dimanche 19 mai 2013

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில்  கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பாழ்வத்தோடையில்; சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மீதப்பதற்கான காரணம் கடலின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால்தான் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடற்கரை ஓரங்களில் பெரிய, சிறிய மீன்கள் இறந்த நிலையிலும் உயிரோடும் கரையொதிங்கியமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire