dimanche 26 mai 2013

டி.எம்.சவுந்தரராஜன். தன் உடல்வாழ்வை முடித்துக்கொண்டு குரலாய்ப் பிறந்திருக்கிறார்

 தன் உடல்வாழ்வை முடித்துக்கொண்டு குரலாய்ப் பிறந்திருக்கிறார் டி.எம்.சவுந்தரராஜன்.மதுரை நகரின் மகாபெருமைகளில் ஒருவர். அனைவரின் வீட்டிலும் ஒரு மூப்பனைப் போலக் கொண்டாடப் பட்ட முதல் ஆளுமை.தன் கம்பீரத்தால் இரண்டு மகா நடிகர்களின் பாடல்களுக்கு உயிர்பாய்ச்சிக் கொண்டே இருந்த மேதை.கண்ணதாசனை எம்ஜி.ஆரை வாலியை சிவாஜியை எம்.எஸ்.வியை எனப் பலரையும் தனியாக நினைத்தால் கூட டி.எம்.எஸ்.நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.சென்று வருக ததா...உங்கள் ஆன்மா அமைதியில் இளைப்பாரட்டும்.                        

Aucun commentaire:

Enregistrer un commentaire