vendredi 10 mai 2013

தமிழ் கட்சி எதுவாக இருந்தாலும், அதன் ஆதிக்க மற்றும் அதிகாரத் தலைவர்கள், அதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தேசிய மட்டத்தில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள்; என்.சத்தியமூர்த்


வடக்கில் புதிய அரசியல் தலைமையை ஏற்கப்போகும் தமிழ் கட்சி எதுவாக இருந்தாலும், அதன் ஆதிக்க மற்றும் அதிகாரத் தலைவர்கள், அதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தேசிய மட்டத்தில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் - ஸ்ரீலங்கா அரசாங்கம் மாகாணங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என அவர்கள் சொல்லும் அதே வழியிலேயே அவர்களும் செல்கிறார்கள்.
அது செப்டம்பரின் வருகையுடன் இரு தரப்பினரையும் பொறுப்புக்கூற வைக்கும் ஒரு மோசமான வழிக்கு இட்டுச் செல்வதுடன், தான் எந்த வழியில் செல்லவேண்டும் என்பதை ஸ்ரீலங்கா காணக்கூடியதாகவும் இருக்கும். துல்லியமாக எடுத்துச் சொல்வதென்றால், எந்த வழியில் ஒருவர் மற்றவரை முந்திச் செல்லலாம் - அல்லது இருவரில் யார் மற்றவரை எங்கே எப்படி முந்தலாம் என்பதை.
செப்டம்பர் மாதம் வாக்களிக்கப்பட்ட வடமாகாணசபை தேர்தல்கள் வரப்போகிறது. எனவே ஐநா மனித உரிமைச்சபை அமர்வு ஜெனிவாவில் மற்றுமொரு சுற்று வரப்போகிறது. தேர்தல்கள் நடத்தப்பட்டால், அவை சுதந்திரமானதும் நீதியானதுமாக இருந்தால் (ரி.என்.ஏ வெற்றி பெற்றால்? என்பதை வாசிக்கவும்),அப்போது ஜெனிவா பல விடயங்களில் தனது அழகை இழந்துவிடும்.
நவம்பரில் நடக்கவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டுக்கான உலக ஒதுக்கீடும் அதன் திறனில் சற்றுக் குறைந்துவிடும். சுதந்திரமான அரசியல் வண்ணமான ஒரு தமிழ் அரசாங்கம் அமைவது, தற்போதைய சர்வதேச பிரச்சாரமாகவுள்ள ஸ்ரீலங்காவின் தேசிய பிரச்சினையின் அரசியல் விடயங்களில் மீள் கவனம் செலுத்தி அதற்கு இன்னமும் தேவையாகவுள்ள ஒரு அரசியல் தீர்வினை உருவாக்கும். அத்துடன் அது பொறுப்புக்கூறல் விடயங்கள் பின்னணிக்குத் தள்ளிவிடும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் - ஒவ்வொரு திருப்பத்திலும் வெடிக்கக்கூடும் என அச்சமேற்படுத்திக் கொண்டிருப்பதாக அதன் உள்ளக முரண்பாடுகள் இருந்த போதிலும் அது வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது - ஒரு சிவில் நிருவாகத்தை நடத்துவதற்கு வெளிப்படையாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அது 13வது திருத்தத்தின் மிகுதியை, அல்லது அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை  அல்லது யாருக்காக மற்றும் எதற்காக தங்களின் தோல்விகள் ஏற்பட்டது என்று அவர்கள் தங்கள்மீதே பழி சுமத்துவதை தூண்டிவிடும். இத்தகைய உந்துதலை அவர்கள் முன்கூட்டியே விலக்கியிருக்க வேண்டும் மற்றும் அளவுக்குமீறி ஆசைப்படாமல் தங்களால் ஒரேசமயத்தில் செய்யக்கூடியதை மாத்திரம் அவர்கள் கோரியிருக்கவேண்டும்.
அவர்கள் மத்தியில் உள்ள சிவில் நிர்வாகத்தில் கைதேர்ந்தவர்களான மூத்த குடிமக்களை ஒன்று சேர்த்து, ஆட்சிக் கலையில் பயிற்சியோ, சாத்தியமான வசதியோ இல்லாத பதவியில் இருக்கப்போகும் அரசியல் தலைமைகளுக்கான ஒரு செயற்திட்டத்தை விதிவிலக்கு இல்லாமல் அமைத்திருந்தால் அது நன்றாக இருக்கும்.
மிகவும் முக்கியமாக புதிய வகுப்பை சேர்ந்த தமிழ் அரசியல் நிருவாகத்தவர்கள், தங்கள் சொந்த இனத்திலுள்ள அல்லது அதிகாரவர்க்கத்திலுள்ள, பழைய காவலர்களின் குரல்களுக்கு செவி சாய்க்க விருப்பம் கொண்டிருக்கலாம். அதை செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது.
வடக்கில் புதிய அரசியல் தலைமையை ஏற்கப்போகும் தமிழ் கட்சி எதுவாக இருந்தாலும், அதன் ஆதிக்க மற்றும் அதிகாரத் தலைவர்கள், அதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தேசிய மட்டத்தில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் - ஸ்ரீலங்கா அரசாங்கம் மாகாணங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என அவர்கள் சொல்லும் அதே வழியிலேயே அவர்களும் செல்கிறார்கள்.
இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, அவர்களும்கூட விடயங்கள் ஒவ்வொருவருடைய கட்டுப்பாட்டையும் மீறிப் போகாதபடி சமரச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிவில் சமூகத் தலைவர்கள் அரசியல் மற்றும் ஆட்சிக்கலை ஆகிய இரண்டினையும் கணிசமானளவு வெளிப்படைத் தன்மையுடன் தமிழர்கள் மத்தியில் சில நோக்கங்களுக்காக பரிமாற வேண்டும், ஆனால் எந்த ஒரு கடும் போக்காளரும்  பலவந்தமான பழக்கமாக ஒவ்வொருவர்மீதும் மற்றும் ஒவ்வொரு விடயத்தின்மீதும் குற்றம் காணுவதற்கு இடம் தராத முறையில் இதை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அவர் தானாக எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
பொறுப்புக்கூறல் விடயங்கள் சம்பந்தமாக ஜெனிவாவில், சாதாரண தமிழ் மக்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளத் தக்கதான கணிசமான அளவிற்கு எந்த உணரப்படும்; இயக்கமும் இல்லாத வகையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வுகள் நடந்தேறியுள்ளன, வட மகாணத்தின் தேர்தல்களின் நீண்ட கால ஓட்டத்தில் இராணுவத்தை வெளியேற்றும்படி புதிய கோரிக்கைகள் எழக்கூடும். தற்போதுள்ள முன்னாள் இராணுவ ஜெனராலான ஆளுனருக்குப் பதிலாக புதிய சிவில் சமூக ஆளுனரை மாற்றும்படி புதிய தாக்குதல் எழலாம்.
இந்தக் கோரிக்கை மற்றும் மாறுதல் ஆகிய இரண்டுமே தவிர்க்க முடியாதபடி நடைபெறத்தான் வேண்டும். அரசாங்கத்தின் சாதாரண கோரிக்கைகளில் ஏதாவது நம்பகத்தன்மை இருக்குமாயின் அது அவர்களின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும். அது கோழியா அல்லது முட்டையா எது முதல் வந்தது என்பதை ஒத்த ஒரு நிலமை. கிழக்கில் யுத்தத்தின் பின்னான அரசாங்கங்கள் கடந்தகால இராணுவ பின்புலத்தை கொண்ட ஒரு ஆளுனருடன் பணியாற்றியதினால் ஏற்கனவே இருதரப்பினரிடையேயும்; பூசல் உருவாகியுள்ளது.
கிழக்கில் இராணுவ ஆளுனர்கள் தேர்தல் மூலம் தெரிவான நிருவாகத்தில் தலையீடு செய்கிறார்கள், எனவே அதுபோல வடக்கிலும் நடக்கலாம் என்கிற புகார் முற்றிலும் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற தேவை இல்லை.13 வது திருத்தப்படி சட்டமாக்கப்பட்ட போதிலும் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு சட்டப்படி ஆளுனர்கள் அவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறார்கள். இராணுவ ஆளுனர்கள் என்று அழைக்கப்பட்ட போதிலும், அவர்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல ஆனால் இது தொடர்பாக அவர்கள் பிரத்தியேகமானவர்களும் அல்ல.
இந்த மாற்றங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் பக்கத்தின் அணுகுமுறைகளில் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் ஏற்படும்வரை நிகழப்போவதில்லை. அது திரும்பவும் கோழியா  மற்றும் முட்டையா பிரச்சினைதான். ஒன்றில் ஒவ்வொருவரும் மற்றவரை நம்புவதற்கு படித்து, மற்றும் நடைமுறைகளில், திட்டங்களில், மற்றும் ஆளணியில் தாக்கம் ஏற்படத்தக்க வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் - அல்லது ஒவ்வொருவரும் ஒரு அசௌகரியமான சூழலில் கூட ஒரு வகையான கூடி வாழும் தன்மையை ஏற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிரமமான நிலையிலுள்ள திருமணங்கள் விருப்பத்தின் பேரிலேயே முறிவடையலாம், ஆனால் அப்போது காரணங்கள் மற்றும் சாத்தியமான விளைவுகள் என்பன, அதே நேரம் ஒரு நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தலாம். ஜெனிவா நடவடிக்கைகள் மற்றும் புலம் பெயர் சமூகத்தின் பேச்சுகள் என்பனவும் கூட இந்தவிடயத்தில் உதவிக்கு வரப்போவதில்லை. அடிப்படையில் பரஸ்பரம் ஏற்படும் சந்தேகங்களை அதிகரிப்பதற்கான பங்களிப்பையே அவைகளால் செய்யமுடியும், அதாவது ஸ்ரீலங்காவில் சிறிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் இளகுவதற்கு ஆரம்பத்திருக்கும் நிலமைகள்கூட தொடர்ச்சியாக கடினமடைய நேரிடலாம்.
அரசாங்கமோ அல்லது ஆளுனரோ தேர்தல்கள் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்வார்களானால், பின்னர் இருசாராருக்கும் அரசியல் யுத்தத்தில் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் பாதி வெற்றி பெற்ற மாதிரி. அதேபோல அரசாங்கமோ அல்லது அரசாங்க கட்சிகளோ தேர்தலில் வெற்றிபெறுவது என்பது, தற்போது ஒரு நீண்ட காலம்வரை காத்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
நாட்டிலுள்ள தமிழர்கள், சிங்கள தலைவர்களின் ஆதிக்கத்திலுள்ள தேசிய அரசியலில் தங்கள் தெரிவுகளை ஒரு ஓழுங்கான முறையில் மாற்றுவதில்லை, அங்கு அவர்கள் வாக்காளர்கள், (பிளவுபட்ட) குழுக்கள், மற்றும் பிரிவுகள், என்னும் மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் தீர்க்கமான ஒரு பாத்திரத்தை வகிக்கிறார்கள். அவர்களிடமிருந்து அல்லது எந்த ஜனநாயக சமூகத்தின்; எந்தப் பிரிவினரிடமிருந்தும் வற்புறுத்தி ஒரு தேர்தலை பெறுவதற்கு நல்ல நேரம் என்று ஒரு நேரம் கிடையாது. அது அரசியல் அல்ல. அது ஜனநாயகமும் இல்லை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Aucun commentaire:

Enregistrer un commentaire