dimanche 19 mai 2013

கடற்படை வீரர் சடலமாக மீட்பு யுத்த வெற்றி விழாவில் கடலில் மூழ்கி காணாமல் போன கடற்படை வீரரை

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் காணாமல் போன கடற்படை வீரதைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து சடலம் மீட்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போனதுடன் படகில் இருந்த இரண்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.

படகு விபத்தில் உயிர்தப்பிய இரு கடற்படை வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire