mardi 21 mai 2013

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: நாராயணசாமி

Narayansamyபுதுவையில் ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழாவில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். அவருடைய காலத்தில் புதிய கல்வி கொள்கை, தொழில் கொள்கை, அறிவியல் கொள்கை ஆகியவை கொண்டு வரப்பட்டது. 
ராஜிவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம். 
தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கக் கூடிய ஒரு கூட்டம் தமிழகத்திலும், புதுவையிலும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட திரைப்பட இயக்குனர் சீமான் கடலூரில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவரின் புகைப் படத்தை பிரசுரித்து கூட்டம் நடத்த அவர் அனுமதி கேட்டார். ஆனால் அந்த கூட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இது நியாயமான சரியான நடவடிக்கை. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு கோழை. அப்பாவி மக்களையும், பெண்களையும், சிறுவர்களையும் போரில் கேடயமாக பயன்படுத்தியவர் வீரனா? இலங்கைக்கு ராஜிவ் காந்தி சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அதிலிருந்து அவர் உயிர்பிழைத்தார். வெற்றியோ, தோழ்வியோ போரை முன்னின்று நடத்தி செல்பவர்தான் வீரன், பதுங்கி கொண்டவர்கள் வீரன் அல்ல. 
சீமான் கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாஸ்மின் மாலிக்கை அழைத்து வந்து பேச செய்துள்ளார். தீவிரவாதத்தையும், பிரிவனை வாதத்தையும் தூண்டுபவர்கள் தேச துரோகிகள். சீமானை பொறுத்த வரையில் பல முறை அவர் சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் சிறைக்கு செல்லவே விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாம் தீவிரதத்தையும் அடக்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை மக்கள தூக்கி எறிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire