samedi 11 mai 2013

மூடப்படும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்


2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தினமும் 8 மணிநேரம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுத்தளத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த 8 மணி நேரத்தில் இலங்கைக்கு வரும் விமானங்கள் ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது, கட்டுநாயக்க விமனா நிலையத்தின் ஒடுத்தளங்கள் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மணிநேரம் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Aucun commentaire:

Enregistrer un commentaire