jeudi 9 mai 2013

55 பேர் பலி; 105 கைதிகள் ஓட்டம் நைஜீரியாவில், சிறையின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்

நைஜீரியாவில், சிறையின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 55 பேர் பலியாயினர். நைஜீரியாவில், போகோ ஹராம் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. போர்னோ மாகாணத்தின், பாமா நகர சிறையின் மீது, நேற்று முன்தினம், ஏராளமான பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சிறை அதிகாரிகள், வார்டன்கள், ஊழியர்கள் உள்பட, 55 பேர் பலியாயினர்.இந்த சம்பவத்தில், 105 கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire