samedi 18 mai 2013

ராஜிவ் நினைவு நாள் ஜோதி ஊர்வலம்

அரியலூர்: அரியலூர் காமராஜர் திடலில் இருந்து, 19 ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கி, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் ராஜீவ்காந்தி நினைவு நாள் ஜோதி ஊர்வல துவக்க விழாவுக்கு, மணிரத்தினம் தலைமை வகிக்கிறார்.காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுசெயலாளரும், முன்னாள் நகராட்சி துணை தலைவருமான சுப்ரமணியன் வரவேற்று பேசுகிறார்.ராஜீவ்காந்தி நினைவு நாள் ஜோதி ஊர்வலத்தை, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாளை அமரமூர்த்தி துவக்கி வைக்கிறார். துவக்க விழாவில் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், வட்டார காங்கிரஸ் தலைவர் கோவிந்தராசு, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் கல்யாணசுந்தரம், குமார், கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இளைஞர் காங்., பொதுசெயலாளர் தேவர் நன்றி கூறுகிறார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire