mercredi 29 mai 2013

மகா நடிப்புடன் ஜனாதிபதி காலில் விழுந்த விநாயகமூர்த்தி

news
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.
 
கடந்தவார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
 
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியசரர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் மூத்த புதல்வரின் திருமணம் கடந்தவார இறுதியில் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. 
 
அதில் முக்கிய விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அத்துடன் அங்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பெருமளவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர். 
 
மணமக்கள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆசியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி திரும்பிய போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் காலடியில் விழுந்தார். 
 
உடனே எல்லோரும் விநாயமூர்த்தியும் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசிபெறுகிறார் என்று எண்ணினர். ஆயினும் நடந்தது அது வல்ல. மணமக்களை வாழ்த்துவதற்குச் சென்ற விநாயகமூர்த்தி தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலடியில் விழுந்துவிட்டார். 
 
உடனே அங்கிருந்த ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அவரை தூக்கிவிட உதவினர். ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியை தூக்குவதற்காக கையை நீட்டினார். அதற்குள் விநாயகமூர்த்தி சமாளித்துக்கொண்டு தானே எழும்பி நின்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire