vendredi 31 mai 2013

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி அதிர வைத்த மாவோயிஸ்டுகள்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி அதிர வைத்த மாவோயிஸ்டுகள், அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். மேலும் 15 பேரை படுகொலை செய்யப் போவதாக அறிவித்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.
சத்தீஸ்கரின் தர்பா பள்ளத்தாக்கு பகுதியில் அதிரடித் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 பேரை படுகொலை செய்தனர். இந்த நிலையில் தர்பா பிரதேச மாவோயிஸ்டு அமைப்பின் சார்பில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், “சல்வா ஜூதும் அமைப்பைச் சேர்ந்த 15 செயற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையினரை நாங்கள் தண்டிப்போம். உங்களது முழு பாதுகாப்புப் படையைக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் அவர்களை உங்களால் பாதுகாக்க முடியாது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 15 பேரின் பெயரையும் கூட மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே கடிதத்தில், பஸ்தார் பிரதேசத்தில் இருந்து சி.ஆர்.பி.எப். படை விலக்கிக் கொள்ள வேண்டும், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும், பசுமை வேட்டை எனும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேண்டும், விகாஸ் யாத்திரை அல்லது பரிவர்த்தன் யாத்திரை என்ற பெயரில் பேரணிகளை நடத்தக் கூடாது, சிறையில் உள்ள மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் இந்த புதிய மிரட்டல் கடிதம் அங்கு பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலில் 45 அடி ஆழம் வரைக்கும் கூட படு தைரியமாக கடல் கன்னியாக மாறி கடலில் கவர்ச்சிமிகு சாதனை

பிரபல திரைப்படமான ஸ்பிளாஷ், அதில் வரும் கடல் க௦ன்னியை பார்த்து கடற்கன்னியாக மாற வேண்டும் என்ற ஆசை வந்து திமிங்கலம், சுறா, டால்பின் போன்ற பெரிய சைஸ் மீன்களுக்குப் போட்டியாக, சற்றும் பயமின்றி ஆழ்கடலில் அற்புதம் செய்து வருகிறார் பிரேசர்.

ஸ்பிளாஷ் என்ற திரைப்படத்தைப் பார்த்து அதில் கடற்கன்னியாக நடித்த டெரைல் ஹன்னாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவரைப் போலவே தானும் கடற்கன்னியாக அவதாரம் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹன்னா பிரேசர். 36 வயதான பிரேசர், செயற்கையான வாலைப் பொருத்திக் கொண்டு கடலுக்குள் பல்வேறு ஜாலங்களைச் செய்கிறார். 
சுறா மீன்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கடலுக்குள் அவர் நீந்தி விளையாடுவதை பலரும் பீதியோடு பார்க்கின்றனர். பிரேசர் ஒரு ஆழ்கடல் நீச்சல் வீராங்கனை ஆவார். அவர் தற்போது கடற்கன்னி அவதாரம் எடுத்து மேலும் திரில்லான சாதனைகளைச் செய்து வருகிறார்.
வயதாக இருக்கும்போதே கடற்கன்னிகள் மீது் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் பிரேசர்.9 வயதானபோது உண்மையான கடற்கன்னியாக அவர் மாறிப் போனார். அதாவது கடற்கன்னிகளுக்கு இருப்பதைப் போன்ற வாலை உருவாக்கி தனது உடலில் பொருத்திக் கொண்டு நீச்சலடிக்க ஆரம்பித்தார்.
இப்போது திமிங்கலம், சுறா, டால்பின் போன்ற பெரிய சைஸ் மீன்களுக்குப் போட்டியாக, சற்றும் பயமின்றி ஆழ்கடலில் அற்புதம் செய்து வருகிறார் பிரேசர்.
வெறும் நீச்சல் வீராங்கனையாக மட்டும் அல்லாமல், நடிகையாக, மாடல் அழகியாகவும் இருக்கிறார் பிரேசர்.
கடலில் 45 அடி ஆழம் வரைக்கும் கூட படு தைரியமாக போய் வருகிறார் பிரேசர். தம் கட்டி சில நிமிடங்கள் வரை உள்ளேய இருக்கிறார். உண்மையான கடற்கன்னியைப் பார்ப்பது போலவே இருக்கிறது பிரேசரைப் பார்க்கும்போது.
வாவா தீவுப் பகுதியில் திமிங்கலங்கள் அதிகம். அந்தக் கடல் பகுதியி்ல திமிங்கலங்களுடன் சேர்ந்து இவரும் நீச்சலடித்த காட்சியைப் பார்த்து பலரும் உறைந்து போயினர். திமிங்கலங்களைக் கொல்வதைக் கண்டித்து இந்த சாதனை நீச்சலைச் செய்தாராம் பிரேசர்.
அதேபோல 2007ம்ஆண்டு டால்பின்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஜப்பானின் தைஜி கடல் பகுதியில் 30 பேருடன் சேர்ந்து ஆழ்கடல் நீச்சலடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அப்போதும் கடற்கன்னி வேஷம்தான்.
2009ம் ஆண்டு மெக்ஸிகோவின் குடலுப் என்ற கடல் பகுதியில் மிகப் பெரிய வெள்ளை சுறாக்களுக்கு இணையாக கடற்கன்னி வேடத்தில் கடலில் சில நிமிடம் இருந்து திகில் சாதனையும் படைத்துள்ளார் பிரேசர். அந்த சுறாக்கள் 14 அடி உயரம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தேளை உயிரோடு 15 வருடங்களாக தின்னும் விவசாயி

ஈராக்கில் விவசாயி ஒருவர் தினமும் ஒரு தேளை உயிரோடு சாப்பிடுவதை வழக்காமாக கொண்டுள்ளார். கடந்த 15 வருடங்களாக இதை செய்து வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது.

ஈராக்கை சேர்ந்தவர் இஸ்மாயில் ஜசிம் முகமது (34). இவர் ஒரு விவசாயி. இவர் விவசாயத்தில் ஈடுபடும் போது, பல பூச்சிகள் மற்றும் தேள்களால் கடிப்பட்டுள்ளார். இதை தடுக்க முயன்ற அவர், உயிருடன் தேள்களை பிடித்து சாப்பிடத்துவங்கினார்.சுமார் 15 வருடங்களாக இதை செய்து வரும் அவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது. 
தேள்களை உயிருடன் சாப்பிடும்போது பலமுறை வாயில் கடி வாங்கியதால், இவருக்கு விஷத்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வசிக்கும் 3 இந்தியர்கள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

சாதனையாளர் விருதுஅமெரிக்காவில் குடியேறி பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் வெளிநாட்டினரை பாராட்டும் விதமாக ‘புதிய மாற்றத்தை உருவாக்கிய சாதனையாளர்’ (சாம்பியன் ஆப் சேஞ்ச்) என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தற்போது 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் இவர்கள் 11 பேரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
3 பேர் இந்தியர்கள்

இவர்களில் சாரதா அகர்வால் (சிகாகோ), ரித்ஹிமான் தாஸ் (கன்சாஸ்), அமர் சவானி (மசாஷூசெட்ஸ்) ஆகிய 3 பேரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆவார்கள். இந்த விருது பெற்ற 3 இந்தியர்கள் உள்பட அனைவரும் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவர்கள் என்று அமெரிக்க அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க தொழில்நுட்ப தலைமை அதிகாரி தோட்பார்க் கூறும்போது, ‘அமெரிக்க சமுதாயத்துக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம் வளர்ச்சி ஆகியவை மேம்பட உழைத்த இவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதில் பெருமை கொள்கிறோம்’ என குறிப்பிட்டார்.
விருது பெற்ற இந்தியரான சாரதா அகர்வால் சிகோகாவில் ஹெல்த்கேர் மீடியா நிறுவனம் மூலம் உதவி புரிகிறார். அத்துடன் ஆராய்ச்சி, மாநாட்டு பேச்சாளர், ஆலோசகர் போன்ற பணிகளிலும் சிறப்பாக ஈடுபாடு வைத்துள்ளார். ரித்ஹிமான் தாஸ் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையிலும், அமர் சவானி உலக அளவில் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவ சேவை கிடைக்க உதவிகள் புரிந்தும் சாதனை படைத்துள்ளார்கள்.

jeudi 30 mai 2013

மூன்று சிறுமிகளின் கொலை புதிய திருப்பம்... பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி நழுவுகிறது பிரதேச செயலகம். போலி வேடம் போடும் அரச அதிகாரிகள்.

வவுனியா தாண்டிக்குளத்தில் கடந்த இரு வாராங்களுக்கு முன் (16.05.2013) ஒரு தாய் தன் மூன்று சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை (4 வயது, 3வயது, 1வயது) கிணற்றில் வீசி எறிந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச் சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்துக்கு சில அரசியல்வாதிகளும், மக்களும் திரண்டனர். அந்த அளவு இச் செய்தி வவுனியாவில் பெரும் சூடு பிடித்தது. அவ்விடத்துக்கு சிறி ரெலோ கட்சியின் தலைவர் திரு.உதயராசா என்ற அரசியல்வாதி விரைந்து சென்றுள்ளார். ஊர் மக்கள் பலர் அவ்விடத்தில் கூடி வேடிக்கை பார்ப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர். ஆனால் பிரச்சினை நடப்பதற்கு முன் எவ்வித செயற்பாடுகளையும் இவர்கள் செய்ய முன்வரவில்லை.

இது தொடர்பான மனதை உலுக்கும் புகைப்படங்கள் பல இணைய தளங்களிலும், செய்தித் தாள்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் செய்திகளில் பிரதேச செயலகம் மற்றும் அதனுள் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள், சிறுவர் அமைப்புக்கள் உட்பட சிறுவர் காப்பகங்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் 27.05.2013 திங்கட்கிழமை வீரகேசரி பத்திரிகையில் பிரதேச செயலாளரால் இச் செய்திக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும், 5 வருடங்களாக குறித்த பெண்ணான சந்திரகுமாரி மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், அவருக்கு தாங்கள் உதவ முன்வந்திருந்ததாகவும் ஆனால் காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு தற்கொலை முயற்சியிலும், கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் மேலும் அவர் தெரிவிக்கையில் ஊடகங்கள் உண்மையை அறியாது தம் மீதும், தம் அலுவலகம் மீதும், அலுவலகர்கள் மீதும் குற்றஞ்சாட்டியதாகவும் கூறியுள்ளார். 

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பான உண்மைகள் பலவற்றை நாம் இங்கு முன்வைக்கி்ன்றேன். அவற்றை முன் வைப்பதனூடாக இச் சம்பவத்தின் உண்மைத் தன்மைகளையும், சமூக நிறுவனங்களின் போலித்தனமான அக்கறைகளையும் வெளிக் கொணரலாம் என்று நினைக்கின்றேன்.

பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரம் குறிப்பிட்ட செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் காணப்படவில்லை. உண்மைத் தன்மைகளை மறைத்து தம் மீதுள்ள குற்றத்தை திசை திருப்ப முனைகின்றார். நடந்த சம்பவங்கள் அவருடைய அலுவலகத்திலிருந்து எம்மால் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணாண சந்திரகுமாரி சம்பவம் நடைபெறும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் வவுனியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவர் காப்பகங்களுக்கு சென்று தம் பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு கேட்டிருக்கின்றார். ஆனால் அந் நிறுவனங்கள் பெற்றோர் உள்ள குழந்தைகளை தாம் பொறுப்பேற்க முடியாது என்று தட்டிக் கழித்திருக்கின்றனர். அவ்வேளையிலும் மன்னார் வீதியில் அமைந்துள்ள ஓர் காப்பகத்தில் இரண்டு மணி நேரமாக தன் பிள்ளைகளின் மறு வாழ்வுக்காக போராடியிருக்கின்றார். அனால் அங்கும் அவர்களுடைய சட்டங்கள் இப் பெண்ணுக்கு எதிராகவே காணப்பட்டதால் அங்கும் ஏமாற்றத்துடனேயே திரும்பியதாக அவரை மனிதாபிமான முறையில் இலவசமாக அங்கு ஏற்றிச் சென்ற ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்பு அவ் ஆட்டோ உரிமையாளர் கூறிய அறிவுறுத்தலின் படி அப் பெண் கிராம சேவையாளரிடம் சென்று பிரச்சினையை கூறியுள்ளார். அவர் பிரதேச செயலகத்தக்கு செல்லுமாறும், சிறுவர் பிரிவு உத்தியோகத்தரிடம் செல்லுமாறும் அறிவுறுத்தியிருக்கின்றார். அடுத்த நாளே அப் பெண் பிரதேச செயலகத்துக்கு இறுதி முயற்சியாக விரைந்திருக்கின்றார். அங்கு சிறுவர் பிரிவு பொறுப்பாளர் திரு.கனடி, பெண்கள் பிரிவு பொறுப்பாளர் திருமதி ஜெயசித்திரா ஆகியோர் இதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இவரையும், இவருடைய குழந்தைகளையும் காட்டி நகைத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரத்திடம் நேரடியாக அப் பெண் பிரச்சினையை முன்வைத்த போது அவரை பேசியிருக்கின்றார். அவ் வேளை அப் பெண் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தாம் தற்கொலை செய்வதாக கூறியிருக்கின்றார். ஆனால் அதற்கு அங்கிருந்த பெரு மதிப்பு மிக்க ஊழியர்கள் சிறிதும் சிந்திக்காமல் முதலில் அதைச் செய் என்று கேலி செய்திருக்கின்றனர். இச் சம்பவம் உண்மையில் நடைபெற்றதாக பிரதேச செயலக அலுவலர் ஒருவர் தெரிவித்து கவலைப்பட்டார்.

இத் தொடர் தோல்விகளாலும், தொடர் கேவலங்களாலும் பாதிக்கப்பட்ட அப் பெண் தற்கொலை மற்றும் கொலை முயற்சிக்கு தூண்டப்பட்டிருக்கின்றார் என்பது அறியப்படுகின்றது. கொலை செய்தவரை விட அக் கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவரே பெருங்குற்றவாளி என்று சட்டம் கூறுகின்றது. அவ்வாறாயின் இங்கு முதற் குற்றவாளி யார்?

இங்கு எமக்கு கிடைக்கப்பட்ட செய்திகளின் படியும், பிரதேச செயலாளர் குறிப்பிட்ட செய்திகளின் ஊடாகவும் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதை இங்கு முன்வைக்கின்றோம்.

5 வருட காலமாக சந்திரகுமாரி என்ற அப் பெண் மன நோய் பாதிக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அவ்வாறானால் அப் பெண் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பெறெடுத்தாரா?

அந் நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்திருந்தால் அவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தன் செக்ஸ் உணர்வை தீர்த்திருக்கின்றாரா? அப்படியானால் அவருக்கு என்ன தண்டனை?

இறந்த பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு வயது 4. அப்படியானால் அப்பிள்ளை பிறக்கும் போது சந்திரகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பது பிரதெச செயலாளரின் கருத்து. இதை வைத்தியர்கள் கணவரிடம் அறிவிக்கவில்லையா? என்றால் இதில் ஆழ்ந்திருக்கும் மர்மம் என்ன?

தன் பிள்ளைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டு இருந்த போது ஒரு வாரமாக தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக போராடிய நிலையை பைத்தியம் என்று கொள்ளலாமா?

ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் காப்பகங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் சென்று இத்தகைய நிலையில் தன்னந்தனியாக போராட முடியுமா?

குழந்தையை கிணற்றில் வீசி இறந்த போது விளையாட்டுப் பொருட்கள் சில கிணற்றில் கிடந்தன. முதலில் கிணற்றில் அவை வீசப்பட்டு பிள்ளைகளின் பதட்டத்தை போக்கியிருக்க முனைந்திருக்கலாம். இது ஒரு பைத்தியம் செய்யக்கூடிய வேலையா?

இவர் உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால் பிள்ளைகளின் நன்மை கருதி உடனடியாக பிள்ளைகளை பொறுப்பேற்க ஏன் குறித்த நிறுவனங்கள் முன்வரவில்லை? கூடியிருந்த அயல் மக்கள் இப் பெண்ணின் நிலை மோசம் என்று கருதியிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருப்பர். இவற்றிலிருந்து உண்மையில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதை அறியலாம். ஆனால் அவர் உளவியல் ரீதியாக தற்போது பாதிக்கப்பட்டிருப்பதற்கு மேற்குறிப்பிட்ட அனைவருமே காரணகர்த்தாக்கள் ஆவர்.

இவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று எங்கு தாம் குற்றவாளி இல்லை என்று கூறினாலும் சமூகம் ஏற்கப்போவது இல்லை.

இவற்றை ஆராய்கின்ற போது பிரதேச செயலாளரும், உதவி பிரதேச செயலாளரும், மற்றும் பொறுப்பான பதவியில் உள்ள அதிகாரிகளும் பாரிய குற்றம் நிகழ்வதற்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது தம் பதவியை பயன்படுத்தி வழக்கை திசை திருப்புகின்றனர்.

எனவே உயர் அதிகாரிகள் இப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், தான்தோன்றித்தனமாக தம் வேலைத் தளங்களை விபச்சார பூமியாக்கிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட அசர அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோருகின்றோம்.

இது போன்ற ஒரு கேவலமான நிலை இனி இவ் இலங்கைத் திருநாட்டில் நடைபெறாமல் இருக்க வேண்டாம் என்றால் இத்தகைய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் வெறும் கண்துடைப்புக்காக இருக்கின்றனர். குற்றம் செய்ததாக காட்டப்பட்டுள்ள பெண்ணின் கணவர் சிறி ரெலோவுடன் நெருங்கிய உறவில் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவ்விடத்துக்கு அக் கட்சியின் அமைப்பாளர் சென்றதன் மர்மம் என்ன? இதையும் அரசு கண்டறிய வேண்டும்.

5 பிள்ளைகளை பெற்றெடுத்தவருக்கு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் இன்னொரு திருமணம். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?


இத் தற்கொலை முயற்சியின் பின்னாலும், கொலையின் பின்னாலும் பெரும் மர்மம் ஒழிந்திருப்பது உண்மை. இவ் வழக்கில் பொலிசார் நீதியாக நடந்து கொண்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

இச்சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள பிரதேச செயலாளர் கிரவல் குவாரி, கருங்கல் குவாரி என்று எடுத்து பல சொத்துக்களை சேர்த்துள்ளார் மக்கள் பேசுகின்றனர். இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆராய வேண்டும். அரச கேள்விகள் இவர்கள் ஊடாக வெளியே விற்கப்படுவதாகவும் தெரிவுக்கப்படுகின்றது. இது தொடர்பான கட்டுரையை ஆதாரங்களுடன் வரும் வாரம் வெளியிடுகிறேன்.

---சித்தன்---



mercredi 29 mai 2013

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு சீனா உதவி.முதலாவது தொடர்பாடல் செய்மதியை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கு அதன் முதலாவது தொடர்பாடல் செய்மதியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் கிரேட் வோல் கைத்தொழில் கூட்டுத்தாபனம் கையொப்பமிட்டுள்ளது. உலக சந்தையில் வர்த்தக செய்மதிகளை ஏவுவதற்கான சேவையை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரேயொரு நிறுவனமாக கிரேட் வோல் கைத்தொழில் கூட்டுத்தாபனம் உள்ளது.
இந்த ஒப்பந்தம் இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை மேலும் அதிகரிக்கும்.
இந்த ஒப்பந்தம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.
ஆயினும் இந்த உடன்படிக்கை தொடர்பாக நிதி மற்றும் வேறு விடயங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த செய்மதி இலங்கைக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் ஒலி, ஒளிபரப்புச் சேவைகளை வழங்கும்.  பல நாடுகள் இலங்கையிடமிருந்து இந்த சேவைகளை வாங்குவதற்கு விருப்பம் கொண்டுள்ளன என ‘சைனா டெய்லி’ கூறியுள்ளது.
இதுவரையில் 18 நாடுகளுக்கு 43 செய்மதிகளை ஏவிக்கொடுத்துள்ளதாக இந்த சீன கம்பனி கூறியுள்ளது.  2015ஆம் ஆண்டளவில் உலக செய்மதி சந்தையில் 10 சதவீதத்தை பிடிக்க சீனா எண்ணியுள்ளது என இந்தக் கம்பனி கூறியுள்ளது.கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரத பாதை நீடிப்புகளுக்கும் சீனா நிதி உதவி வழங்கவுள்ளது.
ஏற்கனவே வடக்கின் புகையிரத பாதை நிர்மாணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் நீடிக்கவும், கொழும்பு - கண்டி, குருணாகலை மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிக்கவும் இந்த உடன்படிக்கையில் இணக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈழவர் இடர் தீர புரட்சிப் போராளியான ஐபிரி IPT

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காக அவர்களின் உரிமை-உடைமைகளை வென்றெடுப்பதற்கான புரட்சிப்பாதையில் 'நாம் ஈழவர் நமது மொழி தமிழ் நம்நாடு ஈழம்" என்ற பதாகையின் கீழ் 'மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பருத்தித்துறை முதல் பதுளை வரை பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு - ஒரு சமத்துவ-சமதர்ம-சோசலிஸ ஈழத்தை அமைப்போம்" என்ற இலட்சியத்தை நோக்கிய புரட்சிப் போராட்டத்தில், ';இன்னுயிர் ஈந்தும் ஈழம் அமைத்திட ஏற்றவர் நாம் உண்டு" எனப் புறப்பட்டுக்களமிறங்கிப், போர் விழுது பெற்றவன் இந்த ஐபிரி( IPT ). வளம்மிகு வன்னி மண் தந்த வைரம் இவன். ஈழப்போராட்டப் பாதையில் இவன் ஒரு மைல் கல். ஈழப் புரட்சி வரலாற்றில் ஐபிரி ( IPT ) ஒரு முன்னுதாரணம். ஈழத்தில் இவன் நடக்காத தேசம் இல்லை-அவன் கால் பதிக்காத கிராமமும் இல்லை. தோழர்கள் நெஞ்சங்களில் நிறைந்து ஈழவர் இதயங்களில் பதிந்தவன். இன்று அவன் எம்மத்தியில் இல்லை. ஆனால் என்றும் அவன் எம்முடன வாழ்வான்.

ஈழவர் குரல்
பிரான்ஸ்

UNP அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மைகள்;முழுமையான தமிழாக்கம்:-

UNP அரசாங்கத்தின்  கீழ் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மைகள்இந்நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அபிவிருத்தி நோக்கினை இலக்காகக் கொண்டு 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், அதனூடாக இந்நாட்டின் சமூக, பொருளாதார மாற்றங்களை நோக்காகக் கொள்ளப்பட்ட இலக்குகள் பல நிறைவேற்றிக் கொள்ளப்பட்டன. எனினும் கடந்த சில ஆண்டுகளினுள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியினை முறையாகவும் மற்றும் பொறுப்புடனும் மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்டிருந்த நெகிழ்வுத் தன்மை மற்றும் அமைப்பு முறையான அனைத்து ஏற்பாடுகளையும் அழித்து அப்பதவிக்குரிய கௌரவம் மற்றும் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளன. சனநாயக பெறுமதிகள் மற்றும் கோட்பாடுகள் என்பன பற்றியும், அடிப்படை மனித உரிமைகள் பற்றியும் எதுவித அச்சமுமின்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தி மற்றும் உறவினருக்கு தீவிர உபசரிப்புக்களை வழங்கி, ஊழலை அதிகரிக்க இடமளித்து ஏகாதிபத்திய அதிகாரம் ஒன்றினை கட்டியெழுப்பி ஜனாதிபதி முறைமையில் காணப்பட்ட கௌரவ கம்பீரத் தன்மையினை இல்லாதொழித்து அது தற்போது மிகவும் அறுவறுக்கத்தக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கமானது பலவந்தமாக பறித்துக் கொண்டுள்ள மக்களின் இறைமை மற்றும் காம்பீரத் தன்மை என்பவற்றினை மீண்டும் மக்களிடம் பெற்றுக் கொடுத்து புதியதோர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் தற்போது எழுந்துள்ளதுடன், அதனூடாக் இன, மத, மொழி மற்றும் அரசியல் அபிப்பிராயம் என்பவற்றினை எதுவித பேதமுமின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன ; வாழக்கூடிய சூழலொன்றினை ஏற்படுத்தக் கூடிய நியாயமான மற்றும் நேர்மையான சமூகமொன்றினை உருவாக்குவதற்கும்,
கடந்த சில ஆண்டுகளாக முழுமையாகவே சேதப்படுத்தி வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு வருமான வழிகளை பிறப்பிக்கும் பொருட்டும் பொருத்தமான பொருளாதார பின்னணி ஒன்றினை உருவாக்குவதற்கும், கடந்த காலத்தினுள் வரலாற்றிலே ஒருபோதும் இடம்பெறாதவாறு மிகவும் மோசமானவாறு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நீதிச் துறையின் சுயாதீனத் தன்மை மற்றும் அமுலாக்கலை மீண்டும் நிலை நாட்டுவதற்கும்,
சர்வதேசத்திலே இலங்கையர்கள் முன்னர் அனுபவித்த கௌரவமான நிலையினை மீண்டும் ஏற்படுத்துவதற்கும்,
இலங்கையிலே வாழுகின்ற அனைத்தின மக்களுக்கும் இலங்கையின் ஆளடையாளத்தின் கீழ் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் மற்றும் சகவாழ்வுடனும் வாழ்வதற்கான புதியதோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கும்,  எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மைகள்
இலங்கை குடியரசின் இறைமையானது மக்களிடம் காணப்படுவதுடன் அதனை கைமாற்ற முடியாது. மக்களின் இறைமைமிக்க அதிகாரம் என்பதில், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை அடங்குவதுடன் வாக்குரிமை அதிகாரத்தை மக்கள் நேரடியாகவே பயன்படுத்துதல் வேண்டும். அதன் அடிப்படை உரிமைகளில்,
அ) கல்விக்கான நியாயமான மற்றும் சம வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான உரிமை,
ஆ) பல்வேறு மொழிகளை பயன்படுத்தும் மற்றும் சமயங்களைப் பின்பற்றுகின்ற மக்களினால் கடைபிடிக்கின்ற கலாசாரங்களுக்கு ஏற்ப அந்தந்த மொழிகளை பயன்படுத்துவதற்கும்,
அந்தந்த சமயங்களை பின்பற்றுவதற்கும் அந்தந்த சமூகங்களுடன் தொடர்புடைய மக்கள் வாழ்வதற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தல்,
இ) அரச நிருவாகத்தினுள் நல்லாட்சியினை பேணி வருவதற்குள்ள உரிமையினை உறுதிப்படுத்தல் என்பன அடங்கும்.
நிறைவேற்று பணிகள் மற்றும் அதிகாரமளித்தல் ஆகிய விடயங்களுக்காக பாராளுமன்ற மற்றும் அரசாங்கம் என்பன மக்களுக்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்.
01. மக்கள் இiறைமையை மீண்டும் மக்களிடமே கையளித்தல்
i) சனநாயக வட்டத்தினுள் அரசியலமைப்புச் சட்டதினூடாக சட்ட அதிகாரத்தை பேணி வருதல். ஆட்சி செய்யப்படுவோர் மாத்திரமன்றி ஆட்சியாளர்களும் சட்டத்திற்கு அடி பணிதல் வேண்டும்.
ii) பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச இணக்கப்பாட்டிற்கு (ஐஊஊPசு) ஏற்ப ஏனைய அனைத்து
சமயங்களது உரிமைகளையும் பாதுகாத்தல்.
iii) அனைத்து நபர்களுக்கும் இனம், மதம், மொழி, சாதி, பால் வேறுபாடு, அரசியல் கருத்துக்கள் அல்லது வேறு யாதேனும் ஒரு காரணத்தின் மீது வித்தியாசம் காட்டாது அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்.
iஎ) மக்களுக்கு சிறந்த சுகாதார தன்மையொன்றினை பேணி வருவதற்காகவும் மற்றும் பொருத்தமான தொழில் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், கல்விக்காக நியாயமான இடவசதியினை வழங்குதல், குடும்ப உரிமைகளை பாதுகாத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகளை பாதுகாத்தல்,
சிரேஷ்ட பிரஜைகளின் உடல் மற்றும் உளசார் பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளோர் ஆகியோரது உரிமைகளை பாதுகாத்தல், அரச கொள்கைகளை வழி நடாத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை கடமைகள் என்பனவும் இதில் உள்ளடக்கப்பட வேண்டியதுடன், உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பினை அரசாங்கம் வகிக்கும்.
எ) கருத்துச் சுதந்திரம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்படுவதுடன், தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமையையும் அதில் உள்ளடக்கி மேற்கூறிய உரிமைகள் மேலும் பலப்படுத்தப்படும்.
02. சட்டவாக்கம்
i) ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் உறுப்பினர் ஒருவர் தெரிவாகும் வகையில் மற்றும் தேர்தல்களின் போது அந்தந்த கட்சிகள் பெற்றுக் கொள்ளும் இறுதி பெறுபேறு பிரதிபலிக்கச் செய்யப்படும் வகையில் கலவை விகிதாசார முறைமை ஒன்றின் கீழ் பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல். இம்முறையின் கீழ் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கிற்கும் பெறுமதி கிடைக்கப் பெறும்.
ii) விருப்பு வாக்கு முறைமையினை இரத்துச் செய்தல்.
iii) பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும்.
iஎ) பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் ஒரே நாளில் நடாத்தப்படுவதுடன், சில வேளை அரச தலைவர் மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அத்தேர்தலும் அதே நாளில் நடைபெறும்.
எ) யாதேனுமொரு அரசியல் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர் ஒருவர் அல்லது மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் ஒன்றின் உறுப்பினர் ஒருவர் அக்கட்சி அங்கத்துவம் இழக்கப்படும் பட்சத்தில் அவரது பாராளுமன்றம் உறுப்பினர் பதவி அல்லது மாகாண சபை உறுப்பினர் பதவி அல்லது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்தாகும்.
எi) அரசியல் கட்சி ஒன்றிலிருந்து தெரிவாகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் உரிய தினத்திற்கு முன்ளர் தமது வருடாந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்றினை வழங்குவதற்கு தவறும் பட்சத்தில் அவரது உறுப்புரிமை இரத்தாகி விடும்.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் தமது வருடாந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிக்கையினை தற்போது காணப்படுவது போன்று நிறைவேற்று அதிகாரத்திடமன்றி சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும்.
எii) யாதேனும் உறுப்பினர் ஒருவர் குற்றச் செயலுக்காக குற்றவாளியாகும் பட்சத்தில் சிறை வைக்கப்படா விடினும் கூட அவரது உறுப்புரிமை இரத்தாகும்.
03. நிறைவேற்று அதிகாரம்
i) ஜனாதிபதி பதவி இரத்துச் செய்யப்படும்.
ii) ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அரச தலைவர், பிரதம அமைச்சர் மற்றும் சபாநாயகர் குழுவிடம் பகிர்ந்தளிக்கப்படும்.
மாற்றுத் திட்டம் 1
மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதம அமைச்சர் ஒருவர் அமைச்சரவையுடன் அரசாங்கத்தை நடாத்திச் செல்லல். பிரதம அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறல் வேண்டும்.
மாற்றுத் திட்டம் 2
நெகிழ்ச்சி மற்றும் மாற்றுத் தன்மை கொண்ட அரசியல் கொள்கைக்கு அப்பால் சென்ற நிறைவேற்று அதிகாரத்தை புதிய முறைமை ஒன்றின் கீழ் அமுல்படுத்தல்.
2.1 மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச தலைவரை மக்களினால் நேரடியாக தெரிவு செய்தல்.
2.2 அரச தலைவரின் தலைமையிலான அரச சபையொன்று நிறுவப்படுவதுடன்,
அதில் பிரதம அமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், பாராளுமன்றத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற அனைத்து அரசியற் கட்சிகளினதும் பிரதிநிதிகள் மற்றும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் ஆகியோரை உள்ளடக்கிக் காணப்படுதல் வேண்டும். அரச தலைவர் அச்சபையின் ஆலோசனையின் மீது பணியாற்றுதல் வேண்டும்.
2.3 அரச சபையானது அனைத்து அரசியல் விடயங்கள் மற்றும் தேசிய முன்னுரிமை தேவைகள் பற்றி தீர்மானித்தல் வேண்டும். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் மாகாண சபையின் அமைச்சரவை அரச சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை அமுல்படுத்துதல் வேண்டும்.
2.4 அரசசபை தீர்மானங்கள் அனைத்து அங்கத்துவர்களினதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும். இணக்கப்பாட்டிற்கு வர முடியாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் பெரும்பான்மையான மக்களின் கருத்தின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும். அரச நிருவாக முறைமைகள் தொடர்பில் புத்த பெருமான் போதித்த ஒற்றுமையுடன் ஒன்றுகூடல், ஒற்றுமையுடன் கலந்துரையாடல் மற்றும் ஒற்றுமையுடன் பிரிந்து செல்லல் ஆகிய கோட்பாடுகள் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
மாற்றுத் திட்டம் 3
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமைக்கு சமமான முறை ஒன்றினை பின்பற்றுதல்.
iii) பிரதமர் உட்பட அமைச்சரவையானது இருபத்து ஐந்திற்கு (25) கூடலாகாது.
iஎ) சாபாநாயகர், பிரதம அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் சபாநாயகரின் குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும். சபாநாயகர் அதில் தலைவராக இருப்பார்.
எ) அரச தலைவர் அரச சபையின் சிபாரிசின் பிரகாரம் மற்றும் சபாநாயகரின் குழுவின் அனுமதியுடன் சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான உறுப்பினர்களையும் அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என்பவற்றின் நீதிபதிகளை நியமித்தல் மற்றும் அரச தலைவரினால் சபாநாயகரின் குழுவின் சிபாரிசின் மீது அரச நிறுவனங்களின் தலைவரை நியமித்தல்.
04. அதிகார பகிர்வு
i) இலங்கையானது ஒற்றையாட்சி கொண்ட அரசாக காணப்படுவதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற் கொண்டு மாகாண அலகுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும். அதாவது,
அ) 2009 மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவித்தல்,
ஆ) ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலினால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முன்மொழிவு,
இ) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றிற்கு இடையே பரிமாறிய கடிதங்கள் உட்பட திஸ்ஸ விதாரன அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்கள்,
ஈ) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள்,
உ) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009 மே மாதத்தில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
ii) மாகாண ஆளுநர் பதவிகள் இரத்துச் செய்யப்படுவதுடன், அந்த அதிகாரங்களை அரச தலைவரினால் அமுல்படுத்தல்.
iii) மாகாண சபையொன்றின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய உறுப்பினர் முதலமைச்சராக நியமிக்கப்படல் வேண்டும்.
இரண்டாவதாக அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள கட்சியின் பிரதான பிரதிநிதித்துவ உறுப்பினரை பிரதி முதலமைச்சராக நியமித்தல்.
iஎ) மாகாண சபைக்கு போட்டியிட்டு அந்தந்த கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கையின் வீதத்திற்கேற்ப மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமித்தல்.
05. நீதிமன்றம்
i) ஏனைய விடயங்களுக்கு இடையே பிரதானமாக அரசியலமைப்பை வரைவிலக்கணப்படுத்துவதற்காக மற்றும் சட்டமூலங்களின் சட்டத் தன்மையினை பரீட்சிப்பதற்காக தனியான மற்றும் சுயாதீன அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுதல். அதன் தீர்மானங்கள் இறுதி தீர்மானமாக அமைவதுடன் நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் என்பன அதன் தீர்மானங்களை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளது.
ii) அனைத்து நீதிவான்களினதும் பதவிக் காலம், சம்பளம், கொடுப்பனவு மற்றும் சலுகைகள் என்பன பாதுகாக்கப்படுவதுடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக குற்றப் பிரேரணை முன் வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதனுடன் தொடர்புடைய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக பரீட்சிக்கும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படும். அந்த பரிசோதனைகளை நடாத்தும் பணியானது பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளின் பிரகாரம் நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படும். அந்த பரிசோதனைகளை நடாத்தும் பணியானது பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளுக்கு (லெடிமர் ஹவுஸ் கூற்று) ஏற்ப மேற்கொள்ளல்.
iii) பாராளுமன்ற தேர்தல் மனுக்களை பரீட்சிக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றிடம் ஒப்படைக்கப்படுவதுடன், அவ்வாறான மனுக்களை பரீட்சித்து தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு குறித்த காலப்பகுதியொன்றினை நிர்ணயித்தல் வேண்டும்.
06. நல்லாட்சி
i) சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, சுயாதீன நீதி சேவை ஆணைக்குழு மற்றும்
சுயாதீன இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு என்பவற்றினை முன்னுரிமை அடிப்படையின் மீது நிறுவுதல்.
ii) அனைத்து தேர்தல்களையும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடாத்துதல்
வேண்டும். மேலும் அரச மற்றும் தனியார் ஊடகங்களை உள்ளடக்கியதான தேர்தல்
செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்களுக்கு மற்றும் நபர்களுக்கு உத்தரவு
பிரப்பிக்கும் அதிகாரம் அந்த ஆணைக்குழுவிடம் காணப்படும்.
iii) மோசடிகளைத் தடுத்தல் மற்றும் ஒழித்தல் என்பவற்றினை வலுப்படுத்துவதற்காக
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வினைத்திறனான முறையில் மற்றும் அதிகாரபூர்வமான முறையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டும். பொது சொத்துக்கள் மற்றும் அரச வளங்கள் முகாமைத்துவம் செய்யும் போது அரச
நிறுவனங்களினால் உரிய பொறுப்புடன் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மையுடன் நேர்மையான முறையில் மேற்கொள்ளல் வேண்டும்.
iஎ) ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான கொள்கையினை அமுல்படுத்தக் கூடியவாறு ஊழல் எதிர்ப்பு புதிய சட்டமொன்றினை விதித்தல்.
எ) சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சபை உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றத்தின், உச்ச நதீ pமன்றத்தின் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நீதிமன்றங்களின் நீதவான்களுக்கு நன்நெறி கோவை ஒன்றினை விதித்தல்.
எi) தனியார் துறையின் ஊழல்களை உள்ளடக்கும் வகையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி விசாரணைகள் செய்யும் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் அச்சட்டத்தை கடந்த காலத்திற்கும் வலுப்பெறும் வகையில் அமுல்படுத்தல்.
எii) பொது தொழில் முயற்சிகள் குழு, அரச கணக்குகள் குழு, உள்ளிட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுக்களை பலப்படுத்தல் மற்றும் அக்குழுக்களினால் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பானது பாராளுமன்றத்திடம் காணப்படுதல் வேண்டும்.
எiii) அரச தொழில் முயற்சிகள் குழு மற்றும் அரச கணக்குகள் குழுவின்
நடவடிக்கைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு தகவல் (தரவு)
வங்கி ஒன்றுடன் கூடிய சுயாதீன செயலகம் ஒன்றினை நிறுவுதல் மற்றும் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அவற்றிற்கான மதிப்பீடுகளை பரீட்சிப்பதற்கான அதிகாரம் அக்குழுவிடம் வழங்கப்படும்.
iஒ) நூறு மில்லியன் ரூபாவை விடவும் கூடுதலான பெறுமதியுடைய அரச தொழில் முயற்சிகள் அல்லது முதலீடுகள் அல்லது கணக்குகளை பரீட்சிப்பதற்காக விசேட
பாராளுமன்ற குழுவொன்றினை நியமித்தல்.
07. பங்கேற்பு சனநாயகம்
பெண்கள் உரிமைகள்
i) அனைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பெண்களுக்கு
நூற்றிற்கு இருபத்தைந்து வீத (25மூ) பிரதிநிதித்துவத்தை வழங்குதல்.
ii) பெண்களின் உரிமைகள் பற்றி செயற்படும் பொருட்டு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் பிரதிநிதிப்படுத்தக் கூடியவாறு பெண்கள் சபையொன்றினை நிறுவுதல். அதனூடாக சனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாராளுமன்றத்தினால் ஒப்படைக்கப்படுகின்ற ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும். சமூக அபிவிருத்திச் சங்கங்கள்
iii) மக்கள் பங்கேற்பு சனநாயகத்தை நிறுவுதல் மற்றும் மக்கள் பிரிவினரிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சமூக அபிவிருத்தி சங்கங்கள் அமைக்கப்படுவதுடன், அது அரசியல் தலையீடற்ற அடிப்படையின் மீது அமுல்படுத்தப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒன்றினை நிறுவியதன் பின்னர் ஆறு மாதங்களினுள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்ளும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றிற்கு விடப்படுவதுடன், இந்நாட்டு மக்களின் இணக்கப்பாட்டுடன் நிறுவப்படும் முதலாவது அரசியலமைப்புச் சட்டமாகவும் இது விளங்கும்.

பலாங்கொடை மனிதனின் வியப்பூட்டும் தகவல்கள்

BalangodaBalangoda 1
பலாங்கொடை மனிதன் எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையில் காணப்பட்ட மனித இனத்தினன் ஆவான்.இற்றைக்கு சுமார் 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன.இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உள்ளன.
இலங்கையிற் காணக்கிடைத்துள்ள அக்கால மனிதனின் எச்சங்கள் இலங்கையில் நிலவிய இரண்டாம் காலத்திற்குரிய அஃதாவது பொதுக்காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முற்பட்ட பண்பாட்டுக் குரியனவாகும்.

இந்த இடைக் கற்காலப் பண்பாடு ‘பலாங்கொடை நாகரிகம்’ எனப்பட்டது
.
நன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செ.மீ. எனவும் பெண்ணின் உயரம் 166 செ.மீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன.
பலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும் கிட்டத் தட்ட 4 செ.மீ. அளவான கூரிய படிகங்களால் ஆன்வையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் முதலில் விவரிக்கப்பட்டபடி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப் பட்டவையாகும்.ஐரோப்பாவில் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாயிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் அதற்கும் முற்பட்டதாகும். பட்டதொம்பலென என்னுமிடத்தில் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெல்லென குகையில் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்.
பலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலைநாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஹோட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஹோட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்ட 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானென கருதச் செய்கின்றன.
நில்கலகுகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களில் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக் கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன.இலங்கையின் நாயினங்கள் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட குகைளும் இடங்களும்
பெலிலென – கித்துல்கல
வவுலா பனே – இரத்தினபுரி
பட்டதொம்ப குகை – குருவிற்றை
பாஃகியன் குகை – களுத்துறை
பெல்லன்பந்தி பலசுச – பன்சந்திரசேனைஇ பலாங் கொடை
ஹோட்டன் சமவெளி
தொரவக்க குகை – கேகாலை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜூன் 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்

வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று புதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்கள் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அதில், கொலை வழக்கில் சந்திராசாமி விசாரிக்கப்படவில்லை, ராஜிவ் படுகொலை தொடர்பான சில வீடியோக்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் விசாரணை அதிகாரி ரகோத்தமன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எனவே மறுவிசாரணை நடத்தி புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என அவர் கோரியிருக்கிறார்.
நீதிபதிகள் செல்வம் மற்றும் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் சிபிஐ துணை இயக்குநர், இந்திய உளவுத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்கவேண்டும் என உத்திரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

மகா நடிப்புடன் ஜனாதிபதி காலில் விழுந்த விநாயகமூர்த்தி

news
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.
 
கடந்தவார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
 
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியசரர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் மூத்த புதல்வரின் திருமணம் கடந்தவார இறுதியில் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. 
 
அதில் முக்கிய விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அத்துடன் அங்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பெருமளவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர். 
 
மணமக்கள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆசியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி திரும்பிய போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் காலடியில் விழுந்தார். 
 
உடனே எல்லோரும் விநாயமூர்த்தியும் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசிபெறுகிறார் என்று எண்ணினர். ஆயினும் நடந்தது அது வல்ல. மணமக்களை வாழ்த்துவதற்குச் சென்ற விநாயகமூர்த்தி தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலடியில் விழுந்துவிட்டார். 
 
உடனே அங்கிருந்த ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அவரை தூக்கிவிட உதவினர். ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியை தூக்குவதற்காக கையை நீட்டினார். அதற்குள் விநாயகமூர்த்தி சமாளித்துக்கொண்டு தானே எழும்பி நின்றார்.

mardi 28 mai 2013

நீங்கள் எல்லாம் போங்கள்.... ராணுவமா, நாங்களா என்று பார்த்து கொள்கிறோம்’ என்று புலிகள் எங்களையெல்லாம் வெளியே அனுப்பி, சவால் விட்டிருந்தால், அது வீரப் போராட்டமாக இருந்திருக்கும்;துக்ளக்

இலங்கைத் தமிழர் புதிதாக வீடு கட்டிக் கொள்வதற்காக இந்தியா கொடுக்கும் பணத்தை இலங்கை அரசு சூறையாடுகிறது. அந்தப் பணத்தில் சிங்களருக்கு வீடு கட்டிக் கொடுகIndian Housing Project்கப்படுகிறது. அந்தப் பணத்தை வேறு தேவைக்களுக்கு இலங்கை அரசு பயன்படுத்துகிறது’ என்றெல்லாம் இங்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இது குறித்து நாங்கள் இந்தியத் தூதரக வட்டாரத்தில் விசாரித்தோம். “முதலில் ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு ஏஜென்ஸி மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அதில் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பிருந்ததால், நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிலேயே 5.5 லட்ச ரூபாயை படிப்படியாக வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி, தற்போது இந்திய அரசே நேரடியாக தமிழ் பயனாளிகளுக்கு பணம் கொடுக்கிறது. இதில் எந்த ஊழலோ, லஞ்சமோ, தரக் குறைவோ ஏற்பட வாய்ப்பே இல்லை’‘ என்றார் ஒரு தூதரக அதிகாரி. அதே போல், இந்தியா அமைத்துக் கொடுக்கும், ரயில் பாதையையும் இந்திய ஒப்பந்தக்காரரைக் கொண்டே செய்யப்படுகிறது. இலங்கை அரசிடம் பணத்தை நேரடியாகக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சீனாவும் தனது தரப்பு உதவியான நெடுஞ்சாலை அமைக்கும் பணியை, தங்கள் நாட்டு ஒப்பந்தக்காரர் மூலம், தனது ஊழியர்களைக் கொண்டே செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள் எஸ்.ஜே.இதயா மற்றும் ஏ.ஏ.சாமி ஆகியோர் இந்த இதழில் புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....
புதுக்குடியிருப்பு நகரில் எங்களுக்குப் பேட்டியளித்த இளைஞர், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்தைச் சந்திக்கச் சிபாரிசு செய்ததால், அந்தக் குடும்பத்தைத் தேடிக் கிளம்பினோம். வழியில் வேறு பலரையும் சந்தித்துப் பேசியபடியேதான் போனோம். ஒரு தேநீர் விடுதியில் நாங்கள் சந்தித்த சுமார் எழுபது வயதுப் பெரியவர் சொன்ன கருத்து குறிப்பிடத்தக்கது.
“போர் ஆரம்பித்த காலத்தில் நாங்களே பொடியன்களைத் (இளைஞர்களை) தட்டிக் கொடுத்தது உண்மை. ஆனால், காலப்போக்கில் உயிரிழப்புகள் அதிகமாக, அதிகமாக வேதனை எங்களை வாட்டத் துவங்கி விட்டது. எத்தனையோ பேச்சு வார்த்தைகளில் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்று, புலிகள் போரை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர்கள் கடைசி நாள் வரை அதற்குத் தயாராக இல்லாமல் போய் விட்டார்கள். இதனால் கொத்து கொத்தாகத் தமிழர்கள் பலியாக வேண்டியதாயிற்று. இலங்கை ராணுவம் விமானம் மூலம் குண்டுகளை வீசி தமிழர்கள் பலரைக் கொன்றது உண்மை. ஆனால், புலிகள் நினைத்திருந்தால் அதைத் தவிர்த்திருக்க முடியும். ‘எங்களுக்குத் தனி நாடே வேண்டாம். எங்களை விடுங்கள். நாங்கள் எங்காவது போய் பிழைத்துக் கொள்கிறோம்’ என்று எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் இயக்கத்தின் காலில் விழுந்து அழுதிருக்கின்றன. ஆனால், அவர்கள் மக்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால்தான் சாவு எண்ணிக்கை அதிகமானது.
“நீங்கள் எல்லாம் போங்கள்.... ராணுவமா, நாங்களா என்று பார்த்து கொள்கிறோம்’ என்று புலிகள் எங்களையெல்லாம் வெளியே அனுப்பி, சவால் விட்டிருந்தால், அது வீரப் போராட்டமாக இருந்திருக்கும். இவ்வளவு மக்கள் அழிந்திருக்க மாட்டார்கள். அதே நேரம், போரும் எப்போதோ முடிந்து போயிருக்கும். ஆனால், புலிகள் வலுக்கட்டாயமாக, மக்களைத் தங்களுக்கு அரணாக வைத்திருந்ததால்தான், பல்வேறு நாடுகள் இலங்கை ராணுவத்திற்குப் பல உதவிகள் செய்த நிலையிலும், இந்தப் போர் இத்தனை ஆண்டுகள் நீடித்தது. மக்கள் அரண் இல்லாமல் போயிருந்தால், புலிகளை இலங்கை ராணுவம் எப்போதோ ஒடுக்கி இருக்கும்.
“தங்கள் பிடியில் இருந்த பகுதிகளைச் சுற்றி புலிகள் கண்ணி வெடிகளைப் பதித்து விட்டனர். தங்கள் பகுதிகளில் புலிகளே வரிவசூல் செய்தனர். ஆனால், அரசாங்கம் அந்த பகுதியைச் சுற்றிலும் ராணுவத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு, அந்த ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல், புலிகள் பகுதியிலுள்ள எங்களுக்கும் உணவு அனுப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் அனுப்ப வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் செய்வார்கள்? பல தமிழர் அமைப்புகள் அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்தபோது, புலிகளும் அப்படி நகர்ந்திருக்க வேண்டும். இப்போது ராணுவத்தை மட்டும் குறை சொல்லிப் புலம்புவதில் அர்த்தமில்லை” என்றார் அவர்.
அவர் குடும்பத்தில் எல்லோருமே போரில் இறந்துபோன நிலையில், அவர் மட்டுமே தனிமையில் வசிப்பதாகச் சொன்னபோது கலக்கமாக இருந்தது.
புதுக் குடியிருப்பு நகருக்கு வெகு அருகில்தான், விடுதலைப் புலிகள்Prabaharan houseஇயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த பங்கர் (பாதாள) வீடு இருக்கிறது. அந்த வீட்டைப் பார்வையிடச் சென்றோம். காட்டில் அடர்ந்த மரங்களை வெட்டி ராணுவம் தற்போது பாதை அமைத்துள்ளது. இரு புறங்களிலும் கம்பி வேலி கட்டி கண்ணி வெடிக்கான எச்சரிக்கைப் பலகைகளையும் நட்டு வைத்துள்ளனர். பிரபாகரன் வாழ்ந்த அந்த வீட்டை, கேன்டீன் மற்றும் டாய்லெட் வசதிகளோடு தற்போது சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது இலங்கை அரசு. நாங்கள் சென்றபோது, ஒரு பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் பஸ்ஸில் வந்து அந்த வீட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண தமிழ்க் குடும்பத்தினர் சிலரும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
மேலே ஒரு பெரிய ஹால் போல சும்மா இருக்கிறது ஒரு வீடு. டார்க் பச்சை மற்றும் லைட் பச்சை நிறங்களில் சின்ன சின்ன பிட் துணிகள் கொண்டு பொறுமையாகத் தொடுக்கப்பட்ட ஒரு வலை, அந்த வீட்டின் கூரை மீது விரித்து விடப்பட்டிருக்கிறது. (மேலே இருந்து பார்த்தால் மரம் மற்றும் புதர் போல் தெரியுமாம்.) அந்த ஹாலுக்குக் கீழே பூமிக்குள் மூன்று தளங்களில் இருக்கிறது பிரபாகரனின் வீடு. காரை கீழேயே ஓட்டிச் சென்று ‘பார்க்’ செய்யும் வகையில் அண்டர் க்ரௌண்ட் கார் பார்க்கிங்கும் இருக்கிறது. குண்டு விழுந்தாலும் இடியாத வண்ணம், பூகம்பம் வந்தாலும் உடையாத வண்ணம், பூமிக்குள் இருக்கும் அந்த வீட்டின் சுவர்கள் ஒவ்வொன்றும் மூன்றடி கனத்தில் உள்ளன.
வழக்கமான படிக்கட்டுப் பாதை போக, அவசரத்திற்கு தப்பித்து வெளியே செல்ல, கீழே உள்ள மூன்றாவது தளத்திலிருந்து தனி ஏணிப்பாதை ஒன்றும் உள்ளது. வீட்டைச் சுற்றி நான்கு இடங்களில் காவல் நாய்களின் கூடாரம். அதை அடுத்து நான்கு இடங்களில் மனித வெடிகுண்டு காவலாளிகளின் கூடாரம். அதைச் சுற்றி 12 அடி உயரத்திற்கு மின் கம்பி வேலி. அதற்கு வெளியே மேலும் நான்கு காவல் கூடாரங்கள். அதையடுத்து மற்றொரு கம்பி வேலி. அதற்கு வெளியே பல மீட்டர்களுக்கு கண்ணி வெடிகளைக் கொண்ட ஏரியா. இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவே இருந்திருக்கிறது பிரபாகரனின் அந்தப் பாதாள வீடு.
இதையெல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கிச் சொல்ல ராணுவ வழிகாட்டி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ‘பொதுமக்களும், சாதாரண விடுதலைப் புலிகளும் வெளியே புல்லட்களுக்குப் பலியாகியபடி இருக்க, அதன் தலைவர் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருந்தார் பாருங்கள்’ என்று மக்களுக்கு உணர்த்தவே, இந்தப் பங்களாவை ராணுவம் சுற்றுலாத்தலமாக்கி இருப்பதை யூகிக்க முடிகிறது.
அதன் பின் நாங்கள் புதுக்குடியிருப்பு நகரிலிருந்து முல்லைத் தீவு நோக்கிப் பயணமானோம். போகும் வழியில் புறநகர் பகுதியில் (ஏறக்குறைய இறுதிப்போர் நடந்த பகுதியின் அருகில்), புதுப் புது வீடுகள் காணப்பட்டதையொட்டி, அங்கு சென்று விசாரித்தோம். ஒரு வீட்டில் கணவன் இல்லாமல் இரு குழந்தைகளோடு ஒரு பெண் வசித்து வந்தார். அவரோடு பேசினோம். “வீடில்லாமல் தவித்த எனக்கு ராணுவமே வீடு கட்டிக் கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்ட அவரிடம், போர்க் காலம் குறித்து விசாரித்தோம்.
“போர் நடந்த காலங்களில் இயக்கத்தில் பிடித்துக் கொண்டு போய் விடprabhakaran-idுவார்கள் என்று, பல வருடங்கள் நான் வீட்டை விட்டே வெளியே போகாமல் இருந்தேன். என் அம்மா ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்து எனக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணம் ஆனதும் ‘எப்படா கர்ப்பிணி ஆவோம்’ என்று ஆவலாகக் காத்திருந்தேன். ஏனென்றால், கர்ப்பிணி என்றால் நான் தைரியமாக வெளியே சென்று வரலாம். இயக்கத்தினர் பிடித்துச் செல்ல மாட்டார்கள். நான் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும். அதே போல், கர்ப்பம் தரித்து நான்கு மாதங்களுக்குப் பிறகு வெளியே செல்ல ஆரம்பித்தேன். அப்போதும் இயக்கத்தினர் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். கர்ப்பிணி என்று நம்பிய பிறகுதான் அனுப்பி வைத்தனர்.
குழந்தை பிறந்த பிறகு கைக்குழந்தையுடன் வெளியே செல்வேன். பிரச்னையிருக்காது. குழந்தை வளர, வளர குழந்தையை என் அம்மாவிடம் பிடுங்கிக் கொடுத்து விட்டு, என்னை மீண்டும் பிடித்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் வந்து விட்டது. இதனால், மீண்டும் கர்ப்பம் தரித்தேன். மீண்டும் சுதந்திரமாக வலம் வந்தேன். ஆனால், இயக்கத்தினர் என் கணவரைத் தேடத் துவங்கி விட்டனர். இதனால் அவர் எங்கள் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று வரை அவர் என்னிடம் வரவில்லை” என்று கண் கலங்கினார்.
அருகில் இருந்த ஒரு வயதான பெண்மணியிடம் பேசியபோது, “இந்தியாதான் எனது வீட்டைக் கட்டித் தருகிறது. இலங்கை பணத்தில் 5.5 லட்ச ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 2.5 லட்சம் ரூபாய்) கொடுக்கிறார்கள். நாங்களே கட்டுமானப் பொருட்களை வாங்கி, கொத்தனார் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். நாம் கட்டக் கட்ட, தவணை முறையில் பணம் கொடுப்பார்கள். மணல் விலைதான் அதிகமாக உள்ளது. நாங்களே சித்தாள் வேலை பார்ப்பதால், இத்தொகைக்குள் கட்ட முடிகிறது. ஆடம்பரமாகக் கட்ட முடியாது. அடிப்படை வீடு ஒன்றையாவது கட்டிக் கொள்ள முடிகிறதே, அந்த வகையில் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார் அந்த வயதான பெண்மணி.
இதன் மூலம் ‘இந்தியா தருகிற பணம் கொள்ளை போகிறது’ என்று தமிழகத்தில் சிலர் வைக்கும் குற்றச்சாட்டும் பொய்யானது என்பது தெரிகிறது.
இதையடுத்து, நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கிக் கிளம்பியபோது, வழியில் தண்ணீருக்கு நடுவே ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் காணப்பட்டது. போரின் வெற்றியை அறிவிக்கும் வகையில் இலங்கை அரசு அந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியுள்ளது. அருகிலேயே, புலிகளிடமிருந்து கைப்பற்றிய வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து கருவாடாய்க் கிடக்கின்றன. அந்த நினைவுச் சின்னத்தை அடுத்து, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்களும், தற்கொலைப் படகுகளும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இலங்கை குறித்த ஒரு புகைப்படக் கண்காட்சியும் அங்கு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து பார்வையிடுகிறார்கள்.Pirated-Ship
இதையடுத்து, நந்திக்கடல் காயல் (லகூன்) கரையோரமாக முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போனோம். வீடுகள் அதிகம் கண்ணில்படவில்லை. அப்பகுதியின் கடற்கரையில் ஒரு பாழடைந்த கப்பல் காணப்பட்டது. அருகே ஒரு ராணுவ கேன்டீனும் இருந்தது. அங்கு தேநீர் அருந்தியபடி, அந்தக் கப்பல் குறித்து விசாரித்தோம். “இந்த இடம்தான் போர் 100 சதவிகிதம் நிறைவுக்கு வந்த இடம். கடைசியாக மிஞ்சியிருந்த ஒரு சில விடுதலைப் புலிகள், இந்தக் கப்பலுக்குள் ஒளிந்து கொண்டு சுட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களைக் கொன்று ராணுவம் போரை நிறைவு செய்தது” என்றார்கள் அங்கிருந்தவர்கள். அந்த கப்பலைப் பற்றி விசாரித்தபோது, “பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக் கடல் பகுதியில் ரிப்பேராகி நின்ற இந்த வெளி நாட்டுக் கப்பலை, விடுதலைப் புலிகள் இழுத்துக் கொண்டு வந்துவிட்டனர். இதிலிருந்த எஞ்ஜின்கள், இதர பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றித் தங்களது படகுகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்” என்று தெரிவித்தனர்.
இதன்பின், நாங்கள் முல்லைத் தீவுக்குப் போய் அங்கிருந்த தமிழர்கள் சிலரிடம் பேசினோம். கடைசி நாள் போர் குறித்து அவர்கள் விவரித்தனர். “முள்ளிவாய்க்கால் பகுதியில் நாங்கள் புலிகளுடன் சிக்கிக் கொண்டோம். அவர்கள் எங்களை வெளியே அனுப்புவதாக இல்லை. ராணுவமோ புதுக்குடியிருப்புப் பகுதி வழியாகவும், முல்லைத் தீவு வழியாகவும் எங்களை நெருங்கி விட்டது. இருபுறம் ராணுவம். கீழ்புறம் கடல், மேல்புறம் நந்திக்கடல் காயல். எங்கும் தப்ப முடியாது. உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய் விட்டது. அந்த நேரத்தில் இலங்கை ராணுவம் எப்படியோ கடல்பகுதிக்கு முன்னேறி வந்து, அங்கிருந்தபடி புலிகளைத் தாக்கத் துவங்கியது. இதனால் நாங்கள் நந்திக்கடல் மீதான குறுகிய பாலத்தின் வழியாகத் தப்பி முல்லைத் தீவை நோக்கி ஓடி வந்தோம்.mullaitivu tamils
“முதலில் எங்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவம், பிறகு நாங்கள் பொதுமக்கள் என்பது தெரிந்ததும் நிறுத்திக் கொண்டது. பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து காயலில் விழுந்து தப்பிக்க நினைத்து உயிரிழந்தனர். பொதுமக்கள் வெளியேறியதும், ராணுவம் முழுமையாக அந்தப் பகுதிக்குள் புகுந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. கடைசி நாள் போரில், புலிகளோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்து போனாலும், எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் தப்பித்து இன்று உயிரோடு இருப்பது நம்ப முடியாத அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று விவரித்தார்கள் அவர்கள். அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லும்போதே, அவர்கள் கண்களில் ஒருவிதமான பீதியைப் பார்க்க முடிந்தது.
இதன் பின் நாங்கள், அந்த ஆம்புலன்ஸ் டிரைவரது குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம். கணவன், மனைவி, இரு மகன்கள் அடங்கிய குடும்பம் அது. மூத்த மகன் இடது காலில் செயற்கைக் கால் பொருத்தியிருந்தார். அந்த டிரைவரிடம் நாங்கள் பேச்சுக் கொடுத்தோம். “நான் அரசு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றுகிறேன். பத்து வருடங்களுக்கும் மேலாக புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். போரில் காயம்படும் புலிகளை உடனுக்குடன் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்ப்பது என் பணி. எத்தனையோ ஆயிரம் புலிகளை அப்படி நான் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தைகள் வளர வளர, எனக்குப் பயம் வரத் துவங்கியது. இயக்கத்தினரிடம் சென்று என் குடும்பத்தை வெளியே அனுப்பி விடுமாறு கெஞ்சினேன். நான் அவர்களுக்குச் செய்த உதவிகளை நினைத்து அவர்கள் மனமிரங்குவார்கள் என்று நம்பினேன். ஆனால், அவர்கள் உடன்படவில்லை.
“அதன் பின் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் அவர்களிடம் ‘நான் இங்கு இருந்து உங்களுக்கு ஊழியம் செய்கிறேன். என் மனைவி, குழந்தைகளை மட்டும் வெளியே அனுப்பி விடுங்கள்’ என்று கெஞ்சினேன். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. மாறாக, என் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, ‘உயிர் மேல் உனக்கு அவ்வளவு ஆசையா?’ என்று மிரட்டினார்கள். அதன் பின் ஒருநாள் விமானப் படைத் தாக்குதல் சமயத்தில், பதுங்கு குழியில் என் மனைவியும், குழந்தைகளும் ஒளிய நேர்ந்தபோது, மண் சரிந்து விட்டதால் என் மகள் உயிரோடு மண்ணில் புதைந்து இறந்து போனாள்” என்று கண் கலங்கியபடி, தனது செல்ஃபோனிலிருந்த தனது மகளின் வால்பேப்பர் ஃபோட்டோவைக் காட்டினார்.
“மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இயக்கத்தினரிடம் போனேன். நான் இறுதி வரை உங்களோடு இருக்கிறேன். தயவு செய்து என் குடும்பத்தை மட்டும் வெளியே அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சினேன். அவர்கள் என்னைப் பலவந்தமாகத் துரத்தியடித்தனர். அதோடு மறுநாளே என் வீட்டிற்கு வந்து, என் மூத்த மகனைப் பார்த்து விட்டு, அவனைத் தங்களோடு அழைத்துச் சென்று விட்டனர். நானும் என் மனைவியும் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினோம். இப்போதுதான் ஒரு மகளை இழந்திருக்கிறோம். என் மகனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியபோது, மறுபடியும் துப்பாக்கியைக் கழுத்தில் வைத்து மிரட்டி விட்டுச் சென்றனர். நாங்கள் அழுதபடியே வீட்டில் இருந்தபோது, என்னை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் ஓட்ட அழைத்துச் சென்று விட்டனர். இயக்கத்துக்குப் போன என் மகன் ஓரிரு நாளில் தப்பி வந்து விட்டான். ஆனால், அவனை நாங்கள் ஒளித்து வைக்கும் முன்பாகவே, மீண்டும் வந்து பிடித்துக் கொண்டு போய் விட்டனர்.
“அடுத்த முறையும் அவன் தப்ப முயன்றிருக்கிறான். அப்போது கோபமாகி அவன் காலில் சுட்டு விட்டனர். முழங்காலுக்குச் சற்று மேலே பாய்ந்த குண்டு மறுபுறமாக வெளியே வந்து விட்டது. நானே என் மகனை எனது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு வர வேண்டியதாகி விட்டது. அப்போது இலங்கை அரசின் ரெட் க்ராஸ் கப்பல் முல்லைத் தீவிற்கு அடிக்கடி வரும். காயம்பட்டவர்களை அதில் எடுத்துக் கொண்டு போவார்கள். புலிகள்தான் அதற்குப் பாஸ் வழங்கி, கடும் காயம்பட்டவர்களை ரெட் க்ராஸ் ஆட்களிடம் ஒப்படைப்பார்கள். என் மகன் சுடப்பட்ட நேரத்தில் ரெட் க்ராஸ் கப்பல் வந்ததால், என் மகனை அவர்களிடம் ஒப்படைக்கச் சொல்லி இயக்கத்தினரிடம் மன்றாடினேன். ஆனால், அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ‘புல்லட் தான் வெளியே வந்து விட்டதே? பிறகென்ன? இங்கேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறி விட்டனர். ஆனால், இங்கே பார்த்த வைத்தியம் கைகூடவில்லை. உள்ளே நரம்புகள் அழுகிப் போனதாகக் கூறி, ஓரிரு நாட்களில் அவனது காலையே வெட்டி எடுத்து விட்டார்கள்.displacement vanni
“நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். அதன் பிறகு எனது மனைவியையும், எனது இளைய மகனையும் மட்டும் கப்பலில் அனுப்பி வைக்கச் சம்மதித்தனர். அவர்கள் வெளியேறினார்கள். போரின் இறுதி கட்டத்தில்தான் நான் என் மூத்த மகனைத் தூக்கிக் கொண்டு ரிஸீவிங் பாயின்ட்டிற்கு ஓடி ராணுவத்திடம் தஞ்சம் புகுந்தேன். விடுதலைப் புலிகள் மாதிரி அரக்கர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது. அவர்கள் தலைமையில் ஒரு தனி நாடு அமைந்திருந்தால், அதுதான் உலகத்திலேயே கொடூரமான நாடாக அமைந்திருக்கும்” என்றார் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆக்ரோஷமாக. “தோற்கப் போகிறோம் என்று உணர்ந்த நாள் முதலே, அவர்கள் மிருகத்தனமாக மாறி விட்டார்கள்” என்றார் அவரது துணைவியார். அந்தக் காலை இழந்த இளைஞன் இன்னமும் மன அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை.
இப்படித்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக, வட மாகாணத்தின் பல பகுதிகளில் பல சோகக் கதைகள் வெடித்து வருகின்றன. ஆனால், இந்த உண்மைகளை முதலில் உள்வாங்கிக் கொள்ள மறுக்கும் சிலர், உடனே ‘அப்படியானால் இலங்கை ராணுவ வீரர்கள் எல்லாம் உத்தமர்களா?’, ‘ராஜபக்ஷ என்ன மகாத்மாவா?’ என்றுதான் அவசர அவசரமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். ‘ராஜபக்ஷ அரசு மீது எந்தத் தவறுமே இல்லையா?’ என்ற கேள்விக்கு அடுத்த இதழில் பதில் தேடுவோம்.