jeudi 26 avril 2012

வழங்கள் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக அறிகின்றேன் இவ்வாறான செயற்பாடுகளை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

கிழக்கு மாகாண வழங்கள் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக அறிகின்றேன் இவ்வாறான செயற்பாடுகளை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் இவ்வாறு நேற்று இடம் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பேசும்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இன்று கிழக்கு மாகாண வளங்கள் வெளி மாகாணங்களுக்கு கடத்தப்படுகின்றன. குறிப்பாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கஸ்ரப்படுகின்ற மணல் அகழ்கின்ற தொழிலாளர்களுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெருமளவு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் குறித்த தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டனர். நான் நேரடியாக மணல் அகழ்கின்ற இடங்களுக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்து உரிய முறையில் மணல் தடையின்றி அகழ்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மணர்களை தடையின்றி ஏற்றிச் செல்வதனையும் எமது மக்கள் கஸ்ரப்படுவதனையும் அனுமதிக்க முடியாது. வெளி மாகாணத்தவர்கள் மண் அகழ்வதனால் 1500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மண் அகழ்வதற்கு அனுமதி கொடுப்பவர்கள் இனிமேல் வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்u

Aucun commentaire:

Enregistrer un commentaire