mercredi 10 juin 2015

காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது அபு ரிடா என்ற 74 வயது முதிய பாட்டி

இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போரில் இஸ்ரேல் 51 நாட்கள் நடத்திய போரில் 2200 பாலஸ்தீனியர்கள் கொல்லபட்டனர் 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.பின்னர் ஐநா தலையீட்டின் பேரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த கோடை காலத்தில்,காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது இஸ்ரேலிய வீரர் ஒருவர் அங்குள்ள ஒரு ஹாலியா அபு ரிடா என்ற 74 வயது முதிய பாட்டி தாகத்தால் தவித்து உள்ளார். அவருக்கு தனது போத்தலில் இருந்த தண்ணீரை கொடுத்து உள்ளார்.
இதனை அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்து அந்த முதிய பெண்ணின் நெற்றியில், துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என பாலஸ்தீன தகவல் மையம் செய்தி வெளியிட்டு உள்ளது. அல் அக்ஸா டிவி செய்தியாளர் அகமது குதா இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது தான் கண்ட காட்சி என இதை வர்ணித்து உள்ளார். ஹாலியா அபு ரிடா குஸா பகுதியில் கான் யூனிஸ் நகரின் கிழக்குபகுதியில் வசித்து வாந்தார். இஸ்ரேலிய படைகளின் ஆக்கிரமிப்பில் அவர் சுட்டு கொல்லபட்டது குறித்து தகவல் சேகரிக்க அந்த பகுதியில் நான் முகாமிட்டு இருந்தேன் .
ஆக்கிரமிப்பின் போது ஒரு இஸ்ரேல் வீரர் ஒரு முதிய பெண்ணை அணுகி தண்ணீர் கொடுத்தார். அதை மற்றொரு வீரர் புகைப்படம் எடுத்தார். பின்னர் அவர் அந்த பெண்ணின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire