mercredi 10 juin 2015

முதன் முறை: கல்லூரி முதல்வராக திருநங்கை

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் நேற்று தனது பணியை துவக்கினார்.

கடந்த மாதத்தில் உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க நேற்று வந்தபோது, பல்கலைக்கழக பேராசியர்களும், மாணவர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளுடன் அவரை வரவேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் பேசிய மனாபி கூறுகையில், சமூகத்தை விட மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து எனக்கு இப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire