பின்பற்றத் தொடங்கினார்கள். கலாச்சாரப் புரட்சி முடிந்த பின்னர், மரபு வழித் திருமணங்கள் மீண்டும் அதிகரித்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒட்டு மொத்த சீனாவின் பொருளாதாரம் மாற்றமடைந்தது. சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவித்தார்கள். அது மொசுவா மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கியது. பொதுவாக, அழகான மலைப் பிரதேசங்களை கொண்ட யுன்னான் மாகாணத்திற்கு, சீன உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்தார்கள். சுற்றுலா துறை நிறுவனங்கள், மொசுவா பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

"மகளிர் தேசம்" என்ற விளம்பரத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப் பட்டனர். பாரம்பரியமாக தந்தை வழி சமுதாயத்தில் வந்த சீனர்களுக்கு, "பெண்களின் தேசம்" பற்றிய தகவல்கள் புதுமையாகத் தோன்றின. பலர் அங்கே சுதந்திரமான பாலியல் தொழில் நடப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர். சுற்றுலா நிறுவனங்களும், "நடக்கும் திருமணத்தில் ஒரு நாள் மணமகனாவது எப்படி?" என்று விளம்பரம் செய்து சீன ஆண்களை கவர்ந்தார்கள்.

அனேகமாக, மொசுவோ பற்றிய கற்பனையான கிளுகிளுப்பூட்டும் கதைகளை மட்டுமே கேள்விப் பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. சுற்றுலா நிறுவனங்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளன. மொசுவா பிரதேசத்தில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்கி அங்கு சில மொசுவா பெண்களை பாலியல் தொழிலாளர்களாக அமர்த்தினார்கள்.

தமது சமுதாயத்தைப் பற்றிய தவறான கதைகள் பரப்பப் படுவதையிட்டு, மொசுவா மக்கள் பலர் எரிச்சலுற்றுள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் சுற்றுலாத் துறை கொண்டு வரும் வருமானத்தை இழக்கவும் விரும்பவில்லை. பாரம்பரியமாக பெண்கள் தலைமை தாங்கிய, அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்த மொசுவோ சமுதாயத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டானது. புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக, மொசுவா ஆண்கள் நன்மை அடைந்தனர்.

சுற்றுலா ஸ்தலங்களில், சேவைத் துறையில் உள்ள பல வேலைகளை பெண்களே செய்தாலும், ஆண்கள் தொடர்பாளர்களாகவும், முகவர்களாகவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இருப்பினும் இத்தகைய பொருளாதார மாற்றமானது, அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய வறுமையான கிராமங்களை மட்டுமே பாதித்து வருகின்றது. பெரும்பான்மையான மொசுவா பெண்கள், இப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே, பாரம்பரிய தாய் வழி குடும்ப உறவுகளை கட்டிக் காத்து வருகின்றனர்.

lundi 22 juin 2015

களனி பொலிஸ் வலயத்தின் 42 பேர் கைது!


களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது சட்டவிரோத சாராய உற்பத்தியாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

mercredi 10 juin 2015

சர்வதேச திரையிடப்பட்ட விழாவில் கான்பிக்கப்பட ஆவணப்படம் அறிமுக நிகழ்ச்சி 14/06/2015 மாலை 4 மணி

Ramesh Yanthra இன் புகைப்படம்.                                                                                                        கூகிள் வழியாக ரமேசு
தொடர்ந்த முயற்சி :https://groups.google.com/forum/#!topic/mintamil/baDpirqw3moவலைத்தளம் : http://gudiyamcaves.rameshyanthra.com/விக்கிபீடியா : http://ta.wikipedia.org/s/4e65பார்த்தீபன் பதிவு : http://bodhiparthi.blogspot.fr/2010/08/blog-post.htmlபிபிசி தமிழ் ரமேசின் பேட்டி : http://www.bbc.com/tamil/india/2015/05/150525_gudiyamcavesதினமணி :http://www.dinamani.com/…/%E0%AE%9A%E0%A…/article2457004.ece
மேலதிக விபரணங்கள் : http://udhayan-photos.blogspot.fr/2014/06/5.html



இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த சென்னைக்கு அருகிலுள்ள குடியம் குகைகள் குறித்த...
www.bbc.com    ‘புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ப்ரூஸ், முதன்முதலா இந்தக் குகைகளை ஆராய்ந்து எழுதியிருக்கார். அதுக்கப்புறம் இந்திய - தமிழக ஆய்வாளர்கள் நிறைய பேர் இந்தக் குகைகளைப் பத்தி தொல்பொருள் ஆய்வுகள், புவியியல் ஆய்வுகள் செஞ்சு விளக்கமா எழுதியிருக்காங்க. ஆனா, 1965க்குப் பிறகு இந்தக் குகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் எதுவுமே நடக்கல. யாரும் வராததால இந்த ஏரியாவே புதர் மண்டிப்போச்சு.
இப்போ இந்த குகை இருக்கிற இடத்தை புலிக்குன்றம் ரிசர்வ் ஃபாரஸ்ட்னு சொல்றாங்க. ஒரு  அகழ்வாராய்ச்சி சைட்டாவோ, சுற்றுலாத் தலமாவோ இல்லை. கற்கால மியூசியமாஇருக்க வேண்டிய இடம், ஏன் இப்படி காடாச்சு? யாருக்குமே தெரியல!’’ என்கிற இவர், தானே முன்வந்து இங்கு சில ஆராய்ச்சிகள் செய்து அதை ஆவணப்படத்தில் இணைத்திருக்கிறார்.‘‘இந்தப் படத்துக்கு கேமரா பண்ணினது என் ஃப்ரெண்ட் வசந்த். திரைப்படக் கல்லூரியில படிச்சவர்.
எக்கச்சக்க நேரத்தையும் பணத்தையும் ரெண்டு பேருமே இதுக்காக செலவு பண்ண வேண்டியிருந்துச்சு. நாங்க அலசின வரைக்கும் இங்க வாழ்ந்த மக்கள், தனித்தனியா உணவு சேகரிக்கும் குழுவா வாழ்ந்திருக்காங்க. வேட்டைக்காக கல் ஆயுதங்களை உருவாக்கியிருக்காங்க.
மத்தபடி, விலங்குகள் மாதிரியான வாழ்க்கைதான். வெறும் தொல்பொருள் ஆய்வு மட்டுமில்லாம குகைகளையும் பாறைகளையும் புவியியல் கோணத்துலயும் அலசி யிருக்கு இந்த ஆவணப்படம். அந்தந்த துறை அறிஞர்கள், நிபுணர்கள் கருத்தோட ஆதாரபூர்வமாதான் பேசுறோம். அதனாலதான் கேன்ஸ் விழாக் குழுவுல ஏத்துக்கிட்டிருக்காங்க. அங்க திரையிடப்படுற 6 இந்தியக் குறும்படங்கள்ல இதுவும் ஒண்ணு                                                   

காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது அபு ரிடா என்ற 74 வயது முதிய பாட்டி

இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போரில் இஸ்ரேல் 51 நாட்கள் நடத்திய போரில் 2200 பாலஸ்தீனியர்கள் கொல்லபட்டனர் 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.பின்னர் ஐநா தலையீட்டின் பேரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த கோடை காலத்தில்,காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது இஸ்ரேலிய வீரர் ஒருவர் அங்குள்ள ஒரு ஹாலியா அபு ரிடா என்ற 74 வயது முதிய பாட்டி தாகத்தால் தவித்து உள்ளார். அவருக்கு தனது போத்தலில் இருந்த தண்ணீரை கொடுத்து உள்ளார்.
இதனை அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்து அந்த முதிய பெண்ணின் நெற்றியில், துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என பாலஸ்தீன தகவல் மையம் செய்தி வெளியிட்டு உள்ளது. அல் அக்ஸா டிவி செய்தியாளர் அகமது குதா இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது தான் கண்ட காட்சி என இதை வர்ணித்து உள்ளார். ஹாலியா அபு ரிடா குஸா பகுதியில் கான் யூனிஸ் நகரின் கிழக்குபகுதியில் வசித்து வாந்தார். இஸ்ரேலிய படைகளின் ஆக்கிரமிப்பில் அவர் சுட்டு கொல்லபட்டது குறித்து தகவல் சேகரிக்க அந்த பகுதியில் நான் முகாமிட்டு இருந்தேன் .
ஆக்கிரமிப்பின் போது ஒரு இஸ்ரேல் வீரர் ஒரு முதிய பெண்ணை அணுகி தண்ணீர் கொடுத்தார். அதை மற்றொரு வீரர் புகைப்படம் எடுத்தார். பின்னர் அவர் அந்த பெண்ணின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என கூறினார்.

முதன் முறை: கல்லூரி முதல்வராக திருநங்கை

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் நேற்று தனது பணியை துவக்கினார்.

கடந்த மாதத்தில் உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க நேற்று வந்தபோது, பல்கலைக்கழக பேராசியர்களும், மாணவர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளுடன் அவரை வரவேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் பேசிய மனாபி கூறுகையில், சமூகத்தை விட மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து எனக்கு இப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது என்றார்.

dimanche 7 juin 2015

"அணைப்பும் கைகோர்த்தலும்... காமமல்ல !"மீனா சோமு

சிறுவயதில் ஏனோ இந்த ஸ்பரிசத்தால் உணரும் அன்பை அனுபவிக்க நிறைய மனத்தடை இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அண்ணாவின், அக்காவின், தோழியின், கைகளை கோர்த்துக் கொண்டு கதைக்கனும்னு தோணும். ஆனால் செய்ததில்லை. செய்ய முடிந்ததில்லை. தொடுதலில் ஏன் இத்தனை தயக்கமும் கட்டுப்பாடும் ? இது எப்படி என்னுள் விதைக்கப்பட்டதுன்னு தெரியல. ஒரு 10வயசுக்கு அப்புறம் தொடுதல் குறித்த அதிகபட்ச கட்டுப்பாடுகள் வளர்ப்பில் நுழைக்கப்பட்டதா ஞாபகம் இல்லை.

குட் டச், பேட் டச் பற்றி பேசுமளவு மாறிய காலத்தில் தொடலுக்காக ஏங்கிய சிறுபெண்ணின் மனநிலையை சொல்லுவது ஒருவிதத்தில் இன்றைய பெற்றோர்களுக்கு தேவைப்படுமா என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த பதிவை எழுதவேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். தொடுதல் காமம் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்பட்ட காலத்தில் பிறந்ததாலோ என்னவோ ஸ்பரிச பரிமாற்றம் என்ற இயல்பான ஒன்று தவறாகவே திரிக்கப்பட்டிருந்தது.அன்னையின் மடி கூட ஒருவயதுக்கு பின் கிட்டவில்லை. எளிமையான உணர்வுகளை தேவைகளை என் பெற்றோர் காலம் தடைசெய்து காமாலை கண்களோடு பழகி விட்டிருந்தது.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களால் பன்முகத்தன்மையோடு மேற்கத்திய பண்பாடுகளையும் கொண்ட கல்லூரியில் படித்தபோது.. முதல் செமஸ்டர் விடுமுறையில் அணைப்போடு விடைகொடுத்த தோழியின் அணைப்பிற்குள் நெளிந்து விலகியது இன்றும் ஞாபகமிருக்கிறது. கை குலுக்கக்கூட இன்றுவரை ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

நேசம் குறித்த புரிதல் தெளிவு தேவை எல்லாம் தெளிந்தபின்னும் ஊறிக்கிடக்கும் இந்த மனத்தடை இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு தானிருக்கிறது. என் தோழி சட்டென்று சகதோழிகளை அணைத்து கைகுலுக்கி அன்பை வெளிப்படுத்துவதை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்ப்பதுண்டு. மிக நெருக்கமான கல்லூரி தோழிகள் ஓரிருவர் தவிர யாரிடமும் ஸ்பரிசத்தினை பகிர்ந்ததில்லை என் தங்கை உட்பட. இதில் சகோதரர்கள் ஆண் நட்புகள் எல்லாம் எங்கே ?!

"முத்தம் என்பது காமமல்ல" என ஆண், தன் பெண்குழந்தைக்கு முத்தமிடும்போது உணர்ந்ததாக சொல்லும் அந்த வரிகள் என்னை வசீகரிக்கவில்லை. மாறாக கோபம் வந்தது. அந்த வரிகள் அருவருப்பாக, இந்த சமூகத்தின் போலி பிம்பத்தை பல்லித்துக் காட்டியது. அன்னையை தந்தையை சகோதரியை சகோதரனை தோழியை தோழனை யாரையும் முத்தமிடவோ அணைக்கவோ கைகோர்த்து கதைபேசவோ அனுமதிக்காத பண்பாட்டு சிறையான இந்த சமூகத்தில், தொடுதலினால் பகிர்வது காமமாக மட்டுமே இருப்பது அருவருப்பானதும் உண்மைக்கு விரோதமானதுமாகும். இயற்கையான தேவை காமம் மட்டுமல்ல. இப்படி அன்பானவர்களோடு பகிரும் அணைப்பும் கூட தான்.

இப்போது ஓரளவு இந்த தயக்கங்கள், பண்பாட்டு தடைகள் மீறிய சமூகம் உருவாகி வருகிறது. இருந்தாலும் பெரிய மாற்றங்கள் இல்லை. இயல்பான இத்தேவைகளை மதிக்காத இந்த சமூகத்தில், காமத்தை மட்டுமே பூதாகரமாக்கி மற்ற ஆண்-பெண் உறவை கொச்சை படுத்துகிறோம். இது ஒரு ஆரோக்கியமான மனநிலையா ?

ஆனால் நம் கலாச்சார காவலர்கள் பொங்கி வகுப்பெடுப்பார்கள் ஆணையும் பெண்ணையும் எவ்வளவு தூரத்தில் பழக வேண்டுமென்று. முரண்பாடான சமூகமிது ஒழுக்கம். ஆண் - பெண் நட்பை அனுமதிக்காமல் சிறு வயதிலிருந்தே தனிதனிப்பள்ளிகள் , கல்லூரிகள் என பிரித்து பிரித்து ஆரோக்கியமான உறவு உணர்வுகளை வளர்க்க, மதிக்க கற்றுத்தருவதில்லை.இதில் அதற்கு அடுத்த படிநிலையான அன்பின் பரிமாற்றமான தொடுதலின் வழியை எங்கே உணர்த்த ? கமலின் கட்டிபுடி வைத்தியமாக கிண்டலடிப்படலாம் !

இதை பற்றி எழுத முக்கிய காரணமுண்டு, தொடுதலை அணைப்பை கைகோர்ப்பை இயல்பாக உணரவும் வெளிப்படுத்தவும் அனுமதிக்கப்பட்டால்... பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. ஸ்பரிசம் என்பது காமத்தின் தேவை மட்டுமல்ல அன்பின் பரிமாற்றமும் என்ற உணர்தல் ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்.

ஆனால் இப்போது காலம் மாறிவருகிறது... கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. நானும் கூட தான். என் சிந்தனைகள் என்னில் புகுத்தப்பட்டிருந்த தடைகளை தளர்த்தி இருக்கிறது போலும். அண்மையில் சித்தியின் மகளான என்குட்டிதங்கையின் வயிற்றில் கைபோட்டு மென்மையாய் அவளை அணைத்தபடி உறங்கினேன். அந்த பாசப் பகிர்வுக்கு, ஆயிரம் வார்த்தைகள் ஈடில்லை !              

சந்திரகாந்தன்(பிள்ளையான்)குற்றச்சாட்டு கிழக்கு மாகாணத்தில் கள்ள ஆட்சி நடாத்தப்படுகின்றது

Résultat de recherche d'images pour "சந்திரகாந்தன்.பிள்ளையான்"நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கள்ள ஆட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் செயலகமும் முன்னெடுத்திருப்பதை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்ட வரவுசெலவு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மிகமோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் வறுமையான மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என்ற அடிப்படையிலும் இது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.
கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீட்டில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிகுடி சமூகசேவைகள் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் சம்மாந்துறை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அதேபோன்று மட்டக்களப்பில் சிறுவர் நன்னடத்தை பிரிவிற்கான கட்டிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியும் சம்மாந்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.அதேபோன்று சுகாதார துறையினருக்கான பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபா சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாவும் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது.அதனைவிட மோசமாக நாவற்காடு, கரடியனாறு, தாண்டியடிபோன்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளின் உள்ளக மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 80இலட்சம் ரூபாவும் அம்பாறை மாவட்டத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மாற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டதுக்கு ஒதுக்கப்படும் நிதி அம்பாறை மாவட்டத்துக்கு செல்வதும் அமைச்சர்கள் சமநிலையினை கருத்தில்கொள்ளாமல் இயங்குவதும் அதற்கு காரணமாக அமைச்சரவை இயங்குவதும் மிகமோசமான முன்னுதாரணத்தை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளது.
செயல்திறன் அற்ற,வெளிப்படைத்தன்மையற்ற,எந்தவித அக்கரையும் அற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்த விடயங்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
நல்லாட்சியில் நல்லது நடக்காமல் மட்டக்களப்பு மாவட்டம் மிகமோசமாக பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.இதனை நியாயப்படுத்துகின்றவர்களும் அவர்களை ஊக்கப்படுத்துபவர்களும் இது தொடர்பில் சிந்தித்து மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய காலத்தில் உள்ளோம்.
ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பாக தற்போது உள்ள ஜனாதிபதியின் செயலாளர் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளராக இருந்தபோது 180நாட்கள் கடமையாற்றிய அனைவரையும் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு 600க்கும்மேற்பட்டவர்கள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை.ஏனைய மாகாணங்கள் அந்த நியமனங்களை வழங்கியுள்ளது.
தை மாதம் முதல் வழங்கப்படவேண்டிய அந்த நியமனங்கள் அரை ஆண்டுகளை பூர்த்திசெய்துள்ள நிலையிலும் அதுவழங்கப்படவில்லை.செயல்திறன் அற்ற,நிர்வாகத்தினை கொண்டுநடாத்தமுடியாத முதலமைச்சரும் பிரதம செயலாளரும் முதலமைச்சரின் செயலாளரும் இருப்பது வேதனையான விடயமாக பார்க்கின்றோம்.
இந்த சுற்றுநிருபத்தினை அடிப்படையாக கொண்டு முதலமைச்சரின் நகரான ஏறாவூரில் பிழையான ஆவனங்களைக்கொண்டு 53பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க எடுத்த முயற்சி காரணமாக இந்த நிரந்தர நியமனங்கள் வழங்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மிகவும் ஒரு கள்ளாட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் செயலகமும் முன்னெடுத்திருப்பதை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இலங்கையில் நல்லாட்சி,கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்த இணைப்பாட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கோறளைப்பற்றில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் சென்றுகுடியேறுவதும் தமிழர்களின் வேலிகளை இரவுவேளைகளில் சேதப்படுத்துவதும் இது பொலிஸாரிடம் முறையிட்டாலும் அது தொடர்பில் கவனத்தில் எடுக்காத நிலையே இருந்துவருகின்றது.
இதற்கு காரணம் இன்று நல்லாட்சியின் அமைச்சராக இருப்பவர்களும் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தொடர்பில் கவலைகொள்ளத்தேவையில்லை என்று விடுத்துள்ள பணிப்புரை,பொலிஸாரின் அசமந்த போக்குத்தனம் மிகப்பெரும் தாக்கத்தினை செலுத்தியுள்ளது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தினை பாதுகாக்கவேண்டும் என்ற மாயையில் அனைத்தினையும் மறைத்து மக்கள் மத்தியில் தப்பித்துக்கொள்ளும் நியாயங்களை மட்டும் பேசிக்கொண்டுள்ளனர்.இந்த பிரச்சினைகளை ஆராயாமல் இது அமிழ்ந்துபோகின்றது.
நான் முதலமைச்சராக இருந்தபோது கோறளைப்பற்றுக்கான எல்லை அமைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தேன்.அதனை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எம்.பி தடுத்தார்.நாங்கள் முஸ்லிம்களுக்கு சாதமாக இயங்கியதாக பிரசாரங்களை மேற்கொண்டார்.ஆனால் இன்று நாங்கள் வரைந்த எல்லைகளைத்தாண்டி முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர்.இதுதான் தூரநோக்கற்ற வினைத்திறன் அற்றவர்களினால் எமது இனத்துக்கு ஏற்படும் அபாயம் ஆகும்.
இந்த எல்லைப்பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படவேண்டும்.இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால் இதில் அரசாங்க அதிபர் கூட ஆழமான பார்வையில்லாமல்செயற்படுவதாக அறியமுடிகின்றது.நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருக்கின்றோம் பொலிஸார் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.இது பிழையான கருத்தாகும்.இரண்டு பிரதேச செயலாளர்களும் இணைந்து இந்த எல்லைப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று ஏற்கனவே நீதிமன்ற கட்டளையுள்ளது.அதனை அடிப்படையாக கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கமுடியும்.

சரவணன், மைக்கேல் போன்றவர்களை நான் சுட்டது உண்மைதான் கொளையை ஒப்புக்கொண்ட பிரபாகரன்

கூட்டமைப்புக்கு ஈழ தேசிய விடுதலை முன்னணி  ..பிரபாகரன் முதலில் எழுப்பிய கேள்வி இது:தமிழீழமா? ஈழமா?..அரசியல் தொடர் - 26  அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை
ஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், ரெலோenlf-1அமைப்புகளோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார்.
ஆனாலும் ஈரோசிலோ, ரெலோவிலோ பிரபாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது ஏற்பட்ட நல்லெண்ணம் காரணமாகவே ஐக்கிய முயற்சிக்கு பிரபா உடன்பட்டார்.
இதற்கிடையே நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வொன்றைக் கூறிவிட்டு ஐக்கிய முயற்சி பற்றி தொடருகிறேன்.
பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இயக்கங்களை விட தம்மையே அதிகம் நம்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூறித் திரிந்தனர்.
அமுதரின் இல்லத்தில் ஒரு புகைப்படம இருந்தது-. இந்திராவை அமுதர் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது. அழகாக ஃபிறேம் போட்டு அதனை வைத்திருந்தார்.
இந்திய அரசும், மிதவாதத் தலைவர்கள் என்ற வகையில் கூட்டணியை ஆரம்பித்ததில் தட்டிக்கொடுத்து வந்தது.
இயக்கங்கள் தமது சொற்படி நடக்காவிட்டாலும் கூட்டணியினர் தாம் சொல்வதை கேட்கக்கூடியவர்கள் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம்.
இந்த நேரத்தில் தான் அமுதருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
இந்தியா இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதால் குறிப்பிட்ட இயக்கங்கள் பலமாகிவிடும். ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் கூட்டணிக்கு மேலும் சவாலாகிவிடலாம்.
எனவே & கூட்டணிக்கும் ஒரு ஆயுதப் படையை உருவாக்குவதுதான் புத்திசாலித்தனம் என்று அமுதர் நினைத்தார்.
இளைய மகன் தலைவர்
அமுதருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் காண்டீபன் இலண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். இளைய மகன் பகீரதன் அமுதரோடு இருந்தார்.
பகீரதனை தலைவராக வைத்து கூட்டணியின் ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.
இந்தியா கூட்டணிக்குத்தான் பெரும் உதவிகளை செய்யப்போகிறது என்று கூறி பகீரதனும் சிலரும் சேர்ந்து இளைஞர்கள் சிலரை திரட்டினார்கள்.
இயக்கம் என்று இருந்தால்தானே இந்தியா பயிற்சி கொடுக்கும்:
‘அகிம்சையே எங்கள் மூச்சு: ஆயுதங்களை தூர வீசு.’ என்பதுபோலப் பேசிய கூட்டணியின் பெயரில் பயிற்சி பெறுவதோ, ஆயுதம் கேட்பதோ நன்றாகவா இருக்கும்? இருக்காதல்லவா?
அதனால் பகீரதனின் தலைமையிலான ஆயுதக் குழுவுக்கு தமிழீழ தேசிய விடுதலை இராணுவம்(TNA) என்று பெயரிடப்பட்டது.
கிடைத்தது அடி
தமிழ்நாட்டில் ஒரு முகாம் அமைத்து இளைஞர்களை வைத்திருந்தார்கள்.
பயிற்சி முகாம் என்று பெயர்தானே தவிர பயிற்சியும் இல்லை. ஆயுதங்களும் இல்லை இந்திய பயிற்சிக்கு அனுப்பப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர அனுப்புவதாகத் தெரியவில்லை.
இன்று போகலாம். நாளை போகலாம் என்று நாட்களைக் கடத்தினார் பகீரதன். பொறுத்துப் பார்த்து வெறுத்துப்போன இளைஞர்கள் முகாமில் பொறுப்பாக இருந்தவரை அடித்துப் போட்டு விட்டு முகாமை விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள்.
அந்த அடியோடு தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா) இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
கூட்டணியின் ஆயுதப்படை கட்டும் முயற்சி & ‘சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்’ கதையாக மாறிப்போனது.
காந்தீயவாதிகள் கத்தி எடுக்க நினைத்தார்கள். ஆனால் முயற்சி சித்தியடையவில்லை.
இனி & ஐக்கிய முயற்சிக்கு செல்வோம்.
சிறீயைக் கொல்ல சதி?
பிரபாகரன் ரெலோ & ஈரோஸ் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அதுபோல ரெலோவுக்கும புலிகள் மீது நம்பிக்கையோ நல்லெண்ணமோ இருக்கவில்லை.
ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொல்வதற்கு பிரபாகரன் சதி செய்தார் என்று அப்போதுதான் ரெலோ குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.
இக் குற்றச்சாட்டுக்கு காரணமான சம்பவம் பற்றியும் கூறவேண்டும்.
1984இன் ஆரம்பத்தில் ரெலோவுக்குள் உள் முரண்பாடுகள் ஏற்பட்டன. ரெலோவின் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்த உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அரசியல் ரீதியாக இயக்கத்தை வழி நடத்தாமல் இராவணுவவாதக் கண்ணோட்டத்தோடு சீறி செயற்படுவதாக அவர்கள் கூறினார்கள்.
உள் இயக்க பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் பிரபாகரனிடம் உதவி கோரினார்கள்.
பிரபா உதவி

இதனைத் தொடர்ந்து ரெலோ ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் இருந்தன:
05.05.84 அன்று ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொலை செய்ய திட்டமிடப்பட்டது.
பிரபாகரனிடமிருந்து கைத்துப்பாக்கியும், குளோரஃபோம் போத்தலும் பெற்றுக்கொண்ட ரெலோ உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடத்திச் செல்ல திட்டமிட்டனர்.
இதனை ஏற்கெனவே அறிந்து கொண்ட சிறீ சபாரத்தினம் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.
மீண்டும் 09.05.84 அன்று ரெலோ இயக்கத்தினர் சிலர் தமது தலைவரைக் கொல்ல சதித்திட்டத்தோடு காத்திருந்தார்கள்.
அந்தத் திட்டத்தையும் முறியடித்து சதித்திட்டம் போட்ட உறுப்பினர்களை சிறீ சபாரத்தினத்தின் விசுவாசிகள் கைது செய்தனர்.
ரெலோவின் பாதுகாப்பில் இருந்த சிறீ சபாரத்தினத்தின்  விரேதிகள் 16-05-84 அன்று புலிகளின் உதவியோடு தப்பிச்சென்றனர்.
சிறீ சபாரத்தினத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் வரதன் என்னும் உறுப்பினர்
அந்த வரதனும் புலிகளோடு இரகசியத் தொடர்பு வைத்திருந்தார். அவரது தகவலின் படியே ரெலோவின் மறைவிடத்தில் புலிகள் புகுந்தனர். சிறீயைக் கொல்ல முயன்றவர்களை மீட்டுச் சென்றனர்.
இதுதான் ரெலோ சார்பாக வெளியே சொல்லப்பட்ட தகவல்கள்.
இச் சம்பவத்தின் பின்னர் ரெலோவும் புலிகளும் விரோத நிலைப்பாட்டில் இருந்தனர்.
இதனால் ஒற்றுமை முயற்சிக்கு பிரபா உடன்பட்டபோதும் ரெலோ குறித்து சந்தேகம் கொண்டிருந்தார்.
முதல் சந்திப்பு
கூட்டணி உருவாக்கிய ஆயுதப்படை; இயக்க மோதலைத் தவிர்க்க பிரபா கூறிய யோசனை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 26). BalaNAdeleஅதனால் மூன்று இயக்கப் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு தனது சார்பில் அன்ரன் பாலசிங்கத்தையும், இராசநாயகத்தையும் அனுப்பிவைத்தார். (இராசநாயகம் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரவைத் தலைவர்)
கோடம்பாக்கத்தில் இருந்த ஈ.என்.எல்.எஃப் அலுவலகத்திற்கு அவர்கள் இருவரும் சென்றனர்.
மூன்று இயக்கங்கள் ஒன்-றுபட்டு ஈ-என்.எல்.எஃப் கூட்டமைப்பு உருவாகியது ஏப்ரல் 1984இல் புலிகள் கூட்டமைப்போது பேச வந்தது, மார்ச், 23. 1985இல்.
“ஒற்றுமை முயற்சி என்றால் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்வதுதான் முறையாக இருக்கும். அதனால் பிரபாகரன் கூட்டத்திற்கு வரவேண்டும்” என்று ஈரோஸ் சார்பாக வே. பாலகுமார் கருத்துத் தெரிவித்தார்.
“தம்பி (பிரபா) வருவதில் பிரச்சனை கிடையாது. பாதுகாப்புக் காரணம் கருதி பொது இடத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்.”
என்று அன்ரன் பாலசிங்கம் கூறினார். சென்னையில் இருந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ‘பிரசிடென்சி’
நான்கு இயக்கத் தலைவர்களும் ‘பிரசிடென்சி’ ஹோட்டலில் சந்திப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டது.
ரெலோ சார்பில் சிறீசபாரத்தினம், மதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் பத்மநாபா. குணசேகரன், ரமேஷ், ஈரோஸ் சார்பில் பாலகுமார், முகிலன். புலிகள் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கூட்டணி உருவாக்கிய ஆயுதப்படை; இயக்க மோதலைத் தவிர்க்க பிரபா கூறிய யோசனை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 26). patmanafa1985 ஏப்ரல் 10ம் திகதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பு நடைபெற்றது.
பேச்சு ஆரம்பித்தவுடன் பிரபாகரன் முதலில் எழுப்பிய கேள்வி இது:
“உருவாகப்போவது தமிழீழமா? ஈழமா? கூட்டமைப்புக்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று பெயரிட்டுள்ளீர்கள். நாமும் ரெலோவும் தமிழீழம் என்றுதான் கூறிவருகின்றோம். அதனால் கூட்டமைப்பு பெயரை மாற்றினால் என்ன?”
அதற்கு வே. பாலகுமார் பதிலளித்தார். “நாமும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் ஈழம் என்றுதான் கூறிவருகிறோம். ரெலோவுக்கம் பெயர் ஒரு பிரச்சனை இல்லை.”
இந்த இடத்தில் குறுக்கிட்ட பத்மநாபா. “எமக்கு பெயர் ஒரு பிரச்சனையல்ல. ஐக்கியம்தான் முக்கியம். கூட்டமைப்பு பெயரை மாற்றுவது என்றாலும் பிரச்சனையில்லை.”
என்று கூறிவிட்டார். இதனை எதிர்பார்க்காத பாலகுமார் சொன்னது இது:
“ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கு பெயர் ஒரு பிரச்சனையில்லாமல் இருக்கலாம். நாங்கள் ஈரோஸ் அப்படி சொல்ல முடியாது. நான் எனதுஆட்களோடு பேசிவிட்டுத்தான் முடிவு சொல்ல இயலும்.”
பெயர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஈ.என்.எல்.எஃப்&விடுதலைப்புலிகள் சந்திப்பு என்று கூட்டறிக்கை விடுவதாக முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரபா சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
“சரவணன், மைக்கேல் போன்றவர்களை நான் சுட்டது உண்மைதான். ஆனால் இயக்க முடிவின்படி தான் செய்தேன். மா, நாகராசா எல்லோரும் உடன்பட்டுத்தான் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இப்போது நான் தன்னிச்சையாகச் செய்ததாகக் கூறுகிறார்கள்.
“கட்டுப்பாட்டை மீறினால் தண்டிப்பது பிழையல்ல. இப்போது கூட என்ரை பெடியள் விலகிப் போகலாம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, பிரச்சனை இல்லாமல் போனால் அனுமதிப்பேன்.
“ஆயுதங்களோடு போனால் விடமாட்டேன். இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு இயக்கங்களுக்கு போனால் அதனால் பிரச்சனை வரும்.
“என்னோடு இருந்த ஒருவர் உங்களோடு சேர வந்தால் நீங்கள் சேர்க்கக்கூடாது. உங்களோடு இருக்கும் ஒருவர் என்னோடு சேரவந்தால் நானும் சேர்க்க மாட்டேன்.
இப்படியான அணுகுமுறை இருந்தால் இயக்கப் பிரச்சனைகள் வராது. என்னோடு இருந்து விலகி வந்தவரை நீங்கள் சேர்ததால அவர் எங்களைப் பற்றி தவறாகப் பேசும்போது நாங்கள் பிடிக்க வேண்டிவரும்.

அல்லது உங்களோடு இருந்தவர் எங்களிடம் வந்து இருந்துகொண்டு உங்களைப் பற்றி தவறாக கதைத்தால் நீங்கள் பிடிக்க வருவீர்கள். ஏன் இந்த தேவையற்ற பிரச்சனை.

“நாங்கள் நான்கு இயக்கங்களும் ஒருவரிடமிருந்து விலகுபவரை இன்னொருவர் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும்”

“பிரபா அவ்வாறு சொன்னவுடன் அதனை பத்மநாபா மறுத்துப் பேசினார்.

“இயக்க உறுப்பினர்களுக்கு ஜனநாயக உரிமையை மறுக்க முடியாது விலகவும், விரும்பி இயக்கத்தில் சேரவும் அவர்களுக்கு உரிமை உண்டு.”

என்று வாதிட்டார் பத்மநாபா. ரெலோவும், ஈரோசும் அதனை ஏற்றுக் கொண்டன.

பிரபாவின் கருத்து சரியானது என்று கூட்டம் முடிந்தவுடன் பத்மநாபாவிடம் கூறினார் ரமேஷ். எதிர்காலத்தில் இயக்கப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிரபா சொன்ன கருத்தை ஏற்று அதனை ஒரு முடிவாக எடுக்கலாம் என்பது ரமேஷின் கருத்தாக இருந்தது. எனினும் பத்மநாபா அதனை ஏற்கவில்லை.

1985ல் பிரபா சொன்ன கருத்து அது. தற்போது 95ம் ஆண்டு.

இந்த இடைப்பட்ட பத்து வருட காலத்தில் ஒரு விடயம் தெளிவாகியிருக்கிறது.

எந்த ஒரு இயக்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு விலகி வேறு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தாமும் உருப்பட்டதில்லை. தாம் சேர்ந்த இயக்கங்களையும் உருப்படவிட்டதில்லை. மாறாக இப்படியானவர்களால் இயக்கங்கள் மத்தியில் ஏற்பட்ட கசப்புக்களே மிஞ்சியிருக்கின்றன.
கோவையும் & பிரபாவும்
கூட்டணியில் முக்கியமானவராக இருந்தவர் கோவை மகேசன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துக்கள் எழுச்சியை விஆத்தன.

பின்னர் கூட்டணியோடு அவர் முரண்பட்டு தமிழீழ விடுதலை அணியை உருவாக்கினார். இது பற்றி முன்னரே விளக்கமாக கூறி இருந்தேன்.

கோவை மகேசனுக்கு பிரபாகரனில் நல்ல பிரியம் இருந்தது, கோவை மகேசன் மீது பிரபாவுக்கும் ஒரு பிடிப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் இருந்த கோவை மகேசன் கஷ்டப்பட்டார். அவருக்கு உதவி செய்தார் பிரபாகரன். கோவை மகேசன் பிரபாவின் உதவியோடு ‘வீரவேங்கை’ என்ற பத்திரிகையை சென்னையில் இருந்து ஆரம்பித்தார்.

அப்போது புலிகள் அமைப்பினர் ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையை பொறுப்பேற்றுச் செய்யுமாறு கூறியிருக்கலாம். இயக்கத்திலும் அவரை சேர்த்திருக்கலாம்.

ஆனால் செய்யவில்லை. கோவை மகேசன் நல்லவராக இருக்கலாம். தமிழீழ விடுதலை உணர்ச்சி மிகுந்தவராக இருக்கலாம் & ஆனால் இயக்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடக்கக்கூடியவரல்ல. தவிர அவரை கட்டுப்படுத்துவதிலும் சங்கடங்கள் ஏற்படும்.

அதனை உணர்ந்தே கோவை மகேசனுக்கும் இயக்கத்திற்கும் இடையே கௌரவமான ஒரு இடைவெளி வைத்துக் கொண்டார் பிரபா.

எவரை&எங்கே &எந்த இடத்தில் வைத்து பயன்படுத்துவது என்ற நுட்பம் தலைமைத் துவத்திற்கு தேவை. அதுவும் ஆயுதப் போராட்ட சூழலில் மிகவும் முக்கிய தேவை.
பரா   -பாலகுமார்

இன்னொரு உதாரணம் கூறுகிறேன்:
ஈரோஸ் அமைப்பை கலைத்துவிட்டதாக கூறிவிட்டு வே. பாலகுமார், பரராஜசிங்கம் போன்றோர் புலிகளோடு சேர்ந்தனர்.
பராவுக்கோ, பாலகுமாருக்கோ இயக்க உறுப்பினர்களை ஆளுமை செய்யும் பொறுப்பு எதனையும் பிரபா கொடுக்க வில்லை.
பாராவை அவரது திறமைக்கு ஏற்ப சிவில் நிர்வாகப் பொறுப்பு கொடுத்து தனது நேரடி கண்காணிப்பில்தான் பிரபா வைத்திருக்கிறார். இயக்க உறுப்பினர்களுக்கு பரா கட்டளை போட முடியாது.
இதிலிருந்து தெரிவது பிரபா 85இல் தெரிவித்த கருத்தில் இன்றுவரை அவரிடம் மாற்றம் இல்லை என்பதுதான்.
இப்போது மீண்டும் ஒற்றுமை முயற்சி கட்டத்திற்கு செல்லலாம்.
ஓடிவந்த உறுப்பினர்
‘பிரசிடென்சி ஹோட்டலில்’ சந்திப்பு முடிந்து பிரபா விடைபெற்றுச் சென்றார். அவரோடு பேசியபடி சென்ற பத்மநாபாவும் மற்றவர்களும் தமது காரில் ஏற ஆயத்தமானபோது ஈரோஸ் உறுப்பினர் ஒருவர் ஓடிவந்தார். ....தொடரும் ....                                                                                       .அற்புதன்.

vendredi 5 juin 2015

234 பேரில் 178 பேர் மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விலகுமாறு கோரி பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வீட்டில் கடந்த 31ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 234 பேரில் 178 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார புலத்சிங்கல யோசனை முன்வைத்த போது, மினுவங்கொட நகர சபை உறுப்பினர் அத்துல சேனாநாயக்க அதனை வழிமொழிந்தார்.
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்த போதிலும் அவர் கட்சியின் வெற்றிக்காக செயற்படுவதற்கான தேவையில்லை எனவும், மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தலைவர் பதவிக்கு கொண்டு வரவேண்டும் எனவும் சிசிர குமார புலத்சிங்கல யோசனை முன்வைத்து உரையாற்றினார்.
அதன்பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைகளை உயர்த்தி குறித்த பிரேரணைக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் கம்பஹா மாவட்டத்தின் தலைமைத்துவத்தை பிரசன்ன ரணதுங்கவிற்கு வழங்க வேண்டும் எனவும் யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கிராமிய மட்டத்தில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் குறித்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, வெள்ளிக்கிழமை (05) தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைப் பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் இங்கு வந்து வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இத்தகைய பெற்றோர்கள் இந்த நடமாடும் சேவை மூலம் பயனைப் பெறமுடியும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

mardi 2 juin 2015

ஒபாமா விரைவில் இலங்கை

 அமெரிக்க  ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவைக்கும் நோக்கில் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா இத்தகவலை தெரிவித்தார்.  இலங்கையில் தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாலே அவர் இங்கு வர தீர்மானித்துள்ளார்.  அமெரிக்கா மற்றும் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அவருடைய இவ்விஜயம் அமையவுள்ளது. இலங்கை தலைவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், அமெரிக்க ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அஜித் பி. பெரேரா  தெரிவித்தார்

தாமதிக்கப்படும் நீதி இழைக்கப்படும் அநீதி.வலிக்கும் உண்மை!

சதீஸ் நெடுந்தீவு-ன் படம். 2012 ஆம் ஆண்டுஇ மார்ச் மாதம் 3 ஆம் திகதி. யேசுதாஸன் குடும்பத்தில் பேரிழப்பு நடந்த நாள். விடுப்புப் பார்க்கும் தீவான நெடுந்தீவை திரும்பிப் பார்க்க வைத்த நாளும் அதுதான்.
யேசுதாஸன் ஒரு வண்டில்காரன். நெடுந்தீவின் 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கிறார். நெடுந்தீவு படகுத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் பொருள்களை உரியவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதுதான் அவரின் தொழில். அந்தத் தொழில் கிடைக்காத நேரங்களில் (கடலடி காலங்கள் மற்றும் வண்டில் பழுதடைந்த நேரங்கள்) கிடைக்கின்ற கூலிவேலைக்கும் போவார். இந்தத் தொழில்களில் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது. மனைவி பிறிடா கிலாறா யேசுதாஸன் வீட்டுப் பணிதான் செய்கிறார். அவர்களுக்கு மொத்தம் 7 பிள்ளைகள். ஆனால் இப்போது 6 பிள்ளைகள்தான் வீட்டில் இருக்கின்றனர். 4 ஆவது பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டனர்.

அந்த நான்காவது பிள்ளைக்குப் பெயர் லக்ஸினி. 12 வயது நிரம்பியவள். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் 8 ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். அந்தக் குடும்பத்திலேயே மிகுந்த துடிப்பானவள். மற்றைய சகோதரர்களைவிட வீட்டு வேலைகளைக் கவனிப்பதிலும்இ பாடசாலைக் கல்வியிலும் சுறுசுறுப்பானவள். விளையாட்டுஇ ஆடல்இ பாடல் என எதனையும் விட்டுவைக்காதவள் லக்ஸினி.

இந்த இயல்புகளோடுதான் லக்ஸினி 2012இமார்ச் 03 ஆம் திகதியையும் எதிர்கொண்டாள். அன்றுதான் யேசுதாஸன் குடும்பம் மண் வீட்டிலிருந்து சீமெந்தினாலான வீட்டுக்கு மாறும் முயற்சியில் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. லக்ஸினி சின்னச் சின்ன உதவிகளை ஓடிஓடி செய்துகொண்டிருந்தாள். மதிய சமையல் பொழுது நெருங்கவேஇ யேசுதாஸன் தன்னிடமிருந்த 100 ரூபாய் பணத்தையும் சைக்கிளையும் லக்ஸினியிடம் கொடுத்து சந்தையில் மீன் வாங்கி வரச் சொன்னார்.

துடிப்பான பெண் பிள்ளை அப்பாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பறந்தது நெடுந்தீவு சந்தைக்கு. அன்றைய தினம் கச்சத்தீவு பெருநாள். சந்தை இல்லை என்கிற விவகாரம் அங்கு போன பிறகுதான் தெரிந்தது. மீன் தேடி சந்தையைவிட்டு வெளியே கொஞ்சத்தூரம் சைக்கிளை மிதித்திருக்கிறாள் லக்ஸினி. அவளுக்குப் பின்னால் 35 வயதைக் கடந்த அவனும் சென்றதை அயலவர்கள் பார்த்திருக்கின்றனர். அதற்குப் பின்னர் லக்ஸினி பற்றிய அவதானிப்புக்கள் எதுவுமில்லை.

இதற்கிடையில் லக்ஸினியின் பாடசாலைத் தோழி வீடு தேடி வந்துவிட்டாள். “பாட்டுப்பழகப் போகவேணும்இ லக்ஸினி எங்க” என்று அவளும் தேடித் தோற்று வீட்டிலிருந்து விடைபெற்றுவிட்டாள்.

ஆன்று சந்தை கூடாது என்பதைத் தாமதமாக அறிந்துகொண்ட லக்ஸினியின் அம்மாஇ ‘சந்தையில்லையெண்டு எங்கயாது விiளாயடிக் கொண்டிருப்பாள்” என்ற எண்ணத்தை மகளின் தேடலில் பரவவிட்டிருந்தாள். பின்னேரம் 4 மணியாகியும் லக்ஸினி வீடு திரும்பவில்லை. யேசுதாஸன் தேடிப்போன இடங்களிலும் லக்ஸினி இல்லை. அவளின் நண்பிகளும் தம்மோடு வரவேயில்லை எனக் கைவிரித்துவிட்டனர். பதட்டமடைந்துத் தேடத் தொடங்கியது அந்தக் குடும்பம்.

யேசுதாஸின் குடும்பத்துக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டிருக்கையில்இ நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஒரு பெண் சென்றார். 9 ஆம் வட்டாரத்தில் அதாவது பிள்ளையார் கோவில் பக்க காட்டுக்குள் தான் விறகு பொறுக்க சென்றதாகவும்இ அங்கு சிறுமியொருத்தி ஆடைகள் கிழித்தெறியப்பட்டுஇ காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேரடி சாட்சியம் கொடுத்தார். இந்தச் செய்தி நெடுந்தீவு முழுவதும் தீயாய் பரவியது. கச்சத்தீவு பெருநாளுக்கு ஆரவாரமாய் புறப்பட்ட மக்கள் கதிகலங்கி நின்றனர். ஆனால் இந்தச் செய்தி மிகத் தாமதமாகவே யேசுதாஸுக்குக் கிட்டியது. கேள்விப்பட்டதும் பதறியடித்துக்கொண்டு தன் மகனோடு அந்தப் பற்றைக்காட்டுக்கு ஓடினார். அவர் தன் கையால் மடித்துக்கொடுத்த 100 ரூபா காசு அந்த மடிப்புக் குலையாமல் அப்படியே கிடக்கிறது. அவள் கெந்திக் கெந்தி ஓடப்பழகிய சைக்கிள் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தாண்டியதும் இரத்த சொட்ட குப்புற கிடக்கிறாள் யேசுதாஸனின் 4 ஆவது மகள். ஆடைகள் கிழித்தெறியப்பட்டதைப் போலவே அவளின் முகத்தையும் குத்திக் கிழித்துக் காயப்படுத்தியிருக்கிறது அயலவர்கள் இறுதியாயக் கண்ட அந்த மனித மிருகம்.

அதற்குப் பெயர் ஜெகதீஸ்வரன். ஒரு கட்சியைச் சேர்ந்தவர். பல திருமணங்களைக் கடந்த வன்முறையாளனாகிய அவர் அப்போதுதான் நெடுந்தீவில் ஒரு திருமணத்தை முடித்திருந்தார்.

லக்ஸினி கொல்லப்பட்ட சம்பவம் வெளித்தெரிந்தவுடன் பாலியல் வன்முறையாளன் ஜெதீஸ்வரன்தான் என்பது கண்டறியப்பட்டிருக்கவில்லை. அவரும் ஊர் மக்களுடன் சேர்ந்து இந்த சம்பத்துக்கு எதிராகக் கண்டனம் எழுப்பிக்கொண்டு அலைந்திருக்கிறார்.

அப்போதுதான் ஊரவர்கள் ஜெகதீஸ்வரனின் காலில் இரத்தம் படிந்திருப்பதைப் பார்த்தனர். காரணம் கேட்டனர். “அது சுவர் கட்டேக்க கல்லு காலில விழுந்துட்டுது” என்று முதல் சந்தியில் கேட்டவர்களிடமும்இ “சயிக்கிளால விழுந்திட்டன்” என்று மூன்றாம் சந்தியில் கேட்டவர்களிடமும் விளக்கம் சொல்லி சிக்கிக்கொண்டார் ஜெகதீஸ்வரன்.

லக்ஸினியை கடைசியாகக் காணும்போது ஜெகதீஸ்வரனே பின்தொடர்ந்தார் என்பதைக் கடைசியாய் கண்டவர்கள் சாட்சி சொன்னார்கள். அவர் வாழும் பகுதியில் இருக்கும் சிறுமிகளைத் துரத்தி வருபவர் என்றும்இ சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி தன் இச்சைக்குப் பயன்படுத்த முயற்சித்தவர் என்றும்இ ஊர்காவற்றுறையில் ஏற்கனவே ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் கொன்றவர் எனவும் ஜெகதீஸ்வரனின் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது அந்தக் கிராமம்.

அப்போது நேரம் இரவு 10 மணி. ஜெகதீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்துஇ படுத்துகிடந்த அவரைப் பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அவரைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி அழைத்துச் சென்றனர். மக்கள் தம்மிடமே ஒப்படைக்கும்படியும்இ தாமே இதற்குத் தண்டனை வழங்கப்போவதாகவும் போராடினர். ஆனாலும் பொலிஸ்தரப்புத்தான் வென்றது. குற்றவாளியைக் கைதுசெய்து சிறைக்கு அனுப்பியது. மக்கள் நீதி வேண்டி போராடினர். ஆனாலும் நெடுந்தீவு மதில்களைக் கடந்து அந்தப் போராட்டங்கள் வெளியில் வரவில்லை. நீதிகோரலுக்கான அவர்களின் குரல் எடுபடவுமில்லை.

ஆனாலும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது. இடையில் பிணை வழங்கி – பின்னர் பிணையை ரத்துச் செய்தது.

“இதுவரைக்கும் 20 தரத்துக்கு மேல் நீதிமன்றத்துக்குப் போயிட்டன். தனிய இல்ல ஒவ்வொருக்காலும் போகேக்க 5 சாட்சிகளோட சேர்த்து 5 பேருக்கு குறையாமல் கூட்டிக்கொண்டு போவன். ஒராளுக்குப் போய்வர 750 ரூபாய்க்கு குறையாமல் வேணும். அலைஞ்சும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஒவ்வொரு முறையும் திருப்பித் திருப்பி நீங்கள் கேட்கிறமாதிரி ஆரம்பத்தில இருந்து சொல்லுங்கோ எண்டுறாங்கள். குற்றவாளி தலைய கீழ தொங்கப் போட்டுக் கொண்டு நிக்கிறார். எங்களிட்ட கதையைக் கேட்டிட்டு தள்ளி வைக்கிறதாகவும்இ வீட்டுக்கு நோட்டிஸ் அனுப்புறதாகவும் சொல்லி அனுப்பிடுவினம். கடைசிய இனி யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்புறம்இ இனி அங்க இருந்து நோட்டீஸ் வரும் எண்டு அனுப்பிச்சினம். பங்குனி மாசம் நோட்டீஸ் வந்தது. அண்டைக்கு போயா. கோர்ட்ஸ் நடக்காதெண்டு நான் போகேல்ல. சாட்சியாளர் போனவ. அங்கயும் ஒண்டு கேட்கேல்லயாம். பிறகு கூப்பிடுறம் எண்டு திருப்பி அனுப்பிட்டினம்இ” என்று யேசுதாஸன் சொல்லி முடிக்கையில் அவரின் கண்ணை நனைத்திருக்கும் கண்ணீரில் நம்பிக்கையினத்தின் மொத்த வடிவமும் பிசுபிசுக்கிறது.

“போங்கடா நீங்களும் உங்கட நீதியும்” என்ற அர்த்தப்பெயர்ப்பை அது சமநேரத்தில் தருகின்றது.

தாமதிக்கப்படும் நீதி இழைக்கப்படும் அநீதிக்கு சமனானது என்ற சட்டமொழி ஒன்று உண்டு. இலங்கையில் எந்தக் குற்றத்துக்குத்தான் தாமதிக்காத நீதி கிடைத்தது? எனவேதான் வித்தியாக்கள் பலியாகிக்கொண்டே இருக்கிறார்கள்