mardi 14 mai 2013

கிழக்கு மாகாணத்திற்கு ஐரோப்பிய யூனியனின் இலங்கை தூதுவர் பேனாட் சேவேவே 15ஆம் திகதி விஜயம்



ஐரோப்பிய யூனியனின் இலங்கை தூதுவர் பேனாட் சேவேவே (ளநஎநஎந) எதிர்வரும் 15ஆம் திகதி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஐரோப்பிய யூனியனினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை இவர் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை அபிவிருத்திப் பணிகளை பார்வையிடவுள்ளார்; என இந்த நிகழ்விற்கான திட்ட இணைப்பாளர் ரோஹண சிறிவர்த்தன தெரிவித்தார்.
588 யூரோ மில்லியன் நிதியில்; கிழக்கு மாகாணத்தில் ஐரோப்பிய யூனியன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருதாகவும் அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire