dimanche 26 mai 2013

பாகிஸ்தானில் 17 குழந்தைகள் பலி

FILE
பாகிஸ்தானில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்தில் இன்று காலை தீ பிடித்ததில், அப்பேருந்தில் பயணித்த 17 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள குஜ்ராத் நகரில் இன்று காலை குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் சென்றுக் கொண்டிருந்தது.

வாகனத்தின் எரிப்பொருளாக வைக்கப்பட்டிருந்த 'கியாஸ்' சிலிண்டரில் திடீர் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில் வாகனத்தில் தீ பிடித்தது.

தீயை கண்ட குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டனர். வாகனத்தின் கதவை திறந்து குழந்தைகளை வெளியேற்றுவதற்குள் குழந்தைகளின் சீருடை பற்றி எரியத் தொடங்கியது.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் விரைந்து வந்து தீயை அணைத்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire