mardi 10 avril 2012

என்ன நடக்கிதிங்க காணாமல் போனதாகக் கூறப்பட்டபிரேம்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவுக்கு

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் (நொவெல் முதலிகே) இன்று காலை 7.56 மணிக்கு யு.எல்.314 என்ற விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். அவுஸ்திரேலியப் பிரஜையான பிரேம்குமார் குணரட்ணம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னரே அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து அவர் அனுப்பப்படும்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் பெருந்திரளான பாதுகாப்புத் தரப்பினர் அங்கு வருகை தந்திருந்ததாக செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார். ___

Aucun commentaire:

Enregistrer un commentaire