lundi 30 avril 2012

பாரீசில் 01 மேதின ஊர்வலம் 14 மணீக்கு rer b --- denfert இல் இருந்து புறப்பட்டு bastille இலில் முடிவடையும்


உரிமைகளை எடுத்துக்கொள்ளும் வரை போராடுவோம்

இலங்கையில் நீண்ட காலமாக சிங்கள இனவெறி அரசுகளின் அடக்குமுறைக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்பேசும்மக்களின் விடுதலையை வென்றெடக்கும் வரை இலங்கையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியில் சமூக முற்போக்கு சக்திகளுடன் ஒன்றினைந்து இலங்கை இன வெறியாழர்களிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம் என தொழிலாழார் தினமான இன்று தொரிவித்துக்கொள்கின்றோம்.


புலிபயங்கரவாதிகளை அழிப்பதற்கான போர் என கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான தமிழ்பேசும் மக்களை அழித்த சிங்கள அரசானது தொடந்தும் தனது இன ஒடுக்குமுறையை பல வடிவங்களில் முன்னெடுத்து செல்கிறது.

சிலை உடைப்புகள், கலாச்சார சின்னங்களை அழிப்பது மட்டுமின்றி அரசமரங்கள் இருக்கும் இடமெல்லாம் புத்தனை குடியேற்றி இன அழிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டது சிங்கள இனவாதம்.

தனிபிரதிநிதிகளாக தங்களை நிலைநாட்ட விடுதலை போராட்டத்தையே அழித்த புலிகள் இன்று இலங்கை இனவாத அரசுடன் இனைந்து செயலாற்றுவதை மறைப்பதற்காக ஐக்கிய நாட்டு அலுவலகம் வெளிநாட்டு துதரகங்கள் முன் தமிழ்பேசும் மக்களிற்கு விடுதலை கேட்டு புலம்புவதாக மக்களை ஏமாற்றி வருகிறது புலி பினாமிகள்.

தழிழ் கூட்டமைப்பு மற்றும் அரசியல் குழுக்கள் தாம் பெற்றுவரும் சலுகைகளை காப்பாற்றி கொள்வதற்காக தழிழ்பேசும் மக்களிற்கான அரசியல் தீர்வை இலங்கை அலசு முன்வைக்கும் என எல்லோரையூம் ஏமாற்றி வருகிறது இக் கூலிக்கும்பல்.

உரிமைகளை கேட்டு பெறுவதற்கு இலங்கை அரசு மனித உரிமைகளின் பாதுகாவலார்கள் அல்ல மக்களே எமது உரிமைகளை நாமே எடுத்துக்கொள்ளும் வரை போராடுவோம்.

 சர்வதேச சமுக பாதுகாப்பு   அமைப்பு   tel-  0630647878                                                                                       

பாரீசில் 01 மேதின ஊர்வலம் 14 மணீக்கு rer b --- denfert இல் இருந்து புறப்பட்டு bastille இலில் முடிவடையும்

நெடுந்தீவை விடுவியுங்கள் ;ரணிலிடம் மக்கள் கோரிக்கை

நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்திருக்கும் கட்சி ஒன்று ஜனநாயக விரோத செயற்பாடுகள் மூலம் மக்களை அடிமைபோல நடத்துகிறது.

இந்த அடிமைத் தளையிலிருந்து நெடுந்தீவு மக்களை விடுவிக்க வேண்டும் என்று நெடுந்தீவு மக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் இந்தமுறை நடத்தவுள்ள மேதின நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று நெடுந்தீவுக்கு சென்றிருந்தனர். 

இதன்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கேட்டபோதே மேற்குறித்த கோரிக்கையை மக்கள் அவரிடம் முன்வைத்தனர்.

இதன்போது பொதுமக்கள் ரணிலிடம் தெரிவித்தவை வருமாறு: ஜனநாயக விரோத செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கட்சி ஒன்று நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்துக்கொண்டு மக்களை அடிமை போல நடத்தி வருகிறது.

இங்கு ஜனநாயகம் என்பது துளியளவும் இல்லை. குறித்த கட்சியின் உத்தரவுகளை மீறுபவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இதனால் நெடுந்தீவில் மக்கள் பீதியுடனேயே வாழ்கின்றார்கள்.

ஜனநாயகச் செயற்பாடுகளுக்காக இங்கு மாற்று அரசியல் கட்சிகள் வருவதைக் கூட அவர்கள் தடை செய்துள்ளனர். அதையும் மீறி வரும் கட்சிகள் மீது கடும் அழுத்தங்களை அவர்கள் மேற்கொள்வார்கள்.


இன்று எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் பயணிப்பதற்குக் கூட எவரும் வாகனங்களை கொடுக்கக் கூடாது என்று எம்மில் பலர் மிரட்டப்பட்டனர். இவ்வாறு அவர்களின் சொற்படி தலையாட்டும் மந்தைகளாகவே எம்மை நடத்துகிறார்கள். இல்லாவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

இப்போது இந்த உண்மைகளை உங்களிடம் தெரிவித்ததால் சில வேளைகளில் வெள்ளை வானிலோ அல்லது வெள்ளைப் படகிலோ நாங்கள் கடத்தப்படும் நிலையும் ஏற்படலாம். என்றனர். இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது, வடக்கில் குறிப்பாக நெடுந்தீவில் அரசியல் கட்சி ஒன்று மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதை நானும் அறிவேன்.

இங்கு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இந்த விடயம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனிவா மாநாட்டிலும் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையை நீக்க வழி செய்யுமாறு நெடுந்தீவுப் பொலிஸ் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன். நாடாளுமன்றத்திலும் இது பற்றி நான் தொடர்ந்தும் குரலெழுப்புவேன். வடக்கில் அபிவிருத்தி இடம்பெறுகிறது என்று வெற்றுப் பேச்சுக்காக மட்டும் கூறுவதை விடுத்து, உண்மையான அபிவிருத்தி இடம்பெற அரசு செயலாற்ற வேண்டும்.

தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறன. எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் ஆலோசனைகளை மதிக்காது மேற்கொண்டதாலேயே இந்தத் திட்டங்கள் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன.

மக்களை ஒன்றிணைப்பதன் மூலமே உண்மையான அபிவிருத்தியை அடைய முடியும். தென்பகுதி மக்களுக்கு உள்ள சுதந்திரம், உரிமையை வட பகுதி மக்களும் அனுபவிக்கவேண்டும். அதற்காகத் தான் மஹிந்த ராஜபக்ஷ என்ற அராஜக அரசுக்கு எதிராக மேதின ஆர்ப்பாட்டத்தை யாழில் நடத்துகின்றோம். நான் வடபகுதிக்கு அடிக்கடி வந்து செல்வதால் எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தென்னிலங்கையில் அரசு கதை கட்டி விடுகிறது.

இதன்மூலம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் பயங்கரவாதிகள் என்ற சாயத்தை அரசு பூசுவதன் மூலம் தென்பகுதி மக்களிடையே இனத்துவேசத்தை வளர்த்து மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்க அது முனைகிறது. தற்போதுள்ள விலைவாசியேற்றத்தை சமாளிக்கக் கூடிய வகையில் சம்பள உயர்வு, மக்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் இரு மாதங்களுக்குள் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளன.


சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு என்பது நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலமே பெறப்பட வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகள் இடம்பெற வேண்டுமாயின் அந்தக் குழுவில் அதற்கான சாதகமான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் மஹிந்த அரசு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேசியே இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியும். என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நெடுந்தீவுப் பயணத்தில் ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

samedi 28 avril 2012

இனி தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு

இனி தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு - அதற்காக சர்வதேச ஆதரவினைத் திரட்டுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இலங்கையில் ஈழத் தமிழர்கள் சுமார் 30 விழுக்காட்டினர் உள்ளனர். 70 விழுக்காடு சிங்களவர்கள் என்பதாலும், பெரும்பான்மைப் பலத்தையே மூலாதாரமாகக் கொண்டு, அந்த மண்ணின் மைந்தர்களாகவும், அந்த நாட்டின் வளத்திற்காகவும் தங்கள் ரத்தம், வியர்வை இவற்றை தம் உழைப்பின் மூலம் தந்த ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, சிங்கள அரசுகள்மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டது. கல்வி வாய்ப்புகள் ஈழத் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது; மொழி உரிமை நசுக்கப்பட்டது. அரசுப் பணிகளில் உத்தியோக வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தப் பட்டது. வடக்கு, கிழக்கு முதலிய முக்கிய பகுதிகளில் வாழ் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைத் திட்டமிட்டே பறித்தது சிங்கள அரசுகள். தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும்! ஒரு கட்டத்தில் தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று தலைநகர் கொழும்பிலேயே விளம்பரப் பலகை வைக்கப்படும் அளவுக்கு சிங்கள இனவாதமும் அதன் விளைவான இனப் படுகொலை (Genocide)யும் நடந்தேறின. இதனால் உருவான உரிமைக் குரல் ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் முழக்கமாகக் கிளம்பியது. ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் நாடாளு மன்றத்திற்குள் நுழைந்த ஈழத் தமிழரின் பிரதிநிதிகளுக் குள்ள உரிமைக் குரல்வளை நெரிக்கப்பட்டது. அதனால்தான் - வோட்டு முறையைப் பயனற்றதாக்கிய சிங்களப் பேரினவாதம் - ஈழத் தமிழர் இளைஞர்களில் பிரபாகரன்களை உருவாக்கக் காரணமாகியது. பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி, ஈழத் தமிழரின் தாகத்தை அடக்கிவிட, இராணுவ பலத்தின் மூலம் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது! பிரதமர் இந்திரா காந்தியின் சரியான அணுகுமுறை! இந்த நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட அந்நாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு - கலாச்சாரத் தொடர்புடையது என்பதாலும், ராஜதந்திர நோக்கில் வல்லரசுகளின் வல்லாண்மைக்கு நீர்ப் பாய்ச்சிட, இலங்கை திரிகோணமலை போன்ற பகுதிகளை மற்ற நாடுகளுக்குத் தளங்களாகப் பயன்படுத்தும் பேராபத்து உருவாகி, இந்தியாவின் இறையாண்மைக்கேகூட அச்சுறுத்தலாக அது அமைந்து விடக் கூடும் என்று கருதியதால் - மிகுந்த தொலைநோக்குணர்வுடன், இலங்கையில் ஜெயவர்த்தனே ஆட்சி நடைபெற்ற நிலையில், அங்குள்ள இளைஞர்கள் இந்திய மண்ணிற்கு வந்து ஆயுதப் பயிற்சி உட்பட பெறுவதற்கு அனுமதிக்கப் பட்டனர். தம்பி பிரபாகரன் தலைமை உருவானது எப்படி? இது காலத்தின் கட்டாயமாகிறது. பல குழுக்களும் பயன் பெற்றன என்றாலும் தெளிவான சிந்தனை உறுதி, ஆற்றல் திறமை - தம்பி பிரபாகரன் தலைமையில் அமைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கே உண்டு என்பதை இறுதியில் உறுதி செய்து, ஈழத் தமிழர்கள் பெரும்பா லோரால் இயல்பாகவே இவர் மூலம் தான் தமிழ் ஈழம் தங்கள் தாகம் - தீர்வு என்பது உருவானது. இதற்கிடையில் இலங்கையில் அரசு மாற்றங்கள் நிகழ்ந்தன. இராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அதிபர் ஜெயவர்த்தனே - ராஜீவ்காந்தி ஒப்பந்தம் (இந்திய - இலங்கை ஒப்பந்தம்) போடப்பட்டது. அப்போதே நம்மைப் போன்றவர்கள் இந்த ஒப்பந்தத்தினால் காதொடிந்த ஊசியளவும் பயன் ஏற்படப் போவதில்லை என்பதை விளக்கி, ஒப்பந்தத்தினை எரித்துப் போராட்டம் நடத்தினோம். விடுதலைப்புலிகளை அடக்க வேண்டியும், ஈழத் தமிழர்களின் உரிமைகளை நசுக்கவும் இலங்கை அரசியல் சட்டம் பலமுறை திருத்தப்பட்டு, பிரிவினை கேட்க முடியாது என்று சட்டம் செய்தனர். அதே பிரச்சினையில் தேர்தலுக்கு நின்ற கூருடுகு TULF என்ற தமிழர் அய்க்கிய முன்னணி 16இல் 15 இடங்களை வென்றும்கூட குரல் கொடுக்க முடியாத நிலை! பிரதமர் ராஜீவுக்குத் தவறான வழிகாட்டுதல்கள் பிரதமர் இராஜீவ்காந்திக்கு வழி காட்டியவர்கள் அந்நாள் பிரதமர் இந்திராகாந்தி அணுகுமுறைக்கு நேர் எதிரானதாகவே ஒரு நிலைப்பாட்டை எடுக்க வைத்தனர். ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க இயலாத வண்ணம் இந்திய அமைதிப்படை வடகிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு இந்திய அரசால் அனுப்பப்பட்ட தானது - ஒரு அதீதமானது. இதனைச் சரியாக பின்னர் உணர்ந்தே பிரதமராக இருந்த வி.பி. சிங் அவர்கள் அந்தப் படையை திரும்ப அழைத்த துணிவான முடிவை எடுத்தார்! (எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற வெளிநாடுகள் தலையிடுவதா என்று கொக்கரிக்கும் சிங்கள அரசின் வீராதிவீரர்கள், இந்திய இராணுவத்தை அழைத்து, தமிழர் உரிமைப் போராட்டத்தை நசுக்கிட ஆயுதப் பறிப்பு முதல் பல்வேறு நிகழ்வுகளை அவை நடத்திட அனுமதித்ததை எவ்வாறு நியாயப்படுத்திட முடியும்?) ராஜீவும் உணர்ந்தார் ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, ஈழத்தில் நடைபெற்று வருவது இனப் படுகொலை தான் என்பதை அங்கே நாப்பாம் நெருப்புக் (Napalm) குண்டுகளை தமிழர் பகுதிகளில் வீசிய செய்திகளைக் கேட்டு, அதை தடுக்கும் மனநிலைக்கு வந்தார்; உண்மை நிலை அறியும் கால கட்டத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டது - மிகப் பெரிய கொடுமை மட்டுமல்ல; வரலாற்றுப் பிழையும், அதன் மூலம் தமிழர் வாழ்வுரிமைப் போரின் பின்னடைவும் ஏற்பட்டது. பிறகு இடையில் எத்தனையோ சங்கடங்களை எதிர்கொண்டாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வில் ஒருவகையான தேக்க நிலையும் உண்டானது என்பது மறுக்க இயலாத உண்மையாகும். வெண்ணெய் திரண்ட நேரத்தில்... இதுவரை உலகில் எந்த ஒரு இராணுவத் தளபதியும் பெறாத ஆற்றலை மாவீரன் பிரபாகரன் பெற்று, கட்டுப்பாட்டாக தனது விடுதலைப்புலி இயக்கத்தின்மூலம் ஈழ உரிமைப் போரினை நடத்தினார். ஆனால் உலக அளவில், சர்வதேசிய மட்டத்தில் தேவையான ஆதரவைப் பெற வேண்டிய நேரத்தில், வெண்ணெய் திரண்டு வந்த நேரத்தில் தாழி உடைந்தது போன்ற ஒரு விரும்பத்தகாத நிலையில், பல்வேறு தடைகள், பின்னடைவுகள், தவறான பிரச்சார மூட்டங்கள் சிங்களப் பேரின விதிகளைப் பலப்படுத்திடும் சூழல்கள் உருவாகின. இந்திய அரசு உட்பட பற்பல நாடுகள் - பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம், ஒழிக்க முயலுகிறோம் என்ற சாக்கில், ராஜபக்சே அரசு பல சர்வதேச உதவிகளைப் பெற்று, தமிழின ஒழிப்பை, ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பறிப்பை, தீவிரவாத ஒழிப்பு முகமூடியைப் போட்டுக் கொண்டு, மிகவும் லாவகமாக நடத்தி, இன்று பல லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசு. இராணுவக் கொடுமை உச்ச கட்டத்திற்குச் சென்று முள் வேலிக்குள்ளும், சிறைகளுக் குள்ளும் சிக்கியுள்ளவர்களுக்கு விரைவில் அரசியல் தீர்வு தருவோம் என்று பல நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, இந்திய மத்திய, அரசும் ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, சிங்கள அரசை வற்புறுத்தாது, மயிலே மயிலே இறகு போடு என்று கூறி இருதலைக் கொள்ளி எறும்பானது; தமிழின விரோத உணர்வாளர் களே இப்பிரச்சினையால் மத்திய அரசின் ஆலோசனைக் குழுவாக ஆனார்கள். இந்தப் பின்னணிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் நிகழ்கால, வருங்கால ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு இனி நாம் எத்தகைய ஆதரவு - வியூகம் வகுக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்! ஜெனிவா தீர்மானம் இனி அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; இனப் படுகொலை - மனித உரிமைகள் பறிப்பு - இவை இன்றைய உலக சூழ்நிலையில் எங்கே நடந்தாலும், சர்வதேச சமூகம் தன் கண்களை மூடிக் கொண்டு வாய்களைப் பொத்திக் கொண்டு, கைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் நிலை கிடையாது என்பது நடைமுறை உண்மை. அதன் வெளிப்பாடு அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி.மூன் மூலம் மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசுமீது மேற்கொள்ளப்பட்ட ஜெனிவா தீர்மானம் போன்றதாகும். இது ஒரு துவக்கம்; சர்வதேசப் பார்வையும், பரிவும் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையின் மீது பட்டுள்ளன என்பதும் ஒரு திருப்பமே! இதற்குப் பிறகும் இராஜபக்சேவின் மனப் போக்கும், அணுகுமுறையும் துளிகூட மாறவில்லை என்பது அவரது ஆணவம் கொப்பளிக்கும் அறிவிப்புகள் மூலம் தெளிவாக உலகத்தார்க்கும் இந்திய அரசுக்கும் புரிந்தாக வேண்டும். இனி கடைசித் தீர்வு என்ன? ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தரவில்லை இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் என்று கூறி விட்டாரே! இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசால் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றப்பட்ட (இலங்கை) அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி மாகாணக் கவுன்சில்களுக்கு (தமிழர் களுக்கு) முழு அதிகாரம் வழங்குவதாக இராஜபக்சே உறுதியளித்தார். இந்தத் திருத்தம்பற்றி இலங்கை அதிபரே என்னிடம் கூறினார் என்று இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் கூறினார். இப்போது அறவே அதை மறுத்து விட்டார் ராஜபக்சே! இந்தக் குழுவால் எந்த ஒரு நல்ல விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை. எனவே, இனி கடைசித் தீர்வு - தமிழ்யீழம் அமைக்கப்பட வெளியில் உள்ளவர்கள் சர்வதேச ஆதரவைத் திரட்டும் வகையில் செயல்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை. மூன்றில் ஒரு பகுதியினர் தமிழர்கள்; அம்மக்களின் உரிமைகள் மதிக்கப்படவில்லை; சிங்களக் குடியேற்றம் ஒரு பக்கம்; தமிழர்கள் முள்வேலிகள் அகற்றப்படாமல் தொடர்ந்து வாடுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வெறும் மருந்துகளால் முடியாத சிகிச்சையை சற்று மாற்றி, அறுவை சிகிச்சையாக நடத்தியாவது நோயாளியைக் காப்பாற்றிட வேண்டியது எப்படி மருத்துவர்களின் மனிதாபிமானக் கடமையோ, அதுபோல நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்புக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான் என்று முழங்கிட, முன் எடுத்துச் செல்ல தயங்கிடவே கூடாது. இதை நாம் 25.3.2012 அன்றே ஒரு அறிக்கை வேண்டுகோளாக வைத்தோம். சர்வதேச சமூகத்தின் பார்வை இப்பிரச்சினைமீது (அய்.நா. தீர்மானம் மூலம்) விழுந்துள்ளதை ஒரு நல்வாய்ப்பாக எடுத்து, முதற்கட்டமாக ஒரு அறவழிப் பிரச்சாரத்தை அடைமழையாகச் செய்ய வேண்டும். மூத்த தலைவர் கலைஞரின் கருத்து முக்கியமானது நேற்று முதல் நாள் (25.4.2012) தி.மு.க.வின் தலைவரும் இந்தியாவில் உள்ள மூத்த தலைவர் களில் ஒருவருமான நமது கலைஞர் அவர்கள், தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு உருவாக வேண்டியது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். நமது குறி - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு நிரந்தரப் பரிகாரம் தேடுவதில்தான் இருக்க வேண்டும். தேவையற்ற விமர்சனங்களுக்கு இடம் தரக்கூடாது. இன எதிரிகளுக்குத் தான் அது தீனியாகி பிரச்சினை திசை திருப்பப்படும் ஆபத்து ஏற்பட்டு விடக் கூடும். எனவே விரைவில் துவக்கும் நல்ல முயற்சிக்கு தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள். நம்மிடை தேவையற்ற வாத - பிரதிவாதங்கள் தேவையில்லை; நாம் எடுத்துக் கூறும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்தை விரைவுபடுத்து வதாக இருக்கட்டும்! தமிழ் ஈழமே தமிழர் தாகம்! கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

jeudi 26 avril 2012

ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் விமர்சன ….கருத்தாடல்

40 வருட வரலாற்றைக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. நேர்மறையானவற்றை உள்வாங்கிக்கொள்ளலும் எதிர்மறையானவற்றை விமர்சித்தலும் மக்களின் தொடரும் போராட்டத்தைச் செழுமைப்படுத்தும். முள்ளிவாய்க்காலில் பேரினவாத அரசு உலக அதிகாரங்களின் அனுசரணையோடு திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னர் நான்கு தசாப்தங்களின் முன்னர் எங்கிருந்து ஆரம்பித்திருக்கிறோம் என்ற விமர்சனத்தை தான் குறித்த சுய விமர்சனத்தோடு நூலுருவில் உருவாக்கியிருக்கிறார் கணேசன்(ஐயர்). ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை « வரலாறு » என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம். “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” விமர்சன ….கருத்தாடல் இசிதோர் பெர்ணான்டோ சஷீவன் வாசுதேவன் சத்தியசீலன் அசோக் யோகன் மற்றும் சத்தியசீலனோடு ஓர் உரையாடல்… ) தலைவர் ; தமிழ் மாணவர் பேரவை ( காலம்: 29.04.2012. ஞாயிறு. பிற்பகல் 2. 30 மணி தொடக்கம் 8.00மணி இடம்: SALLE POLONCEAU 25 , RUE POLONCEAU 75018 PARIS. மெற்றோ: LA CHAPELLE பாதை: place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU அசை – சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் – பிரான்ஸ் 06 19 45 02 76 asai.marx@gmail.com

வழங்கள் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக அறிகின்றேன் இவ்வாறான செயற்பாடுகளை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

கிழக்கு மாகாண வழங்கள் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக அறிகின்றேன் இவ்வாறான செயற்பாடுகளை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் இவ்வாறு நேற்று இடம் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பேசும்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இன்று கிழக்கு மாகாண வளங்கள் வெளி மாகாணங்களுக்கு கடத்தப்படுகின்றன. குறிப்பாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கஸ்ரப்படுகின்ற மணல் அகழ்கின்ற தொழிலாளர்களுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெருமளவு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் குறித்த தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டனர். நான் நேரடியாக மணல் அகழ்கின்ற இடங்களுக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்து உரிய முறையில் மணல் தடையின்றி அகழ்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மணர்களை தடையின்றி ஏற்றிச் செல்வதனையும் எமது மக்கள் கஸ்ரப்படுவதனையும் அனுமதிக்க முடியாது. வெளி மாகாணத்தவர்கள் மண் அகழ்வதனால் 1500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மண் அகழ்வதற்கு அனுமதி கொடுப்பவர்கள் இனிமேல் வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்u

கிழக்கு மாகாண 327 பட்டதாரிஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது

கிழக்கு மாகாண பட்டதாரி மற்றும் டிப்பே;ளோமா ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் இன்று (24.04.2012) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் மாகாண அமைச்சர்களான எம்.ஸ்.உதுமாலெவ்வே, எம் எஸ். சுபைர் ஆகியோரது பங்குபற்றுதலுடன் குறித்த ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி வைபவமானது கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் காலை 11.00மணியளவில் இடம்பெற்றது. மொத்தமாக இன்று 327 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதிலே தமிழ் மொழிமூலமான ஆசிரியர்கள் 256 பேரும் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் 71 பேருக்கும் வழங்கப்பட்டது. தமிழ் மொழிமூலமான ஆசிரியர்களில் கணிதப் பாடத்திற்கு 97 ஆசிரியர்களும் விஞ்ஞான பாடத்திற்கு 40 ஆசிரியர்களும் மற்றும் அங்கிலப் பாடத்திற்;கு 119 ஆசியர்களும் நியமனம் பெற்றார்கள். குறித்த ஆசிரியர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களிலே அதிகளவான ஆசிரியர் பற்றாக் குறைகளை எதிர் கொள்கின்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ. நிஸாம் குறிப்பிட்டார்.

mercredi 25 avril 2012

தனித் தமிழ்ஈழத்திற்கு குறைவான எதையும் ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்

தனித் தமிழ்ஈழத்திற்கு குறைவான எதையும் ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கே.ரங்கராஜனுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவின் தலைவர் சுஸ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ரி.கே. ரங்கராஜன், இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப் போல சொல்லியிருக்கிறார். 1987ல் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகார பரவல் ஏற்படுத்தி கொடுக்க முடியும். ஆனால் அந்த திருத்தத்தை அரை மனதுடன் ஏற்று கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவாக்கி வருகிறது. அதனால் தான் இன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இலங்கையில் தமிழர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும் இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும் சாத்தியம் தானா என்று வினவியிருக்கிறார். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். கடந்த ஜனவரியில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்படுமென அதிபர் ராஜபக்ச உறுதியளித்து விட்டு கிருஸ்ணா இந்தியாவுக்கு திரும்பும் முன்பே அப்படியொரு உறுதியை தான் அளிக்கவில்லையென ராஜபக்ச மறுத்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முழுமையான பேச்சுக்களுக்குப் பிறகு, நாடாளுமன்றக் குழுவை அமைத்து ஒப்புதல் பெறலாமென்று ராஜபக்ச கூறியிருந்தும் கூட அவர் சொன்னதற்கு மாறாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுக்களிலிருந்து இலங்கை அரசு தன்னிச்சையாக விலகிக் கொண்டதென்றும் இப்படி வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினையும் சுட்டிக்காட்டி சுரேஸ் பிறேமச்சந்திரன் விவரித்திருக்கிறார். இலங்கை சென்று வந்த இந்த இந்தியக் குழு வெளியிட்டிருக்கும் செய்திகளில் இருந்து முள்வேலி முகாம்களிலும் சிறைக் கொட்டடிகளிலும் ஆயிரமாயிரம் தமிழர்கள் இன்னமும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பற்றிய தகவல்கள் கூட இல்லை என்பதும் தெரிகிறது. இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள் என்று ரங்கராஜன் சொல்லியிருக்கிறார். தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே.ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து தனித் தமிழ் ஈழம் தான் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில் போட்டியிட்டார்கள். தமிழ்ப் பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். தனித் தமிழ் ஈழம் தான் என்பது 1977ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான தமிழர்கள் சொந்த நாட்டில் தமது உடைமைகளை இழந்து, உறவுகளைத் துறந்து, உலக நாடுகளின் தெருக்களில் அனாதைகளாகவும், அகதிகளாகவும் கதி கலங்கி கண்ணீர் சிந்தியும் மிகப் பெரிய விலையைத் தந்து விட்டதாலும் இலங்கைத் தமிழர்கள் தனித் தமிழ் ஈழத்திற்குக் குறைவான எதற்கும் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதற்கோ, சமாதானப்படுத்திக் கொள்வதற்கோ ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள்.“ இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அக்னி ஏவுகணையை விட விலையேற்றம் ஆபத்தானது

இந்தியாவின் அக்னி ஏவுகணையை விடவும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வாழ்க்கைச் செலவு வானளவு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அக்னி ஏவுகணை சீனா உள்ளிட்ட பிராந்தியத்தின் அண்டை நாடுகளுக்கு ஆபத்து என பலர் கருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் பாரியளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் பொருட்களின் விலை உயர்வடைவதற்கு மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் பிரதான கோஷமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தையும், ஊடக சுதந்திரத்தையும், மக்கள் உரிமையையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

lundi 23 avril 2012

கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில்மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக்குழு துணைத்தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ,மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், நகர சபைத் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கமநெகும, திவிநெகும அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காணி விவகாரங்கள் தொடர்பாக வாக்குவாதமும் இடம்பெற்றது. குறிப்பாக காத்தான்குடி, ஆரையம்பதி எல்லை தொடர்பாக பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

dimanche 22 avril 2012

இந்திய நாடாளுமன்றக் குழுவின் கிழக்குப் பயணமானது எம்மைப் பொறுத்தவரையில் அர்த்தமற்ற ஒன்றாகவே போய்விட்டது

இந்தியாவில் இருந்து வருகைதந்த இந்திய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பிற்கு வந்து பாதிக்கப்பட்ட எந்தப் பொதுமக்களையும் சந்திக்காது இரண்டு வைபவங்களில் மட்டும் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்றமை கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். இந்திய குழுவினர் இந்தியாவில் இருந்து வெளியேறும் போது 'வடக்கு , கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களையும் மீளக்குடியேற்றப்படாதவர்களையும் பார்வையிட்டு அவர்களின் நலன்களை விசாரிக்க வருகின்றோம்" என அறிவித்து இங்கு வந்தனர். ஆனால் கிழக்கிற்கு விஜயம் செய்த இவர்கள் பொதுமக்கள் எவரையும் சந்திக்காது இரண்டு வைபவங்களில் பங்கேற்று விட்டு திரும்பி விட்டனர். இது எம்மைப் பொறுத்தவரை கவலையளிக்கின்ற விடயமாகும். குறிப்பாக கிழக்கிற்கு வரும்போது திருகோணமலையில் முதூர் பிரதேசத்தின் சம்பூரில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் நலன்புரி முகாம்களிலும்;, இடைத்தங்கல் முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 1268 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி, பட்டிதிடல், மணற்சேனை ,கட்டைப்பறிச்சான் ஆகிய கிராமங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலேயே கடந்த 3 வருடங்களாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே இவர்களையாவது இந்திய நாடாளுமன்றக்குழு பார்வையிட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குத் தவறிவிட்டார்கள். இந்திய நாடாளுமன்றக் குழுவின் கிழக்குப் பயணமானது எம்மைப் பொறுத்தவரையில் அர்த்தமற்ற ஒன்றாகவே போய்விட்டது என்றார்.

பிரபாகரன் முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. இரா. சம்பந்தன்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு, கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார். எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான். எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவர் என்று எனது மகன் பதிலளித்தான். சில காலங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தைக் காணவில்லை. அதற்கு என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டபோது, அவர் ஒரு கதாநாயகன் அல்ல என்று புரிந்து கொண்டதால் தான் அதை அகற்றி விட்டதாக மகன் கூறினான். அவனது அந்த முடிவுக்கு அமர்தலிங்கத்தைப் புலிகள் சுட்டதே காரணம் என்று பின்னர் அறிந்து கொண்டேன் என்று ரங்கராஜன் கூறினார். அந்தக் கதையை ரங்கராஜன் கூறி முடித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடங்கினார். போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன். முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள். இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்றார் இரா. சம்பந்தன். இவர்கள் இருவரும் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச, ரங்கராஜனைப் பார்த்து, “விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் முதலாவதாக இருந்தது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். அவர்களின் கொலைப்பட்டியலில் முதலில் இருந்தது எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தான். அதற்கடுத்ததாக இருந்தது யார் என்று தெரியுமா? அது சம்பந்தன் தான் என்றார். அதை நீங்கள் அறிவீர்களா? என்று இரா.சம்பந்தனைப் பார்த்துக் கேட்டார் பசில் ராஜபக்ச. அதற்கு அவர் தனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

samedi 21 avril 2012

TV NEWS

எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்

(20.04.2012) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற குழவினரை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து உரையாடும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையினை தோற்றுவித்த பெருமைக்குரியது இந்திய அரசுதான்.1987ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆகிய இருவருக்குமிடையில் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் தோற்றம் பெற்றதே இன்றைய மாகாண சபை முறைமையாகும். இம் மாகாண சபைக்கென அரசியல் யாப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும். அதனையே நாமும் வலியுறுத்தி வருகின்றோம்.அதே வேளை இதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தேவையும் தற்போது உணரப்பட்டுள்ளன. எனவே இது விடயத்தில் அதாவது மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவுக்கு அதனை தோற்றுவித்ததன் அடிப்படையில் அதிகமான வகிபங்கு இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது என முதலமைச்சர் சந்திரகாந்தன் சுட்டிக்காட்டினார். இந்திய அரசினால் விசேடமாக கிழக்கு மாகாணத்திற்கென பல்வேறு உதவிகள் வழங்கப் படடிருக்கின்றன. அந்தவகையிலே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிற்கான ரயில் போக்குவரத்திற்கான ரயில் பஸ் வண்டிகள், பேருந்து பஸ் வண்டிகள், கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்கில் 1260 கணணிகள் மற்றும்218 பிரின்றர்கள் வழங்கியமை, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பாரியளவிலாள இயந்தியரங்களைக் கொண்டமைந்த தொழில் பயிற்சி நிலையத்தினை மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைத்து தந்தமை, கிழக்கு மாகாணத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுவசதிகளை எற்படுததி தந்தமை குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு 4000வீடுகள் வழங்கியமை. அத்தோடு மிக முக்கியமாக யுத்த்தினால் கணவனை இழந்திருக்கின்ற பெண்களுக்கான சுயதொழில் முயற்களை மேற்கொள்வதற்காக இந்திய சேவா அமைப்பின் ஊடாக உதவி வழங்கியமை என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவைகள.; எனவே இதற்காக இந்திய அரசிற்கும் இந்திய மக்களுக்கும் எமது கிழக்கு மாகாண மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் முதலமைச்சர் சந்திகாந்தன் தனதுரையில் குறிப்பிட்டார்.

கருணாநிதி மீது கோத்தபாய சீற்றம்

தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்தே , அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சாடியுள்ளார். அவர் மேலும், இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில்தான் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க முடியாது. தமிழீழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கைவாழ் தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான ஒரு தந்திரோபாயமே. எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது. அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை அநேக தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

vendredi 20 avril 2012

ஏன் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்

“தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில், பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்கிற கருத்தை உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதே கருத்தைக் கொண்டது. நாங்கள் பயங்கரவாதத்திற்கு தயாராக இல்லை. தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எதிராக, இலங்கையில் சிங்களர்களால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும், நடைபெறக் கூடாது என்பதற்காகத் தான், நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம். இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங்கை அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள், இங்கே நிம்மதியாகத் தான் இருக்கிறார்கள். அதனால், இந்திய அரசை விட்டுப் பிரிந்து போகவேண்டிய அவசியம் இப்போது இல்லை.” என்று கருணாநிதி தெரிவித்தார். முதலில் ஈழத்தில் மக்கள் சாரி சாரியாகக் கொல்லப்பட்ட போது தமிழ் நாட்டில் போராடியவர்களை அழித்ததை கருணாநிதி மறந்தாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இரண்டாவதாக இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் அழிக்கப்படுவதற்கு இலங்கைப் பேரினவாத அரசுகளுக்கு பின்பலமாக அமைவதே இந்திய அரசு தான் என்பதை தமிழ் நாட்டு அரசியல் வியாபாரிகள் மறுத்தாலும் மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். இன்று ஜெயலலிதா தமிழின நாடகம் நடத்தும் வேளையில் அதற்கு எதிர் நாடகத்தை கருணாநிதி தனது பாணியில் முன்வைப்பதைப் மக்கள் இலகுவாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

மீண்டும் புதியதொரு ஆயுதம்,

இலக்கிய படைப்பை வேட்டையாடும் கலையோடு ஒப்பிடும் பொழுது... வனம், அதில், சுதந்திரமாக ஓடி திரியும் மிருகங்கள்...ஆகாயம், அங்கு எரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள்...நிலவு, அதன் பால் ஒளி... அங்கு வேட்டயாடபோகும் இலக்கியவாதி எப்படியான வேடனாக இருக்க வேண்டும் ? காடு, மலை, பாலைவனம், குளிர்ந்த துருவ நிலபரப்பு என்று எல்லா நிலபரப்பிலும் வேட்டையாட துணியும் வேடனாக எழுத்தாளனும் அமைந்துவிட்டால் ! ஆயுதங்கள் ஏதும் இல்லாத வேடனாக சுதந்திரமாக திரியும் வேடனாக, விலங்கு ஒன்று தென்படுகிறதா ? பசிக்கின்றதா ? உடனே ஆயுதம் ஒன்றை தயாரித்துக்கொண்டு வேட்டையாடு... விழுந்த விலங்கினை புசி...பசியாறு...தயாரித்த ஆயுதத்தை அங்கேயே விட்டுவிட்டு நட.... மீண்டும் வேட்டையாட வேண்டிய நிபந்தனையா ? மீண்டும் புதியதொரு ஆயுதம், மீண்டும் புதியதொரு வேட்டை, மீண்டும் புதியதொரு செங்குருதி, மீண்டும் புதியதொரு பசி, மீண்டும் புதியதொரு பசியாறல், கொண்ட்டாட்டம்... மீண்டும் அங்கேயே ஆயுதம் களைப்பு... மீண்டும் சுதந்திர நடை, நடனம், மாதிரி இல்லாத மனிதன். நிரந்தர கட்டமைப்புகள் இல்லாத உலகம், இலக்கியம், அதுவே சுதந்திரம், அதுவே புதுமை, அதுவே இளமை... Appadourai Arvind

அதிகாரத்தை பரவலாக்குவது இந்தியப் பாராளுமன்றத்தின் வேலையல்ல :ஜா.ஹெ.உறுமய

இலங்கையின் அரசியலமைப்பை நிறைவேற்றுவதும், அதிகாரத்தை பரவலாக்குவதும் இலங்கைப் பாராளுமன்றத்தின் வேலையே தவிர இந்தியப் பாராளுமன்றத்தின் வேலையல்ல என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் நாட்டின் இறைமைக்கு அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு உண்மைகளை அறிந்துகொள்வதற்காக இந்திய பாராளுமன்றக் குழுவினர் வந்துள்ளமையை வரவேற்கின்றோம். ஆனால் இலங்கையின் இறைமைக்கு இக்குழு கட்டுப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் புலி இயக்க ஆதரவாளர்களும் உலகம் பூராகவும் பிரசாரம் செய்யும் பொய்யான கருத்துக்களை இந்தியக் குழு கவனத்தில் கொள்ளாது பொதுவாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மேலகம் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும். அதன்போது உண்மை நிலைமையை அறிய முடியும். இம்மக்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் வாழ்கின்றனர். யாழ்ப்பாணம், வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களின் பின்னடைவுக்கும் அவர்களது இன்றைய நிலைமைக்கும் இலங்கை அரசாங்கமோ சிங்கள மக்களோ பொறுப்பாளிகள் அல்லர். தமிழ் நாட்டிலுள்ள தமிழ் இனவாத பிரிவினைவாத சக்திகளின் ஆசிர்வாதத்துடன் இயங்கிய விடுதலைப் புலிப் பயங்கரவாதமே, தமிழ் மக்களின் இன்றைய நிலைமைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். சிங்கள, முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்காக அழித்தொழித்து 3 இலட்சத்திற்கும் மேலான மக்களை வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றினர். இதனை இந்தியக் குழுவினர் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடுக்கின்றனர். இதுதான் உண்மை. இந்தியாவில் பிரச்சினைகள் தொடர்பில் நாம் தலையிடுவதில்லை. அதேபோன்ற கொள்கையை இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரத்தைப் பரவலாக்குவதும், அரசியலமைப்பை நிறைவேற்றுவதும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தேவையாகும். அது இந்தியப் பாராளுமன்றத்தின் வேலை அல்ல. இலங்கையில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும் இந்தியா சென்று கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இச் செயலானது எமது நாட்டின் இறைமையை அகௌரவப்படுத்தும் செயலாகும் என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்ற மாட்டுத்தொழுவம் ஒரு சிறைகூடம்.

80 களில் ஆரம்பித்து வன்னி இனப்படுகொலை வரை, பெரும்பான்மையான இந்திய அரசியல்வாதிகள் தமிழின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். இன்று ஈழம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர்வடிக்கும் கருணாநிதியோ, இந்திய பார்பனீய அதிகாரத்தின் தமிழ் நாட்டு அடியாளான தமிழின விரோதி ஜெயலலிதாவோ நடத்துகின்ற சூதாட்டத்தில் நசுங்கி மாண்டுபோகின்றவர்களுள் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகளும் அடங்கும். ஒரு சமூகத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கப் போவதாக வரிந்து கட்டிக்கொண்டு உணர்ச்சி அரசியல் நடத்தும் ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் தனது கொல்லைப் புறத்தில் அகதிகள் மிருகங்கள்போல நடத்தப்படுவது தெரியாதா என்ன? இவர்களுக்கும் மேல் புலம் பெயர் நாடுகளில் மில்லியன்களை சுருட்டிக்கொண்ட ‘தேசிய வியாபாரிகள்’ இந்த அடிமைகள் குறித்துப் பேசுவதே கிடையாது. செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்ற மாட்டுத்தொழுவம் ஒரு சிறைகூடம். அங்கும் ஈழ அகதிகள் சிறை வக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டுகொள்வதற்கு யாரும் முன்வந்ததில்லை. செங்கல்பட்டு முகாமில் சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற உணர்ச்சி அரசியல் வியாபரிகளது காலடிகூடப்பட்டதில்லை. தமிழின விரோதி ஜயலலிதாவினதும், காப்ரேட் கருணாநிதியினதும் கோரப்பிடிக்குள் ஆண்டாண்டுகளாகச் சிக்கித் தவிக்கும் இந்த அடிமைகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

முன்னாள் போராளியான மாணவியைக் கொன்றது யாழ்.பல்கலைக்கழகம்?! – வெளித்தெரியாதவை!

வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் சரிதம் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரக்கத்தனமற்ற பகிடிவதை, அதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என கொடுமைகள் நீண்டு செல்கின்றன. கடந்த வாரத்திலும் இதற்கு உதாரணமான சம்பவங்கள் உண்டு.பெளஜிகா என்ற யாழ்.பல்கலைக் கழகத்தின் 3ம் வருட பொருளியல் துறை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் நேற்று வெளிவந்தன. இது குறித்து சரிதம் ஆசிரியர் பீடம் ஆழ விசாரித்ததில் அந்த மாணவியை தற்கொலை செய்ய தூண்டியது பல்கலைக்கழக நிர்வாகமும் அவரின் உறவினருமே என்ற தகவல் வெளிவந்திருக்கின்றது. குறித்த மாணவி 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது தனது தாய் தந்தை உள்ளிட்ட அனைத்து குடும்ப அங்கத்தவர்களையும் இழந்திருக்கிறார். முன்னாள் போராளியான குறித்த மாணவி போர்ச்சூழலில் படுகாயப்பட்ட நிலையில் நலன்புரி நிலையம் வந்துள்ளார். அதிலிருந்து ஏற்கனவே கிடைத்திருந்த பல்கலைக்கழக அனுமதியினால் (உயர்தரம் – 2007) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்தார். அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்கலைக்கழகமும் வெளிநாட்டிலிருக்கும் ஒன்றுவிட்ட சகோதரனும் செய்த உதவிகளால் தான் கல்வியைத் தொடர்ந்திருக்கின்றார். ஆயினும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தடவைகள் நண்பிகளிடம் அழுதரற்றியிருக்கிறார். காலம் செல்ல செல்ல உற்றாரை இழந்ததன் துயரத்தை அனுபவித்து இரவிரவாக அழுதிருக்கிறார். அவ்வேளைகளில் பல்கலைக்கழக விடுதி நண்பிகள் ஆதரவாயிருந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அதிகரித்த சிங்கள மாணவர்களின் வருகையினால் இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி விடுதி நிர்வாகம் முதலாம் மற்றும் இறுதி வருட மாணவர்களை மட்டும் விடுதியில் தங்க அனுமதியளித்துள்ளது. ஏனைய வருட மாணவர்கள் குறித்த திகதிக்குள் வெளியேறும்படி பணிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த மாணவி தனது நிலையை பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பதிவாளரிடம் பல தடவைகள் எடுத்துகூறியும் கடிதம் எழுதியும் வந்துள்ளார். ஆயினும் வெளியில் வாடகை அறை எடுத்து தங்கும் படியும் அதற்கான வாடகையை தாம் பொறுப்போற்பதாகவும் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அவரின் தயை கூர்ந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது. ஏற்கனவே தனக்கு யாரும் இல்லை என அடிக்கடி சொல்லி வேதைனைப்படும் மாணவி வேறு வழியின்றி வாடகை அறைக்கு போய் சிலகாலம் தனிமையில் இருந்திருக்கின்றார். அப்போது நண்பிகளைக் காணும் போதெல்லாம்தான் தனித்து விடப்பட்டிருப்பதை பற்றி அதிக வேதனைப்பட்டு அழுதிருக்கின்றார். தான் அம்மாவிடம் போகப் போவதாக சொல்லியிருக்கிறார் (தாயாரும் உயிருடன் இல்லை). இந் நிலையில் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். குறித்த உறவினர்களுக்கு மாணவி தொடர்பில் ஈடுபாடு இல்லை எனவும் இவருக்கு பணம் அனுப்புவது அந்த வீட்டுச் சகோதரன் என்பதால் உறவினருக்கு இவர் மீது வெறுப்பிருந்தது எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் மிகவும் உளத்தாக்கத்துக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றார். தற்கொலை என்பதில் கூட சந்தேகம் உண்டு. இதற்கு முதலும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உளத்தாக்கத்துக்குள்ளான மாணவனொருவனை யாழ்.பல்கலைக்கழகம் இழந்திருந்தது. இது இரண்டாவது. முள்ளிவாய்க்காலே பாதுகாத்து அனுப்பிய இன்னும் எத்தனை மாணவர்களை யாழ்.பல்கலைக்கழகம் பலியெடுக்கப்போகிறதோ? என்ற ஏக்கம் சக மாணவர்களைத் தாக்கியிருக்கின்றது. சமூகத்தின் உயர் நிலைக் கல்வியை வழங்கிவருகின்ற யாழ்.பல்கலைக்கழகம் மாணவர்களின் நலனிலும் அவர்களது உள நிலையிலும் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இன்னும் பல உயிர்ப் பறிப்புக்களைத் தடுப்பதற்கு தம்மாலான ஒத்துழைப்புக்களையாவது வழங்கினாலே ஏதிலிகளுக்கு போதுமானதாக அமையும் என்று சரிதம் ஆசிரியர் பீடம் எதிர்பார்த்து நிற்கிறது.

mercredi 18 avril 2012

மில்லர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவில் கிழக்கு முதல்வர் கலந்து கொண்டார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கிண்னையடி மில்லர் விளையாட்டு கழகத்தினால் (16.04.2012) கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு விளையாட்டு கழகத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இவ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசில்கள் வளங்கி வைத்தார் இந் நிகழ்;வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், ஆலைய குருக்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தியக் குழுவின் கேள்விகளால் நிலைதடுமாறிய இலங்கை அரசு

கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு. ஐ.தே.க., தமிழ்க் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன் இலங்கை அரசின் காலத்தை இழுத்தடிக்கும் கபடத்தையும் அக்குவேறு ஆணி வேராகப் புட்டுப்புட்டு வைத்தன. இதனால் அரச தரப்பு பெரும் சங்கடத்துக்குள்ளானது. உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியது. இதன்போதே மேற்கண்ட சங்கடத்தை அரசு சந்திக்க நேரிட்டது. மேலும், இனப் பிரச்சினைக்கு இலங்கை அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அது முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று வலியுறுத்திக் கூறியுள்ளது. அத்துடன், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் இந்தியக் குழு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுக்கள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் அந்தக் குழுமுழுமையாக ஆதரித்துள்ளது. இதேவேளை, இலங்கை அரசியல் தொடர்பில் இந்தியக் குழு தொடர்ச்சியாக பல்வேறு கோணங்களில் கேள்விக்கணைகளைத் தொடுத்தது. அடுத்தடுத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் திக்குமுக்காடிப்போயினர். இதற்கிடையே, கொழும்பு வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழு நேற்றுக்காலை முதற்கட்டமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்பின்னர், இந்தியக் குழு இலங்கை நாடாளுமன்றுக்கு சென்றது. அங்கு சென்ற குழுவை சபை முதல்வர் நிமல் சிறிபாலடி உரிய மரியாதைகளுடன் வரவேற்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்காக தீர்வு விடயம், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காரசாரமான கருத்துப் பறிமாற்றல்களும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சந்திப்பின்போது, முதற்கட்டமாக, இலங்கை அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெளிவுபடுத்திக் கொண்டிருக்கையில், "இலங்கை அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து உங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எங்களுக்கு புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துங்கள்'' என இந்திய குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் அமைச்சரிடம் கூறினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளோம்.இதற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறிக்கொண்டு செல்கையில், இடைநடுவில் குறுக்கிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., அரச தரப்பின் கபடத்தனங்களை புட்டுவைத்தார். இதனால் அரச தரப்பினர் வாயடைத்துப் போயினர். "நாங்கள் இலங்கை அரசுடன் 2011 ஆம் ஆண்டு முதல் பேச்சு நடத்துகின்றோம்.ஆனால் இதுவரையில் கண்டப் பயனேதுமில்லை. இன்னும் இவர்கள் புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். நாம் எமது தீர்வுத்திட்ட வரைவை அரச தரப்பிடம் கையளித்துள்ளோம். ஆனால் அரசு தமது தீர்வு என்னவென்பது குறித்து இன்னும் தெளிவுப்படுத்தாமல் காலம் கடத்துகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுகள் மூலமாகவே தீர்வுக்காணப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம். இதற்கு ஒத்துழையாத அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கையாளப்போகும் விவகாரம் எமக்கு சந்தேகமாகவே உள்ளது. பேச்சில் முதலில் இணக்கம் அதன்பின்னரே தெரிவுக்குழு விடயம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்'' என்று சம்பந்தன் எம்.பி. இந்தியக் குழுவினருக்கு விரிவான விளக்கமொன்றை அளித்தார். சம்பந்தன் எம்.பியின் விளக்கமளிப்பையடுத்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா ஜோன் அமரதுங்க எம்.பி., "அரசு கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சில் முதலில் ஒரு இணக்கத்தை எட்டவேண்டும். கூட்டமைப்பு இல்லாமல் தெரிவுக்குழுவுக்கு செல்ல முடியாது.கூட்டமைப்பு சென்றால் தாமும் செல்வோம் எனக் திட்டவட்டமாக இடித்துரைத்தார். இலங்கை அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களை மிகவும் நிதானமான முறையில் செவிமடுத்த இந்தியக் குழு, மீண்டும் இலங்கை அரச தரப்பினரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தது. "ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுக்களின் மூலம் தீர்வுக்காணப்ட வேண்மென்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இதனை அரசு ஏற்க மறுப்பது ஏன்?'' என்று இந்தியக் குழு கேட்டது. இந்தக் கேள்விக்கு அமைச்சர் நிமல் மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசால் காலவரையறையொன்றை வழங்கமுடியுமா என இந்திய எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்தால் முடியும் என இலங்கை அமைச்சர் நிமல் பதிலளித்துள்ளார். அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள் இந்தியக் குழு, தமிழர்களுக்கு இலங்கை அரசு நீதியை வழங்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 13 பிளஸ் குறித்து அரசு பேசுகின்றது. ஆனால் அந்த பிளஸ் என்னவென்று தெரியவில்லை.13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

தனி ஈழம் அமைப்பது குறித்து .கருணாநிதி

இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழ் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள அவர் ஐ.நா. இதை செயல்படுத்துவதற்கு இந்தியா ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ___

mardi 17 avril 2012

இல்ங்கை இரானுவம் சரனாகதி சுப்பிரமணிய சாமிக்கு அழைப்பு!


இலங்கை சமாதான முற்சிகள் என்ற தலைப்பில் இலங்கைக்கு வந்து உரையாற்றி சிறப்பிக்குமாறு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் ஓகஸ்ட் மாதம் பாதுகாப்புத் துறையின் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு இலங்கை இராணுவம் சாமியை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கருத்தரங்கில் சமாதான முயற்சிகள் மற்றும் சமாதானம் குறித்துப் பேசுமாறு சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எழுத்துப் பூர்வமாக இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆனால் சாமி இதை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய எம்பிக்கள் குழு கிழக்கு முதல்வருடன் சந்திப்பு தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்வார் .

இலங்கைக்கு இன்று (15.04.2012) வருகை தந்துள்ள இந்திய மக்களவை எதிர்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான எம்பிக்கள் குழு எதிர்வரும் 20.04.2012 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கிழக்கின் நிலவரம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தினை திறந்து வைப்பதுடன் இந்தியாவின் சேவா அமைப்பினால் கிழக்கு மாகாண விதவைகளுக்கு வழங்கப்படுகின்ற தொழில்பயிற்சி நெறியினையும் பார்வையிட இருக்கின்றார்கள். வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இருக்கின்ற மேற்படி தொழில்பயிற்சி நிலையத்தை பார்வையிடுவதுடன் , முதலமைச்சருடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை இந்திய குழு ஆராயக் கூடாது: ஜாதிகஹெல உறுமய கூறுகிறது

இலங்கை வரும் இந்திய சர்வகட்சிகளின் பாராளுமன்ற தூதுக் குழுவினர் வடக்கு மக்களின் விடயங்களையோ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவோ ஆராயக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்டமையாலேயே இலங்கையில் யுத்தம் ஏற்பட்டது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து தமிழ் மக்களும் பாரியளவிலான அழிவுகளை சந்தித்தனர். இவ்வாறானதொரு பேரழிவுகளை மீண்டும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு இந்தியா உருவாக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், சர்வ கட்சிகளும் உள்ளடங்கிய இந்திய பாராளுமன்றக் குழுவினர் இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றனர். இவர்களது வருகையானது எந்த வகையிலும் உள்நாட்டின் தேசிய அரசியலை பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது. ஏனெனில் இந்தியாவிற்கு இலங்கை விடயங்களில் தலையிட உரிமையோ அதிகாரமோ கிடையாது. இலங்கை ஒரு போதும் காஷ்மீர் விடயத்திலோ தமிழ் நாட்டு அரசியலிலோ தலையிட்டது இல்லை. வன்னி மக்களின் விடயங்களை ஆராய்வதாக கூறி உள்நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த இலங்கை வரும் பாராளுமன்றக் குழு முயற்சிக்கக் கூடாது. நாட்டில் பெரும் பின்னடைவுகளை சந்திக்க மூல காரணமாக இருந்த புலிகளுடனான யுத்தம் ஏற்பட இந்தியாவின் தலையீடு முக்கியமானதாக அமைந்திருந்தது. இதனை அனைவரும் அறிவர். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்பது உள்நாட்டு விவகாரம் இதனை ஆராய வெளிநாடுகள் முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை வரும் இந்திய தூதுவர் குழு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்நாட்டு விடயங்களில் தலையிடவோ அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கவோ முயற்சிக்க கூடாது எனக் கூறினார்.

lundi 16 avril 2012

விஜேவீர.பிரபாகரன் .கொலைக்கும் உள்ள வித்தியாசம் - விளக்குகிறார் நிமல்கா பெர்னான்டோ

ஜேவிபி என்பது இலங்கையின் இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டாலும் அது சிங்கள தேசியத் தன்மையையும் கொண்ட இனவாதக் கட்சியாகவே கடந்து வந்துள்ளது. தமிழ் மக்களை எதிரிகளாக கட்டமைத்துத் தான் அது தன்னை வளர்த்துக் கொண்டது. இந்தியாவையும் எதிரியாகப் பார்த்தது, தமிழ் மக்களையும் எதிரியாகப் பார்த்தது. ஜேபிவியினருக்கும் ராஜபக்ச குழுவினருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இவர்கள் இருவருமே இனவெறியர்கள்தான் அதனால்தான் பிரச்சினை யாரோடு என்பதைப் பார்க்காமல் அவர்களின் வம்சத்தையே அளிக்கும் அல்லது அவர்களின் தலைமுறையையே நிர்மூலமாக்கும் இனவெறிப் பாசிசத்தைக் கொண்டிருக்கிறார்கள். விஜேவீர கொலைக்கும் பிரபாகரன் மற்றும் போராளிகளின் குடும்பங்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.

dimanche 15 avril 2012

70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ்

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார். இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வேத சுகாதார ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர். ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் . இந்த அறிக்கையில் ; பிறந்துள்ள 70 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்கள் எய்ட்ஸ் நோயுடன் இருப்பதும், மேலும் மலேரியா , காசநோய் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மாநில நடவடிக்கை கமிட்டி கட்டுப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் இந்த எய்ட்சை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்றார். உலக வங்கி நிதி வழங்கியது: நைஜீரியாவில் எய்ட்ஸ்சை ஒழிக்க 255 மில்லியன் டாலர் நிதியாக உலக வங்கி வழங்கியுள்ளது. உலக சுகாதார கணக்கின்படி, இங்கு நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில்தான் இந்த எய்ட்ஸ் அதிகம் பரவுவதாகவும், இதன் கொடூரத்தை புரிய வைக்க தீவிர பிரசாரம் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் குறித்து திமுத்து ஆட்டிகல

கடந்த செவ்வாய் 10.04.2012 அன்று இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக லண்டனில் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது என திமுத்து ஆட்டிக்கல குறிப்பிட்டார். தான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் அதன் முன்பாகவும் பல நாடுகளில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன என்றும் இதில் லண்டன் நிகழ்வு குறிப்பிடத்தக்கது என்றும் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டார். தனது தோழி ஒருவர் ஊடாக ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்து கொண்டதாகவும், முதல் தடவையாக தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து நடத்திய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இதுவரை காலமும் இந்த இரண்டு சமூகமும் இணைந்து போராட முடியாது என்ற விம்பம் தரப்பட்டிருந்ததாகவும் இந்த இணைவு தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ராஜபக்ச சர்வாதிகாரத்தை அழிப்பதற்குரிய ஒரே வழிமுறை ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் இணைந்து போராடுவது மட்டுமே என்றும் அதற்கு முன்னுதாரணமாக இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.

வருடமொன்றிற்கு 70000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி

.
ஆனையிறவு உப்பளங்களில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை 2013 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பிரதாய தொழிற்துறை மற்றும் சிறிய தொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளர் அஜித் ஏகநாயக தெரிவித்துள்ளார். இதனை மீண்டும் ஆரம்பிப்பதால் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் அஜித்ஏகநாயக மேலும் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட கால யுத்தம் காரணமாக ஆனையிறவில் உப்பு உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இன்று யுத்தமற்ற சூழ்நிலையில் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். யுத்தத்திற்கு முன்பு இங்கு வருடமொன்றிற்கு 70000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இதனை ஆரம்பிப்பதன் மூலம் அந்த இலக்கை அடைவதே எமது நோக்கமாகுமென்றும் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

பிரான்ஸுக்கான தூதுவர் தயானை நாடு திரும்புமாறு அரசு பணிப்பு!

பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலகவை உடனடியாக நாடு திரும்புமாறு இலங்கை அரசு அறிவித் துள்ளது. இலங்கையில் ஜனநாயக மறுசீரமைப்பு ஏற்படுத் துவது தொடர்பில் அரசாங்கம் மியன்மாரிடம் இருந்து பாடங் களை கற்றுக் கொள்ள முடியும் என தூதுவர் தயான் ஜெயதிலக கூறியிருந்தார். அவரின் இக் கருத்தால் ஆத்திரமடைந்த இலங்கை அரசு அவரை உடனடியாக நாடு திரும்புமாறு பணித்துள்ளது.

13ஆவது அரசியல் அமைப்பின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுவழங்கக் கோருகிறார் ரணில் விக்கிரமசிங்க

13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த அதிகாரப்பகிர்வு இலங்கையில் வழங்கப்படவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து கிறார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோதே அவர் இதனைக்கூறியுள்ளார். இந்தியாவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் எதிர்க்கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித் துள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கப் பெறுமானால் அது இலங்கை யரின் விருப்பத்துக்கு அமையவே நிகழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் செயற்படுகின்றது. இந்நிலைப்பாட்டை ஏனைய கட்சிகளும் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை ரணில் விக்கிரமசிங்க சந்தித்த போது சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இருந்ததாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

samedi 14 avril 2012

அக்னி 5 ஏவுகணை சோதனை செய்ய இந்தியா திட்டம்

.
புதுடில்லி: சுமார் 5 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை ஏப்ரல் 18 முதல் 20ம் தேதிக்குள் நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளன. இந்தியாவின் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மற்றும் சீனா தீவிரமாக கண்காணிக்க உள்ளது

vendredi 13 avril 2012

அமெரிக்கா அழைப்பு.ஜனநாயக நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய ஜனநாயக நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், உலகம் முழுவதிலும் வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு பண்டிகை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது. நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சுபீட்சமானதும் ஜனநாயாகமானதுமான இலங்கையை கட்டியெழுப்ப முயற்சி எடுக்க வேண்டும். கடந்த 150 ஆண்டுகளாக இலங்கையுடன் பேணி வந்த உறவுகளைப் போன்றே தொடர்ந்தும் சிறந்த உறவுகளைப் பேண அமெரிக்கா விரும்புகிறது. இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவளிக்கும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதுமான இலங்கையை உருவாக்க உள்நாட்டு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என ஹிலாரி கிளின்ரன் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்திப்பதே தங்களின் முக்கிய நோக்கம்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்,

இனமோதலில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு இலங்கையில் முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்களின் செயற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவே தாங்கள் இலங்கை செல்வதாகவும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் அதிமுக சார்பில் ஒரு உறுப்பினர் இடம்பெறுவார் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த குழுவிலிருந்து தனது உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக அ இ அ தி மு கவின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமை திடீரென்று அறிவித்திருந்தார். இந்திய நாடாளுமன்ற குழுவினரின் பயணத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறல்களை கேட்டறியவும் வாய்ப்பு இல்லாததால், தமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்த நாடாளுமன்றக்குழுவினர், இலங்கைக்குச் செல்லும் பயணத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் பார்ப்பதை விட, இலங்கை அமைச்சர்களை சந்திப்பது, ஜனாதிபதியுடன் விருந்து போன்ற விஷயங்களே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதால் இதை அதிமுக புறக்கணிப்பதாக அவர் கூறியிருந்தார். ஜெயலலிதாவின் இந்த விமர்சனம் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சுதர்சன நாச்சியப்பன் ஜெயலலிதாவின் விமர்சனம் சரியல்ல என்றார்.

அதிமுக விலகியதால் புதுடெல்லி அதிர்ச்சி – பயணத் திட்டம் கைவிடப்படலாம் என்கிறது இந்திய ஊடகம்

சிறிலங்காவுக்கு அனுப்பப்படவுள்ள இந்தியா நாடாளுமன்றக் குழுவில் இருந்து அதிமுக திடீரென விலக்கி கொண்டது, புதுடெல்லியில் கடும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தக் குழுவின் பயணம் தொடர்பான முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் சிறிலங்கா செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிகாரபூர்வமாக பெயர்கள் வெளியிடப்படா விட்டாலும், கடந்தவாரமே சில பெயர்கள் கசிந்தன. பொதுவாக சிறிலங்கா குறித்த பிரச்சினைகளை, தீவிரமாக கையிலெடுத்து, ஆணித்தரமாக குரல் எழுப்பும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் நாடாளுமன்ற கீழவையில் கணேசமூர்த்தி மற்றும் மேலவையில் டி. ராஜா போன்றவர்கள் தான். ஆனால், இவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற அமைச்சகத்தில், இதுபற்றி அவர்கள் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதாக பதில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பார்த்தால், கடந்தமுறை சிறிலங்கா சென்ற குழுவில் திருமாவளவனுக்கு, எந்த அடிப்படையில் இடம் கிடைத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில் நான்கு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள். பா.ஜ.க சார்பில் சிறிலங்கா விவகாரங்கள் குறித்து ஓரளவு தெளிவாக புரிந்து வைத்திருப்பவரும், இந்த விடயத்தை அந்தக் கட்சி சார்பில் கையாண்டு வருபவரும் வெங்கையா நாயுடு தான். சிறிலங்கா விவகாரங்களுக்கு பா.ஜ.கவில் பொறுப்பு வகிப்பவர் யஸ்வந்த் சின்கா. இவர்களுக்கு இடம் அளிக்காமல் பல்பீர்புஞ்ச் என்பவர் செல்லவுள்ளார். சிறிலங்கா பிரச்சினையில் வடமாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதிகளவில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரல்களும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் விருப்பதிற்கு ஏற்ற வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்றத்திற்காக, இந்தியா வழங்கிய, 500 கோடி ரூபா பற்றியும், அதன் செலவு குறித்தும் ஆராய்வதே, இந்தக் குழுவின் மையமாக வைக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்தது இந்திய எம்.பிக்கள் குழு வருகை

இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்வது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளதாக அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் மக்களின் இனவாத பிரிவினர் கூறும் பொய்யான கூற்றுக்களைத் தவிர்த்து சிறிலங்காவில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று இந்திய எம்.பி.க்களினால் புரிந்துகொள்ள இந்த விஜயம் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் மனிதப் பேரவையில் இந்தியா எதிராக வாக்களித்தமைக்காக அதனுடனான உறவு எந்த வகையிலும் பாதிக்காதெனவும், அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

mercredi 11 avril 2012

உயிருடன் இருந்தபோது பிரபாகரனால் பெற்றுத் தரமுடியாத தமிழீழத்தை, அவரது வெற்றுடலை வைத்துப் பெறலாம் என்று நினைக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

மருதமுனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ச அரசுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றியதாக புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப்பெரிய விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்த போது, தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்ட ரவூப் ஹக்கீம், கம்பன் விழாவில் உரையாற்றுவதா, அந்த விழாவைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையின் மீது சுமத்த ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆள் தேடும் வேட்டைக்கு நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாதது சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக, அவசரப்பட்டு கொண்டு வரப்படும் தீர்மானத்தால் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடைய முடியாது. இது சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு துருவப்படுத்தப்படப் போகிறது என்று தான் ஜெனிவாவில் கூறினோம். அது தான் இன்று நடந்துள்ளது. இரண்டு பக்கங்களிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தை பெற்றுத்தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் அதனை பெற்றுத்தரும் என்று புலம்பெயர் தமிழர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஜெனீவாவில் இந்தியா, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது எல்லா சமூகங்களிடையேயும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பிக்கும் போது இவ்வாறான ஓர் பிரச்சாரம் கிடைப்பது அதிர்ஸ்டவசமானது.

முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சாரப் பிரிவை பாராட்ட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடத்தல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நகைச் சுவையாக மாற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னணி சோசலிச கட்சி பாரியளவில் பிரச்சாரம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பல மில்லியன் ரூபா செலவிட்டிருந்தாலும் இந்தளவுக்கு கட்சியை பிரச்சாரம் செய்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி ஆரம்பிக்கும் போது இவ்வாறான ஓர் பிரச்சாரம் கிடைப்பது அதிர்ஸ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ முகாம்களையும் சோதனைச் சாவடிகளையும் அகற்றுமாறு குரல் கொடுக்கும் எவரும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை கண்டு கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

mardi 10 avril 2012

என்ன நடக்கிதிங்க காணாமல் போனதாகக் கூறப்பட்டபிரேம்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவுக்கு

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் (நொவெல் முதலிகே) இன்று காலை 7.56 மணிக்கு யு.எல்.314 என்ற விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். அவுஸ்திரேலியப் பிரஜையான பிரேம்குமார் குணரட்ணம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னரே அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து அவர் அனுப்பப்படும்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் பெருந்திரளான பாதுகாப்புத் தரப்பினர் அங்கு வருகை தந்திருந்ததாக செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார். ___

dimanche 8 avril 2012

இதுதான் தன்வினை தன்னைசுடுமா இலங்கையில் மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ண தாய் மற்றும் சகோதரி கருத்துக்கள்

மகாநடிகன் இரா. சம்பந்தே தேவையில்லை மூன்றாம் தரப்பு!என்கிரார்

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு அவசியமற்றது. கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது மூன்றாம் தரப்பு அவசியமற்றது என்ற உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் தடையில்லை. பேச்சுவார்த்தைகளை தொடர்வது குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்..........இதேவேளை, சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை......http://www.tbcuk.net/audio/ara5412.mp3 கேட்கவும்

samedi 7 avril 2012

நஸ்ட ஈடும் இல்லை: தமிழில் தேசிய கீதமும் இல்லையாம் :கோத்தபாய

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான புலிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. உலகில் எந்த நாடு பயங்கரவாதிகளுக்கு இழப்பீடுகளை வழங்கியதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் 250 பரிந்துரைகளில் 9.164 என்ற பரிந்துரையில் உயிரிழந்த விடுதலைப்புலிகளுக்கு நல்லிணக்கத்தின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு 50 மில்லியனுக்கும் மேல் இலங்கையில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் இந்த பரிந்துரை, ஆணைக்குழுவிற்கு வழங்கிய அதிகாரங்களை மீறி சென்ற பரிந்துரை என தெரிவிக்கப்படுவதாகவும் திவயின கூறியுள்ளது. இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் ரீதியான பரிந்துரைகளை நாட்டில் அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சிலவற்றை மாத்திரமே செயற்படுத்த முடியும். எனவே அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிலர் மாகாணசபைகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரி நிற்கின்றனர். ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க வேண்டும் என்ற முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

130 பேர் பலி சிரிய தாக்குதல்களில்

சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். தொடர்புடைய விடயங்கள் வன்முறை, போர், தாக்குதல் ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் ஷெல் குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது. ஹோம்ஸ் நகரிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நிறைய சடலங்கள் சிறு டிரக் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் சிறு பிள்ளை ஒன்றின் சடலம் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் வீடியோ படம் ஒன்று இணைய தளத்தில் வலம் வந்துகொண்டுள்ளது. ஹோம்ஸ் நகரில் நிறைய பேர் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டதாகத் தெரியும் ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறைந்தபட்சம் பதிமூன்று பேரின் சடலங்களை உறுதிசெய்யப்படாத இந்த வீடியோ படம் காட்டுகிறது.

இலங்கையில் ஜேவிபி கட்சியிலிருந்து பிரிந்து நான்கு மாதங்களுக்கு முன்னர் மக்கள் போராட்ட இயக்கம் என்ற குழுவை ஆரம்பித்த பிரேமகுமார் குணரட்ணம் என்பவரும் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு தலைவியான திமுது ஆட்டிகல என்பவரும் காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்று அந்த இயக்கத்தின் பேச்சாளர்கள் தமிழோசையிடம் கூறினர். தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல், துஷ்பிரயோகம், மனித உரிமை பிரேமகுமார் குணரட்ணம், கொழும்பின் புறநகர்பகுதியான கிரிபத்கொடையில் தங்கியிருந்த வீட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு அல்லது இன்று சனிக்கிழமை அதிகாலை பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பேச்சாளர் புபுது ஜயகொட தமிழோசையிடம் கூறினார். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இயக்கத்தின் மகளிர் பிரிவுக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த திமுது ஆட்டிகல, பஸ்ஸொன்றில் வீடுநோக்கிச் சென்றதாகவும் அதன்பின்னர், தகவல்கள் எதுவும் இல்லை என்றும் உறவினர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மக்கள் போராட்ட இயக்கத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முன்னணி சோசலிஸக் கட்சி என்ற புதிய கட்சியின் மாநாட்டை வரும் திங்கட்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளதாக அந்த இயக்கத்தின் பேச்சாளர் கூறினார். யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்ய சென்றிருந்தபோது லலித் வீரராஜ் என்பவரும் குகன் முருகானந்தன் என்பவரும் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது

மீண்டும் ஜனாதிபதியாக அப்துல்கலாம்?

ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய ஜனாதிபதியை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ தன்னிச்சையாக தெரிவு செய்ய முடியாது. மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில் தனது ஆதரவு நபர் ஜனாதிபதியாக வேண்டியது அவசியம் என்று பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் பலரது பெயர்களைப் பரிசீலனை செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மத்திய மந்திரிகள் பிரணாப்முகர்ஜி, ஏ.கே. அந்தோனி, சோனியாவின் குடும்ப நண்பர் சாம்பிட் ரோதா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் சமீபகால இராணுவ ஊழல் சர்ச்சைகளில் சிக்கியதால் ஏ.கே.அந்தோனி பெயர் பரிசீலனையில் இருந்து கைவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க ஆதரவு அளித்துள்ளது. ஹமீத் அன்சாரியை காங்கிரஸ் நிறுத்தினால், அவரை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை களத்தில் இறக்க பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பா.ஜ.க.வுக்கு பல மாநில கட்சிகளின் ஆதரவு உள்ளது. அவர்கள் ஆதரவுடன் அப்துல்கலாமை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்புகிறார்கள். அதோடு சிறுபான்மை இன பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற முடியும் என்றும் கருதுகிறார்கள். பா.ஜ.க. நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் என்று அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஏற்கனவே சூசகமாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வுக்கு தமிழக சட்டசபையில் 150 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 9 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்களது வாக்குகள் பா.ஜ.க.வுக்கு மிகவும் கைகொடுப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

மீன் தொழிற்சாலையொன்று இவ்வருட இறுதிக்குள் களுத்துறையில்

மாலைதீவு மீன் தொழிற்சாலையொன்று இவ்வருட இறுதிக்குள் களுத்துறையில் அமைக்கப்படவுள்ளது. ஜப்பானிலுள்ள மாலைதீவு மீன் உற்பத்தியாளர் ஒருவர் தொழிற்சாலையொன்றை இலங்கையில் அமைப்பதற்கு நிதியுதவி வழங்குகிறார். இதற்கான ஒப்பந்தமொன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். வருடமொன்றுக்கு இலங்கை 6000 - 8000 தொன் மாலைதீவு மீனை இறக்குமதி செய்கிறது. ஒரு கிலோ மாலைதீவு மீனின் விலை 2000ரூபா ஆகும். எனவே இங்கு மீன் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாவனையாளர்கள் 1000 ரூபாவிற்கு மீனைக் கொள்வனவு செய்ய முடியும். மீனை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை 21 மில்லியன் ரூபாவை பெற முடியும் எனவும் மாலைதீவு மீனையும் இதர மீன் வகைகளையும் இறக்குமதி செய்ய 14 மில்லியன் ரூபாவே செலவாகுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேநேரம் 400 மில்லியன் வெளிநாட்டு செலவாணியாக பெற முடியுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார். கடற்தொழில் அமைச்சின் செயலாளர் டமித்த டீ சொய்ஸா இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன தலைவர் மகீல் சேனாரட்ன மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ருவன் லங்கேஸ்வரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

vendredi 6 avril 2012

மே தினம், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழ்ப்பாணத்தில்

எதிர்வரும் மேதினத்தையொட்டி, எதிர்க்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டமும், பேரணியும் நடத்துவதென முதன்மை எதிர்க்கட்சியான ஐ.தே.க வினால் முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மே தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்றையநாள், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில், மேதினம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொண்டது. இதில், மேதினக் கூட்டமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவும், அதற்கான ஏற்பாடுகள் யாவையும் கூட்டமைப்பே மேற்கொள்ளவும் முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுக்கூட்டத்திற்காக போடப்படும் மேடையில் தனியொரு கட்சியை பிரதிபலிக்காது, பங்குகொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் கொடிகள் நாட்டப்படுவதாகவும், பேரணியிலும் அதேபோன்று நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தபோது “யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமயில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் முடிவேயாகும். அதன்படி மேதினத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூட்டமைப்பே மேற்கொள்ளும்” என்றார்.

சிலைகள் உடைப்பு மட்டக்களப்பில்

சுவாமி விபுலானந்தர், மகாத்மா காந்தி உருவச் சிலைகள் உட்பட நான்கு முழு உருவச் சிலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் சாரணியத் தந்தை சேர் பேடன் பவுல் சிலைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை முன்றலில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சிலை மற்றும் கல்வி அலுவலகச சந்தியில் அமைந்திருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை சிலைகளின் தலைகள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்ட பேடன் பவுல் சிலை மட்டக்களப்பு நகரில் நிறுவப்பட்டுள்ள இந்த உருவச் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலரையும் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. குறித்த சிலைகளில் மகாத்மா காந்தி சிலை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. ஏனைய சிலைகள் சுமார் 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டவை. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிசார் இதன் பின்னணி என்பது குறித்தோ அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்தோ இதுவரை தெரியவரவில்லை என்கின்றனர். 29 வது ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போரியும் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தம்புள்ளை நகரில் கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை முடிவடையவிருக்கும் வேளையில் சாரணியத் தந்தை சேர் பேடன் பவுலின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.